நாராயண தீர்த்தருக்கு வழி காட்டிய வராகம்

வேதங்கள் கற்று, அவை சொல்லும்படியே திருமணம் புரிந்து, இல்லற தர்மத்தை நடத்தி வந்த ஒருவர், வெளியே போய்விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கினார். வழக்கத்தைவிட நதியின் ஆழமும் இழுப்பும் அதிகமாகவே இருந்தது. ‘‘சரி! மேற்கே எங்காவது மழை பெய்திருக்கும். அதனால்தான் இன்று நீர்மட்டம் அதிகமாகி இழுப்பும் அதிகமாக இருக்கிறது....

எமபயம் நீக்கி அபயம் அளிக்கும் ஈசன்

திருவைகாவூர் திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி போன்ற மகாசிவராத்திரி தலங்களின் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது திருவைகாவூர். காலம் காலமாக வேடனொருவன் சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த சம்பவம் நிகழ்ந்த தலமே இதுதான்!வேடன் ஒருவன் மானை பார்த்தான். வேடன் நோக்குவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த பிரதேசமான வில்வாரண்யத்திற்குள், அங்கிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் விடாது...

விதுரர் சொன்னது என்ன?

இந்த உலகம் எதற்காக இருக்கிறது? எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது? உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது? எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்றுகூட எவருக்கும் தெரியவில்லை. எதைப் பெற யார் தகுதி படைத்தவர்கள் என்று எந்த சக்தி நிர்ணயிக்கிறது. முயற்சிக்காக கூலி பெற மரணம் வரை காத்திருக்க வேண்டுமா? உலகம் அதர்மத்தின் கைகளுக்கு...

கள்வர் ஆழ்வாரான கதை

பகுதி - 11 ‘‘நம் திருமணம் எப்பொழுது?’’ ‘‘ஒரே ஒரு வேண்டுதல்தான் உங்களிடம் நான் கோருவது. தாங்கள் இதை தயை கூர்ந்து அருள வேண்டும். தாங்கள் தினந்தோறும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு ததியாராதனை என்கிற வகையில் உணவு வழங்கி அவர்களை கெளரவிக்க வேண்டும்.’’‘‘நிச்சயம் செய்வோம். நாம் இணைந்துவிட்டால், எனக்கு எதுவும் சாத்தியமே! நீ உனக்காக பொன்னோ,...

பிறப்பே அறியானை பெற்றவள்

காரைக்கால் அம்மையார் கதை - 5 அந்தரத்தில் கைகள் முளைத்து மாம்பழம் தந்த அதிசயச் செயலை கண்ட பரமதத்தன், வேறெந்த சிந்தனையுமற்று, “ஹாவென்று” உறைந்து போனான். நடந்த ஈசனின் திருவிளையாடல், அவனது மொத்த நினைப்பையும் தாக்கி, முழுக்க முழுக்க தன் சுயமற்று அதிர்ந்துபோய் நின்றான். எந்த அதிசயத்தையும் காணாதவன்போல, எதைக் கண்டும் அதிராதவன்போல, புனிதவதியிடம் தன்னை...

புராணங்களில் அறக் கதைகள்

வஜ்ராயுதம் வந்த கதை இந்திரன் வைத்திருக்கும் வெள்ளை யானைக்கு ``ஐராவதம்’’ என்று பெயர். அவன் வைத்திருக்கும், யாராலும் வெல்ல முடியாத ஆயுதத்திற்கு ``வஜ்ராயுதம்’’ என்று பெயர். வஜ்ரம் என்றால் உறுதி என்று பொருள். தேக்கு மரம் உறுதியாக இருப்பதால், வஜ்ரம் என்று சொல்வோம். அதைப் போல, இந்திரனிடம் உள்ள உறுதியான ஆயுதம் வஜ்ராயுதம். இந்த ஆயுதம்...

அன்னை சீதா பிராட்டிக்கு அனுமன் கூறிய அடையாளங்கள்!

அசோக வனத்தில் அரக்கியரிடையே இராவணனின் தாங்கொணாக் கொடுமைக்கு உள்ளாகி, இராமன் வந்து தன்னை மீட்கவில்லையே என்ற வருத்தம் மேலோங்க தன்னையே அழித்துக் கொள்ள எண்ணி, சேலைத்தலைப்பையே தூக்குக் கயிறாக்கி, மரத்தில் கட்டி, தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணிய தருணத்தில், ஏதோ ஓர் சக்தி தன்னைத் தடுப்பது போன்று உணர்ந்தாள் சீதா பிராட்டி. ராம தூதனான அஞ்சனை...

கள்வர் ஆழ்வாரான கதை

பகுதி 10 சோழப் பேரரசு என்றுமே வீரத்தையும் விவேகத்தையும் மதிக்கும். சோழமண்டலத்தை எட்டாம் நூற்றாண்டில் ஆண்டுவந்த மன்னன் தன்னுடைய படைத் தளபதி நீலனின் ஆற்றலை நேரில் கண்டு வியந்தான்.அரசவையில் நீலனை அழைத்து வெகுமானங்கள் அளித்து மகிழ்ந்தான்.“நீலன் இன்று முதல் திருமங்கை நாட்டின் மன்னனாக முடிசூட்டப்படுகிறான்” என்று கூறி, புலி இலச்சினை பொறித்த கிரீடத்தை அணிவித்தான்.நீலன், “என்...

வையத்து வாழ்வீர்காள் அடியார்க்கும் அடியாரான ஆழ்வாரின் கதை

‘`நம்மீது பக்தியுடன் இருந்தால் அது நம் அருளால் வருவது. பாதை மாறிப் போய்விட்டால் அவன் விதியால் வருவதா? இது என்ன நியாயம்’’ என தாயார் வினவ.. `‘தன்னை மறந்திருப்பவனை நான் என்ன செய்யட்டும்? நன்றாக பாசுரங்கள் பாடித் துயிலெழுப்பியவன், இன்று துயரில் இருக்கிறான். இந்திரிய சுகங்களின் மேல் ஈடுபாடு வந்தபின் நம்மீது பக்தியேது?’’ - பெருமாள்....

சிறுவனின் உயிரை காப்பாற்றாத சாய் பாபா.. ஏன் தெரியுமா?

ஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை செய்யும் ஞானிகள் சில சமயம் ஏதும் செய்யாமல் இருந்து விடுவர். அப்படி “ஷீர்டி சாய் பாபாவின்” வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப்...