வள்ளிமலை கோயிலில் விபூதி காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு திரளான பக்தர்கள் தரிசனம் மார்கழி மாத பிறப்பையொட்டி
பொன்னை, டிச. 17: வள்ளிமலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி வெள்ளி கவச விபூதி காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு மலை மேல் சுப்பிரமணியநாதராகவும் மலையடிவாரத்தில்...
வேர்க்கடலை பயிர் பாதித்த விவசாயிகளுக்கு முழு நிவாரணம் குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல் வேலூர் மாவட்டத்தில் மழையால்
வேலூர், டிச.17: வேலூர் மாவட்டத்தில் மழையால் வேர்க்கடலை பயிர் பாதித்த விவசாயிகளக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில் வேலூர் கோட்டத்துக்குட்பட்ட விவசாயிகள்...
காதல் மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை வேலூர் கோர்ட் தீர்ப்பு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்
வேலூர், டிச.16: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் காதல் மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை விதித்து, வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை சாலை அசோக் நகரை சேர்ந்தவர் பால்ராஜ்(37), கூலி தொழிலாளி. இவர் கரிகிரி பகுதியைச் சேர்ந்த நித்யா(22), என்பவரை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து...
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது ஜோடி ரூ.60 ஆயிரம் வரை விலைபோனது கே.வி.குப்பம் வாரச்சந்தையில்
கே.வி.குப்பம், டிச.16: கே.வி.குப்பம் வாரச்சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. இதில் ஒரு ஜோடி ஆடு ரூ.60 ஆயிரம் வரை விலைபோனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடக்கிறது. அதன்படி நேற்று காலை கடும் பனிப்பொழிவிலும் ஆட்டுச்சந்தை கூடியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் சிக்கினார் பட்டப்பகலில் வீடு புகுந்து
வேலூர், டிச.16: காட்பாடி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டில் குளித்துவிட்டு ஆடை மாற்றிக்கொண்டிருந்தாராம். அப்போது பட்டப்பகலில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான, தசரதன்...
ஆன்லைனில் ரூ.11.46 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியை வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்து
வேலூர், டிச.15: ஆன்லைன் டிரேடிங் ஆசை காட்டி வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்து, ஆன்லைனில் ரூ.11.46 லட்சத்தை இழந்த கல்லூரி பேராசிரியை கொடுத்த புகாரின்பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது...
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்; விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா கோலாகலம்
பள்ளிகொண்டா, டிச.15: விரிஞ்சிபுரத்தில் கடைஞாயிறு விழா கோலாகலமாக நடந்தது. இதில் பிள்ளை பேறு ெபற்றவர்கள் பலா மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்பட்டது. முன்னதாக பாலாற்றில் நீராடி சூரிய...
அரசு பணியாளர்கள் ஓய்வு பெற அனுமதி தமிழக அரசு உத்தரவு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட
வேலூர், டிச.15: ஓய்வு பெறும் நிலையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படும் அரசு பணியாளர்களை உரிய நிபந்தனைகளுடன் ஓய்வு பெற அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுத்துறைகளில் அதிகாரிகள் நிலையில் தொடங்கி கீழ்நிலை அலுவலர்கள், பணியாளர்கள் வரை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ் ஓய்வு பெறும் நிலையில் சிக்கினால் அவர்கள் ஓய்வு பெற அனுமதிக்கப்படாமல்...
22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6 கோடி இழப்பீடு முதன்மை நீதிபதி ஆணை வழங்கினார் வேலூர் கோர்ட்டில்
வேலூர், டிச.13: வேலூர் கோர்ட்டில் 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6 கோடி இழப்பீடு ஆணையை வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி நேற்று வழங்கினார். தமிழக சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் வேலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகள் உள்ளிட்ட...

