காட்பாடி அருகே புதுமண தம்பதி வீட்டில் நகை, பணம் திருட்டு: போலீசார் விசாரணை
வேலூர், ஆக.14: காட்பாடி அருகே புதுமண தம்பதி வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(24) தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது...
அரசு பாடபுத்தங்களை தமிழகத்தில் அச்சிடுவதற்கு முன்னுரிமை : காட்பாடியில் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி பேட்டி
வேலூர், ஆக 14: அரசு பாடபுத்தங்களை தமிழகத்தில் அச்சிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக காட்பாடியில் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி கூறினார். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கை நேற்று பாடநூல் கழக தலைவர் லயோலா மணி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி எம்எல்ஏ டாக்டர் சுதாகர்,...
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வேலூர் கோட்டையில் பழைய கட்டிடங்களை புனரமைக்க திட்டம்: தொல்லியல்துறை துணை பொறியாளர் ஆய்வு
வேலூர், ஆக.13: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், வேலூர் கோட்டையில் உள்ள பழைய கட்டிடங்களை புனரமைக்கும் திட்டத்திற்காக, தொல்லியல்துறை கண்காணிப்பு துணை பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வேலூர் கோட்டை 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இக்கோட்டையின் உள்ளே ஜலகண்டேஸ்வரர் கோயில், அரசு அருங்காட்சியகம், திப்பு மகால், பேகம்...
வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரேநாளில் 95 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.41.91 லட்சத்துக்கு விற்பனை
வேலூர், ஆக. 13: ஆடி மாத அமாவாசையொட்டி வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரேநாளில் 95 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் ரூ.41.91 லட்சத்திற்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள...
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ஐதராபாத் செர்லப்பல்லி- வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு
வேலூர், ஆக.13: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, தெற்கு மத்திய ரயில்வே சார்பில் ஐதராபாத் செர்லப்பல்லி மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, செர்லப்பல்லியில் இருந்து வரும் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமைகளில் இரண்டு சேவைகளாக,...
காட்பாடி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பண்டல்கள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிகளை தேடும் போலீஸ்
வேலூர், ஆக.12: காட்பாடி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பண்டல்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் இருந்து காட்பாடி வழியாக பெங்களூரு மற்றும் கேரளா செல்லும் விரைவு ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு...
காட்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை: வேலூர் கோர்ட் தீர்ப்பு
வேலூர், ஆக.12: காட்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சிங்காரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற அஜித்(26), டிரைவர். இவர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு...
மாவட்டங்களுக்கு அரசு பயணம் மேற்கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கான செலவினங்கள் மேற்கொள்ள ரூ.6.85 கோடி நிதி ஒதுக்கீடு
வேலூர், ஆக.12: தமிழ்நாட்டிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசின் உயரதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் அரசு முறை ஏற்பாடுகளுக்காக நடப்பாண்டு ரூ.6 கோடியே 85 லட்சத்தை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டின் அரசாணைப்படி, மாவட்ட கலெக்டர்கள், முக்கிய பிரமுகர்களின் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய ஒவ்வொரு பிரிவிற்கும் தலா...
காட்பாடி ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
வேலூர், ஆக.10: காட்பாடி ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த அடையாளம் தெரியாத வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காட்பாடி ரயில் நிலையம் நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்த தனியார் மருத்துவமனை உதவி மையத்தில் உள்ளவர்கள் மீட்டு...
