சாலையில் பூசணி உடைக்க கூடாது: திருவாடானையில் விழிப்புணர்வு

திருவாடானை, செப்.30: திருவாடானை பேருந்து நிலையத்தில், மேலூர் வட்டம், வலைசேரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், சாலையில் கண் திருஷ்டிப் பொருட்களை உடைப்பது, வெடி வெடிப்பது, பூ மாலைகளை வீசிச் செல்வது போன்ற ஆபத்தான செயல்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் கால்நடைகளுக்கான அபாயங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஒரு கையில் பூசணிக்காயும் மறு கையில் தேங்காயும்...

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

திருப்புவனம், செப். 30: திருப்புவனம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்புவனம் அருகே பழையனூர் காவல் நிலைய எஸ்.ஐ ராஜாமணி தலைமையிலான போலீசார் வயல்சேரி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் இருவர் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசார்...

திருட்டு சம்பவங்களை தடுக்கக் கோரி மனு

சிவகங்கை, செப். 30: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் உரத்துப்பட்டியை சேர்ந்த கிராமத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 6 மாதங்களில் இதுவரை சுமார் 8க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதில், ஒரே நாளில் 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. 30 பவுன் தங்க நகைகள்,...

இடைக்காட்டூர் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

மானாமதுரை, செப். 27: இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. மானாமதுரை இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவங்கியது. தலைமையாசிரியர் புவனேஸ்வரன் முன்னிலையில், திட்ட அலுவலர் ரவிசங்கர் மேற்பார்வையில் இடைக்காட்டூரில் 7 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் முகாம் வருகிற 1ம்...

சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை, செப். 27: இளையான்குடியில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியினால் ஏற்படும் பயன்கள், போதை பழக்கத்தை பழகாமல்...

நவராத்திரி விழா

திருப்புத்தூர், செப். 27: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் நேற்று நவராத்திரி கலை விழா நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கொலு பொம்மைகள் 9 படிகளாக அடுக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றது. நேற்று கொலு பொம்மைகளுக்கு தீர்த்த கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு பள்ளி மாணவி ஷிவானி குத்துவிளக்கேற்ற நெய்வேத்தியம்...

9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம்

சிங்கம்புணரி, செப்.26: சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் துறையினரின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்திற்கு வருவாய்த் துறையினர் கூட்டமைப்பு மாவட்டத் துணைத் தலைவர் தாசில்தார் நாகநாதன் தலைமை வகித்தார். இதில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் களப்பணி மற்றும் மனுக்களின் மீதான பரிசீலனைக்கு கால அவகாசம் வேண்டும். ஜூலை 1ம் தேதி...

பெருமாள் கோயில் நந்தவனத்தில் 200 செடிகள் நடும் விழா

சிங்கம்புணரி, செப்.26:சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலை உடனான சேவகபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நந்தவனம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்டது. நந்தவனத்தை பராமரிக்கும் விதமாக சேவகப் பெருமாள் ஆண்டார் அறக்கட்டளை சார்பாக பலவகை பூச் செடிகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அருணகிரி தலைமை வகித்தார்....

தேவகோட்டையில் எச்ஐவி விழிப்புணர்வு பிரசாரம்

தேவகோட்டை, செப்.26: தேவகோட்டை வட்டாரத்தில் தீவிர எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு தீவிர பிரசாரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அழகு தாஸ்,மருத்துவ அலுவலர் அப்துல் பைசில் ஆகியோர் தலைமையில் நடந்தது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மேற்பார்வையாளர் வாருணி தேவி முன்னிலை வகித்தார். இதில் திருவேகம்பத்தூர் மற்றும்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை அறிமுகம்

திருவாடானை, செப்.25: திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக புதிய வண்ண சீருடை வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 63 மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் புதிய வண்ண சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு...