அதிக பாரம் ஆபத்து
சிவகாசி, மே 19: சிவகாசி பகுதியில் சரக்கு வாகனங்கள் சாலை விதியை மீறி, அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு விபத்து அபாயமும் நீடித்து வருகிறது. குறிப்பாக, சிவகாசி பகுதியில் பழைய பேப்பர் லோடுகள், தீப்பெட்டி பெட்டிகள் ஏற்றி செல்லும் மினி...
2 குழந்தைகளின் தந்தை வாகனம் மோதி சாவு
சிவகாசி, மே 19: சிவகாசியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அச்சக தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலாவூரணியை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பால்பாண்டி சிவகாசியிலுள்ள அச்சகத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை டூவீலரில் வேலைக்கு சென்றார்....
அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
வில்லிபுத்தூர், மே 18: வில்லிபுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் சரவணன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்காக (www.tngasa.in) என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.எஸ்.சி.கணிதம், பி.எஸ்.சி.கணிதவியல் மற்றும் பி.காம். வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுளுக்கு...
திருச்சுழி ஜிஹெச் செல்லும் வழியில் சிதிலமடைந்த வாறுகால் பாலத்தால் அடிக்கடி விபத்து: உடனே சீரமைக்க கோரிக்கை
திருச்சுழி, மே 18: திருச்சுழியில் அரசு மருத்துவனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவனைக்கு தினந்தோறும் நரிக்குடி, வீரசோழன், பனையூர், பள்ளிமடம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மேலும் அருப்புக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலை பிரதான சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அவரச சிகிச்சைக்கு வருபவர்கள் திருச்சுழி...
இளம் பெண் தற்கொலை
சிவகாசி, மே 18: சிவகாசியில் திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். ஈரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி(31). இவர், திருத்தங்கலில் மகன்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அதே பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின்னர் வீட்டின் சமையல் அறையில் தூக்குபோட்டு...
வேடநத்தம் கிராமத்தில் மிரட்டும் எலும்புக்கூடு மின்கம்பம்: புதிதாக மாற்ற மக்கள் கோரிக்கை
திருச்சுழி, மே 16: திருச்சுழி அருகே சேதமடைந்து எலும்புக்கூடுபோல் காணப்படும் மின்கம்பங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இவற்றை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேடநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக மின்கம்பத்தில் சிமென்ட்...
ராஜபாளையம் வருகை தந்த தவெக எம்எல்ஏவிற்கு வரவேற்பு
ராஜபாளையம், மே 16: ராஜபாளையம் வந்த தவெக எம்எல்ஏவிற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் தவெக சார்பில் ேபாட்டியிட்ட ஜெகதீஸ்வரி வெற்றிபெற்றார். இவர் சென்னை சென்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று ராஜபாளையம் திரும்பினார். நகர எல்லையில் அவருக்கு தவெகவினர் உற்சாக வரவேற்பு...
ராஜபாளையத்தில் வீடு புகுந்து பெண்ணின் கையை வெட்டியவர் கைது
ராஜபாளையம், மே 16: ராஜபாளையம் குருசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மபிஷா(39). கணவர் இறந்துவிட்ட நிலையில் ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி கோவில்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் மபிஷா ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார். மகள்கள்...
பள்ளி பாடத்தில் சட்டப்படிப்பு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விருதுநகர், மே 15: பள்ளி பாடத்தில் சட்டப்படிப்பு குறித்த பகுதிகள் சேர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகளை பொறுப்புள்ள உயர்ந்த குடிமக்களாக மாற்றுவது அரசு மற்றும் அனைவரின் கடமை. இன்றைய இளைய சமூகத்தின் சில செயல்பாடுகள் சிறிது வருத்தமளிப்பதாகவே உள்ளது. பள்ளி பருவத்திலேயே பாலியல் வன்முறை குறித்த சட்டம், பொது...


