ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா: விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

விருத்தாசலம், ஆக. 14: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ளே விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி...

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

விருத்தாசலம், ஆக. 14: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கும், கீணனூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், விக்னேஷ் அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்...

மூதாட்டியை தாக்கியவர் கைது

பண்ருட்டி, ஆக. 14: பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் மெயின் ரோட்டில் சண்முகவேல் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் பொன்னிக்கண்ணு (75) கடையில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (33) மற்றும் இமயவர்மன் (25) ஆகியோர் மிக்சர், காரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு...

கற்பூரம் தயாரிக்கும் கம்பெனியில் ரூ.78 லட்சம் கையாடல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

கடலூர், ஆக. 13: கற்பூரம் தயாரிக்கும் கம்பெனியில் ரூ.78 லட்சம் கையாடல் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவபெருமாள் என்பவர், கடலூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லாவிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான்...

சாலையோரம் நின்றிருந்த காரில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் மர்ம மரணம்

உளுந்தூர்பேட்டை, ஆக.13: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது காட்டுநெமிலி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சாலையின் ஓரமாக கார் ஒன்று நேற்று அதிகாலையில் இருந்து நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் காரின் அருகே சென்று பார்த்தபோது ஓட்டுநரின் இருக்கையில் ஒருவர் அமர்ந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள்...

தவெக நிர்வாகி குடும்பத்தினரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 8 பேர் மீது வழக்கு

வானூர், ஆக.13: வானூர் தாலுகா காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (25), இவர் தவெக நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்திவேலின் நண்பர் முகில் என்பவரை முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவருடைய தந்தை ஊராட்சி தலைவர் வில்வமணி, மதிவாணன், பெருமாள், மதியழகன், சரண்ராஜ், சம்பத்குமார், சுகவானன் ஆகிய 8 பேரும்...

கண்டமங்கலம் அருகே பம்பை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கண்டமங்கலம், ஆக. 12: புதுச்சேரி, தமிழக பகுதியை இணைக்கும் முக்கிய ஆறாக சங்கராபரணி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் முக்கிய துணை ஆறாக பம்பை ஆறு அமைந்துள்ளது. இந்த பம்பை ஆறு விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில தொடங்கி சென்னகுணம், மல்லிகைப்பட்டு, திருவமாத்தூர், அய்யூர் அகரம், மேல்பாதி, செங்காடு, சன்னியாசிகுப்பம் வழியாக புதுவை மாநிலம், சோரப்பட்டு, வினாயகப்பட்டு,...

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: சிறுவன் மீது போக்சோ வழக்கு

புவனகிரி, ஆக. 12: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால், இந்த சிறுமி எதிர் வீட்டில் டிவி பார்க்க சென்றுள்ளார். அங்கு டி.வி பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வீட்டில் இருந்த 14 வயது சிறுவன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து அந்த...

வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆடி மாத பூச ஜோதி தரிசனம்

வடலூர், ஆக. 12: கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழ் ஆண்டின் ஆடி மாதத்தின் மாத பூச ஜோதி தரிசனம் பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு நேற்று இரவு 7.45 மணி முதல் சத்திய ஞான...

புவனகிரி அருகே அண்ணன், தம்பி படுகொலை; தந்தை, 3 மகன்கள் உள்பட 6 பேர் கைது

  புவனகிரி, ஆக. 5: புவனகிரி அருகே அண்ணன், தம்பி கொலையில் தந்தை, 3 மகன்கள் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிந்து, அதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பாலகிருஷ்ணன்(43). ராமச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன்(37). அண்ணாமலையும், ராமச்சந்திரனும்...