திருத்தாளீஸ்வரர் கோயில் திருப்பணியின்போது 4 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு கிராம மக்கள் பரவசம் வேலூர் அடுத்த அன்பூண்டியில் 1000 ஆண்டு பழமையான

வேலூர், ஆக.5: வேலூர் அடுத்த அன்பூண்டியில் ரூ.1.14 கோடியில் துவங்கியுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் திருப்பணியின் போது விநாயகர், அம்மன் சிலைகள் உட்பட 4 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது கிராம மக்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த அன்பூண்டி ஊராட்சியில் 1000 ஆண்டுகள் பழமையான திருத்தாளீஸ்வரர் கோயில் உள்ளது. பிற்கால சோழர்...

மூதாட்டியை மிரட்டி நகை, பணம் பறிப்பு ஆசாமி கைது வீட்டில் தனியாக இருந்த

வேலூர், ஆக.5: கருகம்பத்தூரில் மூதாட்டியை மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் கருகம்புத்தூர் கன்னிக்கோயில் தெருவை சேர்ந்தவர் ஜகிதாபேகம்(65). வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஜகிதாபேகத்தின்...

பலத்த சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது 3 மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் பாதிப்பு வள்ளிமலை அருகே

பொன்னை ஆக. 5: வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதில் வள்ளிமலை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, பெருமாள்குப்பம், சோமநாதபுரம், வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையில் சாலையோரங்களில் இருந்த புளியமரக்கிளை சாய்ந்தது....

15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்

  வேலூர், ஆக.4:வேலூர் மாவட்டத்தில் 15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விவரம்: காட்பாடி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ரகுராமன்- வேலூர் தாலுகா வரவேற்பு துணை தாசில்தாராகவும், வேலூர் கலெக்டர்...

நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த தந்தை- மகன் உட்பட 6 பேர் கைது 4 துப்பாக்கிகள் பறிமுதல் குடியாத்தம் அருகே வேட்டையாடுவதற்காக

  குடியாத்தம், ஆக. 4: குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்த தந்தை, மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அரசின் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி...

காட்பாடியில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

வேலூர், ஆக.3: காட்பாடியில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவனை கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 31ம் தேதி நள்ளிரவு தனது பைக்கில் காட்பாடி- திருவலம் சாலையில் தான் தங்கியிருக்கும் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பழைய காட்பாடி சினிமா...

வடமாநில வாக்காளர்களால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும்: வள்ளிமலையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பொன்னை, ஆக.3: வடமாநில வாக்காளர்களால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் என வள்ளிமலையில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் இத்திட்ட துவக்க விழா காட்பாடி அடுத்த வள்ளிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர்...

ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.50 லட்சம் நஷ்டம் தனியார் பைனான்ஸ் கம்பெனி மானேஜர் விஷம் குடித்து தற்கொலை

பள்ளிகொண்டா, ஆக.3: ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.50 லட்சம் பணத்தை இழந்த குடியாத்தம் தனியார் பைனான்ஸ் கம்பெனி மானேஜர் பள்ளிகொண்டா அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சங்கர்(36). தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மானேஜராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி...

ஆட்டை திருடி சந்தையில் விற்க முயன்ற வாலிபருக்கு தர்மஅடி ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

வேலூர், ஆக.2: ஒடுகத்தூர் அருகே ஆட்டை திருடி வந்து சந்தையில் விற்க முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகாம்பாள். இவர் தனது வீட்டின் அருகில் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து...

வலி நிவாரணி மாத்திரை விற்க முயன்ற 10 பேர் கைது வேலூர் அப்துல்லாபுரம், பள்ளிகொண்டா பகுதிகளில்

பள்ளிகொண்டா, ஆக.2: பள்ளிகொண்டா மற்றும் வேலூர் அப்துல்லாபுரம் பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகள், சிரிஞ்சுகள் விற்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா எல்லைகுட்பட்ட ராமாபுரம் சாலை, சந்தைமேடு அருகே உள்ள அரசு பள்ளி செல்லும் வழியில் போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் விற்க முயன்ற 5 பேரை டிஎஸ்பி தனிப்படை...