நெல்லிக்குப்பம் அருகே தூக்குபோட்டு வாலிபர் சாவு செஞ்சியை சேர்ந்தவர்
நெல்லிக்குப்பம், மே 12: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கப்பசொரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் உசேன்(22), கூலி தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் நெல்லிக்குப்பம் அருகே வெள்ளகேட் பகுதியில் பிளாட் போடும் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக நண்பர்கள் மூலம் கடந்த வாரம் வேலை கேட்டுள்ளார். அதன் பேரில் கடந்த 3...
விழுப்புரம் காவல்நிலையம் அருகே சூதாடிய கும்பல் அதிரடி கைது 2 பைக்குகள், பணம் பறிமுதல்
விழுப்புரம், மே 12: விழுப்புரம் அருகே சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து பைக், பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மேற்குகாவல்நிலையம் அருகே உள்ள ஜிஆர்பி தெருவை சேர்ந்த சக்தி என்பவரின் வீட்டின் அருகில் பணம் வைத்து ஒருகும்பல் சூதாடுவதாக வந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சூதாடிக்கொண்டிருந்த...
சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி புதுவை காங்., தலைவர் பதவியை வைத்திலிங்கம் திடீர் ராஜினாமா
புதுச்சேரி, மே 8: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்.9ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக,...
கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக மோகன்
பண்ருட்டி, மே 8: பண்ருட்டி நகராட்சி 24வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வந்தவர் மோகன். இவர் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விரைவில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ள நிலையில், அவர் ஏற்கனவே பதவி வகித்து வந்த பண்ருட்டி நகராட்சி 24வது...
முன்னாள் அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ தவாக நிர்வாகி மீது வழக்கு
புவனகிரி, மே 8: புதுச்சத்திரம் அருகே உள்ள ஆணையம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த மாதம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு போலியான வீடியோ ஒன்று தயாரித்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இந்த...
நெல்லிக்குப்பம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி
நெல்லிக்குப்பம், மே 7: நெல்லிக்குப்பம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பத்திரக்கோட்டை ஆராய்ச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். அரசு பேருந்து நடத்துனர். இவரது மகள் பிரதிஷா (17), இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட்...
சங்கராபுரம் அருகே துணிகரம் பட்டப்பகலில் தூய்மை பணியாளரிடம் செயின்பறிப்பு
சங்கராபுரம், மே 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் மனைவி சித்ரா(52) தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மரக்கன்றுகளை எடுக்க நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர், திடீரென...
51 பேருக்கு உணவு, உடை வழங்க நீதிபதி உத்தரவு
கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச தீர்வு மைய அலுவலகத்தில் மீட்டெடுக்கப்பட்ட 51 பேருக்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீண்டும் இப்படி யாரேனும் பணம் கொடுத்து...
வானூர் தொகுதியில் அதிமுகவின் கோட்டையை தகர்த்த திமுக அபார வெற்றி பெற்று சாதனை
விழுப்புரம், மே. 5: விழுப்புரம் மாவட்டம் வானூர் தனி தொகுதி உலகப்புகழ் பெற்ற தொகுதியாக உள்ளது. ஆரோவில் சர்வதேச நகரம், பிரசித்திபெற்ற வக்ரகாளியம்மன் கோயில் என சுற்றுலா, ஆன்மீகத்திலும், கல்குவாரிகள் என தொழில் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கிய தொகுதியாக இருந்தது. இந்த தொகுதியில் இதுவரை நடந்த 14 சட்டமன்ற தேர்தலில் தலா 7 முறை திமுக,...


