காந்திஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை

திருவாரூர், செப். 30: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுதினம் (2ந் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.2...

திருவாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருவாரூர், செப். 30: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகமானது இன்று நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை...

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், செப். 30: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 240 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல்,...

திருத்துறைப்பூண்டியில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, செப்.27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கின் நோக்கம் குறித்து ரமேஷ் பேசினார். சூரிய மின் ஆற்றல் குறித்த திட்ட ஒருங்கிணைப்பாளர் பரத் பேசும் போது மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து இது போன்ற திட்டங்கள் மூலம் ரூ.30,000 முதல் ரூ.78,000...

வலங்கைமான் அருகே கண்டியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 500 மனுக்கள் பெறபட்டன

வலங்கைமான், செப்.27: வலங்கைமான் அருகே கண்டியூர் ஊராட்சிபகுதியில் உள்ளிட்ட ஐந்து கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 500 மனுக்கள் பெற்றபட்டன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் பகுதியில் மேல விடையல் கீழ விடையல் சித்தன்வாலுர் கண்டியூர் மாத்தூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில்பொதுமக்களிடமிருந்து மகளிர்...

நீடாமங்கலம் அருகே பெரம்பூர் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

நீடாமங்கலம்,செப்.27: நீடாமங்கலம் அருகே பெரம்பூர் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம், பெரம்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நேற்று கிராம மூதியவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் குருசெல்வமணி அனைவரையும் வரவேற்றார்....

முத்துப்பேட்டையில் பெண் மாயம்

முத்துப்பேட்டை, செப்.25: முத்துப்பேட்டையில் பெண் மாயமானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்பு பகுதியான கலியமூர்த்தி மகன் வடுகநாதன்(55) இவரின் மனைவி புவனேஸ்வரி இருவருக்கும் திருமணமாகி 32வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் சமீபகாலமாக சற்று மனநலம் பாதிக்கபட்டு காணப்பட்ட புவனேஸ்வரி அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ந்தேதி...

திருத்துறைப்பூண்டி அருகே மரைக்கா கோரையாற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை

திருத்துறைப்பூண்டி, செப்,25: திருத்துறைப்பூண்டி அருகே மரைக்காகோரையாற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரையைஅகற்ற ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் மரைக்காகோரையாற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடியினால் மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கிய மழை...

மன்னார்குடி அருகே கதண்டுகள் கடித்ததில் பள்ளி மாணவர் காயம்

மன்னார்குடி, செப். 25: மன்னார்குடி அருகே தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து கடித்ததில் காயம் அடைந்த பள்ளி மாணவர் உள்பட 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மன்னார்குடி அருகே அத்திக்கோட்டை கிராமம் தெற்க்கு தெருவில் ஒருவர் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள்...

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்

  திருத்துறைப்பூண்டி, செப்.24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது, பின்னர் காலப்போக்கில் ஆக்கிரப்பு செய்யப்பட்டதால் சிறிய மழை பெய்தால் கூட நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள், கவுன்சிலர் கோரிக்கை அடுத்து நகராட்சி நிர்வாகம்...