ஏழாவது வாசல்

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை ஒரு மனிதனுக்குத் தன் நாட்டின் மன்னரைக் காணவேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. தன் நண்பன் ஒருவனிடத்தில் தன் ஆசையை எடுத்துச் சொன்னான். அவன் அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு நண்பனிடம் சொல்லி அந்த மனிதனை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தான்.ஒரு குறிப்பிட்ட நாளன்று அந்த மனிதன், அரண்மனை வேலைக்காரனுடன் மன்னரைக்...

கொடுத்து மகிழும் கூர்ம அவதாரம்

கூர்ம ஜெயந்தி: 11-7-2026 பகவான் எத்தனையோ அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். அதிலே குறிப்பிடத்தக்க அவதாரங்கள் பத்து. இதனை தசாவதாரம் என்கிறோம். அதில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் முதல் உயிர் நீரில் மட்டும் வாழ்வது. அது மச்சாவதாரம். அடுத்து நீரிலும் நிலத்திலும் வாழ்வது கூர்ம...

தோன்றாத் துணையாக அருளும் கூர்மாவதாரம்

ஸ்ரீகூர்ம ஜெயந்தி - 11.7.2026 பிறப்பில் பல் பிறவிப்பெருமாள்” என்று பகவானைச் சொல்வார்கள். ஆயினும் அவன் பிறப்பெடுக்கிறான்.இதனை வேதம் “அஜாயமானோ பஹூதா விஜாயதே'' என்று போற்றுகிறது.நம் பிறப்பு கர்மத்தின் அடியாகவும், அவன் பிறப்பு கருணையின் அடியாகவும் இருக்கிறது. அவதாரம் என்றாலே மேலே இருந்து கீழே இறங்குவது (descending) என்று பொருள். அப்படி எடுத்த அவதாரங்கள் அதிகம்...

விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்!

பகுதி -5 பராசர முனிவர் சொல்கிறார்.“மகாலட்சுமி ப்ருகு முனிவருக்கு மளாகப் பிறந்துஸ்ரீ மன் நாராயணனை கணவனாக அடைந்தாள்.”இப்படிச் சொன்னவுடன் மைத்ரேயர் ஒரு கேள்வி கேட்கிறார். “மகரிஷியே,ஸ்ரீ தேவி அமுதம் கடையும்போது அமிர்தக் கடலில் தோன்றினாள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்புறம் எப்படி அவர் ப்ருகு முனிவருக்கு மகளாகப் பிறந்தாள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?”விஷ்ணு புராணத்தில் மைத்ரேய...

சாதனைச் செல்வி சாமுண்டீஸ்வரி

புராண கால உதாரணங்களின்படி, பொதுவாக தவம் புரிவது என்பதே, தெய்வங்களிடமிருந்து அரிய வரங்களைப் பெறுவதற்காகத்தான். முனிவர்கள் தவிர, அரக்கர்களும் இவ்வாறு தவம் இயற்றித் தம் வல்லமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்ன, முதலாமவர்கள் உலக நன்மைக்காக அவ்வாறு தாம் பெறும் வரத்தை பயன்படுத்தினார்கள்; அரக்கர்களோ, தம் அதிகார எல்லையை விரிவுபடுத்தவும், சர்வாதிகாரத்தை நிலைநாட்டவும், தாங்கள்...

காணக் காண மெய்சிலிர்க்க வைக்கும் காளையார் கோயில்!

பகுதி 1 பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் பதினான்கில் ஒன்று திருக்கானப்பேர் என்ற காளையார் கோயில். மற்றைய திருத்தலங்கள் திரு ஆலவாய், திருப்பரங்குன்றம், திருவேடகம், திருப்புத்தூர், திருப்புனவாயில், திருராமேஸ்வரம், திருப்புவனம், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருஆப்பனூர், திருவாடானை, திருக்கொடுங்குன்றம் என்பவையாகும். பாண்டிய நாட்டின் பெருமையைப் பாட வந்த மாணிக்கவாசகப் பெருமான், சிவபெருமானுடைய நாடு பாண்டிய நாடே என்று...

‘இரண்டுங்கெட்டானாகி விடுவேனோ!’

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 122 (பகவத்கீதை உரை) அர்ஜுனனுக்கு இன்னமும் சந்தேகம்  விலகவில்லை. சுய நம்பிக்கை அற்றவனாக அவன் பேசுகிறான். ``அயதி ச்ரத்தயோபேதோ யோகாச்சலிதமானஸ அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி’’ (6:37) ‘‘அக்கறை, ஆர்வம், ஈடுபாடு எல்லாம் இருக்கிறது கிருஷ்ணா, ஆனால் முயற்சியில் தொய்வு ஏற்பட்டால் யோகம் கிட்டாது என்று சொல்கிறாய்....

காளியின் அருள்பெற்ற காளிதாசர்

பகுதி 2 காளிதாசர் போஜ மன்னரின் அரண்மனைக்கு இப்போதுதான் முதன்முறையாக வருகிறார். அந்த நாட்டிற்குள் அவர் நுழைவதற்கு முன்னால், காளிதாசரின் புகழும் பெருமையும் எல்லா இடங்களிலும் பரவி இருந்தன. நேருக்குநேராக அறிமுகம் ஆகவில்லையே தவிர, போஜமன்னர் காளிதாசரைப் பற்றி நன்கு அறிந்திருந்து, ஏற்கனவே தன்னுடைய உள்ளத்தைப் பறிகொடுத்திருந்தார். காளிதாசர் அங்கே போஜ மன்னர் அரசவையில் நுழைந்தபோது,...

இறைவனும் மனிதனும்

பகுதி 4 மனிதன், தன் செயல்களிலும் நோக்கங்களிலும் தடுமாறாமல் இருக்கவே ஆன்மிகம். ஆனால், அதனை உலகியல் சுகங்களும், அஞ்ஞானமும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியாமல் செய்துவிடுகின்றன. ஆன்மிகம் என்பது ஏதோ உலகை விடுத்து ஓடுவதல்ல; அது நம் அகத்தை செம்மைப்படுத்தி, செயல்களில் நேர்மையையும், நோக்கங்களில் தெளிவையும், மன உறுதியையும், தருவதற்காக உருவான ஒரு கவசம். ஆனால்,...

இறைவனும் மனிதனும்

பகுதி 3 உயிர்களின் படிநிலைகளில், மனிதப் பிறவி உன்னதமானது. மனிதன் பகுத்தறிவு பெற்றவனாக இருப்பதினால், அவனுக்கு பல நன்மைகளும் உண்டு. சிரமங்களும் உண்டு. மனிதன் மனிதனைப்போல் வாழ முடியாமலும், விலங்குகள்போல வாழ முடியாமலும் தவிக்கிறான். மனிதன் தன் பகுத்தறிவால் உயர்ந்தவனாகக் கருதப்பட்டாலும், அதே பகுத்தறிவே அவனுக்குப் பல நேரங்களில் மனப்போராட்டங்களையும், குழப்பங்களையும் தந்துவிடுகிறது. இதனை விளக்கும்...