14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதேநேரம், ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த...

குடும்பத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குடும்பத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்ததாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை...

விழுப்புரத்தில் விசிக சார்பில் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்: திருமாவளவன், அமைச்சர் வன்னிஅரசு ஏமாற்றம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் விசிக சார்பில் அம்பேத்கர் வைக்கப்பட்ட சிலையை போலீசார் அகற்றியதால் அதை திறக்க சென்ற திருமாவளவன், அமைச்சர் வன்னிஅரசு ஏமாற்றத்துடன் திரும்பினர். விழுப்புரம் சிக்னல் அருகே ஜிஆர்பி தெருவுக்கு செல்லும் சந்திப்பில் விசிக சார்பில் 6 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்றுமுன்தினம் விழுப்புரத்திற்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன்,...

பணிச்சுமையால் டாஸ்மாக் ஊழியர் உயிரிழப்பு

கோவை: கோவை காந்திபுரம் அருகே சித்தாபுதூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்தவர் தர்மன் (51) இவர், நேற்று முன்தினம் பணி முடித்து, மேட்டுப்பாளையம் ேராடு பேருந்து நிலையத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது கடுமையான உடல் சோர்வுடன் காணப்பட்டார். திடீரென மயக்கம் அடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பணிச்சுமை மன அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளார்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நடைமுறையே தொடரும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

மதுரை: மதுரை விருந்தினர் மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் நேற்று அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம். பெரும்பாலான மக்கள் 2 ஆண்டுகளுக்கு முன் என்ன இருந்ததோ, அதே அமைதியான சூழல்தான் வேண்டும் என நினைக்கிறார்கள். அதுவே தொடர வேண்டும் என அரசு நினைக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 ஆண்டுகளுக்கு முன் என்ன...

நாங்கள் ஆடுகளும் அல்ல; அடிமைகளும் அல்ல! பவன் கல்யாணை ஆதரித்த நடிகரின் பதிவுக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான பதில்

சென்னை: தென்னிந்திய படவுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர், பிரகாஷ்ராஜ். பாஜ அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி பொதுச்செயலாளருமான நாகபாபு, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணை ஆதரித்து பதிவு ஒன்றை ெவளியிட்டு இருந்தார். அதில், ‘ஒரு தலைவரின் வார்த்தையே...

உதவி செயற்பொறியாளர் 300 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: கடந்த 2000 முதல் 2002ம் ஆண்டு வரை உதவி பொறியாளர்கள் ஆக பணியில் சேர்ந்த தகுதியுடைய 379 பொறியாளர்களில் முதற்கட்டமாக 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று வழங்கினார். இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் மூப்புப் பட்டியல், தகுதி மற்றும் வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன....

டூவீலர் மீது கார் மோதல்: 3 பேர் பலி

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே புளியம்பட்டியைச் சேர்ந்தவர் லாடசாமி (60). இவர், டூவீலரில் உறவினர் 2 பேருடன் திருப்புல்லாணியில் இருந்து ஏர்வாடிக்கு நேற்று பிற்பகல் சென்றார். ஏர்வாடி மெயின் ரோடு கொம்பூதி ரோடு செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது, ஏர்வாடி தர்காவில் இருந்து கீழக்கரை சென்ற கர்நாடகா பதிவெண் கொண்ட கார்,...

போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பது கடினம்: சர்ச்சையை கிளப்பிய போலீஸ் கமிஷனர் பதில்

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று அளித்த பேட்டி: சேலம் தாதகாப்பட்டி மேட்டுத்தெரு பகுதியில் உதவி கமிஷனர் பரவாசுதேவன் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரகசியகண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுத்தெருவை சேர்ந்த மேகலா(48), ராசிபுரத்தை சேர்ந்த முகமது வதூத் ஆகியோர் வலி நிவாரண மாத்திரைகளை விற்பது வந்தது தெரியவந்தது. இதையடுத்து...

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி: சிபிஎஸ்இ ஒப்பந்தம் செய்த ஐடி நிறுவனத்திற்கு தடை

புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்த குளறுபடியில் சிக்கிய தனியார் ஐடி நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே 13ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது. சுமார் 1 கோடி விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் பணிக்காக ‘கோயம்ட் எடு டெக்’ நிறுவனத்தின் ‘ஆன்மார்க்’...