மற்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் ரிஜக்டு விழுப்புரம் காங்கிரசில் சிதம்பரம் கை ஓங்கியது நிர்வாகிகள் ஒத்துழைப்பில்லை என விரக்தி

விழுப்புரம், ஜன. 22: விழுப்புரம் காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர் நியமித்தபின் சிதம்பரம் கை ஓங்கியுள்ளது. மாணிக்கம்தாகூர் எம்பி உள்ளிட்ட மற்ற தலைவர் ஆதரவாளர்கள் மாவட்ட தலைவர் பதவிக்கு முட்டி மோதிய நிலையில் அவர்கள் ரிஜக்டு செய்யப்பட்டு சிதம்பரம் ஆதரவாளருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் ஆதரவாளர்கள் பெருமளவு இல்லாததால் புதிய தலைவருக்கு போதிய ஒத்துழைப்பில்லை...

விழுப்புரம் அருகே பரபரப்பு ஓடும் அரசு பேருந்தில் சாகசம் செய்து பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வெளியீடு  நடத்துனர் மீது வாலிபர் தாக்குதல்  வீடியோ வைரல், போலீஸ் வழக்கு பதிவு

விழுப்புரம், ஜன. 22: விழுப்புரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் சாகசம் செய்து பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். தட்டிகேட்ட நடத்துனரை வாலிபர் தாக்கிய வீடியோவும் வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம்- பண்ருட்டி செல்லும் அரசு நகர பேருந்தில் நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவர்கள் படியில்...

மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் விதவை மகள் திருமண நிதியுதவி ரூ.40 ஆயிரமாக உயர்வு அரசாணை வெளியீடு

புதுச்சேரி, ஜன. 22: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடுத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் விதவை மகள் திருமண நிதியுதவி ரூ. 40 ஆயிரமாக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விதவை மகளின் திருமண நிதியுதவி திட்டம் கடந்த 1981ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் விதவை மகளின் திருமணத்துக்கான நிதியுதவியை உயர்த்த வேண்டுமென...

உளுந்தூர்பேட்டை அருகே மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி மீது அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை, ஜன. 21: திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தோல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேகர் (49) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ்நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் ஸ்டேரிங் கட்டாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு...

திருவெண்ணெய்நல்லூர் அருகே பிளஸ்-2 மாணவன் கொலை வழக்கில் தந்தை, மகன் அதிரடி கைது

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 21: திருவெண்ணெய்நல்லூர் அருகே பிளஸ்-2 மாணவனை கொலை செய்த வழக்கில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளான தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை அதே...

பிரதமர் துவக்கி வைத்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்காத பாஜகவினர்

  கடலூர், ஜன. 20: கடலூரில் பிரதமர் துவக்கி வைத்த ரயிலுக்கு பாஜகவினரே வரவேற்பு அளிக்காதது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் நியு ஜல்பைகுரி- திருச்சிராப்பள்ளி இடையே புதிய அம்ரித் பாரத் வாராந்திர ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி துவக்கி வைத்தார். இந்த ரயில் சுமார்...

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

  மேல்மலையனூர், ஜன. 20: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் தலமாகும். இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்லும் நிலையில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூருக்கு வந்து அம்மன் அருளை பெற்று செல்கின்றனர். தை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று...

இரு தரப்பினர் மோதல் 16 பேர் மீது வழக்கு

  விருத்தாசலம், ஜன. 20: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் மணிவாசகன்(38), விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் என்பவருடன் பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கோனூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்...

ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஜன. 12: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தினேஷ் (26). பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் குப்பத்தைச் சேர்ந்த 7 பேர்வந்துள்ளனர். அப்போது சாப்பிட என்ன வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டபோது எங்களுக்கு மனிதக்...

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

பண்ருட்டி, ஜன. 12: பண்ருட்டியை சுற்றியுள்ள வன பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. நேற்று காலை தண்ணீர் தேடி சுமார் 2 வயது உள்ள பெண் புள்ளிமான் கெடிலம் ஆற்றின் வழியாகவே வந்துள்ளது. அப்போது நாய்கள்AA துரத்தியதால் பயந்துபோன மான், பண்ருட்டி டைவர்ஷன் ரோடு அருகே உள்ள கார் பார்க்கிங்குக்கு வந்தது. இதனை கண்ட...