வில்லிபுத்தூரில் சிபிஎம் கட்சியினர் போராட்டம்

  வில்லிபுத்தூர், ஆக.5: வில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வில்லிபுத்தூர் ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சின்னத்தம்பி தலைமையில் பொதுமக்கள் காத்திருப்பு...

ஆலோசனை கூட்டம்

  சாத்தூர், ஆக.5: சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா ஆக.15ல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோட்டாச்சியர் கனகராஜ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகத்தினர், இருக்கன்குடி ஊராட்சி தனி அலுவலர், வருவாய் துறையினர், காவல் துறையினர், இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி பகுதி...

வில்லி. கலசலிங்கம் பல்கலையில் புத்தாக்க பயிற்சி துவக்க விழா

  வில்லிபுத்தூர், ஆக.5: வில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2025-26 முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் வேந்தர் முனைவர் தரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தரன், துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளர் வாசுதேவன்,...

விதிமீறி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்

சிவகாசி, ஆக.4: சிவகாசி அருகே சாணார்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் முதியவர் ஒருவர் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முதியவர் சுக்கிரவார்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் (56) என்பவரை கைது...

மீன்பாசி குத்தகைக்கு ஒப்பந்தங்கள் வரவேற்பு

விருதுநகர், ஆக.4: விருதுநகர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராப் பகுதியில் தாமரைக்குளம், ராஜபாளையம் பகுதியில் மருங்கூர், குறவன்குளம் ஆகிய 3 கண்மாய்களில் மீன்பாசி குத்தகை உரிமை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்த புள்ளிகளில் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும்...

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழப்பயிர்கள் நடவு செய்ய முடிவு

விருதுநகர், ஆக.4: கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயன்தரும் 14 வகையான வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து மாவட்டத்தில் வறட்சியை தாங்கும் வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வை கலெக்டர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார். கலெக்டர் கூறுகையில்,...

சிவகாசியில் விசிக ஆர்ப்பாட்டம்

சிவகாசி, ஆக. 3: ஆணவப் படுகொலையைக் கண்டித்து சிவகாசியில் விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்து சிவகாசி மாநகர மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம்...

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சிவகாசி, ஆக. 3: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் மூத்த குடிமகன் சின்னையன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமூக தணிக்கையின் நோக்கம் குறித்து...

வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர், ஆக. 3: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வணிகவரித்துறை சார்பில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறு, குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் மூலம் சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில்...

மூளைச் சாவு அடைந்த ஆட்டோ டிரைவர் உடலுறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு

  விருதுநகர், ஆக.2: சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 4 பேர் பயனடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சங்கரேஸ்வரன்(46). இவர், கடந்த 29ம் தேதி நடந்த சாலை விபத்தில்...