விவசாயி வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை
கும்மிடிப்பூண்டி, பிப்.14: கும்மிடிப்பூண்டி அருகே விவசாயின் வீட்டில் நுழைந்து 5 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே மாநெல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு(60) இவர் நேற்று மதியம் தனது மனைவி ராஜேஸ்வரி(54) என்பவரும் வீட்டை பூட்டிக்கொண்டு, பாதிரிவேடு பகுதியில்...
திருவள்ளூரில் 5வது புத்தக திருவிழா
திருவள்ளுர், பிப்.14:திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் எதிரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளுர் புத்தகத் திருவிழா தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரைசந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர்...
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
திருவள்ளூர், பிப்.13: திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தாட்கோ மூலம் தங்கி படிக்கும் வசதியுடன் உலக தர உணவு சேவை, சூழலியல் சுற்றுலா திறன் உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். மேலும், யார்யொரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட...
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
பொன்னேரி, பிப்.13: பொன்னேரி அருகே, ஏ.ரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி அடுத்துள்ள ஏ.ரெட்டிபாளையம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நீர்த்தேக்க தொட்டி கடந்த 10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது....
தாய்லாந்து, காஷ்மீர் டூர் பேக்கேஜ் என ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் உரிமையாளர் கைது
போரூர், பிப்.13: மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் தமிவேந்தன்(23). இவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘ட்ரீப் ஹாலிடேஸ்’ என்ற பெயரில் செயல்படும் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜாதுரை என்பவரை அணுகியுள்ளார். அவரிடம், நாங்கள் 12 பேர் தாய்லாந்து செல்ல உள்ளோம். அதற்கு டூர் பேக்கேஜ் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.7.5 லட்சம் செலவாகும்,...
பெரியபாளையம் அருகே பைப் லைன் உடைந்து வீணாகும் தண்ணீர்
ஊத்துக்கோட்டை, பிப்.11: பெரியபாளையம் அருகே, மாம்பள்ளம் ஊராட்சியில் உள்ளது காதர்வேடு கிராமம். இங்கு விவசாயிகள், வியாபாரிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் வசதிக்காக 25 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில்...
உளுந்து சாகுபடி விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்
திருவள்ளூர், பிப்.11: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள், விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது....
திருத்தணியில் மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு
திருத்தணி, பிப்.11: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 330 வாக்குச்சாவடிகளை கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி உள்ளிட்ட வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இதேபால், 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு...
மாவட்டம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கம்
திருவள்ளூர், பிப்.10: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு திட்ட விரிவாக்கம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று...

