பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று பதிவிறக்கம் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு
வேலூர்: பிளஸ்2 தேர்வெழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11...
மூட்டை தூக்கும் தொழிலாளி போக்சோவில் கைது; 8ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம்
குடியாத்தம், மே 13: எட்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மூட்டை தூக்கும் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனையறிந்த பெற்றோர்கள் பெரியதாக கண்டு...
வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்காக சீல் வைத்த எம்எல்ஏ அலுவலகங்கள் மீண்டும் திறப்பு
வேலூர், மே 12: வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்காக சீல் வைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 15ம் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகம், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன....
கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி குடியாத்தத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை; கலெக்டர் தகவல்
வேலூர்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகளான குடியாத்தம் தாலுகாவில் அமைந்துள்ள கடை எண்.11038 மற்றும் கடை எண்.11033...
குடியாத்தம் அருகே பழைய வீட்டை இடித்த நிலையில் காடு புறம்போக்கு நிலம் எனக்கூறி புதிய வீட்டை இடிக்க உள்ளனர்: ராணுவவீரர் குடும்பத்துடன் குறைதீர்வு கூட்டத்தில் மனு
வேலூர், மே 12: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த மார்ச் 15ம் ேததி முதல் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக புகார் பெட்டியில் மக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால் நேற்று வழக்கம்போல் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது....
கத்தியை காட்டி மிரட்டி ஸ்வீட் கடை உரிமையாளரிடம் பணம் பறித்த இருவர் கைது
கே.வி.குப்பம், மே 9:கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்(20), ரமேஷ் மகன் ரிதீஷ்(20) ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ம் தேதி லத்தேரி பகுதியில் உள்ள ஸ்வீட் கடையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்ததால், அவர்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர்....
எஸ்பி அலுவலகத்தில் பெண் கண்ணீர் மனு
வேலூர், மே 9:சீட்டு முடிவுக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் சீட்டுத்தொகை ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை தராமல் இழுத்தடித்து வருவதாகவும், சீட்டுப்பணத்தை மீட்டுத்தரும்படியும் கேட்டு வேலூர் பாகாயத்தை சேர்ந்த பெண் எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.வேலூர் பாகாயம் சஞ்சீவிராயபுரம் சத்யா நகரை சேர்ந்த விதவை பெண் வேலூர் எஸ்பி அலுவலகத்தில்...
பிளஸ் 2 தேர்வில் வேலூர் மாவட்டம் 90.73 சதவீதம் தேர்ச்சி தமிழகத்தில் 36வது இடத்தை எட்டியது
வேலூர், மே 9:தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 49 மாணவர்கள், 8 ஆயிரத்து 437 மாணவிகள் என்று மொத்தம் 15 ஆயிரத்து 486 பேர் எழுதினர்....
வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அதிகாரிகள் தகவல்
வேலூர், மே 8: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை தாக்கல் செய்வது குறித்து...


