முக்குடி பிரசாதம் தன்வந்திரி லேகியம் தெரியுமா?

வேலூர் மாவட்டம் - வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதாலும், மக்கள்...

திருமீயச்சூர் லலிதா திரிபுரசுந்தரிக்கு படைக்கப்படும் பிரண்டை சாதப் பிரசாதம்

பிரண்டை சாதத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. எமதர்மராஜனின் மூலிகையே வஜ்ரவல்லி எனும் பிரண்டை. எமதர்மராஜனே இத்தலத்தில் தன் ஆயுள் விருத்திக்காக பிரண்டை சாதத்தை நிவேதித்து பேறு பெற்றான். பிரண்டை சாதத்திற்கு தேவையானவை: அரிசி - 4 ஆழாக்கு. இளம் தண்டுப்...

வன்னிவேடு முருகனுக்கு பீட்ரூட் சாதப் பிரசாதம்

சப்த ரிஷிகளும் ஆறு இடங்களில் ஈசனை நிறுவி வழிபட்ட தலங்களை ஷடாரண்ய தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, பாலாற்றங்கரையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரம். வன்னிமரக் காட்டில் அகத்திய மாமுனி தன் திருக்கரங்களால், மணலைக் கொண்டு உருவாக்கிய ஈசனை ஸ்தாபித்து வழிபட்ட தலம் இது. இத்தல முருகபெருமானுக்கு பீட்ரூட் சாதம் நிவேதித்தால் செவ்வாய் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை...

முத்துக்கள் முப்பது-தெய்வீக மணம் கமழும் பிரசாதங்களின் மகிமை!

1. முன்னுரை பழனி சென்று வந்த நண்பரிடம் நாம் முதலில் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? சுவாமியைப் பார்த்தீர்களா என்பதைவிட பஞ்சாமிர்தம் கொண்டு வந்தீர்களா என்றுதான் கேட்போம். திருப்பதிக்குச் சென்று வரும் நண்பர்களிடம், ``எங்கே லட்டு?’’ என்றுதான் கேட்போம். ஒரு ஆலயத்தின் சிறப்பை மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றையெல்லாம் வைத்து தீர்மானிக்கின்ற ஆகம விதிகள் இருந்தாலும்,...

பாயசத்தை அருந்தினால் மக்கட்பேறு!

திவ்ய தேசம் 108ல் 44வது திவ்ய தேசம் திருப்புல்லாணியாகும். ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகும். புல்லாரண்யம்,தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும். ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம் போன்ற தீர்த்தங்களாகக் கொண்டு, தல விருட்சமாக அரசமரத்தைக்கொண்டு ஜகன்நாதப்பெருமாள் கல்யாணவல்லித் தாயாரோடு அருளும் திருத்தலம். முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற...

பழனி பஞ்சாமிர்தம்

‘பஞ்சாமிர்தம்’ என்று சொன்னாலேயே நம் நினைவுக்கு வருவது ‘பழனியின் பஞ்சாமிர்தம்’தான். ‘பஞ்சாமிர்தம்’ என்ற சொல்லுக்கு ‘ஐய முதம்’ என்று பெயர். அமுதம் என்பது நீண்ட ஆயுளை வழங்கும் தன்மை வாய்ந்தது. அத்தகு ஐந்து வகை அமுதங்களைக் கொண்டுதயாரிக்கப்படுவதே பஞ்சாமிர்தமாகும்.இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பகுதியிலிருந்து கிடைப்பதாகும். வாழைப்பழமும் நாட்டுச்சர்க்கரையும் மற்றும் கற்கண்டாகிய மூன்றும் -...

பிரசாதம்!

சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் நடைபெற்றுவந்த சமயம். 1993-ம் வருட ஆரம்பம். தரிசனத்துக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர்.அப்போது ஒருநாள் காஞ்சி மகா ஸ்வாமிகளைத் தரிசித்து ஆசிபெறச் சென்றிருந்தேன். ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தேன். ஸ்வாமிகளுக்கு என்னையும் ஆஞ்சநேயர் ஆலய நிர்மாண விஷயமும் நன்றாகவே தெரியும். ஆதலால், “ஷேமமா...

நவராத்திரி பிரசாதங்கள்!

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரசாதம் செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா? நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களை கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. முதல் நாள்: வெண்பொங்கல், மொச்சை...

கோயில் எனும் அகத் திறவுகோல்!

பழம் பெரும் கோயில்களை தேடி ஓடுகின்றோம். இறைவனை தரிசித்து மகிழ்கின்றோம். அர்ச்சனைகள் செய்து திருப்தியுறுகின்றோம். கோயிலின் வரலாற்றுத் தொன்மையினை அறிந்து வியப்புறுகின்றோம். அங்கு அருளும் இறைவனின் புராணப் பெருமையினை ஒருவாறு அறிந்து புரிந்து கொள்கிறோம். அத்தலத்தினைக் குறித்து அடியார்களால் இயற்றப்பட்ட பாடல்களை படித்துப் பார்த்து அந்த ஆழம் தோய்ந்த சொற்களால் கண்களில் நீர்வழிய நிற்கின்றோம்....

சகல நோயும் தீர்க்கும் சாம்பார் சாத பிரசாதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மனின் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்து சென்றான். மனைவியை மீட்கும் முயற்சியில், தனக்கு உதவிய வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம்தான் இந்தக் ‘குரங்கணி’.ராவணன் தன்னைக் கடத்திச் சென்றபோது, சீதாதேவி, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள்....