சுதந்திர தினத்தன்று மதுபான கடைகள் மூடல்

திருவள்ளூர், ஆக.13: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை கடைகள், மதுக்கூடங்கள் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கண்டிப்பாக மூடவேண்டும் என்று கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்கள் ஆகிய மதுபான உரிம...

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா வாலிபர் கைது

அம்பத்தூர், ஆக.13: சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர் வைத்திருந்த...

திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆவடி, ஆக.13:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் பிரதான சாலையில் சலூன், மெடிக்கல் ஷாப், ஓட்டல், காய்கறி கடைகள், டிராவல்ஸ், ஹார்டுவேர்ஸ் உட்பட பல்வேறு கடைகளின் டிஜிட்டல் பலகைகள், தற்காலிக கூரைகள் ஆகியவை சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையோரம் வாகனங்களை நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் காலை,...

லாரி மோதி சாலையில் விழுந்த மின் கம்பம்

புழல், ஆக.12: புழல் அருகே லாரி மோதியதில் சாலையில் விழுந்த கம்பத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. புழல் - காந்தி பிரதான சாலை, வடபெரும்பாக்கம் இணைப்பு மேம்பாலம் அருகே சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது, புழல் அடுத்து வடபெரும்பாக்கம், செங்குன்றம் - மாதவரம் மாநில சாலையில் வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த...

திருவள்ளூரில் முன்பகை காரணமாக வாலிபருக்கு அடி உதை

திருவள்ளூர், ஆக.12: திருவள்ளூரில் முன்பகை காரணமாக வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், ராஜாஜி சாலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் யுகேந்திரன் (19). இவர், நேற்று முன்தினம் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த...

திருத்தணியிலிருந்து ரயிலில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி, ஆக.12: தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சார்பில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திர எல்லை கிராமங்களில் பெண்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி ஆட்டோ, பேருந்து, வேன், ரயில்களில் ஆந்திராவிற்கு கடத்தி பாலிஷ் போட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், ரயில்வே போலீஸ் எஸ்.பி ராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா...

திருத்தணி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இரு பக்தர்களின் பைக் திருட்டு

  திருத்தணி, ஆக.10: திருத்தணி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இரு பக்தர்களின் பைக்குகள் திருட்டு போனதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் (35) என்பவர்...

திருத்தணி முருகன் கோயிலில் பரபரப்பு போலீசாருக்கு உணவு வழங்க மறுப்பு

  திருத்தணி, ஆக.10: திருத்தணி முருகன் கோயிலில் காலை சிற்றுண்டி சாப்பிட கூட்டமாக போலீசார் சென்றனர். ஆனால் கோயில் ஊழியர்கள் சாம்பாரை மறைத்து வைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா முன்னிட்டு 5 நாட்கள் உபயதாரர் மூலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்...

ஊத்துக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

  ஊத்துக்கோட்டை, ஆக.10: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடைக்கு ஊத்துக்கோட்டை, பால்ரெட்டி கண்டிகை, தொம்பரம்பேடு, தாராட்சி, செஞ்சியகரம் ஆகிய பகுதிகளில் இருந்து மதுப்பிரியர்கள் மதுகுடிப்பதற்காக செல்வார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனையாளர் சேகர் மற்றும் மேற்பார்வையாளர் சிவக்குமார் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு சென்றனர். பின்னர்...

ஆரணி குப்பை கிடங்கில் மலைப்போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

ஊத்துக்கோட்டை, ஆக. 8: பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும், இங்கு காய்கறி, மளிகை, ஓட்டல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் ஊருக்கு வெளியே உள்ள...