சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா...
கார்த்திகை மாதச் சிறப்பு கார்த்திகை மாதம் பிறந்தாலே, எங்கெங்கும் ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் விண்ணைப் பிளக்கிறது. சபரிமலை சந்நிதானத்தை நோக்கி விரத மிருந்த பக்தர்கள் கூட்டம் அலையலையாகச் செல்கிறது. இது சகல ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் தான் சிவபெருமான் ஜோதியாக எழுந்தார். விஷ்ணுவும் ஜோதி சொரூபமாக தோன்றினார். (காஞ்சியில் திருத்தண்காவில்...
வரங்களை அருளும் வக்ரகாளி
வக்ரகாளியை பார்த்தவுடன் மனது அமைதியடைந்து, நல்லெண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. நம் மனதில் உள்ள கோரிக்கைகளை அவள் முன்பு சமர்ப்பித்த திருப்தி ஏற்பட்டது. பொதுவாக, காளியை பார்த்தால் நமக்குள் ஓர்வித பயம் உண்டாகும். ஆனால், வக்ரகாளியை பார்த்ததும் பயம் ஏற்படவில்லை மாறாக, பக்தி ஏற்பட்டது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன், தற்போதுள்ள வக்ரகாளியம்மன் கோயிலின் பின்புறத்தில், பைரவர்...
எம வாகனம்
ஸ்ரீ வாஞ்சியத்தில் தீர்த்த வாரியாக ஸ்ரீ வாஞ்சிநாதர் கலந்து கொள்வதற்காக, எம வாகனம் உள்ளது. பார்ப்பதற்கே கம்பீர மீசையுடன் பயமுறுத்துகிற கோலத்தில் எம வாகனம் இருக்கிறது. தீர்த்த வாரிக்காக இதில்தான் ஸ்ரீ வாஞ்சிநாதர் பயணிக்கிறார். வித்தியாசமான நவக்கிரகம் மெரும்புலியூர் தலத்தில் நவகிரக சந்நதியில் நடுவில் உள்ள சூரியனையே எல்லா கிரக உருவங்களும் நோக்கியவாறு காட்சியளிக்கின்றன. அசையா...
பயம் போக்குவார் பைரவர்
சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் பைரவர். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும்,...
அக்னிக்கு வரமருளிய வரகுணமங்கை விஜயாசனப் பெருமாள்
நவ திருப்பதிகள் தென் மாவட்ட தாமிரபரணி ஆற்றங் கரையில், வடபுறம், தென்புறம் என இருகரை ஓரங்கள் உள்ளன. அவற்றில் வடகரையின் ஓரமாக, ஆறு திவ்ய திருத்தலங்களும், தென்கரையின் ஓரமாக, மூன்று திவ்ய திருத்தலங்களும் உள்ளன. இவையே 108 வைணவ திவ்ய ஷேத்திரத்தில் ``சந்திரனுக்கு’’ உரிய நவகிரகத் தலம். திருமால் நின்ற கோலத்தையும், கிடந்த கோலத்தையும் நாம்...
கருணைக் கடல் ஷீரடி சாய்பாபா
இந்திய ஆன்மிக உலகம் கண்டு வியந்த குருமார்களில் ஒருவர் ஷீரடி சாய்பாபா. அவரது போதனைகளும், அற்புதங்களும் இன்றளவும் பேசப்படுகின்றன. அவருடைய தாய் மதம் எதுவென்று கண்டறியப்பட முடியவில்லை என்றாலும், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சகோதரர்களாகப் பாவித்தவர். அவரது அற்புதங்களாலும், போதனைகளாலும் தான் மதம், சாதி, மொழி, இனம் கடந்து இன்றளவும் மக்களால் போற்றப்படு கிறார். சாய்பாபாவின் அருளமுதம்...
சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம்
அபிஷேகம் என்ற சொல் நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். ஆசார்ய அபிஷேகம் என்பதற்கு ஒருவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துதல் என்பதைக் காண்கிறோம். இது போன்றே அரசனுக்கு மகுடம் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தல் என்பது அவனுக்கு நாட்டை உரிமையாக்கி அவன் ஏவலில் காவலில் வாழ்வோம் என்பதை ஒப்புக்...
அற்புதங்கள் நிகழ்த்தும் அன்னாபிஷேகமும் கவலையைப் போக்கும் காலபைரவரும்
5-11-2025- அன்னாபிஷேகம் 12-11-2025- காலபைரவாஷ்டமி 1. முன்னுரை உலகில் ஒளி தரும் கிரகங்கள் இரண்டு. ஒன்று சூரியன். இன்னொன்று சந்திரன் . சூரியனை கிரகம் என்று சொல்லலாமா? என்ற கேள்வி எழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நட்சத்திரமாக இருந்தாலும் கிரகமாகத் தான் கருதப்படுகிறார். சூரியனின் ஒளி அடிப்படையில் தான் ஜாதக பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சூரியனிடம் இருந்து...
வெற்றிக் கதவுகளை திறக்கும் ஸ்ரீவிஷ்ணுமாயா கோயில்
கருவண்ணூர், சிறியப்பாளம், திருச்சூர், கேரளா திருச்சூரின் கருவண்ணூர் சிறியப்பாளத்தில் அமைந்துள்ள, கேரளாவின் மிக வலிமையான கோயில்களில் ஒன்றாகும். ஸ்ரீ விஷ்ணுமாயா குழந்திச்சாத்தன் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோயில், ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் பக்தியும், மாந்திரீக சேவைகளும், பாரம்பரியமும் கொண்ட தாகும் ஆகும். தெய்வீக தோற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முன்,...


