மன்னார்குடி அருகே பைங்காநாடு மாரியம்மன் கோயிலில் வெள்ளி கவசம் திருடியவர் கைது

  மன்னார்குடி,மார்ச் 11: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாட்டில் பழமையான மகா மாரியம்மன் கோயிலில் அருள்பாலித்து வரும் அம்மனுக்கு அணிவிப்பதற்காக சுமார் 5 கிலோ எடையுள்ள வெள்ளிக்கவசம் இருந்து வந்தது. இக்கோயிலில் முருகானந்தம் (53) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை கோயிலின் பக்க வாட்டில் இருந்த...

முத்துப்பேட்டை அருகே ஆள்காட்டுவெளி அரசு பள்ளி ஆண்டு விழா

  முத்துப்பேட்டை,மார்ச் 11: முத்துப்பேட்டை அருகே ஆள்காட்டவெளி அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது. முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டுவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவருமான தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். கோட்டூர் வட்டாரக்கல்வி அலுவலர்...

திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

  திருத்துறைப்பூண்டி,மார்ச் 11: திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதியில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று காலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கட்டிமேடு, மேட்டுப்பாளையம் மடப்புரம், நெடும்பலம் மற்றும்...

திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நிறைவு

திருத்துறைப்பூண்டி.மார்ச்.9: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்களுக்கான அடிக்கல்லினை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் கடந்த ஆண்டுதுவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் பணி விறுவிறுப்பாக நடைபெற்று பணி முடிந்துவிட்டது. விரைவில்...

பெட்ரோல்பங்க் ஊழியரிடம் ரகளை இரண்டு இளைஞர்கள் கைது

திருத்துறைப்பூண்டி, மார்ச்.9: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நீதிமன்ற அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்த இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வேணுகோபால்(70) என்பவரிடம் மெதுவாக பெட்ரோல் போடுறீங்க என கேட்டு பிரச்சனையில் ஈடுபட்டும் அவரை தகாத வார்த்தையில் திட்டியும் அடித்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெட்ரோல் பங்க்...

நன்னிலத்தில் மாமனார், மாமியாரை தாக்கிய மருமகன் கைது

திருவாரூர், மார்ச் 9: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வாஞ்சியம் கிராமத்தில் வசித்து வருபவர் வீராசாமி மகன்பிரதாபன் (35) டிரைவரான இவருக்கும் இவரது மனைவி மகேஸ்வரி (32) என்பவருக்கு மிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் அதனை...

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்தம்: அலுவலகங்கள் வெறிச்சோடியது

நீடாமங்கலம்,மார்ச் 4: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்கத்தினர் அதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு...

உதயமார்த்தாண்டபுரத்தில் இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி

முத்துப்பேட்டை,மார்ச் 4: உதயமார்த்தாண்டபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு அனைத்து கட்சி சார்பில் புகழஞ்சலி அனைத்து கட்சி சார்பில் நடந்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் அனைத்து கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைவையொட்டி அமைதி பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய...

திருத்துறைப்பூண்டியில் பைக்கிலிருந்து விழுந்த கண்டக்டர் பலி

திருவாரூர்,மார்ச் 4: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற அரசு பேருந்து கண்டக்டர் பலியானார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரி கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (46). அரசு பேருந்து கண்டக்டரான இவர் நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாடு...

திருத்துறைப்பூண்டியில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

திருத்துறைப்பூண்டி,மார்ச் 2: திருத்துறைப்பூண்டியில் புதிய தாசில்தார் பொறுப்பேற்று கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் தாசில்தார்கள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து திருத்துறைப்பூண்டி தாசில்தாராக பணியாற்றி வந்த பரமேஸ்வரி, திருத்துறைப்பூண்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிமாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த செந்தில்குமார்...