கருணைக் கடல் ஷீரடி சாய்பாபா
இந்திய ஆன்மிக உலகம் கண்டு வியந்த குருமார்களில் ஒருவர் ஷீரடி சாய்பாபா. அவரது போதனைகளும், அற்புதங்களும் இன்றளவும் பேசப்படுகின்றன. அவருடைய தாய் மதம் எதுவென்று கண்டறியப்பட முடியவில்லை என்றாலும், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சகோதரர்களாகப் பாவித்தவர். அவரது அற்புதங்களாலும், போதனைகளாலும் தான் மதம், சாதி, மொழி, இனம் கடந்து இன்றளவும் மக்களால் போற்றப்படு கிறார். சாய்பாபாவின் அருளமுதம்...
சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம்
அபிஷேகம் என்ற சொல் நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். ஆசார்ய அபிஷேகம் என்பதற்கு ஒருவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துதல் என்பதைக் காண்கிறோம். இது போன்றே அரசனுக்கு மகுடம் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தல் என்பது அவனுக்கு நாட்டை உரிமையாக்கி அவன் ஏவலில் காவலில் வாழ்வோம் என்பதை ஒப்புக்...
அற்புதங்கள் நிகழ்த்தும் அன்னாபிஷேகமும் கவலையைப் போக்கும் காலபைரவரும்
5-11-2025- அன்னாபிஷேகம் 12-11-2025- காலபைரவாஷ்டமி 1. முன்னுரை உலகில் ஒளி தரும் கிரகங்கள் இரண்டு. ஒன்று சூரியன். இன்னொன்று சந்திரன் . சூரியனை கிரகம் என்று சொல்லலாமா? என்ற கேள்வி எழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நட்சத்திரமாக இருந்தாலும் கிரகமாகத் தான் கருதப்படுகிறார். சூரியனின் ஒளி அடிப்படையில் தான் ஜாதக பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சூரியனிடம் இருந்து...
வெற்றிக் கதவுகளை திறக்கும் ஸ்ரீவிஷ்ணுமாயா கோயில்
கருவண்ணூர், சிறியப்பாளம், திருச்சூர், கேரளா திருச்சூரின் கருவண்ணூர் சிறியப்பாளத்தில் அமைந்துள்ள, கேரளாவின் மிக வலிமையான கோயில்களில் ஒன்றாகும். ஸ்ரீ விஷ்ணுமாயா குழந்திச்சாத்தன் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோயில், ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் பக்தியும், மாந்திரீக சேவைகளும், பாரம்பரியமும் கொண்ட தாகும் ஆகும். தெய்வீக தோற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முன்,...
நலன்கள் எல்லாம் அருளும் நரசிம்ஹி தேவி
அம்பிகையின், ஆணைகளை சிரமேற்கொண்டு செய்பவர்கள்தான் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடிகள் இருப்பார்கள். ஆனால், இந்த பல்லாயிரம் கோடி யோகினிகளில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அறுபத்தி நான்கு பேர்கள்.‘கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதா’ என்று லலிதா சஹஸ்ரநாமமத்தில் ஒரு நாமம் இடம் பெறுகிறது. இது, அம்பிகையின் கிருபைக்கு பாத்திரமாவதற்காக, அம்பிகை இடும்...
நெற்பயிரை காவல் காத்த ‘நெல்லையம்மன்’
சிவகங்கையிலிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலூரில் பழமையான கொற்றவாளீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக கொற்றவாளீஸ்வரர் என அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். தாயார் நெல்லையம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ரிஷப வாகனத்தில் பார்வதி சமேத சிவபெருமான், மயில் மீது சண்முகர், வீணையுடன் சரஸ்வதி, சாரதாம்பிகை, நடராஜர், வீரசேகர பாண்டியன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. கோயிலின்...
திருப்பங்கள் நிகழ்த்தும் திருவோண விரதம்!
ஒன்பது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே ‘திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க...
வெற்றியை தருவார் திருச்செந்தூர் ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - 27-10-2025 கந்த சஷ்டி கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் முருக...
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
இன்று பெரும்பாலும் பக்தி என்பது தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் கடவுளைக் கண்டு பயப்பட்ட நாம், இன்றோ கடவுளை பயன்படுத்திக்கொள்கிறோம். கோயில்கள் நம் தேவையை நிறைவு செய்யும் கட்டிடங்களாகவும் கடவுள் என்பவர் தேவையை நிறைவு செய்து தரும், சேவை செய்யும் நபராகவும் பார்க்கப்படுகிறார். கடவுளிடம் ‘அது வேண்டும்’ ‘இது...

