மாவட்ட பகுதிகளில் கூடுதல் வெற்றிப்பள்ளி பயிற்சி மையங்கள்: மாணவர்கள் வரவேற்பு

மதுரை, மார்ச் 12:அரசுப்பள்ளி மாணவர்கள் ஜேஇஇ, நீட், கிளாட், கியூட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி கற்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் வெற்றிப்பள்ளிகள் திட்டத்தில் ஒன்றியம் தோறும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி...

மதுரை கலைஞர் நூலகத்தில் திறந்தவெளி கலையரங்கம்: விரைவில் அமையும் என எதிர்பார்ப்பு

மதுரை, மார்ச் 12: தென் மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய கலைகளை, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திறந்தவெளி கலையரங்கம் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலத்தை போல், மதுரை, புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 2...

மதுரை, மாட்டுத்தாவணி பகுதியில் ஆதரவற்ற 18 பேர் மீட்பு

மதுரை, மார்ச் 12: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் தவித்த 18 பேர் மீட்கப்பட்டு, மாநகராட்சி, தனியார் காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர். மதுரையில் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாக ஒத்துழைப்புடன், ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வளிக்கும் ‘ஸ்மைல்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் தலைமையிலான குழுவினர்,...

மதுரையில் 396 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒதுக்கீடு ஆணைகள் வழங்கினார்

  மதுரை, மார்ச் 11: மதுரையில் 396 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து பயனாளிகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். மதுரை, மேற்குத்தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம்...

இதயநோய் மருந்து என நினைத்து பூச்சி மருந்து குடித்த பெண் பரிதாப சாவு

  மதுரை, மார்ச் 11: மதுரை, ஐராவதநல்லூரை சேர்ந்த முருகன், வண்டியூர் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(50). இவர்களின் 3 மகள்களும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் இதயநோய் பாதிப்பு எதிரொலியாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஜேஸ்வரி தொடர்ந்து மருந்து, மாத்திரைகள்...

மேலூர் அருகே நடைபெற்ற கோயில் திருவிழா தகராறில் வாலிபர் அடித்துக் கொலை: 8 பேர் கைது

  மேலூர், மார்ச் 11: மேலூர் அருகே திருவாதவூர் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சாமி கும்பிடுவதில் முதல் மரியாதை தொடர்பாக மணிகண்டன்(36) மற்றும் மணி(53) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணி அவரது தரப்பை சேர்ந்த 7 பேருடன்...

மாதர் சம்மேளனம் மகளிர் தின விழா

  மதுரை, மார்ச் 10: மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  இதன்படி கே.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த தெருமுனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கற்பகவள்ளி, பொருளாளர் முத்துலட்சுமி, துணை செயலாளர் ஜாகீர்நிஷா, துணை தலைவர் சுகந்தா முன்னிலை...

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மனு

  மதுரை, மார்ச் 10: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாடிப்பட்டி தாலுகா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தரப்பில் அளித்த மனுவில், ‘இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். முதியோர் கல்வி, மகளிர் உரிமை தொகை, எஸ்ஐஆர் படிவம் நிரப்புதல், அன்பு...

வரிச்சியூர் செல்வம் கைது

  மேலூர், மார்ச் 10: மேலூரை சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கும், மற்றொருவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்ததாகவும், இதில் சாமிநாதனுக்கு பணம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சாமிநாதன் மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வத்தை சந்தித்து தனக்கு பணத்தை பெற்று தரும்படி கூறியுள்ளார். இதை தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரிடமும் பணம்...

மதுரை மாநகராட்சிக்கு 20 கம்ப்யூட்டர் வழங்கல்

மதுரை, மார்ச் 9: மதுரை மாநகராட்சியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் தனியார் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.5.09 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 20 கம்ப்யூட்டர்களை (15 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் 5 லேப்டாப் கம்ப்யூட்டர்ஸ்)...