‘கார்த்திகை மாதம் மாலை அணிந்து... நேர்த்தியாகவே விரதம் இருந்து...’ மண்டல விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்

    ராமநாதபுரம், நவ. 18: கார்த்திகை மாத முதல் நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் கடலில் தீர்த்தமாடி மாலை அணிந்து மண்டல விரதத்தை துவங்கினர். கேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் கார்த்திகை 10ம் தேதி வரை மாலை அணிந்து ஒரு...

கடலாடி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

  சாயல்குடி, நவ. 18: ராமநாதபுரம் மாவட்டம் ,கடலாடி அடுத்துள்ள ஆப்பனூர் அரியநாதபுரம் கிராமத்தில் வில்வநாதன் நொண்டி கருப்பண்ணசுவாமி கோயில் 19ம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை...

மண்டபம் பகுதியை நனைத்த தூறல் மழை

  மண்டபம், நவ. 18: மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கள் கிழமை முழுவதும் தூறல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதி மற்றும் மண்டபத்தை சுற்றியுள்ள மரக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோன்வலசை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தூரல் மழை...

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ராமநாதபுரம், நவ.15: 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கியில் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயல் ஆட்சியர் மற்றும் ராமநாதபுரம் கூட்டுறவு நகர வங்கியின் பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள்...

தொண்டி கடற்பகுதியில் வெடி வைத்து மீன் பிடிப்பதை தடுக்க மீனவர்கள் கோரிக்கை

தொண்டி, நவ.15: அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெடி வைத்து மீன் பிடிப்பது தொண்டி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நடுகடலின் ஆழமான பகுதியில் மரங்களை வேறுடன் பிடிங்கி நட்டு வைக்கப்படும். இந்த மரங்களின் அருகில் ஆயிரக்கணக்கான மீன்கள் கூட்டமாக வசிக்க வரும் அவ்வாறு வரும் போது வெடியை வெடிக்க செய்து அனைத்து மீன்களையும் பிடித்து...

ராமேஸ்வரம்-குஜராத் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை

மானாமதுரை, நவ. 15: குஜராத் மாநிலத்தில் தமிழர்கள் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாழ்கின்றனர். குஜராத்தின் அகமதாபாத், சூரத், மணிநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் அங்கு குடியேறி உள்ளனர். இவர்கள் தென்மாவட்டங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளி, ெபாங்கல் பண்டிகை, கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட...

கலை இலக்கிய பயிலரங்கம்

தேவகோட்டை, நவ. 11: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தமிழ் அகராதியியலின் தந்தை வீரமாமுனிவரின் 346வது பிறந்தநாளை முன்னிட்டு கலை இலக்கிய பயிலரங்கம் நடைபெற்றது. முன்னாள் மாணவர் மன்ற இணை செயலாளர் ஜோ லியோ வரவேற்றார். தலைமையாசிரியர் சேவியர் ராஜ் தலைமை வகித்து பேசினார். பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா பயிலரங்ககை தொடங்கி...

கோயில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை, நவ. 11: தேவகோட்டை கைலாசநாதபுரம் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நவ.8ம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கப்பட்டது. நவ. 9ம் தேதி காலை 2ம் கால பூஜை, மாலை 3ம் கால பூஜை நடைபெற்றது. நேற்று காலை 4ம் கால யாக பூஜை...

தொண்டி அருகே 13 பவுன் நகை திருட்டு

தொண்டி, நவ.11: தொண்டி அருகே பீரோவை உடைத்து 13 பவுன் நகை திருடு போனது பற்றி தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர், நேற்று நூறு நாள் வேலைக்கு சென்று விட்டு வீடுக்கு வந்தார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி...

கால்நடை மருத்துவமனை வேண்டும் நம்புதாளை மக்கள் கோரிக்கை

தொண்டி, நவ.7: தொண்டி அருகே நம்புதாளையில் கால்நடை மருத்துவமனை துவங்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை வட்டாரத்தில் நம்புதாளை அதிக மக்கள் தொகை உள்ள பெரிய ஊராட்சியாகும். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. அதனால் அனைத்து விவசாயி வீட்டிலும் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். நம்புதாளை மட்டுமின்றி அருகில் உள்ள முகிழ்த்தகம், சோலியக்குடி,...