கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
மதுரை, அக். 4: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று மாலை ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகைதீன் அப்துல் காதர், ரகுபதி, ஜெயபாஸ்ர், சுரேஷ், தமிழ்நாடு வருவாய்த்துறை...
கள்ளிக்குடி பகுதியில் பருவ மழைக்கு முன்பாக நடவுப் பணிகள் தீவிரம்: வழிபாட்டுடன் தொடங்கிய விவசாயிகள்
கள்ளிக்குடி, அக். 4: கள்ளிக்குடி பகுதியில் எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக நாற்று நடும் பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. அப்போது மதுரை மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்தாலும், பேரையூர், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவில் மழை இல்லாமல் போனது....
உண்மைக்கும், எளிமைக்கும் முக்கியத்துவமளித்த மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்தவர் மகாத்மா: நாளை (அக்.2) காந்தி பிறந்த தினம்
மதுரை: நாளை(அக்.2) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், மற்ற நகரங்களை விடவும் காந்தியடிகள் மதுரையை, இவ்வூர் மக்களை பெரிதும் நேசித்தார். இதன் வெளிப்பாடாகவே சமய நூல்களையும் அறிஞர்களின் நூல்களையும் படித்து ‘அகிம்சை தான் உயர்ந்த தர்மம்’ என உணர்ந்து இதையே கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தி அகிம்சை முறையில் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர் மகாத்மா காந்தியடிகள்....
ஐஐடி மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மதுரை: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் ஒன்றிய பல்கலைகழகங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவ-மாணவியர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50...
அனுமதியின்றி மண் அள்ளிய லாரி பறிமுதல்
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகேயுள்ள மருதங்குடி விஏஒ அன்புநிதி (41). இவர் நேற்று முன்தினம் அலுவலகப் பணியில் இருந்த போது,சோமங்கலம் கண்மாயில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மருதங்குடி திருமால் பிரிவு அருகே விஏஓ மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆய்வுக்காக நின்றிருந்தனர். அப்போது...
கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணியால் மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: மாநகர போலீசார் அறிவிப்பு
மதுரை, செப். 30: மதுரை முனிச்சாலை பகுதியிலிருந்து இன்று (செப்.30) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை நகரில் காமராஜர் சாலையில் கழிவுநீர் கால்வாயின் மேற்புறத்தில் அமைக்கப்பட்ட காங்கிரீட் தளம் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில்,...
சோழவந்தானில் கடைகள் மீது மண்ணெண்ணை நிரம்பிய பாட்டில் வீசியவர் கைது: மற்றொருவருக்கு வலைவீச்சு
சோழவந்தான், செப். 30: சோழவந்தான் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகள் மீது மண்ணெண்ணை நிரம்பிய பாட்டிலை வீசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நேற்று காலை மண்ணெண்ணெ நெடியுடன் ஒரு பாட்டில் சிதறிக்கிடந்தது. இது குறித்து விஏஓ திலீபன் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,...
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: மாணவர் சங்கம் கோரிக்கை மனு
மதுரை, செப். 30: காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலரிடம், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர். தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து, விடுமுறை...
காய்கறிகள் விலை குறைந்தது
மதுரை, செப். 27: மதுரையில் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறிகள் மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து, கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவற்றின் விலை நேற்று சற்று குறைந்திருந்தால் விற்பனை அதிகரித்தது. மதுரை உழவர் சந்தையில் நேற்று பல்வேறு காய்கறிளின் ஒரு கிலோ விலை விபரம் வருமாறு: கத்தரி ரூ.50, தக்காளி நாடு -...