பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து H125 ஹெலிகாப்டர் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
கர்நாடகா - வேமகலில் அமைக்கப்பட்ட Tata-Airbus நிறுவனத்தின் H125 இலகு ரக ஹெலிகாப்டர் அசெம்பிளி ஆலையை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.Make In India திட்டத்தின் கீழ் தனியார் துறை சார்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலை இதுவாகும். ...
ரூ.40 ஆயிரம் கோடி மோசடி வழக்கு; அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்த டினா: அனில் அம்பானியிடம் நாளை விசாரணை
புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவன பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் டினா அம்பானி விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கிகளில் வாங்கிய 40,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள விலையுயர்ந்த சொகுசு பங்களா முறைகேடாக...
காகிதத்தில் மட்டுமே ரயில்வே திட்டங்கள்.. நீதிமன்றத்தை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் :ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி : ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பதிலளிக்க கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா,...
ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி செலவிடப்பட்டது என்பது குறித்து ஏப்ரல் 1ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து
டெல்லி: டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் சிந்தி ரயில் நிலையல் வந்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 11 மணியளவில் வர்தா என்ற இடத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து - துல்ஜாபூர் இடையே ரயில் நிறுத்தப்பட்டு,...
சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு குறித்து அசாமில் தலைமை தேர்தல் ஆணைய குழு ஆய்வு: 3 நாட்களாக நடக்கும் ஆலோசனை
கவுகாத்தி: அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு குழுவினர் கவுகாத்தி வந்தனர். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10ம்...
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து உச்சநீதிமன்றம் கவலை
டெல்லி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நாகரத்னா, பாக்சி அமர்வு கவலை தெரிவித்துள்ளது. ஏ.ஐ. மூலம் போலியான வழக்கு தீர்ப்பு, நீதிபதியின் கருத்துகளை பயன்படுத்தி மனுக்கள் தயாரிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது. 'அண்மையில் மெர்சி வழக்கு என்று ஒரு வழக்கை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், விமானத்தின் கருப்புப் பெட்டி மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்
மகாராஷ்டிரா: அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், விமானத்தின் கருப்புப் பெட்டி மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதில் உள்ள தரவுகளை எடுப்பதிலும் சிக்கல் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 17 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 17 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நலிவடைந்து வரும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்துறையை மீட்க, மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களை திறக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...

