திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தை சேதம் செய்த 5 வடமாநில வாலிபர்கள் கைது
விழுப்புரம், நவ. 19: சென்னை காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி மாலை, சென்னையிலிருந்து புறப்பட்டு வந்தது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, இன்ஜின் சக்கரத்தில் உடைப்பு இருந்ததால், உடனடியாக விழுப்புரத்திலிருந்து மாற்று இன்ஜின்...
திருபுவனையில் பரபரப்பு ரெஸ்டோ பார் திறப்புக்கு எதிர்ப்பு தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்
திருபுவனை, நவ. 19: புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை மையப்பகுதியாக உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலையில் 2 மதுபான கடைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேம்பாலம் அருகில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விசிக, தவெக உள்ளிட்ட கட்சியினர் ஒன்றுசேர்ந்து, அப்பகுதியில்...
எஸ்.ஐ. மீது தாக்குதல்
உளுந்தூர்பேட்டை, நவ. 18: விழுப்புரம் மாவட்டம் அரியூர் கண்டமானாடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (33). சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர். இந்நிலையில் ஒரு காரில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார். உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற டிரைவரிடம் இதுகுறித்து ஏன்...
ரெட்டிச்சாவடி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
ரெட்டிச்சாவடி, நவ. 18: கடலூர் அடுத்த பள்ளிப்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் கல் வீசினார்....
திருடிய மோட்டார் சைக்கிள்களை அடகு வைத்த 2 பேர் கைது
விருத்தாசலம், நவ. 18: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தீவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அஜித் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் அபிஷேக் (25). அபிஷேக், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமார் (36) என்பவரை தனது நண்பர் என்று அறிமுகப்படுத்தி அவருக்கு அவசரத்...
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
நெல்லிக்குப்பம், நவ. 15: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு அறிவுறுத்தலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார், நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன் கோயில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை விசாரணைக்காக அழைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் கையில் வைத்திருந்த பொட்டலத்தை பாக்கெட்டில் வைத்துக்...
உள்நோக்கத்துடன் வேறுவிதமாக மாற்றியுள்ளார் காவல் அதிகாரி பாட்டிலை ஆய்வு செய்தால் கள்ளா? அல்லது மோரா? என தெரியும்
புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களில் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள ஏனாம் பிராந்தியமும் ஒன்று. இந்நிலையில் இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 காவலர்கள் ஏனாமில் இருந்து வேன் மூலமாக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு விசாரணை முடிந்து, நேற்று முன்தினம் மாலை வேனில்...
வேலை வாங்கி தருவதாக ரூ.5.60 லட்சம் மோசடி
சின்னசேலம், நவ. 15: வேலை வாங்கி தருவதாக சகோதரர்களிடம் ரூ.5.60 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் பச்சையம்மன் கோயில் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி(33). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 4.3.2015ல் கள்ளக்குறிச்சி அருகே வடக்கநந்தல் பகுதியை...
மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி மோசடி
புதுச்சேரி, நவ. 13: மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி அவரது மகன் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் எலக்ட்ரிக் கம்பெனி இயங்கி வருகிறது. இதனுடைய மேலாண் இயக்குநர் பிரசன்னா பூட்டோரியா (60) என்பவர் டெல்லி...


