லஞ்சம், விபத்து புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணிநீக்கம்: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: கடுமையான முறைகேடு புகார்களின் அடிப்படையில் இரண்டு கீழ் நீதிமன்ற நீதிபதிகளை மும்பை உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த தனஞ்செய் நிகாம் என்பவர், மோசடி வழக்கொன்றில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்க இரண்டு இடைத்தரகர்கள் மூலம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த 2024ம்...

திருமலையில் விடிய விடிய கனமழை: தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காத்திருப்பு!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள திருமலையில் விடிய விடிய மழை பெய்து வந்தது. புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சுமார் மூன்று கிலோமீட்டருக்கு ஆக்டோபஸ் கமாண்டோ பாதுகாப்பு படையினர் அலுவலகம் இருக்கும்...

பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் ஆய்வு!

  டெல்லி: பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். பீகாரில் 2 நாட்கள் நடக்கும் ஆய்வில் அரசியல் கட்சிகள், போலீஸ், நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்...

ட்ரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி வரவேற்பு

  டெல்லி: பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார்.   ...

வேளாண் பல்கலைக்கழகங்களில் 20% இளங்கலை இடங்கள் இனி அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்: சிவராஜ் சிங் அறிவிப்பு!

  டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   ...

பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு

  பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். பீகாரில் 2 நாட்கள் நடக்கும் ஆய்வில் அரசியல் கட்சிகள், போலீஸ், நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.   ...

வங்கதேச கலவரத்தில் இந்தியாவுக்கு தொடர்பா? ஒன்றிய அரசு மறுப்பு

புதுடெல்லி : வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் மலை பகுதியில் பழங்குடியின பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் பழங்குடியினருக்கும் பெங்காலி குடியேற்றக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இது குறித்து வங்கதேச அரசின் உள்துறை ஆலோசகர் ஜெகாங்கீர் ஆலம் சவுத்ரி கூறுகையில், இந்த மோதலில்...

திருவள்ளூர் போராளிகள் பெயரில் திருப்பதிக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: முதல்வர் வீடு, கோயில்களில் அதிரடி சோதனை

திருமலை: திருவள்ளூர் போராளிகள் பெயரில், திருப்பதிக்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் முதல்வர் வீடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ள முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். திருப்பதி போலீசார், தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர டிஜிபிக்கு நேற்று 2 சந்தேகத்திற்கிடமான இமெயில் வந்தது. அதில் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள ஐ.எஸ்.ஐ மற்றும் முன்னாள் எல்.டி.டி.இ. போராளிகளுடன்...

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ்: 2 பேர் கைது

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சீத்தலை சாத்தனார் தெருவை சேர்ந்தவர் பாபிஜோஸ் (50), கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி பி.டி.ராஜன் சாலை வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்தனர். அதை மற்றொருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அதே வாலிபர்கள் கே.கே.நகர் காவல் நிலையம் முன்,...

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு வெடிகுண்டு கண்டறிதல் செயலிழக்க செய்யும் பணி: வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் பின் வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் வயது 1.7.2025 நாளன்று...