Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை: விடுமுறை கால நீதிபதி அவசரமாக விசாரித்தது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மானியத்துடன் நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்கள், உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ விசாரணை கோரி யூடியூபர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில், திட்டப் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து மேற்கண்ட வழக்கில் டி.ஐ.சி.சி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் தொடர்புடைய டி.ஐ.சி.சி.ஐ அமைப்பையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும். ஆனால் இதனை உயர்நீதிமன்றம் செய்ய தவறி விட்டது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சங்கர் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ‘‘மனுதாரரின் கோரிக்கைக்கு எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அதுகுறித்த உத்தரவை இன்றே பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘எதிர்த்தரப்பினரை விசாரிக்காமல் இந்த வழக்கை விடுமுறை கால நீதிமன்றத்தில் அவசர அவசரமாக விசாரித்து முடிப்பதின் தேவை என்ன? என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் டி.ஐ.சி.சி.ஐ அமைப்பை ஒரு தரப்பாக இணைக்கப்படுகிறது. அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வைக்கப்பட்ட முறைகேடு தொடர்பான புகார் வழக்கில் நாங்கள் எதனையும் விசாரிக்க விரும்பவில்லை. இருப்பினும் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு அதுசார்ந்த உரிய உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பித்தார்.