ஆடிப்பெருக்கு எப்போது?.. தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது?

ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த...

சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்

சிந்து சமவெளி நாகரிகத்தில் காளி வழிபாட்டு சான்றுகள் காணப்படுகின்றன. கொற்றவை வழிபாடு பிற்கால சக்தி வழிபாட்டுக்கு அடிப்படையானது. சக்தியின் பிரதிநிதிகளே இன்றைய கிராம தெய்வங்களான மாரியம்மன், மாகாளியம்மன், ஒங்காளியம்மன், கொங்காலம்மன், அங்காளம்மன் என்ற பெயரில் வணங்கப்படுகிறார்கள். ரேணுகாதேவி வழிபாடு, மழை வழிபாடு, பத்தினி தெய்வம் கண்ணகி வழிபாடு மூன்றும் ஒண்றே. இதன் வழியாகத்தான் இன்றைய...

யோகங்களுக்கான யோகம் கர்த்தாரி யோகம்

ஜாதகர் ஒருவர், ஒரு ஜோதிடரை கண்டு, ‘சார் எனக்கு இந்த யோகம் இருக்கு. அந்த வகையான யோகம் இருக்கு’ எனச் சொல்லி ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுக்கிறார். ஜோதிடரும் பதில் ஏதும் சொல்லாமல், ‘ஆமாம், அந்த யோகம் இருக்கு... இந்த யோகம் இருக்கு’ எனச் சொல்கிறார். ஜாதகர் உடனே ‘ஏன்? அந்த யோகம் எனக்கு கிடைக்கல’ என...

பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர்

ஆற்றல்கள் பல உள்ளன. அறிவியலின் கூற்றுப்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால், ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக பரிமாற்றம் செய்யலாம் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்கிறது. ஆற்றலை உணரும் தன்மையில் மட்டுமே உள்ளோம்.இறை சக்தியும் பல்வேறு ஆற்றல் வடிவங்களாக கோயிலில் வீற்றிருக்கிறது. நமக்கு தேவையானவற்றை தேவையான இடத்தில் தக்க தருணத்தில் நாம் வேண்டிப்...

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

நாகபஞ்சமி - ஜூலை 29,2025 ஆடி மாதத்தில் கருட பஞ்சமி, நாகபஞ்சமி, நாக சதுர்த்தி வருகிறது. இந்த விசேஷங்களில் பெரிய திருவடியான கருடனையும், நாகங்களையும் நினைத்து வழிபட வேண்டும். நாக சதுர்த்தி / பஞ்சமி அன்று கிராமத்தில் புற்று மாரியம்மன் கோயில்களுக்குச் சென்று நாகங்களை வழிபடுகின்றார்கள். நாகங்களை வழிபடுவது ஆதிகாலத்திலிருந்து மக்கள் செய்து வரும் வழிபாடு....

நாகசதுர்த்தி ஸ்பெஷல் : நாகர்களுக்குப் பிடித்த நூலும் பாலும்

28.7.2025 - நாகசதுர்த்தி 29.7.2025 - நாகபஞ்சமி தென் தமிழகத்திலேயே நாகர் வழிபாட்டுக்கு சிறந்த தலமாக ``நாகராஜா கோயில்’’ திகழ்கிறது. தமிழ்நாட்டில், நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோயில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும் பள்ளம், கோடகநல்லூர் போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு, நாகங்கள் தங்களது...

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

தினகரன் ஆன்மிக மலரில் ``வியக்கவைக்கும் வியாசராஜரின் அனுமன்’’ என்னும் பகுதி வெளியாகி வருகிறது. அதில், சில வாரங்களுக்கு முன்னால் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ``சஞ்சீவி ராயரை’’ பற்றி பதிவு செய்யப் பட்டிருந்தது. அந்த சஞ்சீவி ராயர் கோயிலில் இருந்து சுமார் இரண்டே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ``சிவ...

கலக்கம் போக்குவாள் காளராத்ரி

துர்கை என்றாலே, துக்கங்களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு. அந்த வடிவங்களுள் ``காளராத்ரி துர்கா தேவி’’ ஆவாள். அந்த துர்கையின் மகிமையை பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள். ராமாயணத்தில் காளராத்ரி துர்கைஅசோக வனத்தை,...

ஆடி அமாவாசை (24.7.2025)

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த முக்கியமான அமாவாசை தினங்களில் ஒன்று ஆடி அமாவாசை. இந்த நாளில் நதி மற்றும் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று செய்யும் முன்னோர் வழிபாடு நடத்துவது மிகவும் பயன் கொடுக்கும். ஆடி அமாவாசை வழிபாட்டால் திருமணம், குழந்தைப் பேறு போன்ற சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். முன்னோர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும். பல...

தஞ்சாவூர் வடபத்ரகாளி

தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன் நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்பசூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல்...