அத்தாட்சிகளை அருளிய ஆண்டவனை வழிபடுவோம்!

“யார் என் இறைவன்? எது என் கடவுள்?” இளவல் இப்ராஹீமின் இதயம் துடித்தது. வானத்தைக் கூர்ந்து நோக்கினார். இரவு நேரத்து நட்சத்திரங்கள் மின்னின. “நட்சத்திரம்தான் என் இறைவனா?” ஆனால், அது காலையில் மறைந்ததும், “மறையக்கூடியவை என் இறைவன் அல்ல” என்றார்.சந்திரனைப் பார்த்தார். சந்திரன்தான் என் இறைவன் என்றார். ஆனால், அதுவும் மறைந்து விட்டது. தகதகத்தாய ஒளியுடன்...

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து பிரமாண்டமான மாநாட்டை நடத்தின. தலைமையேற்றுப் பேசிய பழம் ஒன்று, உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையதும், சிறப்புடையதுமாக உள்ளது? என்ற கேள்வியுடன் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டது. பழங்கள் ஒன்றுக்கொன்று தொண்டையில் குசுகுசுவெனப் பேசின. ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப்...

இறைவனுக்கு எதற்கு இடைத்தரகர்கள்?

அந்த ஞானியைச் சுற்றி ஒரே கூட்டம். அவர் முகத்தைக் காண மக்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறுகிறார்கள்.பூக்கள், பழங்கள், பணம் என்று ஏராளமான காணிக்கைப் பொருள்கள் மகானின் காலடியில் குவிக்கப்படுகின்றன.அவர் என்ன இறைவனா? ‘இல்லை’ என்று அங்கு குழுமியிருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். பிறகு ஏன் அவருடைய தரிசனத்திற்குக் காத்துக் கிடக்கிறார்கள்?ஒரு பக்தரிடம் கேட்டேன். “இவர்தான் உங்கள் இறைவனா?”...

மனிதர்கள் அனைவரும் சமமே..!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறிய நெறிகளில் முன் வரிசையில் நிற்பது இஸ்லாமிய வாழ்வியல். பிறப்பு, மொழி, இனம், நிறம், சாதி என எந்த அடிப்படையிலும் மனிதனை இழிவுபடுத்தாத மார்க்கம் இஸ்லாம். இறுதி வேதத்தின் சத்தியப் பிரகடனங்கள் இவை.“மனிதர்களே, நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்துள்ளோம்.” (குர்ஆன் 49:13) ஆகவே, மனித குலம் பிறப்பின்...

உள்ளாற்றலைப் பேராற்றலாக்குங்கள்!

ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகள் நெடு நாட்களாக மழையிலும், காற்றிலும் கிடந்து தூசி நிறைந்து பாசி பிடித்துகிடந்தது. அதில் முதல் கல்லுக்கு, நாம் ஏன் இப்படியே ஒரு அவலட்சணம் பொருந்திய கல்லாகவே இருக்க வேண்டும்? வேறு இடம், வேறு வடிவம் கொள்ளலாமே என நினைத்து, இரண்டாம் பாறையிடம் தன் விருப்பத்தை சொன்னது. உடனே அப்பாறை,...

காலம் ஓர் அருட்கொடை

‘காலம் பொன் போன்றது’ என்பது நமக்குத் தெரியும். பொன்னும் மணியும் நம் கையைவிட்டு நழுவிப் போனாலும் கவலையில்லை. பிறகு தேவைப்படும்போது வாங்கிக் கொள்ளலாம். ஆனால், காலத்தை வீணாக்கி விட்டாலோ, காலத்தை வீணே அழித்துவிட்டாலோ நாம் என்னதான் பிறகு வருந்தி தரையில் உருண்டு புரண்டு தலைதலையாய் அடித்துக் கொண்டாலும் சென்ற காலம் சென்றதுதான். ‘காலம் அறிந்து கடமையைச்...

தோற்றத்தை வைத்து முடிவு செய்யாதீர்கள்!

ஒருநாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில். சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுமே இல்லாததால் அவரே கழற்றி ஸ்டெப்னி மாத்தலாம்...

பொறுமையும் நிலைகுலையாமையும்!

“இறைநம்பிக்கை கொண்டவர்களே...! பொறுமையின் மூலமும் தொழுகையின் மூலமும் இறைவனிடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக, இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.” (குர்ஆன் 2:153) “சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கிறவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.” (குர்ஆன் 2:155) “இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்...

தீயோர்க்கு அஞ்சேல்

அருள் நபியவர்கள் ஒருமுறை கூறினார்கள்: “ஒரு தீமை நடப்பதைக் கண்டால் அதைக் கைகளால் தடுங்கள்; இயலாவிட்டால் நாவினால் தடுங்கள்; அதுவும் இயலாவிட்டால் மனத்தளவிலாவது அந்தத் தீமையை வெறுத்து ஒதுக்குங்கள். இது இறைநம்பிக்கையின் மிகக் கடைசித் தரமாகும்.’’ தீமைகள் நடப்பதைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தால் நாளை அதே தீமைக்கு நாமும் பலியாகிவிடுவோம். யூத சமுதாயத்தின் நிலைமை...

உழைப்பின் மேன்மையை உணருங்கள்

ஒரு ஊரில் அறிவாளி ஒருவர் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளிடம் வேண்டுவார். பின்பு, விறகு வெட்டி பிழைக்க காட்டுக்கு போவார். ஓரளவுக்கு வருமானமும் நிம்மதியான வாழ்க்கையும் அவரை தொற்றிக் கொண்டது.ஒருநாள் அவர் காட்டுக்கு போகும் வழியில் விபத்தில் தன் முன்னங் கால்களை இழந்திருந்த நரி ஒன்றைப் பார்த்தார்....