பழவேற்காட்டில் சந்தனக்குட திருவிழா

பொன்னேரி, நவ.15:பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கரையார்தெருவில் அமைந்துள்ள ஹஜ்ரத் செய்யதீனாஷேக் அப்துல் சுபூர் மவுலானா காதிரி பக்தாதி மற்றும் ஹஜ்ரத் செய்யதீனா உஸ்தாத் ஷாஹுல் ஹமீது ரிபாய் காதிரி தர்காவில் சந்தன குடம் உருஸ் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பழவேற்காடு சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாமல் ஆந்திரா, சென்னை, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த...

திருத்தணியில் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருத்தணி, நவ.15: திருத்தணியில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று குழுந்தைகள் தினத்தையொட்டி, திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நேருவின் முழு உருவ சிலைக்கு நகராட்சி சார்பில் மலர் மாலை...

மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

திருவள்ளூர், நவ.15: பூந்தமல்லி ஒன்றியம், மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டாட்சியர் உதயம், தனி வட்டாட்சியர் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ் பாபு, அமிழ்தமன்னன், வருவாய் ஆய்வாளர் கல்பனா, கிராம நிர்வாக அலுவலர் அருள்செல்வி ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அப்போது, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மொத்தம் 409...

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் தரைப்பாலம் இல்லாததால் விவசாய நிலங்களுக்கு 30 கிமீ சுற்றி செல்லும் அவலம்: பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, நவ.13: ஊத்துக்கோட்டை அருகே, மாளந்தூர் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் இல்லாததால் தங்களது விவசாய நிலங்களுக்கு சுமார் 30 கி.மி., தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, மாளந்தூர் கிராம ஆரணி ஆற்று பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர், கல்பட்டு, ஆவாஜிப்பேட்டை...

மின்சார வயர் உரசி லாரி தீ விபத்து ரூ.5 லட்சம் டயப்பர்கள் எரிந்து நாசம்

பூந்தமல்லி, நவ.13: திருவேற்காட்டில் மின்சார வயர் உரசி கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான டயப்பர்கள் எரிந்து நாசம் நாசமாகின. ஹரியானா மாநிலத்தில் இருந்து குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டயப்பர்கள் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திருவேற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரியை டிரைவர் சல்மான் என்பவர் ஓட்டி...

தடகள போட்டி

திருவள்ளூர், நவ.13: திருவள்ளூர் மாவட்ட தடகளப் போட்டிகள் வரும் 28ம்தேதி திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், 14 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள், 21.12.2011 முதல் 20.12.2013 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும், 16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகள் 21.12.2009 முதல் 20.12.2011 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும், 14 வயதுக்கு...

நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு இந்தியாவின் சிறந்த ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலாபுரம் தேர்வு

திருத்தணி, நவ.12: தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருதுக்கு பாலாபுரம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை சார்பில், 2024ம் ஆண்டுக்கான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 6வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்,...

100 பொய் சொல்லவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூக்கம் வராது: திமுக அமைப்பு செயலாளர் பேட்டி

திருவள்ளூர், நவ.12: காலை முதல் மாலைக்குள்ளாக 100 பொய் சொல்லவில்லை என்றால், எடப்பாடி பழனிச்சாமிக்கு தூக்கம் வராது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று திருவள்ளூரில் நடந்தது. திமுக மாவட்ட...

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழக-ஆந்திர எல்லையில் வாகன சோதனை தீவிரம்

திருத்தணி, நவ.12: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, திருத்தணியில் தமிழக -ஆந்திர மாநிலங்களின் எல்லையில் கண்காணிப்பு பணியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நேற்று முன்தினம் இரவு காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உடல் சிதறி இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில்...

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றிவந்த 300 வாகனங்கள் காத்திருப்பு

திருத்தணி, நவ.11: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றிவந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு டோக்கன் போட 24 மணி நேரம் வாகனங்களில் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் 24ம்தேதி கரும்பு அரவை தொடங்கி நடைபெற்று வருகிறது....