பாலமேடு அருகே மது போதையில் நீச்சல் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் மரணம்

அலங்காநல்லூர், ஜூலை 13: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பரளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மதுரையில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தில் சொந்தமான பண்ணை நிலம் உள்ளது. இவரது ஐடியில் பணிபுரியும் நண்பர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரஜித் (39) மற்றும் மணிமாறன், சித்தார்த் ஆகியோர் ஆவர். இவர்கள்...

பேரையூர் அருகே டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்: மற்றொரு விபத்தில் 6 பேர் காயம்

பேரையூர், ஜூலை 13: பேரையூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். சேடபட்டி அருகே பாலார்பட்டி- தாடையம்பட்டி சாலையில் பாலார்பட்டியை சேர்ந்த தினேஷ் (24), தும்மலப்பட்டியை சேர்ந்த சுதர்சன் (20) ஆகியோர் நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இதே வேளையில் அயோத்திபட்டியை சேர்ந்த தினேஷ் (32) எதிரே காரை ஓட்டிவந்துள்ளார்....

டூவீலர் கேட்டு வாலிபர் தற்கொலை

மதுரை, ஜூலை 13: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் இமாம் ஷெரிப் (23). இவர். பெற்றோரிடம் டூவீலர் வாங்கி கேட்டுள்ளார். அவர்களும் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் டூவீலர் வாங்கி கேட்டு வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதில் மனவருத்தத்தில் இருந்த இமாம் ஷெரிப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம்...

பழங்காநத்தம் மேம்பாலத்தில் டெலினேட்டர்கள் அவசியம்: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

  மதுரை, ஜூலை 10: பழங்காநத்தம் மேம்பாலத்தில் டெலினேட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை - திண்டுக்கல் சாலையில் போடி ரயில்வே லைன் மீது 1961ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு பாலம் கட்டப்பட்டது. இருவழிச்சாலையாக கட்டப்பட்ட இப்பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகரிப்பின்...

காந்தி மியூசியத்தின் திறப்பு விழா சுதந்திர தினத்திற்குள் நடைபெறுமா? ஐகோர்ட் கிளை கேள்வி

  மதுரை, ஜூலை 10: புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு காத்திருக்கும் மதுரை காந்தி மியூசியத்தை, சுதந்திர தினத்திற்குள் திறக்க வாய்ப்புள்ளதா என, அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.மதுரையை அடுத்த, ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை தமுக்கத்தில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தைப் புதுப்பிக்கும்...

மதுரை பூ மார்க்கெட்டில் கடை மீட்பு: வேளாண் வணிகத்துறை நடவடிக்கை

  மதுரை, ஜூலை 10: மதுரை பூ மார்க்கெட்டில் ஒருவரது கடையை மற்றொருவர் ஆக்கிரமித்திருந்த நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில் வேளாண் வணிகத்துறையினர் கடையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் வேளாண் விளைபொருள் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூ மார்க்கெட்டில் கே 287 என்ற எண் கொண்ட...

சாக்லெட் தயாரிப்பு பயிற்சி

  உலக சாக்லெட் தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மாணவியருக்கு சாக்லெட் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர்(பொ) யாழ் சந்திரா தொடங்கி வைத்தார். பயிற்சியாளர் ஜமில் ராணி, வீட்டிலேயே தரமான சாக்லெட்டுகளை தயாரிக்கும் முறைகள் குறித்து செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இந்தப் பயிற்சியில் 30க்கும்...

சிறுமிக்கு திருமணம்; 7 பேர் மீது வழக்கு

  மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மகளிர் ஊரக நல அலுவலர் அன்னபூரணிக்கு 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க உள்ளதாக சைல்டு லைன் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு திருமணத்தை ஏற்கனவே நடத்தி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மதுரை மாநகர் மகளிர் போலீசில்...

தூய்மைப்பணி மேற்கொண்ட கவுன்சிலர்கள்

  உசிலம்பட்டி, ஜூலை 9: உசிலம்பட்டி நகராட்சியின் 7வது வார்டு பூக்கார தெருவில், கடந்த சில வாரங்களாக கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நேற்று அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கலாவதி, ராமகிருஷ்ணன், பூமாராஜா உள்ளிட்டோர் கழிவுநீர் கால்வாய்களில் தூய்மை பணிகள்...

அலங்காநல்லூர் அருகே தீப்பற்றி எரிந்த இ சேவை மையம்: ரூ.6 லட்சம் பொருட்கள் நாசம்

  அலங்காநல்லூர், ஜூலை 8: அலங்காநல்லூர் அருகே இ சேவை மையம் தீப்பற்றி எரிந்ததில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. அலங்காநல்லூர் அருகே குமாரம் பிரிவில், அரசு அங்கீகாரம் பெற்ற இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர் நல வாரியம், ஆதார் சேவைகள் உள்ளிட்ட இணையதள சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன....