தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, சேலம், தருமபுரி,...

எஸ்ஐக்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு: ரூ.1.19 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1,366 தாலுகா காவல் நிலையங்களில் 424 காவல் நிலையங்கள் உதவி ஆய்வாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போதுள்ள விதிகளின்படி, கொலை, இறப்பு விபத்துகள், கொள்ளை போன்ற கடும் குற்றங்களை இன்ஸ்பெக்டர்கள்...

அஜித் குமார் கொலை வழக்கு சிறையிலுள்ள போலீசாரை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது மரணடைந்த வழக்கை சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனைவி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின்...

ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் முதல்வர் இல்லத்துக்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல்

  சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பினார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன். ஆனால், இந்த சந்திப்பை...

தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவரை சேர்க்கும் முயற்சியை முறியடிப்போம்: வைகோ அறிக்கை

  சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்த 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளது...

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கு 3 ஆண்டுகளாக தலைமறைவான நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

  சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுனை டெல்லி போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள்...

நல்ல சாப்பாடு.. ஒரு புடி..தமிழிசை பேட்டி

  சென்னை: தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மதுரையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று சென்னை வந்தார். அப்போது. அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: மேடைகளில் மட்டும்தான் அரசியல் என்று இல்லாமல், விருந்து தட்டுகளிலும் அரசியல் உருவாகலாம். நேற்று நல்ல விருந்து, நல்ல சாப்பாடு. எல்லா வகையான பாரம்பரிய...

உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில் தமிழக டிஜிபியை நியமிக்க கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

  சென்னை: தமிழகத்துக்கு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபியாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில்...

வங்காள மொழியை வங்கதேச மொழி என குறிப்பிட்ட டெல்லி காவல்துறை இந்தியாவின் பன்மைத்துவத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தும் செயல்: முதல்வர் டிவிட்

  சென்னை: வங்காள மொழியை வங்கதேச மொழி என குறிப்பிட்ட டெல்லி காவல் துறையின் போக்கு, இந்தியாவின் பன்மைத்துவத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தும் செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய உள்துறை அமைச்சரவையின் கீழ் இயங்கும் டெல்லி காவல் துறை வங்காள மொழியை ‘வங்கதேச மொழி’...