உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை குறைதீர்முகாம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு
அரியலூர், மார்ச் 14: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது....
எல்லைப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு
குன்னம், மார்ச். 14: குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காட்டில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா உத்தரவின்பேரில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் லப்பைக்குடிக்காட்டில்...
பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்த சிறப்பு மனு முகாமில் 31 மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர், மார்ச் 12: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஜி.எஸ்.அனிதா தலைமையில் நடந்த, இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (நகரம்), பெரம்பலூர் (ஊரகம்) பாடாலூர், குன்னம், மங்கல மேடு,...
பெரம்பலூர் /அரியலூர் ஆ.ராசா எம்பியிடம் உறுதி தா.பழூர் அருகே புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள்
தா.பழூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம் பகுதியில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் திட்டம் 2025-2026 திட்டத்தின் கீழ், கோடாலிகருப்பூர் கிராமத்தில், ரூ.200.00 லட்சம் மதிப்பீட்டில், கொள்ளிடத்தில் ஒரு கண் வடிகால் மதகு கட்டுதல். காரைக்குறிச்சி ஊராட்சி, அருள்மொழி கிராமத்தில் ரூ.350.00 லட்சம் மதிப்பீட்டில், கொள்ளிடத்தில் இடது கரையை புனரமைத்தல்,...
தேமுதிக - விசிக நிர்வாகிகள் சந்திப்பு: பெரம்பலூரில் திமுக வெற்றிபெற பாடுபடுவோம்
பெரம்பலூர், மார்ச் 12: திமுக - தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் நேற்று பெரம்பலூர் நகரில் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.இராசா எம்பியை, தேமுதிக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது...
சட்டமன்றத்தேர்தல் பணிக்கு எல்லை பாதுகாப்பு படை குழுவினர் அரியலூர் வருகை
ஜெயங்கொண்டம், மார்ச். 11: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் நேற்று அரியலூர் வந்தனர். அரியலூர் மாவட்டம் குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று...
பெரம்பலூரில் நாளை துணை முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழா ஏற்பாடுகளை எம்பி, அமைச்சர் ஆய்வு
பெரம்பலூர், மார்ச் 11: பெரம்பலூரில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா நாளை பாலக்கரை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா...
அரியலூர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
அரியலூர், மார்ச்11: அரியலூர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 2 மணி நேரம் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேற்று காலை 9.31 மணிக்கு வந்த நீதிமன்ற ‘இ மெயிலில்’, நீதிமன்ற நீதிபதி அறைகளில் 5சயனைடு வாயு நிரப்பப்பட்ட விஷகுண்டுகள் வெடிக்க உள்ளன. பிற்பகல் 1.10 மணிக்குள் ஊழியர்கள்...
ஜெயங்கொண்டத்தில் 1300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு
ஜெயங்கொண்டம் மார்ச் 9: திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் எஸ்பி விஷ்வேஷ் பா சாஸ்திரி வழிகாட்டுதலின்படி டிஎஸ்பி தினேஷ்குமார் மேற்பார்வையில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ், பான் மசாலா, குட்கா, கூல் லிப் உட்பட போதை பொருட்களை போலீசார் அன்றாடம் பறிமுதல்...


