8.5 கிலோ கஞ்சாவுடன் டிரைவர் கைது 4 பேருக்கு குண்டாஸ்
அம்பை,ஆக.5: கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பை முடபாலத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கர் மகன் சுனில்ராஜ் (19), மகேஷ் மகன் முத்து (21), மேகலிங்கம் மகன் கணேசமூர்த்தி (22) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது...
கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல்பாஸ் வழங்கினோம்
களக்காடு, ஆக.5 கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல் பாஸ் வழங்கினோம் என்று களக்காட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நெல்லை மாவட்டத்தில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுபயணம் செய்து வரும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவில் களக்காட்டில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், களக்காடு பகுதி...
பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் முழுநேர கூட்டுறவு பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக.22 வரை அவகாசம்
நெல்லை, ஆக.3: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும் பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் 2025-26ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயில விரும்புவோர் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 22ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில்...
நெல்லையில் கொலை முயற்சி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாஸ்
நெல்லை, ஆக. 3: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம், அம்பை. முடப்பாலத்தைச் சேர்ந்த காளிதாசின் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கரின் மகன் சுனில்ராஜ் (19), மகேசின் மகன்...
பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற பாடநூல் வெளியீட்டு விழா
தியாகராஜ நகர், ஆக. 3: தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் வகுத்துத் தந்துள்ள பாடத்திட்டத்தின் படி பாளை சதக்கத்துல்லா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ‘மதிப்புக் கல்வி’ என்ற தலைப்பில் எழுதிய பாடநூலின் வெளியீட்டு விழா நடந்தது. பாளை சதக்கத்துல்லா கல்லூரி வளாகத்தில் நடந்த இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் ஜேனட் ராணி...
களக்காட்டில் தரைப்பாலத்தில் அபாயகரமான பள்ளம்
களக்காடு,ஆக.2: களக்காடு கோட்டை விஸ்வகர்மா தெருவுக்கு செல்லும் சாலையில் தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு கூலக்கடை பஜாரிலிருந்து கோட்டை விஸ்வகர்மா தெருவிற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த...
நீர்பிடிப்பு பகுதியில் சாரல் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தென்காசி,ஆக.2: குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று பகல் வேளையில் சாரல் இல்லை. லேசான வெயில் காணப்பட்டது. மாலையில் சற்று இதமான காற்று வீசியது. சாரல்...
ஆலங்குளம் அருகே விளைநிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க எதிர்ப்பு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
தென்காசி,ஆக 2: ஆலங்குளம் அருகே விவசாய நிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திக்குளம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த சோலார் பேனல்கள் அமைப்பதற்காக...
பாம்பு கடித்து விவசாயி உள்பட 2 பேர் சாவு
திசையன்விளை, ஜூலை 31: திசையன்விளை அருகே உள்ள வாகைநேரி கிராமத்தை சேர்ந்தவர் திரவியம் (33). இவர் சுவிசேஷபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை தொட்டிக்காரன்விளை பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கேட்வால்வை திருப்பச்சென்றுள்ளார். அப்போது அவரது காலில் ஏதோ கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தேடிய போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று கிடந்துள்ளது....