டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

  திருவள்ளூர், ஜூன் 9: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை கலெக்டர் ச.கவிதா தொடங்கி வைத்தார். திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 2, 2ஏ போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா...

நண்பர்களுடன் குளித்தபோது சோழவரம் ஏரியில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி

    மாதவரம், ஜூன் 9: சோழவரம் ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது, நீரில் மூழ்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சோழவரம் அடுத்த காரனோடை, நாரணம்பேடு லிங்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் கோபி ராம் (16), அதே பகுதியில் கேன் தண்ணீர் போடும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் சோழவரம்...

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்

  திருவொற்றியூர், ஜூன் 9: திருவொற்றியூரை சேர்ந்தவர் ஐசக் (19). புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஐ.டி.ஐ., கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை தாய், அக்கா கிரேசி, தங்கைகள் எல்சி, பெல்சி ஆகியோருடன் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஐசக், கிரேசி ஆகியோர் கடலில்...

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

திருவள்ளூர், ஜூன் 8: காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (60). இவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கோயம்பேடு பகுதியில் வசித்து, நில புரோக்கர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 5.45 மணியளவில் சென்னையில் இருந்து திருத்தணி வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் அம்பத்தூர்...

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறப்பு தொழில் கடன் முகாம்

திருவள்ளூர், ஜூன் 8: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை நிறுவனங்களுக்கு புதிய தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்களை அமைப்பதற்கும், தற்போது இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. அதன்பேரில் 86 சி மற்றும் டி, 2வது...

நில பட்டா வழங்கிய தகராறில் விஏஓவை தாக்கிய இருவர் கைது

போரூர், ஜூன் 8: மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் அவரது தரப்பினர் அதே பகுதியில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் உபயோகப்படுத்தி வந்த இடம் வேறு ஒரு நபரின் பெயரில் பட்டா கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மோகன்ராஜ் மற்றும் சதாசிவம் ஆகியோர் நேற்று கோவூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று...

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பலி

திருவொற்றியூர், ஜூன் 6: திருவொற்றியூர் பாலகிருஷ்ணன் நகர், செல்வ விநாயகர் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர், ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களது 3 மாத ஆண் குழந்தை சர்வேஸ்வரனுக்கு, நேற்று அதிகாலையில் கீர்த்தனா பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்தார். பின்னர், 8 மணியளவில் குழந்தையை எழுப்ப முயன்றபோது, குழந்தை அசைவில்லாமல் இருந்தது. இதனைக் கண்ட...

பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ தீர்த்தவாரி உற்சவம்

பூந்தமல்லி, ஜூன் 6: பூந்தமல்லியில் உள்ள மிகவும் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் புஷ்பவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் கடந்த மே மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமி தங்க முலாம் கேடய அலங்காரம், சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை,...

பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணி: எதிர்பார்ப்பில் பயணிகள்

ஊத்துக்கோட்டை, ஜூன் 6: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மாநகர பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பெரியபாளையம் அருகே அமணம்பாக்கம் ஊராட்சி தாமரைப்பாக்கம் பகுதியில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் என...

கோசாலையில் இருந்து மீட்கப்பட்ட வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு: கோட்டாட்சியர் நடவடிக்கை

திருவள்ளூர், ஜூன் 4: ஊத்துக்கோட்டை அருகே கோசாலையில் இருந்து மீட்கப்பட்ட 41 நபர்களுக்கு, அரசு சார்பில் தலா ரூ.30,000 விடுவிப்பு ஆணையினை, கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் வழங்கி, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், தேவந்தவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கோசாலா உள்ளது. இந்த, கோசாலாவில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த...