மாட்டுத்தாவணி பகுதியில் ஒரே நாளில் 10 பேரை கடித்துக் குதறிய நாய்கள்

மதுரை, ஆக.14: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வலம் வரும் தெருநாய்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்வோரை விரட்டிப்பிடித்து கடித்துக்குதறி வருகிறது. ஒரே நாளில் 10 பேரை கடித்துக் குதறியதுடன், அன்றாடம் இப்பகுதிகளில் இருந்து நாய்கள் கடித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு பலரும் சிகிச்சைக்கு வந்து செல்வது வாடிக்கையான சம்பவமாகி வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை, ஆக.14: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் மாநகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 வருடத்திற்கு பிறகு செப்.17ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதற்காக கோயில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகள்...

கார் பரிசு விழுந்ததாக கூறி ஆன்லைனில் ரூ3.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

மதுரை, ஆக.14: ஆன்லைனில் கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.3லட்சத்து 30ஆயிரம் மோசடி நடந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே ஏ.கொக்குளம் கண்ணனூரை சேர்ந்த அஜித்குமார் மனைவி உமா பார்வதி(26). ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளராக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது....

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டம் நடத்த முடிவு

மதுரை: செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், வரும் 17ம் தேதி அரசு வழங்கும் அறிவிப்பிற்கென காத்திருக்கின்றனர். பிரதானமாக பணி நிரவலுக்கான அரசாணையை ரத்து செய்வதுடன், மதுரை அரசு மருத்துவமனையின் செவிலியர்கள் பற்றாக்குறையை சரி செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது. தொகுப்பூதிய முறையை முழுமையாக நிறுத்தி நிரந்தர பணியாளர்களை நியமிப்பதுடன் காலிப் பணியிடங்களை நிரப்ப...

ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பேரையூர், ஆக.13: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரத்தில் கேட்டவரம் தரும் வீரபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் முன்னோர்கள் ஆசி பெற சிறப்பு பஜனை வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை போட்டும் பக்தர்கள்...

மதுரையில் அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க பசுமை மதுரை திட்டம்

மதுரை: மதுரையில் அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல் திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மானகிரி செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சர்வதேச ஆய்விதழின் ஆய்வறிக்கையில், உலகின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205...

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதி மொழி ஏற்பு

மதுரை, ஆக.12: போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உறுதி மொழி எடுக்கப்பட்டது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ உருவாக்கும் வகையில் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் கல்லூரி மாணவர்களிடம் பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்,...

மேலூரில் ஆடி உற்சவ திருவிழா; 10 ஆயிரம் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மேலூர், ஆக.12: மேலூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நாகம்மாள் திருக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் ஆடி உற்சவ திருவிழா நடைபெற்று வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 62ம் ஆண்டு உற்சவ விழா கடந்த ஜூலை 10ல் யாகசாலை பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன்...

மனைவி பிரிந்த சோகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

அலங்காநல்லூர், ஆக.12: மதுரை மாவட்டம் வாயக்குளம் ஊராட்சி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் லெனின் ராஜா (35). இவரது மனைவி பிரித்தி. 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக மனைவி, கோபித்துக் கொண்டு, தாய் வீடான மதுரை வைத்தியநாதபுரத்திற்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்து...

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் எலுமிச்சை கிலோ ரூ.120க்கு விற்பனை

  மதுரை, ஆக. 10: மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டிற்கு கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி, எழுமலை, சிறுமலை, பட்டுக்கோட்டை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் விற்பனைக்காக எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை ஆன...