நோய் நீக்கும் ரத சப்தமி

காலபுருஷ கணிதத்தின்படி சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்தை நோக்கிப் பயணிக்கிறார். சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கிச் செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள்தான் ‘ரத சப்தமி’. இன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. சூரிய நாராயணப் பெருமாளை வழிபடும் விதமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த நாளில் சூரியனை...

வேலூர் கோட்டையின் காவல் தெய்வம்

மன்னர் கிருஷ்ணதேவ ராயர் காலத்தில், திருப்பத்தூர் மாவட்டம், சேலம் உடன் இணைந்து, `சேலம் ஜில்லா’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த சமயத்தில், கிழக்கு திசையில் `மகான் ஸ்ரீ வியாசராஜர்’ பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமார் 13 அடியில், ``வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ வீற்றிருக்கிறார். இவர் ஒரே பாறையில் காட்சியளிக்கிறார். இவருக்கு, ``கோட்டை தர்வாஜா ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ என்னும்...

செல்வச் செழிப்பை அருளும் ஸ்ரீ சொர்ணாஹர்ஷண பைரவ வழிபாடு

ஞானத்தின் கடவுளாக விநாயகரும், வீரத்தின் கடவுளாக முருகனும், மருத்துவத்தின் கடவுளாக தன்வந்திரியும், கல்வியின் கடவுளாக ஹயக்ரீவரும் விளங்குகின்றனர். இதேபோன்று செல்வத்தின் கடவுளாக மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் ஆகியோர் விளங்குகின்றனர். ஆனால், இவர்களுக்கு செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்த கடவுளாக விளங்குபவர் ஸ்ரீ சொரணாஹர்ஷண பைரவர் ஆவார். சொர்ணம் என்றால் தங்கம். ஆகர்ஷணம் என்றால் வரவழைத்தல்...

தடை நீக்கி வளம் சேர்க்கும் சக்கரத்தாழ்வார்

திருமாலின் பஞ்ச ஆயுதங்களான சுதர்சனம், பாஞ்ஜசன்யம், கௌமோதகீ, நந்தகம், சார்ங்கம் போன்றவை அவர் பணிகளை செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இவற்றில் முதன்மையானது சக்கரத்தாழ்வார் என்று சொல்லப்படும் சுதர்சன பெருமாள். திருமாலை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், திருமாலின் வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளிய மரத்திற்கு திருப்புளியாழ்வான்...

முன்னோர்களின் ஆசியை தரும் தை அமாவாசை

தை மாத அமாவாசையை ஒட்டிய நிகழ்வுகள் புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால் தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) சிறப்புடையது. அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதி சிறப்புடையது. அந்த வகையில்...

மழலை வரமருளும் சந்தானவல்லி

தூசி கிராமம் பரமேஸ்வர மன்னனால் காஞ்சியின் வட பகுதியில் ‘‘பரமேஸ்வர விண்ணகரம்’’ என்ற வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. இது ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஆலயம். அதன்பின் வந்த பல்லவ மன்னராலும், பக்தர்களின் பெருமுயற்சியாலும், தூசி கிராமத்தில் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் ஸ்ரீதேவி - பூதேவியுடன் சின்முத்திரை தரித்து கையில் தாமரையை...

இல்லமும் உள்ளமும் பொங்கும் பொங்கல் திருநாள்!

பொங்கல் திருநாள் - 15.1.2026 1. தை பிறந்தால் வழி பிறக்கும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம்பிக்கை தரும் மங்கல வாழ்த்து.. இதோ, தை மாதம் பிறக்கப்போகிறது. நல்வழி பிறக்கப்போகிறது. மார்கழி மாதம் பக்தி மாதம். பக்தி மாதத்தின் பலன் தை மாதம் கைமேல் கிடைக்கும் என்றார்கள் பெரியவர்கள். அதனால்தான் தைமாதம் முதல்...

விஷக்கடி ஆபத்து நீங்க ஒரு பிரார்த்தனை

கோமதி மகிமை என்ற தலைப்பிலான மகாகவி பாரதியாரின் பாடல்கள் சங்கரன்கோயிலின் மகிமையைக் கூறுகின்றன. திருமாலும், ஈசனும் தாங்கள் இருவரும் ஒருவரே என சங்கரநாராயணராக அம்பிகைக்கு உணர்த்திய தலம் இது. இங்குள்ள நாகசுனையில் நீராடி சங்கரநாராயணரையும் கோமதியம்மனையும் வழிபட நோய்கள் நீங்குவதாக ஐதீகம். நாகசுனையில் நண்டு, ஆமை, தவளை, மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் வசிப்பதில்லை....

மனநலம் காக்கும் குணசீலம் பெருமாள்

தால்பிய மகரிஷியும் அவர் சீடர் குணசீல மகரிஷியும் திருப்பதி பெருமாளின் பேரழகில் மயங்கி அவரைப் போன்ற மூர்த்தத்தை தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள். அதன்படியே செய்ததோடு அந்தத் தலத்துக்கு சீடரின் பெயரையும் வைத்து அவருக்குப் பெருமை சேர்த்தார் குரு. பெருமாள் பிரசன்ன வெங்கடாஜலபதியாக அருள்கிறார். இத்தலம் தென்திருப்பதி என போற்றப்படுகிறது. கருவறையில் கிழக்கு நோக்கி நின்று...

கூடார வல்லியும் போகியில் ஆண்டாள் திருக்கல்யாணமும்

மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று சொல்லுகின்றோம். வைணவர்கள் இதை “திருப்பாவை மாதம்” என்று சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை 30 பாசுரங்களும், நாளுக்கு ஒரு பாசுரமாக 30 நாட்கள் இந்த மாதத்தில் ஓதுவது வழக்கம். கோயில்களில் மட்டுமல்ல; ஒவ்வொரு வைணவர்கள் இல்லத்திலும் காலை திருவாராதனம் செய்யும் பொழுது திருப்பாவையைப் பிரதானமாகச் சொல்வார்கள். விடியல் காலை வீதிகளில்...