சத்திரங்கள் சொல்லும் சரித்திரங்கள்!

நம் தமிழ்நாட்டில் அமைந்திருந்த சமூக சேவைகளில் சத்திரங்களின் பணிகளும் ஒன்று. அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்து ஆலயங்கள் பதினாயிரம் நாட்டி, ஏழைகள் ஆயிரமாயிரம் பேர்களின் பசியாற்றி கல்வி புகட்டி வந்திருக்கும் சத்திரங்கள் மற்றும் சாவடிகள் பல அக்காலத்தில் இருந்து வந்திருக்கின்றன.‘‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்னும் மணிமேகலை காப்பியத்தின் வாக்கிற்கேற்ப இச்சத்திரங்களும், சாவடிகளும் அமுதசுரபியாய் உணவு...

ராகுவின் ஆட்டம் எப்படி இருக்கும் தெரியுமா?

ராகு என்பது நிழல் கிரகம். எந்த இடத்தில் நிழல் படுகிறதோ அந்த இடத்தில் சூரிய ஒளி மறைக்கப்படும். உதாரணமாக நல்ல கடுமையான வெயிலில் ஒரு பேருந்து நிற்கிறது. நீங்கள் அந்த வெயிலில் இருந்து தப்பிக்க அந்த பேருந்துக்கு அருகில் உள்ள நிழலில் போய் நிற்கலாம். இந்த நிழல் சூரிய ஒளியைத் தடுத்து விடுகிறது. பேருந்து நகர்ந்தால்...

படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு. 1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9. எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன? முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம்...

பெண்ணின் சம்மதம் முக்கியம்!

கல்யாண மந்திரங்களில் உள்ள அமைப்பை கவனிக்கும் பொழுது, ஒன்றைச் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக ராமாயணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஜனகருக்கு பெண் இருப்பதும் அந்தப் பெண்ணை இராமருக்கு மணமுடித்தால் சரியாக இருக்கும் என்பதையும் தசரதன் அதாவது ராமனின் தந்தை தீர்மானிக்கவில்லை. ராம, லட்சுமணர்களை அழைத்துக்கொண்டு விசுவாமித்திரர் காட்டிற்குப் போகிறார். அந்த யாகம் முடிந்தவுடன் விசுவாமித்திரர் மிதிலைக்குப்...

துக்கம் ஏன் வருகிறது?

‘‘மனமது செம்மையானால்...” என்று தொடங்கும் வரிகள் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் புகழ்பெற்ற வரிகளாகும். இதன் முழுப் பொருள், ‘‘மனம் ஒரு நிலைப்பட்டு தூய்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை; வாயுவை உயர்த்தவும், மூச்சைப் பிடித்து நிறுத்தவும் வேண்டியதில்லை” என்பதாகும். அதாவது, மனதைச் செம்மையாக்கி, ஒருமுகப்படுத்தினால், வெளிப்படையான தியானப் பயிற்சிகளும், சடங்குகளும் தேவையில்லை என்பது இதன்...

கூறைப் புடவையின் முக்கியத்துவம்

திருமாங்கல்ய தாரணத்திற்கு முன் உடுத்துகின்ற புடவைக்கு கூறைப் புடவை என்று பெயர். (சிலர் கூரை புடவை என்று எழுதி ஒரு வீட்டுக்கு பாதுகாப்பாக கூரை இருப்பது போல பெண்ணிற்கு இப்புடவை இருப்பதால் கூரை புடவை என்று கூறுவது சரியல்ல.) கூறை என்பதற்கு புத்தாடை என்று ஒரு பொருள். திருமணத்திற்கான ஆடை என்று ஒரு பொருள். பெரியாழ்வார்...

கர்ம யோக ரகசியம்

பகவத் கீதையின் பல அத்தியாயங்களை படிக்கும்போது தேறிய பொருளாக சில விஷயங்கள் மனதில் எழுந்தன. எதிர்வருவதை எதிர்கொள்வதே முக்கியமானது. ஏனெனில், இந்தப் பிறப்பெடுக்கும்போதே சிலவற்றை பிராரப்த கர்மா என்கிற வினையூழை மூட்டையாக சுமந்து வருகின்றோம். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் நீங்கள் தவிர்க்க முடியாததில் இன்பங்களும் துன்பங்களும் அடக்கம். அதனால் எதையுமே ஏற்றுக்கொள்ளுதல்...

இறைவன் உங்களைத் தேடி வருவான்

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க, தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே. இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வார் இயற்றிய திருக்குறுந்தாண்டகம் என்ற நூலில் உள்ளது. அழகான தமிழ்ப்பாசுரம். இதை வாசிக்கும் பொழுது அந்த மூன்றாவது வரியை வாசித்துவிட்டு சற்று...

பாதுகையின் பெருமை

நமக்காக வலிய திருமாலிடம் சென்று நாம் படும் வலிகளையும் வேதனைகளையும் குறைக்க செய்து திருமாலின் திருவருள் எனும் வலிமையை நம்மிடம் கொண்டு சேர்ப்பவள் பாதுகா தேவியே. திருமாலின் திருவடிக்கோ அல்லது திருமகளின் திருவடிக்கோ எந்த விதத்திலும் வலி என்பதோ சிறு காயம் என்பதோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, ராமபிரான் வனவாசத்திற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்ட போது,...

பொம்மைக்குள் பிரம்மம்

நவராத்திரி போன்ற பண்டிகைகள் மாபெரும் தத்துவத்தின் பின்புலம் கொண்டவை. ஒட்டுமொத்த லௌகீக வாழ்வினுக்கு மத்தியில் நம்மை தேடலில் ஈடுபடுத்துபவை. ‘‘ஏன் எல்லாத்தையும் பொம்மை பொம்மையா வச்சு கும்பிடறாங்க’’ என்று கேள்வியில் தொடங்கி அனைத்தும் சக்தியின் அம்சமே…. எங்கு காணினும் சக்தியடா…. என்று சுய அனுபூதியில் முடிவடைய வேண்டும். அதெப்படி இந்த பொம்மையை வைத்து சுய அனுபூதியில்...