திருத்தணி பகுதியில் பரவலான மழை
திருத்தணி, செப்.19: திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு இரவு நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது. இந்நிலையில், நேற்று மாலையும் திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகையில் சுமார் அரைமணி நேரம் பரவலான மழை பெய்தது. இதனால் பள்ளி...
பள்ளிப்பட்டு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை
பள்ளிப்பட்டு, செப்.19: திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்தில் விவசாயிகள் நெற்பயிர் அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 65 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு...
திருத்தணியில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம்: கண்டிக்கும் ஓட்டுநர், நடத்துநரிடம் ரகளை
திருத்தணி, செப்.18: திருத்தணியில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம் மேற்கொள்ளும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் ஒழுங்குமீறல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வரும் வகையில் இலவச பேருந்து பயண...
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் திருத்தணி வழியாக திருமலைக்கு ஆன்மிக பக்தர்கள் பாதயாத்திரை
திருத்தணி, செப்.18: புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் திருத்தணி வழியாக திருமலைக்கு ஆன்மிக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதனால். திருப்பதிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பெருமாளை வணங்கி வழிபட புரட்டாசி மாதம் சிறப்பானதாகும். இம்மாதம் முழுவதும் பெருமாள் கோயில்களில் விழாக்கள், பிரம்மோற்சவங்கள் நடைபெறும். பெருமாள் பக்தர்கள் மாலை அணிந்து...
திருவள்ளூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளூர், செப்.18: திருவள்ளூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை(19ம் தேதி) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், 25க்கும்...
திருவாலங்காடு அருகே ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் சிட்கோ தொழிற்பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்
திருத்தணி,செப்.17: திருவாலங்காடு பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் சிட்கோ தொழிற் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காடி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதி மக்களுக்கு வேலை...
திருவள்ளூரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு
திருவள்ளூர், செப்.17: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், எஸ்.ஏ கல்லூரியும் இணைந்து நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதாப், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், திருவேற்காடு எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகியவை...
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ‘நில் கவனி நேசி’ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
ஆவடி, செப்.17: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ‘நில் கவனி நேசி’ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள “நில் கவனி நேசி” எனும் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டது....
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற வாகனங்கள், இயந்திரங்கள் தயார்: மாநகராட்சி நடவடிக்கை
ேபாரூர், செப்.16: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து வகை வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்படுத்தும் பணி நடைபெற்றது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்ைககளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, வடிகால் அமைப்பது, நீர்நிலைகளை தூர்வாரி...