பாடாலூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

பாடாலூர், நவ.19: பாடாலூர் அருகே துக்க வீட்டிற்கு பந்தல் அமைக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மகேஷ்குமார் (50). இவர், பந்தல், மற்றும் ஒலி ஒளி அமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் பொம்மாயி என்பவர் துக்க நிகழ்ச்சிக்கு பந்தல்...

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சர்வேயர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பெரம்பலூர், நவ.19: களப் பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட வலியுறுத்தி நேற்று முதல் சர்வேயர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும். களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை...

பெரம்பலூர் காந்தி சிலை அருகே கடை வைக்க அனுமதி கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,நவ.19:பெரம்பலூர் நகராட்சி, பழைய பஸ்டாண்டு காந்தி சிலை அருகே, பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில், சாலையோரக் கடைகள் வைத்துநடத்த அனுமதி கேட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் விற்பனை குழு உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினியை நேரில் சந்தித்து...

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு

  ஜெயங்கொண்டம், நவ.18: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம், பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில், விசேஷமாக கோவில் வளாகத்தில் பக்தர்கள் குழுவினர் சார்பில் சிறுதானியங்களை கொண்டு சிவலிங்க வடிவத்தில் அமைத்து விளக்கேற்றி...

பெரம்பலூரில் சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்: அதிகாலை முதலே சரண கோஷத்துடன் வழிபாடு

  பெரம்பலூர், நவ.18: கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று பெண்கள், சிறுவர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து மண்டல விரதத்தைத் தொடங்கினர். கேரளமாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கான நடை நேற்று முதல் திறக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலை சென்றுள்ள பக்தர்கள் பதினெட்டாம் படியேறி ஐயப்ப தரிசனத்தை...

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

    ஜெயங்கொண்டம், நவ.18: சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான தேதியை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண் துறை சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நடப்பாண்டு சம்பா நெல் பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15ம் தேதி கடைசி என ஏற்கனவே...

ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெட்டிஷன் மேளா

ஜெயங்கொண்டம், நவ.13: ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. அரியலூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரிலும், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ஆலோசனையின் பேரிலும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெட்டிஷன் மேளா ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பெட்டிஷன் மேளாவில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்...

வேலூர் அரசு உயர்நிலைபள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

பெரம்பலூர்,நவ.13: வேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற, இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளித் தலைமை...

இலையூர்- மருதூரில் ரூ.43.83 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

ஜெயங்கொண்டம், நவ.13: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், இலையூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-2025-ன் கீழ், ரூ.20.13 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், இலையூர் ஊராட்சியில் ரூ.11.00 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடம், மருதூர் ஊராட்சியில்...

பெரம்பலூர் கோர்ட் வளாகம் முன் இன்று போதை ஒழிப்பு மினி மாரத்தான் போட்டிசார்பு நீதிபதி தகவல்

பெரம்பலூர், நவ.12: பெரம்பலூரில் தேசிய சட்டப் பணிகள் தினத்தைமுன்னிட்டு இன்று காலை நீதிமன்றம் முன்பிருந்துமினி மாரத்தான் போட்டிநடைபெறுகிறது என பெரம்பலூர் சார்புநீதிபதி சரண்யா தெரிவித்தார். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், பெரம்பலூர் சார்பு நீதிபதியுமான சரண்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தேசிய சட்டப் பணிகள் ஆனை குழு...