சுமையான வாழ்வும் உறவும் சுகமாகட்டும்!
இன்றைய சமூகம் ஓரளவிற்கு பொருளாதார மேன்மையை அடைந்துள்ள போதிலும், மனநலத்தைப் பேண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. காரணம் உறவுகளில் வளர்ந்துவரும் அதீத எதிர்பார்ப்புகள் பல உறவுகளை சிதைத்து வருகின்றது.திருமண நாள், பிறந்தநாள், திருமண ஆண்டு,வீட்டுத் திறப்புவிழா போன்ற சில தனிப்பட்ட வாழ்வு சார்ந்த தருணங்கள் இப்போது ‘‘சமூக ஒப்பீட்டின் போட்டி மேடையாக’’ மாறிவிட்டன. இந்தக்...
வேண்டாம், கேலி..!
சிலர் இறைவனையும் மறுமையையும் கிண்டல்- கேலி செய்துகொண்டிருப்பார்கள். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் மறுமையைக் கிண்டல் அடிக்கும் பேர்வழிகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்பட்டு வந்தது.ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்.“நீங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மறுமை எப்போதுதான் நிறைவேறும்?” என்று எதிரிகள் சிலர் எகத்தாளமாகக் கேட்டனர்.உடனடியாக இறைவன் அதற்குப்பதில் அளித்தான். “அவர்கள் எதிர்பார்த்துக்...
புலனடக்கம்
புலனடக்கத்தை வலியுறுத்தாத ஆன்மிகம் உலகில் எங்கும் இல்லை. புலனடக்கம் என்பது ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி ஆள்வதாகும். வள்ளுவரும் இந்தப் புலனடக்கத்தின் சிறப்பை, ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பார். இஸ்லாமியத் திருநெறி புலனடக்கம் பற்றி ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மறுமை நாளன்று இறைவனின் நீதிமன்றத்தில்...
மதிப்பை தக்கவைத்து கொள்
ஒரு மேடைப் பேச்சாளர் தன்னுடைய சட்டைபையிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து இது என்ன என பார்வையாளர்களை பார்த்து கேட்டார். அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள். பின்னர், அதனை தரையில் கசக்கி வீசி எறிந்தபின் அது என்ன என கேட்டார். அப்போதும் அனைவரும் இது ஒரு 500...
இலவசமானாலும் விலையேறப்பெற்றது
இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த ஒரு மிகப்பெரும் செல்வந்தர் இயேசுவை புதிதாய் அறிந்திருந்தார். தேவ கிருபையால், தான் பெற்ற இரட்சிப்பு (புதுவாழ்வு) எப்படிப்பட்டது என்று தன் மக்களுக்கு உணர்த்த விரும்பினார். அவருக்கு அநேக வீடுகள் இருந்தன. அவருடைய வீடுகளில் வாடகைக்கு இருந்தவர்களும், கடன்பட்டவர்களும் காணும்படியாக ஒரு அறிவிப்பை பொது இடத்தில் ஒட்டியிருந்தார். அதில் ``அடுத்த நாள்...
நீ என்ன செய்ய விரும்புகிறாயோ செய்துகொள்
குர்ஆனின் 20-ஆம் அத்தியாயம் “தாஹா” மிகவும் விறுவிறுப்பான அத்தியாயங்களில் ஒன்று. இந்த அத்தியாயத்தில் பரபரப்பான திருப்பங்களுக்கும் படிப்பினைகளுக்கும் பஞ்சமே இல்லை. ‘‘மூஸாவே உன் கையில் இருப்பது என்ன?” என்று இறைவனே கேட்பதாகத் தொடங்கும் வசனத்திலிருந்து நம்மையும் அந்தப் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இந்த அத்தியாயத்தில் மிகுந்த படிப்பினைக்குரிய நிகழ்வு சூனியக்காரர்களின் மனமாற்றம்… ஒரு மனிதனின்...
கிருபை உனக்குப் போதும்
ஒரு ஊரில் ஏழை விதவைப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவளுக்கு ஒரே ஒரு மகனும் உண்டு. அவளுடைய ஏக்கமெல்லாம் எப்பொழுதும் தம் மகனைக் குறித்துதான் காணப்பட்டது. தான் எப்படிப் போனாலும் பரவாயில்லை தன்னுடைய மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவளுடைய குறிக்கோளாகவும் இருந்தது. இப்படியாக தன்னுடைய மகனை...
வாசிப்பும் வழிபாடுதான்...
வழிபாடு என்பது என்ன? இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் வழிபாடு. “தொழுவீராக” “நோன்பு நோற்பீராக” என்பவை இறைக்கட்டளைகள். அவற்றை மனமார ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுகிறோம். ஆகவே, அவை வழிபாடுகள் எனும் தகுதியைப் பெறுகின்றன.இதேபோன்ற ஓர் இறைக்கட்டளைதான் “வாசிப்பீராக” என்பதும். தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகள் எல்லாம் பின்னாளில்தான் கடமையாக்கப்பட்டன. ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வந்த முதல்...
வட்டி ஒரு கொடுமை
வட்டி ஒருபோதும் நல்வாழ்வைத் தராது. அது ஒரு பொருளாதாரச் சுரண்டல். உயிரை வாட்டும் நெருப்பு. வாழ்வை நாசமாக்கும் நஞ்சு. ஏழைகளின் உதிரத்தை உறிஞ்சும் சமூகத் தீமை. அதனால்தான் இஸ்லாமிய வாழ்வியல், வட்டி வாங்குவதையும் வட்டி அடிப்படை யிலான பொருளாதாரத்தையும் பெரும் பாவம் என்கிறது. வட்டியில்லாப் பொருளியலை அது முன்வைக்கிறது. “வட்டியை விட்டுவிடுங்கள். இல்லையேல் உங்களுக்கு...