மக்களை மகிழ்விக்கும் வகையில் மதுரையில் கொட்டிய மழை
மதுரை, ஆக. 5: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களில் மாநிலத்திலேயே அதிக அளவில் வெப்பநிலை பதிவானது. மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டாலும், மழை பெய்யாமல் கலைந்து சென்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது....
அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரம்
அலங்காநல்லூர், ஆக. 5: அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில், ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து உலக நன்மை மற்றும் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. ...
உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு இயற்கை மருத்துவம் வழிகாட்டல்
மதுரை, ஆக. 4: மதுரை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவப்பிரிவின் தலைமை டாக்டர் நாகராணி நாச்சியார் கூறியதாவது: இக்காலத்தில் ‘ஒபிசிட்டி’ எனும் உடல்பருமன் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மருந்து, மாத்திரைகள் தவிர்த்து வாழ்வியலோடு இணைந்து இதனை கட்டுப்படுத்தலாம். வாரம் ஒருமுறை உண்ணா நோன்பிருப்பது, தினமும் 30 நிமிடம் யோகா, காலை மாலையில் 30 நிமிடம்...
காந்தியடிகளின் தலைமை பண்பு கருத்தரங்கம்
மதுரை, ஆக. 4: தலைமை பண்பின் மகத்துவம் - காந்திய அணுகுமுறை என்ற தலைப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். காந்தி மியூசியம் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசும்போது, ‘‘காந்தியடிகள் குறித்து இன்றும் நாம் பேசுகிறோம் என்றால், அதற்கு அவருடைய தலைமை...
முதியவர் கொலை; மகன் கைது
சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டப்புளிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). இவரது மனைவி ஜெயலட்சுமி. நேற்று அதிகாலை வீட்டின் முன்பு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் ராஜேந்திரன் இறந்து கிடந்தார். சமயநல்லூர் போலீசார் அவரது உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் அவர் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் கருதினர்....
மக்களை தேடி வரும் மருத்துவ உதவிகள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்
மதுரை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஊரக பகுதிகளில் ஒரு வட்டாரத்திற்கு 3 வீதம் 39 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 5 முகாம்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதி சனிக்கிழமை தோறும் 17 சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில்...
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் பொறுப்பேற்பு
மதுரை ஆக. 3: கத்தோலிக்க திருச்சபையின், மதுரை உயர்மறை மாவட்ட புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து நேற்று பொறுப்பேற்றார். கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்ட பேராயராக இருந்த அந்தோணி பாப்புசாமி, கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பாளையங்கோட்டை ஆயராக இருந்த அந்தோணி சாமி சவரிமுத்து, மதுரை உயர்மறை மாவட்டத்தின் 7வது பேராயராக,...
திருக்குறள் திருப்பணி தொடர் வகுப்புகள்
மதுரை, ஆக. 2: தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ‘திருக்குறள் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் தொடர் வகுப்புகள் நடக்கிறது. மதுரை மணியம்மை பள்ளி, திருமங்கலம் இறையன்பு நூலகம், மேலூர் புரட்சி கவிஞர் மன்றம் ஆகியவை தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து இப்பயிற்சியை வழங்குகின்றன. மதுரை மணியம்மை பள்ளியில் திருவள்ளுவர் கழக செயலாளர் சந்தானம் திருக்குறள்...
பள்ளி மாணவர்களுக்கு திறன் பயிற்சி
மதுரை, ஆக. 2: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்வித் திறன்களை மதிப்பீடு செய்யும் ஸ்டேட் லெவல் அச்சீவ்மென்ட் சர்வே 2025 அறிவிப்பின்படி மாநில அளவில் மூன்றாவது இடத்தை மதுரை மாவட்டம் பெற்றுள்ளது. மாநிலத்தின் சராசரி மதிப்பெண்களைவிட, மதுரை மாவட்டம் அனைத்து தரப்புகளிலும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின்...