உசிலம்பட்டி தொகுதியில் தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

உசிலம்பட்டி, ஜன. 23: உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் அபார வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் தொகுதி பொறுப்பாளர் திருச்சுழி செல்லத்துரை. தலைமயில் நடைபெற்றது. உசிலம்பட்டி திமுக நகர அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம்...

தீயில் கருகிய மூதாட்டி பலி

மதுரை, ஜன. 23: மதுரை, ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி(63). இவரது கணவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து ஆடி, தை அமாவாசை தின்ங்களில் மகாலட்சுமி, தனது கணவருக்காக விரதம் இருந்து தர்ப்பணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த தை அமாவாசையை முன்னிட்டு கணவருக்காக விரதம் இருந்து வீட்டில் வழிபாடு நடத்தினார். அப்போது...

வாலிபர் போக்சோவில் சிக்கினார்

மதுரை, ஜன. 23: மதுரையில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை, போக்சோ வழக்கில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் பாரத் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, யாருக்கும் தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்று ரகசியமாக திருமணம் செய்துகொண்டு...

குடியரசு தின விழாவையொட்டி மாநில விளையாட்டு போட்டி

மதுரை, ஜன. 22: மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (ஜன.22) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, மதுரையில் 14, 17, 19...

விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

மதுரை, ஜன. 22: மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜன.23) நடக்கிறது. மதுரை மாவட்ட விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி ஜனவரி மாதத்திற்கான மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நாளை...

கூட்டுறவுத்துறை சார்பில் சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

மதுரை, ஜன. 22: மதுரை மண்டல கூட்டுறவுத்துறை சார் நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் உள்ள அழகப்பன் அரங்கில் நடைபெற்றது. இதனை மதுரை மண்டல இணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்த புத்தாக்க பயிற்சியில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குநர்...

சமயநல்லூர் அருகே கார் மீது கவிழ்ந்த அரசுப் பேருந்து: அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்

வாடிப்பட்டி, ஜன. 21: சமயநல்லூர் அருகே, நேற்று அரசு பேருந்து கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பழங்காநத்தம் கிளையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று நேற்று கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்தை மதுரையை அடுத்த பைகராவைச் சேர்ந்த மார்நாடு (40) என்பவர்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் கைது

மதுரை, ஜன. 21: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. மதுரையில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் என, லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், தங்களுக்கு...

631 பவுன் அடகு நகை மோசடி: 6 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஜன. 21: மதுரை, மேலக்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரேம்சந்தர்(58). இவர் கோச்சடையில் நடத்தும் மினரல் வாட்டர் தொழிலை விரிவுபடுத்த, அவரது மனைவி ஜீவா, மகள் டாக்டர் பிரியங்கா ஏஞ்சலின் ஆகியோரின் 109 பவுன் நகைகளை, பல்வேறு வங்கிகளில் அடகு வைத்திருந்தார். இதற்கிடையே அவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டதால், அடகு கடை நடத்தும் புதுஜெயில்...

மதுரை ரயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம் 1230 சிறப்பு பஸ்கள் இயக்கம்

  மதுரை, ஜன. 20: பொங்கல் பண்டிகை முடிந்து, தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு திரும்பிச்சென்ற தென் மாவட்ட மக்களால், மதுரை ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் நேற்று 2வது நாளாகவும் கூட்டம் அலைமோதியது. இவர்களுக்காக 1230 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசுத்தரப்பில்...