கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா மற்றும் ரூ.12 கோடியில் மேம்படுத்தப்பட்ட கழிவு நீர் உந்து நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். ...

எங்கள் வாழ்வின் காரணமான பெண்ணினமே அந்தப் பூரணம்பெற வாழ்த்துகிறோம்: கவிஞர் வைரமுத்து வாழ்த்து

சென்னை: 'எங்கள் வாழ்வின் காரணமான பெண்ணினமே அந்தப் பூரணம்பெற வாழ்த்துகிறோம்' என உலக மகளிர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; தாயாய் தமக்கையாய் மனைவியாய் மகளாய் தோழியாய் செவிலியாய் ஆசானாய் அரசியாய் சமூக இயங்கியலில் பங்காற்றும் பெண் இன்னும் எட்டவேண்டிய இடம் தூரத்திலும் உயரத்திலும்...

சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஒளவையார் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை!

  சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஒளவையார் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   ...

சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்: துணை முதலமைச்சர்

சென்னை: சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி - “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம்...

உங்கள் வேலையை மட்டும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: ட்ரம்பிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம்

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியுள்ள கடிதத்தில்; "மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, இந்தியர்களாகிய நாங்கள் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் குடிமக்கள். நாங்கள் இனி எந்தவொரு...

மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை காண இன்று அனுமதி இலவசம்

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அடுத்த மாமல்லபுரத்தை பொதுமக்கள் இன்று இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.கடற்கரை சின்னம், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவற்றை இலவசமாக பொதுமக்கள் காணலாம். இதே போல் மகளிர் தினத்தை ஒட்டி இன்று செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்; "வெல்லும் தமிழ்ப் பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க திராவிடமாடலும் இருக்கிறது! தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிடமாடல் அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள்...

பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி

திருப்பூர்: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.8.90 கோடியில் மாவட்ட மைய நூலக கட்டுமானப்பணி மற்றும் ரூ.37.50 லட்சத்தில் அவிநாசி சித்த மருத்துவ பிரிவு கட்டிட கட்டுமான பணி துவக்க விழா நேற்று நடந்தது. பணிகளை...

பெற்றோரின் எதிர்ப்பால் காதல் உறவுகள் போக்சோ வழக்காக மாறுவது அதிகரிப்பு: ஐகோர்ட் கிளை நீதிபதி கவலை

மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர், அவரது நண்பரின் சகோதரியை, காதலித்து திருமணம் செய்தார். அப்போது அந்த சிறுமிக்கு 16 வயது என்பதால், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். திருமணத்திற்கு பின், பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணுக்கு...

பெண் இனத்தின் மாண்பு காக்க சம நீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம்: தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக...