பைக் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை செங்கம் அருகே பரிதாபம்
செங்கம், செப்.25: செங்கம் அருகே பைக் மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவன் லோகேஷ்வரன்(21), ஆக்டிங் டிரைவர் குமார்(28) மற்றும் முத்துக்குமார். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று...
பெரிய மேளம் இசைக்கலைஞருக்கு கலைமாமணி விருது கிராமிய கலைகள் பிரிவில் தேர்வு திருவண்ணாமலையை சேர்ந்த
திருவண்ணாமலை, செப்.25: திருவண்ணாமலையை சேர்ந்த பெரியமேளம் இசைக்கலைஞருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பட்டியலை நேற்று அரசு வெளியிட்டது. அதன்படி, இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், கிராமிய கலைகள், இசை நாடகம் உள்ளிட்ட பிரிவுகளில் 30 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில்,...
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை நேரடி ஆய்வு செய்த கலெக்டர் உத்தரவு உங்களுடன் ஸ்டாலின் முகாமில்
திருவண்ணாமலை, செப். 24: திருவண்ணாமலை மாநகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். அரசுத்துறைகளின் திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு எளதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உங்களுடன் ஸ்டாலின் எனும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஜூலை 15ம்...
ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான
திருவண்ணாமலை, செப்.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 621 சதுர அடி இடம், சின்னக்கடை தெருவில் உள்ளது. இதனை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி அனுபவித்து வந்தார். எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க, அண்ணாமலையார்...
பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி 2 நண்பர்கள் காயம் செங்கம் அருகே சோகம்
செங்கம், செப். 24: செங்கம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். 2 நண்பர்கள் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(20). இவரது நண்பர்கள் புகழ்(19), ராகவன்(14). இவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் நேற்றுமுன்தினம் மாலை மேல்செங்கம் நோக்கி சென்றனர். அங்குள்ள பஸ்நிறுத்தம்...
மகளிர் குழுக்களுக்கு ரூ1.28 கோடியில் நல திட்ட உதவிகள் எம்எல்ஏ வழங்கினார் கலசபாக்கம் ஒன்றியத்தில்
கலசபாக்கம், செப். 23: கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திட்ட இயக்குனர் தனபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செல்ல பாண்டியன் வரவேற்றார்....
கொட்டி தீர்த்த கனமழை பல்வேறு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் பெரணமல்லூரில்
பெரணமல்லூர், செப். 23: பெரணமல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது. 54 மிமீ அளவிற்கு கொட்டி தீர்த்தத்தால் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெரணமல்லூர் பகுதியில் சூரியகுளத்திற்கு அருகாமையில் முக்கிய அரசு அலுவலகங்களான வட்டார வளர்ச்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டார கல்வி...
நகை வாங்க பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை திருவண்ணாமலையில் பட்டப்பகலில் கைவரிசை
திருவண்ணாமலை, செப். 23: திருவண்ணாமலையில் நகை வாங்குவதற்காக பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கம் தாலுகா, கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் மகன் அஜீத்(25). இவர், கரியமங்கலம் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நகை வாங்குவதற்காக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். திருவூடல்...
கடன் தொல்லையால் இறந்த விவசாயிகளுக்கு தர்ப்பணம்: செய்யாறில் நூதன ஆர்ப்பாட்டம்
செய்யாறு, செப்.22: செய்யாறு ஆற்றங்கரையில் நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்நிலையில், தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் செய்யாறு ஆற்றங்கரையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 1970ம் ஆண்டில் தங்கம்...