ராஜபாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை பார்வையிட்ட மாணவர்கள்
ராஜபாளையம், ஜன. 14: ராஜபாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை அரசுப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்திய தர நிர்ணயம் சார்பில் குடிநீர் சுத்திகரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலையை மாணவர்கள் பார்வையிட அழைத்துச் சென்றனர். தலைமை ஆசிரியர் முருகன் தலைமையிலும் உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம்,...
டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்
சிவகாசி, ஜன.14: சிவகாசி அருகே டூவீலர் மோதி வாலிபர் படுகாயமடைந்தார். வில்லிபுத்தூர் அருகே மங்காபுரத்தை சேர்ந்தவர் அய்யனார்(40). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அய்யனார் சம்பவத்தன்று தனது டூவீலரில் சிவகாசி - சாத்தூர் ரோடு மயிலாடும்துறை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த...
ஆண் சடலம் மீட்பு
சிவகாசி, ஜன.12: சிவகாசி அருகே ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அந்த...
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ராஜபாளையம், ஜன.12: ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் இம்மானுவேல் (63). ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர். இவர், மதுரை விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து மகன் வருவதால், அவரை அழைக்க குடும்பத்தினரோடு சென்றார். பின்னர் மதுரையிலிருந்து திரும்பி...
அணையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
விருதுநகர், ஜன.12: குல்லூர் சந்தை அணையில் மீன் பிடிக்கச் சென்ற ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் பால்பாண்டி (32). இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் குல்லூர் சந்தை அணையில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மண் சகதியில் பால்பாண்டி சிக்கினார். தகவலின்பேரில் விருதுநகர் தீயணைப்பு துறையினர்,...
கல்லாவில் ஹாயாக அமர்ந்து பணம் திருடிய வாலிபர் கைது
சிவகாசி, ஜன. 10: சிவகாசி அருகே பழைய இரும்புக்கடையில் புகுந்த திருடன் கல்லாவில் ஹாயாக அமர்ந்து பணம் திருடும் வீடியோ வைரலாகி வருகிறது. சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த துரைராஜ் (41) என்பவர் ஐயப்பன் கோயில் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு திருச்செந்தூர் சென்றவர்,...
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 10: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரை சேர்ந்தவர் நல்லம்மை (68). இவர், திருச்சியிலுள்ள தனது மகள் வீட்டிற்கு கடந்த 11ம் தேதி சென்றுள்ளார். இந்நிலையில், இவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் வல்லமைக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்த போது, 8 கிராம் நகை, ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம்...
தேசிய இளைஞர் தின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன.10: ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கலசலிங்கம் சட்டக்கல்லூரி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு உடன் இணைந்து தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி துணைத்தலைவர் முனைவர் சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் நாராயணன், பதிவாளர் முனைவர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர். துறை தலைவர் பாரதி வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு...
கஞ்சா வியாபாரிகள் கைது
ராஜபாளையம், ஜன.9: ராஜபாளையத்தில் பள்ளி அருகே கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் சத்திரப்பட்டி சாலையில் உள்ள பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பாரதி நகர் பகுதியை...

