வெள்ளிமலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்

கல்வராயன்மலை, ஆக. 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 177 மலை கிராமங்களும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கல்வராயன் மலைப்பகுதி முழுவதும் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இங்குள்ள மலை பாதையில் இரவு நேரங்களில் காடுகளில் உள்ள காட்டெருமைகள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால், அப்பகுதி...

லோன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

விருத்தாசலம், ஆக. 5: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் சஞ்சீவி ராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(49). இவரது மனைவி சாந்தி(30). பினாயில் விற்பனை கூலித்தொழில் செய்து வருகின்றனர். சாந்தி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரைச்செல்வி என்பவர் சாந்தியிடம் லோன் வாங்கி தருவதாக கொஞ்சம் கொஞ்சமாக ரூ.2 லட்சம் பணமும்,...

கூனிச்சம்பட்டு அருகே அதிவேகமாக வந்த வாகனம் மோதி தொழிலாளி பலி

புதுச்சேரி, ஆக. 5: திருக்கனூர் கூனிச்சப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி இரவு மணலிப்பட்டு ரோட்டில் உள்ள கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். கூனிச்சம்பட்டு சந்திப்பு அருகே மணலிப்பட்டு ரோட்டில் நடந்து சென்றபோது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, முருகசேன் மீது...

பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான பிரபல ரவுடி மீது குண்டாஸ்

  புதுச்சேரி, ஆக. 4: புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (எ) திருநாவுக்கரசு (44). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் 26ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவரை சேர்த்து,...

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பரபரப்பு டீ குடிப்பதற்காக பேருந்தை வழியில் நிறுத்திய கண்டக்டர், டிரைவர் இடமாற்றம்

  விழுப்புரம், ஆக.4: டீ குடிக்க பேருந்தை வழியில் நிறுத்திய குற்றச்சாட்டிற்காக இடம் மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து அரசு பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனையில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் பகுதியில் இருந்து குண்டலபுலியூருக்கு...

ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக கீழே குதித்த பட்டதாரி பெண் பலி

  திண்டிவனம், ஆக.4: திண்டிவனம் அருகே ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக கீழே குதித்த பட்டதாரி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகள் அருணா(32), இவர் பி.சி.ஏ படித்த பட்டதாரி. மேலும் இவருக்கு ஷேர் மார்க்கெட்டில் அதிக ஈடுபாடு இருந்ததால் அதில் அதிக பணத்தை...

ரஜினியின் கூலி முதல் புஷ்பா- 2 வரை நடிகர்கள் கெட்டப்பில் முதல்வர் ரங்கசாமிக்கு பேனர் என்.ஆர். காங். தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி, ஆக. 3: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியின் புதிய படமான ‘கூலி’ முதல் அல்லு அர்ஜூன் புஷ்பா-2 வரை பல்வேறு கெட்டப்புகளில் அவரது தொண்டர்கள் புதுச்சேரி முழுவதும் பேனர்களை வைத்து கொண்டாடி வருகின்றனர். 1950 ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தவர் ரங்கசாமி, நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர், இளம் வயதில்...

விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி பெண் பலி

விழுப்புரம், ஆக. 2: விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். விழுப்புரம் அருகே மழவராயனூரை சேர்ந்தவர் தினேஷ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி(23). நேற்றுமுன்தினம் தினேஷ்குமார் தனது மனைவியை இருசக்கரவாகனத்தில் அழைத்துகொண்டு சொந்தகிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார். எல்லீஸ்சத்திரம் பகுதியிலிருந்து ஏனாதிமங்கலம் நோக்கிசென்றபோது வளைவில் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் நேருக்குநேர் மோதியது....

மாத்திரைகளை மாற்றி சாப்பிட்ட பெண் சாவு

காட்டுமன்னார்கோவில், ஆக. 2: காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி முத்துக்குமரன்(33,). இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமயிலாடி கிராமத்தைச் சேர்ந்த வினோதினிக்கும் (30) கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இவரது வீட்டில் முத்துக்குமரனின் தங்கை புவனேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரை...

ரயிலில் இருந்து தவறி விழுந்து சென்னை காவலர் பலி

திண்டிவனம், ஆக.2: திண்டிவனம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து ெசன்னை காவலர் பலியானார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே திண்டிவனம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்னை விழுப்புரம் மார்க்கமாக ரயில்வே இருப்பு பாதை செல்கின்றது. இப்பகுதியில் நேற்று முன்தினம் (45) வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயில்வே பாலத்தின் அருகே மழை நீர்...