வந்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா?

இறைத்தூதரின் தோழர் உமர்(ரலி) அவர்கள் ஓர் இனிய நிகழ்வைக் கூறுகிறார்:“நாங்கள் ஒரு நாள் இறைத்தூதரின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, கறுப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயணிக்குரிய எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை. எங்கள் யாருக்கும் அவர் யார் என்றும் தெரியவில்லை.“வந்தவர் இறைத்தூதருக்கு மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு, ‘முஹம்மதே,...

நன்றி அப்பா!

ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அந்த பிள்ளையும், அந்த தகப்பனிடம் அன்புடன் வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவர் அந்த பிள்ளையை பார்த்து, `நீ இன்று வெளியில் விளையாட போக வேண்டாம்’...

உள்ளம் உறுத்தினால்...

இறைத்தூதரிடம் ஒருவர் வந்து, “இறைவனின் தூதரே, எது பாவம்?” என்று கேட்டார். அதற்கு அண்ணல் நபிகளார் (ஸல்) பதிலளித்தார்: “எது உன் உள்ளத்தை உறுத்துகிறதோ அதை விட்டுவிடு.” (நூல்: அஹ்மத்) இந்த நபிமொழிக்குப் புகழ்பெற்ற விரிவுரையாளர் மௌலானா முஹம்மது பாரூக் கான் விளக்கம் அளித்துள்ளார். எது பாவம்? பாவத்தின் உண்மையான அடையாளம் எது? பாவத்தின் இயல்போடு...

இயேசுவின் பெயரை உயர்த்தி, உயர்வடைவோம்!

ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் கொத்தி கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு மின்னல் அந்த மரத்தைத் தாக்க, அந்த மரம் கீழே சாய்ந்தது. மரங்கொத்திப் பறவைக்குப் பெருமை தாங்கவில்லை. ``நான் கொத்தியதால்தான், இந்த மரம் விழுந்தது, என் அலகு எவ்வளவு பலம் வாய்ந்தது’’ என்று பெருமை கொண்டது. அதுமட்டுமல்ல, இன்னும் பல...

வேகமாகவே காணாமல் போகும் வேகம்!

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, ‘‘நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?’’ தென்னங்கன்று சொன்னது, ‘‘ஒரு வருஷம்’’. ‘‘ஒரு வருஷம்னு சொல்றே, ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா?’’ கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை...

இறுதி வேதம் அருளப்பட்டது ஏன்?

வேதங்களில் இறுதியானது திருக்குர்ஆன். இறுதி வேதம் எதற்காக அருளப்பட்டது? இந்தக் கேள்விக்குத் திருமறையே தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. நேர்வழி பெறுவதற்காக: இறைவனிடமிருந்து பேரொளிமிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது. இறைவனின் உவப்பை விரும்பு வோர்க்கு இறைவன் அதன்மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு, இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி...

பயணியின் பிரார்த்தனை!!

பயணம் இன்று மிகமிக எளிதாகிவிட்டது என்கிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்த மனிதன் இன்று அதி விரைவுத் தொடர் வண்டியிலும் வானூர்தியிலும் பறக்கிறான். வேகத்தில் தான் வேறுபாடே தவிர அலுப்பிலும் சலிப்பிலும் களைப்பிலும் எல்லாக் காலத்துப் பயணங்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன.கோவையில் இருந்து நண்பர் ஒருவர் சென்னை...

உங்கள் செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள்!

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம். அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆற்றினை கண்டதும், இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன....

பாட்டினில் அன்பு செய்

‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்று பாடினார், பாரதிதாசன். பாட்டு அன்பை வளர்க்கும். துன்பத்தைப் போக்கும். இதயத்தை இளகச் செய்யும். இன்னுயிரை வளர்க்கும். குழந்தையைத் தூங்கவைக்க தாய்பாடும் பாட்டுதான் தாலாட்டு. ‘பாடிக் கொண்டு வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்பதற்கு இறைத்தூதரின் இனிய வாழ்விலும் எடுத்துக்காட்டு உண்டு. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு...

வாழ்நாட்கள் நீடித்திருக்க ஒரே வழி

80 வயது முதியவர் வீட்டுச் சாய்வு நாற்காலியில், அதிகமாக படித்திருந்த தன் 45 வயது மகனுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று அங்கு ஒரு காக்கை ஜன்னல் கம்பியில் வந்து உட்கார்ந்தது. தந்தை மகனிடம், “இது என்ன?” என்று வினாவினார். அதற்கு மகன்; “இது காக்கை” என்று பதிலளித்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக தந்தை...