புதுவை பெண் உட்பட 3 பேரிடம் பணமோசடி
புதுச்சேரி, ஜூன் 21: புதுவை பெண் உட்பட 3 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாகூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு, மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அப்போது, மர்ம நபர் தங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். இதனை நம்பி...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.55 பெறுவது ஏன்? அமைச்சரிடம் விவசாயிகள் சரமாரி கேள்வி
சேத்தியாத்தோப்பு, ஜூலை 20: சேத்தியாத்தோப்பு அருகே ஆய்வுக்கு வந்த உணவுத்துறை அமைச்சரிடம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.55 பெறப்படுவது ஏன்? என விவசாயிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 2 லட்சத்து...
புதுவையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 86,271 பேர் மீது நடவடிக்கை
புதுச்சேரி, ஜூலை 20: புதுச்சேரியில் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 86,271 பேர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 30,342 பேரும் நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்பி திவ்யா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி யூனியன்...
கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம்: சொத்துக்காக கூலிப்படையுடன் சேர்ந்து தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன் தடுக்க முயன்ற கணவரின் கைகளும் துண்டிப்பு
சங்கராபுரம், ஜூலை 20: சங்கராபுரம் அருகே சொத்துக்காக சொந்த தங்கையை கூலிப்படையினருடன் சேர்ந்து அண்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலக சாலை அருகே வசித்து வந்தவர் பாபு மனைவி தீபா(35). இவர்களுக்கு யஷ்வந்த்குமார் மற்றும் யோகப்பிரவீன்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும்...
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் செய்த பள்ளி மாணவர்கள்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 18: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட ஒரு அரசு பேருந்து, பிள்ளையார்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது. பேருந்தில் ஏற்கனவே அதிகளவில்...
தமிழகத்தில் முதலிடம் பிடித்து விழுப்புரம் மாணவன் நீட் மறுதேர்வில் சாதனை
விழுப்புரம், ஜூலை 18: விழுப்புரம் மாணவன் நீட் மறுதேர்வில் தமிழகத்தில் முதலிடமும், அகில இந்திய அளவில் 12வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விஜிபி நகரைச் சேர்ந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரன். இவரது மகன் வேங்கடபதி வேலாயுதம் (17). இவர் சென்னையில்...
உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு : அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 18: உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.மலையனூர் கிராமம். இந்த கிராம ஊராட்சி நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து 25 குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இதேபோல்...
பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
விழுப்புரம், ஜூலை 17: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலிலில் வரும் 29ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து 29ம் தேதி காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை...
புதுவையில் 10 பேரிடம் ரூ.2.86 லட்சம் மோசடி
புதுச்சேரி, ஜூலை 17: புதுவையை சேர்ந்த 10 பேரிடம் ஆன்லைனில் ரூ.2.86 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பழைய சாரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர், அவரது முகநூல் பக்கத்தில் வந்த போலியான டி-மார்ட் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அந்த செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்த முயன்றபோது, அவரது கிரெடிட் கார்டிலிருந்த ரூ.1.59...
