சென்ட்ரிங் தொழிலாளி கொலையில் 3 பேரிடம் விசாரணை செய்யாறு அருகே கடந்த மாதம் நடந்த
செய்யாறு, நவ.12: செய்யாறு அருகே கடந்த மாதம் நடந்த சென்ட்ரிங் தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கபாலி(25), சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 20ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம்...
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி ஆசிரியர்கள் பாராட்டு நெடும்பிறை அரசு பள்ளி மாணவிகள்
செய்யாறு, நவ.12: செய்யாறு அடுத்த நெடும்பிறை அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று, மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று, திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் பல்வேறு எடை பிரிவுகளின் கீழ் நடந்தது. இப்போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட...
குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிப்பு முயற்சி தடுக்க கூடுதல் கண்காணிப்பு 419 மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த
திருவண்ணாமலை, நவ.11: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அப்போது, தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது, அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட...
வல்லபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி மேற்கொள்ள சிறப்பு பூஜை எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு பெரணமல்லூர் அருகே ரூ.66 லட்சத்தில்
பெரணமல்லூர், நவ.11: பெரணமலூர் அருகே வல்லபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி மேற்கொள்ள நடந்த பாலாலயம் நிகழ்ச்சியில் எம்பி, எம்எல்ஏ கலந்து கொண்டனர். பெரணமல்லூர் அடுத்த வல்லம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சோழன் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட வல்லபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து...
லாரி- லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதல் 2 பேர் படுகாயம்
செங்கம், நவ.11: செங்கம் அருகே லோடு ஆட்டோ- லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று காலை லாரி சென்றது. முறையாறு அருகே திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் சென்றபோது, எதிரே தஞ்சாவூரிலிருந்து டிஜிட்டல் பேனர்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது....
காய்ச்சலால் 2வயது குழந்தை பலி சேத்துப்பட்டு அருகே
சேத்துப்பட்டு, நவ. 8: சேத்துப்பட்டு அருகே காய்ச்சலால் 2வயது குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் வில்லிவனம் சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(32) கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ரித்திகா(4), ஜெயா(3), தினநாதன்(2) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி மாலை மகன் தினநாதனுக்கு கடும்...
2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் வீடியோ வைரல் அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு போலீஸ் வலை ஆரணி அருகே நிலத்தகராறில் முன்விரோதம்
ஆரணி, நவ. 7: ஆரணி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த பழனி. இவரது மகன் சுந்தர்(32), லாட்ஜ் மற்றும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்....
மணல் கடத்திய வேன் ஓடை சேற்றில் சிக்கியது ஒருவர் கைது: மற்றொருவருக்கு போலீஸ் வலை செய்யாற்று படுகையில் ெகாட்டும் மழையில்
பெரணமல்லூர், நவ. 7: செய்யாற்று படுகையில் கொட்டு மழையில் மணல் கடத்திய வேன் ஓடை சேற்றில் சிக்கியது. மேலும் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம், நாராயணமங்கலம், ஆவணியாபுரம், கொழப்பலூர், முனுகப்பட்டு, கடுகனூர் வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்று படுகையில் மாட்டு...
கொட்டும் மழையிலும் 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் ரயில் நிலையத்தில் தவித்த பக்தர்கள் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி
திருவண்ணாமலை, நவ. 6: திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று 2வது நாளாக பக்தர்கள் கொட்டும் மழையில் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு தொடங்கி,...
