கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லிக்குப்பம், நவ. 15: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு அறிவுறுத்தலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார், நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன் கோயில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை விசாரணைக்காக அழைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் கையில் வைத்திருந்த பொட்டலத்தை பாக்கெட்டில் வைத்துக்...

உள்நோக்கத்துடன் வேறுவிதமாக மாற்றியுள்ளார் காவல் அதிகாரி பாட்டிலை ஆய்வு செய்தால் கள்ளா? அல்லது மோரா? என தெரியும்

புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களில் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள ஏனாம் பிராந்தியமும் ஒன்று. இந்நிலையில் இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 காவலர்கள் ஏனாமில் இருந்து வேன் மூலமாக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு விசாரணை முடிந்து, நேற்று முன்தினம் மாலை வேனில்...

வேலை வாங்கி தருவதாக ரூ.5.60 லட்சம் மோசடி

சின்னசேலம், நவ. 15: வேலை வாங்கி தருவதாக சகோதரர்களிடம் ரூ.5.60 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் பச்சையம்மன் கோயில் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி(33). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 4.3.2015ல் கள்ளக்குறிச்சி அருகே வடக்கநந்தல் பகுதியை...

மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி மோசடி

புதுச்சேரி, நவ. 13: மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி அவரது மகன் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் எலக்ட்ரிக் கம்பெனி இயங்கி வருகிறது. இதனுடைய மேலாண் இயக்குநர் பிரசன்னா பூட்டோரியா (60) என்பவர் டெல்லி...

எஸ்ஐ திடீர் சாவு

விக்கிரவாண்டி, நவ. 13: விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் தேவநாத சுவாமி நகரை சேர்ந்தவர் பழனி(53). இவர் விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். கடந்த 10ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம்...

செக் மோசடி: டாக்டருக்கு ஓராண்டு சிறை பண்ருட்டி நீதிமன்றம் தீர்ப்பு

பண்ருட்டி, நவ. 13: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் பார்த்தசாரதி. கடலூர் செம்மண்டலம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார்(53). இவர் குடும்ப செலவிற்காக பார்த்தசாரதியிடம் கடந்த 2021ல், ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக, பின் தேதியிட்டு செக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட தேதியில், செக்கை வங்கியில்...

புதுவை மருந்து ஊழல் வழக்கில் முன்னாள் இயக்குநர் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் சிறை

புதுச்சேரி, நவ. 12:புதுவையில் மருந்து ஊழல் வழக்கில் கைதான முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் உள்பட 5 பேரை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். புதுச்சேரி சுகாதார துறை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள், பள்ளி மாணவர்களுக்கு விட்டமின் சத்து மாத்திரை வழங்க கடந்த 2019ம் ஆண்டு சுகாதார...

மரக்காணம் அருகே வீட்டை உடைத்து 3 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

மரக்காணம், நவ. 12: மரக்காணம் அருகே கூனிமேடு திப்பு சுல்தான் தெருவை சேர்ந்தவர் அப்துல் சுக்குறு(51). இவரது மனைவி ஜெயின்பி(47). இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு புதுவை மாநிலத்திற்கு சென்றுள்ளனர். மீண்டும் அன்று மாலை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியான...

ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர், நவ. 12: நெல்லிக்குப்பம் அருகே தேர்தல் முன் விரோதத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன் மகன் சுபாஷ்(34). கீழ் அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவரான...

பெண் மாயம்

புவனகிரி, நவ. 11: புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சந்தியா(26). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புவனகிரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதனால் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சந்தியா கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து அவரது கணவர் ஜெயராமன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில்...