இந்தோனேஷியா நிலநடுக்க பலி 51 ஆக உயர்வு
லாபுவான் பஜோ: இந்தோனேஷியாவின், கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்திலுள்ள புளோரெஸ் தீவில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பல வீடுகள்,கட்டிடங்கள் தரைமட்டமாயின. பல கல்வி, சுகாதார நிலையங்களும் பொதுக் கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மீட்பு பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 51 ஆக...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் புளோரெஸ் தீவு அருகே ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ...
சீனா,தென் கொரியாவுடன் ராஜதந்திர உறவை வலுப்படுத்துவதற்காக வீரர்கள் நினைவிடம் செல்வதை தவிர்த்த ஜப்பான் பிரதமர்
டோக்கியோ: சீனா மற்றும் தென் கொரியாவுடன் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் யசுகுனி வீரர்களின் நினைவிடத்திற்கு ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி செல்லாமல் தவிர்த்து விட்டார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் 81வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி நேற்று உரையாற்றுகையில், ஹிரோஷிமா, நாகசாகி மற்றும் ஒகினாவாவில் ஏற்பட்ட...
அடிச்சது பார் லக்கி பிரைஸ் வீட்டு சுவரில் பதுக்கிய ரூ.98 கோடி தங்க கட்டிகள்: சீரமைப்பு பணியின்போது கண்டுபிடிப்பு
பிரஸ்செல்ஸ்: ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் கிழக்கு பகுதியில் பிளாண்டர்ஸ் மாகாணத்தின் டென்டர்மாண்ட் நகரில் பழைய கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடம் காவ் ஓஸ்ட் வாண்டரன் என்ற தொண்டு நிறுவன அமைப்பிற்குச் சொந்தமானது. இந்த தொண்டு நிறுவனம் சுமார் 47,000 மக்கள் வசிக்கும் பிளெமிஷ் சமூகமான டெண்டர்மாண்ட் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த...
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 9 பேர் பலி
பெய்ரூட்: தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும் தெற்கு லெபான் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. நேற்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதல்கள், தெற்கு நகரமான நபாதியேவின் சில...
சீனப் பொருட்களின் மறுஏற்றுமதி! இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தகப் போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் அதிகப்படியான இறக்குமதி வரியைத் தவிர்க்க சீனா பல்வேறு நாடுகளைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ‘தி கிரேட் டிரான்ஷிப்மென்ட் ஸ்கேன்’ (The Great Transshipment Scan) என்ற அறிக்கையில், சீனப் பொருட்கள் இந்தியா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான்,...
விமானத்தை மிஞ்சும் சீனாவின் ‘பறக்கும் ரயில்’! 5 விநாடிகளில் 800 கி.மீ. வேகம்.. பயண நேரம் வெகுவாகக் குறையும்!
சீனா: உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் சீனா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்தச் சாதனையால் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எதிர்காலத்தில் பயண நேரங்கள் வெகுவாகக் குறையக்கூடும். பொதுவாக, விமானங்கள்தான் அதிவேகப் போக்குவரத்து சாதனங்களாக உள்ளன. இதனால் அவசரமாக வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள், அதிக கட்டணம் செலுத்த...
ஹோர்முஸ் நீரிணையில் UAE-யின் இரு வணிக கப்பல்களை தாக்கிய ஈரான்.! போரை தீவிரப்படுத்த போவதாக அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் மூலம் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த தங்களது இரண்டு வணிக எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) தகவல் தெரிவித்துள்ளது. இந்த...
ஜப்பானில் வரலாறு காணாத கனமழை.. 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!
நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என அவ்வப்போது இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் ஜப்பான், தற்போது வரலாறு காணாத கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜப்பானின் கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர்...
