தேவையானது ஒரு தீர்மானம்

1809ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த அந்தக் குழந்தை லூயிஸ் பிரெயில் தந்தையின் பட்டறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கூர்மையான கருவியால் கண் காயம் அடைந்தது. மூன்று வயதில் ஒரு கண்ணையும், ஐந்து வயதில் முழுப் பார்வையையும் இழந்தது. ஆனால், அந்த இழப்பே அவனது பார்வையை உலகம் முழுவதும் விரிய வைத்தது. துன்பத்தில் துவண்டு போகவில்லை அந்தக்...

அறிவுச் செருக்கு ஆபத்து

‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என்பார்கள். பதவிக்கு மட்டுமல்ல, படிப்புக்கும் இது பொருந்தும். கல்வியறிவு பெருகப் பெருக பணிவும் அடக்கமும் பெருக வேண்டும். ‘தான் சிறந்த கல்விமான்’ என்றோ, ‘தான் சிறந்த கவிஞர்-புலவர்’ என்றோ, ‘தான் சிறந்த அறிஞர்’ என்றோ தருக்கித் திரிவதும் ஆணவம் கொள்வதும் ஆபத்திலும் அவமானத்திலும் முடியும். “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை...

தெரியாமல் காக்கும் தெய்வீகக் கரங்கள்

சேட்டைக்காரக் குரங்கு ஒன்று காட்டிலுள்ள ஒரு பெரிய மரத்தில் வாழ்ந்து வந்தது. அந்த மரத்தின் கீழ், அந்தக் காட்டின் ராஜாவான சிங்கம் தினமும் ஓய்வு நேரங்களில் வந்து படுத்து உறங்கும். சிங்கம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் வேளையில், குரங்கு மெல்ல மரத்திலிருந்து இறங்கி வந்து, சிங்கத்தின் ஒரு காதை லேசாகத் தட்டிவிட்டு, எதிர் திசையில் விரைவாக...

மனதில் மறைந்து கிடக்கும் புதையல்கள்

வாலிபன் ஒருவன் வயலில் வேலை செய்யும்போது வெள்ளிக்காசுகள் சில அவ்வபோது அகப்பட்டன. அவன் புதையல் கிடப்பதாக எண்ணி, அந்த நிலத்தை மிகவும் உற்சாகத்தோடு தோண்ட ஆரம்பித்தான். பின் அவனுக்குள்ளேயே ஒரு சந்தேகம் எழுந்தது. தன் சட்டைப்பையை தடவி பார்த்தபோது அது ஓட்டையாக இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான், அகப்பட்டது அனைத்தும் இவனுடைய காசுகள் என்று. இறைமக்களே,...

பொறுமை தந்த பெருமை

‘நிறைவுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப்படும்”என்கிறார் வள்ளுவப் பெருந்தகை (குறள் 154). “பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் போற்றும்.”“பொறுமை தந்த பெருமை அதில் மலர்ந்தது தெய்வத்தின் கருணை” என்று பாடுவார், கவியரசர்.சாதனையாளர்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் அவர்கள் தங்கள் இலக்கு நோக்கி முன்னேறுவதில் முதன்மைப் பங்கு வகித்தது அவர்களின் பொறுமைப்...

உழவர் திருநாள்

அறுவடைக் காலம் மகிழ்ச்சிக்குரிய காலம்.வளர்ந்து நிற்கும் பருவப் பெண்ணையும் செழித்து நிற்கும் நெற்பயிரையும் ஒப்பிட்டு மகிழ்வது தமிழ் இலக்கிய மரபு. “பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பருவம் கொண்ட பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா” என்று பாடுவார் கவிஞர். நிலத்தை ஐந்து திணைகளாகப் பிரித்து, வயலும் வயல் சார்ந்த நிலமும்...

கீழ்ப்படிதலே வெற்றிக்கான முதற்படி

ஒரு காலத்தில், இரண்டு நண்பர்கள் வேலை தேடி ஒரு பெரிய பட்டணத்துக்குச் சென்றார்கள். அவர்களின் கையில் பணமும் இல்லை; எதிர்காலம் பற்றிய நிச்சயமும் இல்லை. இருந்தாலும், எதாவது ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் நகரத்தின் பல இடங்களைச் சுற்றினர். ஒருநாள், அவர்கள் ஒரு முதலாளியை சந்தித்து வேலை கேட்டார்கள். அந்த முதலாளி இருவரையும்...

வீட்டை அலங்கரிக்கும் பெண்

ஒரு நாள், ஒரு கணவன் மனநல மருத்துவரை சந்திக்கவந்தார். அவனுடைய முகபாவனையிலேயே ஒரு வகையான அலட்சியமும், தன்னைப் பற்றிய பெருமையும் தெளிவாகத் தெரிந்தது. அவனை அமரச் செய்த மருத்துவர், மெதுவாக உரையாடலைத் தொடங்கினார். மருத்துவர் அவனிடம்,“நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த கணவன் சிறிது பெருமிதத்துடன், “நான் ஒரு வங்கியில் கணக்காளராக...

பாட்டினில் அன்பு செய்!

‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்று பாடினார் பாரதிதாசன். பாட்டு அன்பை வளர்க்கும். துன்பத்தைப் போக்கும். இதயத்தை இளகச் செய்யும். இன்னுயிரை வளர்க்கும். குழந்தையைத் தூங்கவைக்க தாய் பாடும் பாட்டுதான் தாலாட்டு. ‘பாடிக்கொண்டு வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்பதற்கு இறைத்தூதரின் இனிய வாழ்விலும் எடுத்துக்காட்டு உண்டு. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு...

‘தவ்பா’-திரும்புதல்

“மணிக்கதவம் தாள்திறவாய்” என்று ஆண்டாள் பாடியது போன்று அடைபட்ட இறையருள் எனும் கதவைத் திறக்கச் செய்வதுதான் தவ்பா ஆகும்.‘தவ்பா’ என்பது இஸ்லாமிய மொழிமரபில் பாவமன்னிப்புக் கோருதலைக் குறிக்கும். இந்தச் சொல்லின் அகராதிப் பொருள் திரும்புதல், மீளுதல் என்பதாகும்.யாரை நோக்கி யார் மீளுதல்? யாரை நோக்கி யார் திரும்புதல்?இது என்ன கேள்வி?‘பாவமன்னிப்புக் கோரும் அடியான்தான் இறைவனை நோக்கித்...