அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

  திருப்புத்தூர், மார்ச் 13: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரி வேலை வாய்ப்பு மையத்தின் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டில் உள்ள ஆர்சிட் ஃபார்மா நிறுவனம் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்தனர். இதில் 300 மாணவர்கள் பங்கேற்றனர்....

கோடையில் கருகி வரும் மிளகாய் செடிகளை காப்பாற்றும் பணி தீவிரம்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 13: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் மற்று எள் செடிகள் மழை இல்லாமல் கருகி வந்த நிலையில், மிளகாய் செடிகளை காப்பாற்றும் விதமாக பம்ப் செட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியாகும். இதில்...

மூதாட்டி கொலையில் வாலிபருக்கு ஆயுள் சிறை

  ராமநாதபுரம், மார்ச் 13: திருவாடானையில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில், பதிவேடு ரவுடிக்கு ஒரு ஆயுள் உட்பட 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திருவாடானை அருகே சி.கே.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள்(65). இவரது உடல் கடந்த 2015ம் ஆண்டு கண்மாயில் மிதந்துள்ளது. புகாரின் பேரில் திருவாடானை...

ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

  காரைக்குடி, மார்ச் 11: காரைக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட மகளிர் வளைய அமைப்பு தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ராஜலட்சுமி, உமா, கவுதா, மரியசெல்வி, குணவதி, சினேகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி கருத்தரித்தல் மைய நிறுவனர்,...

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காரைக்குடி, மார்ச் 11: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி,பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கிய நிலையில், வரும் 18ம் தேதி நடக்கவுள்ள பால்குடத்தில் பல லட்சம் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி,பங்குனி பெரு விழா ஒவ்வொரு ஆண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவில் மாசி,பங்குனிப் பெருவிழா...

உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம்

  தேவகோட்டை, மார்ச் 11: தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் தவக்கால தியானம் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் பனிமய மாதா திருத்தல அருள்பணி சுவக்கீன் கலந்து கொண்டு சிறப்புச் செய்தி கொடுத்தார். இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடு, குணமளிக்கும் வழிபாடு, தவக்கால திருப்பலி ஆகியவை நடைபெற்றது. இத்தியானத்தில் திருத்தொண்டர்...

கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

  ராமநாதபுரம், மார்ச் 10: சொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் தனிநபர் தடுத்து வருவதாக கூறி ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மாதவன் நகரை சேர்ந்த கதிரேசன். இவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்....

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

  திருவாடானை, மார்ச் 10: திருவாடானை அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் சுமார் 10 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடலோர வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அரிய வகை கடல்வாழ் உயிரினமான இந்த ஆமை...

அரிசி கடத்திய கார் கவிழ்ந்தது

  காரைக்குடி, மார்ச் 10: காரைக்குடி கழனி வாசல் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து நேற்று காலை சுமார் இரண்டு டன் எடையுள்ள ரேஷன் அரிசியை ஒருவர் காரில் ஏற்றிச்சென்றார். இந்த அரிசியை அவர் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது வழியில் உள்ள ஆவுடைப்பொய்கை என்ற இடத்தில் அவரது...

காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

பரமக்குடி, மார்ச் 3: பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு மற்றும் தமிழக முதல்வரின் காமராஜர் விருதை பெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் இதயத்துல்லாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜாராம்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஆனந்தகுமார்,...