ஆழ்வார் பிரான் ஆன கதை!!

வையத்து வாழ்வீர்காள்: பகுதி-5 நாட்கள் நகர்ந்தன. நம்மவருக்கு திருக்குடந்தை ஆராவமுதனுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. உடுத்தியிருந்த ஆடையுடன் புறப்பட்டார். பாசுரங்களைப் பாடியபடியே பயணித்தார்.இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவியில் அவன் அவதாரத்தைச் சொல்லும் பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பமாக...

வணக்கம் நலந்தானே! - வேதாந்த தத்துவ ராமன்

ஆத்மாவாகிய புருஷன் யார் என்று வால்மீகி கேட்டார். அதற்கான பதிலையே நாரதர் சொன்னார். அப்படிச் சொன்ன பதிலே ராமாயணமானது. இதற்கு என்ன ஆதாரமெனில், ஸ்ரீமத் பாகவதத்தில் 5வது ஸ்கந்தம், 19வது அத்தியாயத்தில் ஸ்ரீராமர் இப்பொழுதும் கிம் புருஷ வர்ஷத்தில் இருக்கிறார். அப்படி எந்நாளும் இருப்பவரை ஹனுமார் உபாசித்துக் கொண்டிருக்கிறார். ஜம்பூத்வீபத்தில் ஒன்பது வர்ஷங்களில் ஒன்றே கிம்...

பிரம்ம முஹூர்த்தம்

ஒருமுறை, பரிவாரங்களுடன் தென் மாவட்டம் செல்லும் வழியில் புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார், காஞ்சி ஆச்சார்யாள். மெயின் ரோட்டில் இருந்த ஒரு பெரிய சத்திரத்தில் தங்கியிருந்து, அன்று இரவு, ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார், ஸ்வாமிகள். தனக்குப் பணிவிடை செய்யும் நாகராஜன் என்ற இளைஞனை அருகில் அழைத்து, “அப்பா நாகு… நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நா...

அரண்மனை விட்டு அரன் மனை அடைந்தவர்

எல்லாவற்றையும் துறந்து, தெய்வ சிந்தனையிலேயே வாழும் மகான்களுக்குக் கூட, அடுத்தவர்களின் அவச் சொல்லுக்கு ஆட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது நியதிபோலும்! மிகவும் நல்லவரான உத்தமர் ஒருவர், ஊராரின் பழிக்கு ஆளானதையும்; அந்தப் பழியை அரசர் கையாண்ட விதத்தையும் விளக்கும் வரலாறு இது.மைசூர் அரண்மனை எனும் அற்புதமான மாளிகையைப் பார்க்கிறோம் அல்லவா? அதே மைசூரில் அதே போன்றதொரு...

கனிவான அவர் பார்வை பிணி எல்லாம் போக்கும்

ஒருநாள் மாலை வேளை. காஞ்சி மடத்தில் மகா சுவாமிகளை தரிசனம் செய்ய நல்ல கூட்டம். நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. ‘இன்னும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்?’ என்பதை தெரிந்து கொள்ள தலையைச் சுற்று சாய்த்து பார்த்த சுவாமிகளின் பார்வையில் 25 வயதுயுடைய ஓர் இளைஞர் தென்பட்டான். அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்த பெரியவா, தனக்குப் பணிவிடை செய்யும்...

ஆழ்வார் பிரான் ஆன கதை!!

வையத்து வாழ்வீர்காள்: பகுதி-3 பின்பழகிய பெருமாள் ஜீயர், ஆழ்வார்கள் பற்றி உபன்யாசத்தைத் தொடராக நிகழ்த்தி வந்தார். காஞ்சி நகரில் இது நிகழ்வது குறித்து அவரது குரு நம்பிள்ளைக்குக் கூடுதல் ஆனந்தம். கூட்டம் மொத்தமும் ‘திருமழிசை ஆழ்வார்’ பற்றிய உபன்யாசம் என்றதும் ஆர்வம் மிகுந்திருந்தனர். உபன்யாசம் துவங்கியது.“அன்றொரு நாள், அத்ரி, ப்ருகு, வசிஷ்டர், பார்க்கவர், ஆங்கீரசர் என...

கம்சனைப் போல் வாழக்கூடாது

நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களிலும் பல்வேறு விதமான பாத்திரங்கள் உண்டு. அவை நடந்த கதைகளாக இருக்கலாம். அல்லது கற்பனைக் கதைகளாக இருக்கலாம். ஒரு விஷயம் நடந்ததா, இல்லையா என்பதைப்பற்றி நாம் விவாதிப்பதை விட, அந்த விஷயம் இன்றைய வாழ்வியலுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுமா என்று சிந்திப்பது தான் நல்லது. என்னிடம் ஒரு நண்பர், ‘‘மகாபாரதத்தில் என்ன...

பேராசை பெருநஷ்டம்

அது என்னவோ தெரியவில்லை? மனிதனின் துன்பத்திற்குக் காரணம் “அவனுடைய ஆசை தான்” என்று உலகத்தில் உள்ள அத்தனைச் சமயவாதிகளும் ஒரு சேரச் சொல்கிறார்கள்.‘‘ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்.’’ எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் ஆசையே என்பது புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவம். ஒரு அருமையான தமிழ்த் திரைப்படப் பாடல் இப்படித் துவங்குகிறது.ஆசையே...

கோழியைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

இந்த உலகத்தில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. ஓர் அறிவு உயிரினம் தொடங்கி ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் இருக்கின்றன. ஆறாவது அறிவு இருந்துவிட்டால் அவன் மனிதனாகி விடுகின்றான். பெரும்பாலான உயிரினங்களுக்கு ஐந்தறிவு கொடுத்த இறைவன், ஏன் மனிதனைப் படைத்து ஆறாவது அறிவைக் கொடுத்தான். என்பதைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறாவது அறிவை “பகுத்தறியும் அறிவு”...

சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்: ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

வெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன். நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக...