திருவாலம் பொழில், ஆத்மநாதேஸ்வரர்

தட்சனின் மகள் வசு என்பவருக்கு பிறந்தவர்கள் 8 பேர். இவர்களுக்கு அஷ்டவசுக்கள் எனப் பெயர் இடப்பட்டது. வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்து காமதேனுவை அஷ்ட வசுக்கள் கவர்ந்து சென்றனர். வசிஷ்டர் பூலோகத்தில் அஷ்டவசுக்கள் பிறக்குமாறு சாபமிட்டார். அதன் பிறகு அஷ்டவசுக்கள் பூலோகத்தில் மனிதப்பிறவிகள் எடுத்து இத்தலத்தில் காவிரி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தனர்....

மகர மாதத்தின் மகத்துவம்!

பூவுலகின் கோடானுகோடி ஜீவராசிகளுக்கும் உயிர் சக்தியை அளித்தருளும் சூரிய பகவான், குருவின் ஆட்சி வீடான, தனுர் ராசியை விட்டு, சனி பகவானின் ஆட்சி வீடான மகர ராசியைக் கடக்கும் காலத்தைத் தான் தை மாதம் எனவும், மகர மாதம் எனவும் கொண்டாடி மகிழ்கிறோம்.கும்ப ராசியில் இணைந்துள்ள சனி மற்றும் ராகுவிற்கு குரு பகவானின் சுபப் பார்வையும்...

உலகளாவிய மலை வழிபாடு

பகுதி 2 ஆண்டெஸ் மலை கடவுள் தென் அமெரிக்காவின் ஆண்டெஸ் மலைப் பகுதிகளில் பெரு, பொலிவியா போன்ற நாடுகளில் மலையை ஆப்புஸ் (Apus) என்ற பெயரிட்டு அங்கு இருக்கும் காவல் தெய்வங்களான தூய ஆவிகளை வணங்கி வருகின்றனர். ஆப்புஸ் என்றால் தலைவன் அல்லது முதல்வன் (தெய்வம்) என்று பொருள். இங்கு மலைத் தெய்வங்களுக்கு தங்களின் நிலங்களில்...

அரங்கனே ஆட்கொண்ட திருப்பாணாழ்வார்

பகுதி 1 “ஆழ்வார்கள் எல்லோருமே அரங்கனுக்கு உசத்திதான். அரங்கன் ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட விதம், நமக்கு ஒரு விஷயத்தைச் சொல்லித்தான் செல்கின்றன. இன்று நாம் காணவிருக்கும் ஆழ்வாரும், ஒரு பெரிய பக்தி மார்க்கத்தையும், எளிமையையும் வழிகாட்டிச் செல்கிறார். இன்று அரங்கனையும், நம் திருப்பாணாழ்வாரையும் எண்ணும் பொழுது, எனக்குக் காவிரியின் நினைவும் வருகிறது. குடகு தாய்வீடாக இருந்தாலும், தமிழ்...

சூரியன் வணங்கிய தலங்கள்

ஞாயிறு திருத்தலம், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. இந்த புஷ்பரதேஸ்வரரை வணங்கி சூரிய பகவான் பேறு பெற்றார். அவர் உருவாக்கியதுதான் இங்குள்ள சூரிய புஷ்கரணி. சூரியதசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் இத்தலத்தில் தனி சந்நதியில் அருளும் சூரியனை ஞாயிற்றுக்கிழமையன்று வணங்கி பேறுகள் பெறுகின்றனர். தன்னால்தான் உலகிற்கு ஒளி கிடைக்கிறது எனும் சூரியனின்...

நவகிரக தோஷங்களை போக்கும் சூரியனார் கோயில்

1. நவகிரக தலங்களுள் முதன்மையான இடத்தை வகிக்கிறது, இந்த சூரியனார் கோயில். 2. தென்னாட்டில் நவகிரகங்களுக்கு எனத் தனித்தனியே சந்நதிகள் அமைந்த கோயில் இது மட்டும்தான் என்றே சொல்லலாம். 3. சூரியன் உஷா, பிரத்யுஷா எனும் தன் தேவியருடன் நடுநாயகமாகக் கோயில் கொண்டிருக்க அவரைச் சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களும் அவரை நோக்கியபடி அமைந்திருக்கிறார்கள். 4....

இல்லமும் உள்ளமும் பொங்கும் பொங்கல் திருநாள்!

பொங்கல் திருநாள் - 15.1.2026 1. தை பிறந்தால் வழி பிறக்கும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம்பிக்கை தரும் மங்கல வாழ்த்து.. இதோ, தை மாதம் பிறக்கப்போகிறது. நல்வழி பிறக்கப்போகிறது. மார்கழி மாதம் பக்தி மாதம். பக்தி மாதத்தின் பலன் தை மாதம் கைமேல் கிடைக்கும் என்றார்கள் பெரியவர்கள். அதனால்தான் தைமாதம் முதல்...

நிதி வசதி எப்படி இருக்கும்?

சிலருக்கு கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும். அவர்கள் பணத்துக்குப் பெரிய அளவில் அல்லாட மாட்டார்கள். தேவைகளும் செலவுகளும் அதிகரித்தாலும்கூட, ஏதோ ஒரு விதத்தில் பணம் கையில் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அது பிறருடைய பணமாகக் கூட இருக்கலாம். ஆனால், அந்தப் பணத்துக்கு உரியவருக்கு கை கொடுக்கிறதோ, இல்லையோ, பணத்தை வைத்திருப்பவரான இவருக்கு,...

‘தவ்பா’-திரும்புதல்

“மணிக்கதவம் தாள்திறவாய்” என்று ஆண்டாள் பாடியது போன்று அடைபட்ட இறையருள் எனும் கதவைத் திறக்கச் செய்வதுதான் தவ்பா ஆகும்.‘தவ்பா’ என்பது இஸ்லாமிய மொழிமரபில் பாவமன்னிப்புக் கோருதலைக் குறிக்கும். இந்தச் சொல்லின் அகராதிப் பொருள் திரும்புதல், மீளுதல் என்பதாகும்.யாரை நோக்கி யார் மீளுதல்? யாரை நோக்கி யார் திரும்புதல்?இது என்ன கேள்வி?‘பாவமன்னிப்புக் கோரும் அடியான்தான் இறைவனை நோக்கித்...

நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காடு தலத்தில் கோயிலின் திருமறைக்கதவு மூடியே கிடக்கின்றது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் அருகே நின்று கொண்டிருக்கின்றனர்.‘ ‘வேதாரண்யேஸ்வரா... மறைக்காடனே... தாங்களை தரிசிக்கும் பொருட்டு வந்துள்ள இவ்விரு அடியார்களுக்கும் முன்புள்ள இந்தக் கதவை திறந்தருள்வாயா’’ என்று ஞானசம்பந்தப் பெருமான் வேண்டிக் கொண்டார்.மறைக்கதவு மௌனம் பூண்டது. திருஞானசம்பந்தர், ‘‘அப்பரே இக்கதவின் பூட்டைத் திறக்குமாறு அற்புதப் பதிகத்தை பாடுங்களேன்’’...