ஆய்வுக் கூட்டங்களில் கல்வியாளர்கள் பங்கேற்க கோரிக்கை

சிவகாசி, நவ.12: அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும்பொருட்டு கல்வித்துறை சார்பில் விரைவில் மண்டல ஆய்வுக் கூட்டங்களை நடத்த அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆய்வு கூட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளும்படி உத்தரவிடப்படுகிறது. ஆனால், உயர் அதிகாரிகளின் முன்னிலையில் அலுவலர்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்துவது...

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், நவ.12: விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகை ரூ.5 ஆயிரம், அதிகம் பாதித்த...

ஓய்வூதியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்

தேனியில் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,...

கிணற்றில் மிதந்த பெண் உடல்

சாத்தூர், நவ.11: சாத்தூர் அருகே கிணற்றில் பெண் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே உப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில்பெண் உடல் மிதப்பதாக நேற்று முன்தினம் உப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர்...

ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

விருதுநகர், நவ.11: இபிஎப் ஓய்வூதியம் பெறுவோருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இபிஎப்.95 ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் நலச்சங்கம் உறுப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்ற நிலையில், தொழிலாளர் வருங்கால...

வத்திராயிருப்பில் உயர்மின் கோபுர விளக்கு ‘அவுட்’

வத்திராயிருப்பு, நவ.11: வத்திராயிருப்பில் உயர்மின் கோபுர விளக்கு மீண்டும் செயல்பட நடவடிக்க எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பில் உள்ள நாடார் பஜார் பகுதி காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்த பஜார் வழியாக கான்சாபுரம், கூமாபட்டி பிளவக்கல் அணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்...

வத்திராயிருப்புப் பகுதியில் 6200 ஏக்கரில் நெல் நடவு

வத்திராயிருப்பு, நவ. 7: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் பிரதானமாக விவசாயமே நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி , மகாராஜபுரம், கோட்டையூர், இழந்தைகுளம், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் என்பது பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நெல் நடவு விவசாய பணிகளில்...

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கத்திற்கு புதிய நிபந்தனை விதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 7:தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் சிவராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டைகளில் உறுப்பினர்கள் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர்...

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

அருபபுக்கோட்டை, நவ. 7: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் வழியாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 32 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பாளையம்பட்டியில் உள்ளது. இந்நிலையில், தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக கட்டப்பட்ட 8...

மாட்டுவண்டி பந்தயத்தில் 113 ஜோடி மாடுகள் பங்கேற்பு

தேவகோட்டை, நவ.6: தேவகோட்டை அருகே பனையூர் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பனையூர்-தேவகோட்டை சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக 2 சுற்றுகளாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 30 ஜோடிகளும், 4 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 83 ஜோடிகள்...