அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவள்
235. சதுஷ்ஷஷ்டி உபாசாராட்யா. 236. சதுஷ்ஷஷ்டி கலாமயீ. 237. மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகிநீ கணஸேவிதா. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு லலிதா சஹஸ்ரநாமத்தில் சில நாமங்கள் உண்டு. மேலேயுள்ள, மூன்று நாமங்களும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை சொல்கிறது. சதுஷ்ஷஷ்டி உபாசாராட்யா அறுபத்து நான்கு உபசாரங்களால் ஆராதிக்கப்படுபவள். இதற்கு அடுத்ததாக, சதுஷ்ஷஷ்டி கலாமயீ… என்றால் அறுபத்து நான்கு...
காளியின் அருள் பெற்ற காளிதாசர்
பாரததேசம் மட்டும் அல்லாமல், உலக அளவிலும் பெரும் புகழ் பெற்றவர் காளிதாசர். நூல்கள் பல இயற்றியவர். அவற்றில் ஒவ்வோர் இடத்தையும் அவர் வர்ணிக்கும் பொழுது அதைப் படிப்பவர்களின் மனத்தை இழுத்து, அந்த இடங்களில் கொண்டு போய் நிறுத்திவிடுவார். அந்த இடத்தை அவர் விவரிக்கும்போது, அந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலை, அந்த இடத்தினுடைய தன்மை, குளிர் - காற்று...
இறைவனும் மனிதனும்
கடவுள் நம்பிக்கை மனித குலத்துக்குத் தான் அதிகமாக இருக்கிறது. அதே மனித குலத்துக்குத்தான் கடவுள் மீது அவ நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதற்குப் புராண இதிகாச இலக்கியங்களைக் கூட நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல், கடவுள் இருப்பைக் குறித்த சந்தேகம் சில திரைப்பாடல்களில் கூட அற்புதமாக வெளிப்பட்டு இருக்கிறது. அவன் பித்தனா?...
பொறுப்பு என்பது வெறும் கடமைகளைச் செய்வதா?
என்றென்றும் அன்புடன் 18 பொறுப்பு என்பது நம் செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பேற்பது, மற்றவர்கள் மீதும் சமூகத்தின் மீதும் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு. பொறுப்பு நம்மிடம் இருந்து ஆரம்பிக்கிறது. நம்மை நாமே புரிந்து கொள்ளுதல்.அந்தப் புரிதலே நாம் பிறருக்கு செய்யும் பெரும் உதவி. அந்தப் புரிதலே பிறரை புரிந்து கொள்ளவும் சீரான முடிவுகளை...
இரண்டுக்கும் காரணம் இருக்கிறது!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 120 (பகவத்கீதை உரை) தன் ஆழ்மனதில் வடுவாகப் பதிந்திருக்கும் ஓர் எண்ணமே, அர்ஜுனனைக் குழப்பத்தில் ஆழ்த்தி யிருக்கிறது என்பதை கிருஷ்ணன் நன்கு அறிவார். அதற்காகத்தான் சுற்றி வளைத்துத் தன் போதனைகளை அவர் சொன்னாலும், அதன் இலக்கு, அர்ஜுனனைப் போர்க்களத்தில் நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. அர்ஜுனன் மனதில்...
திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்
பகுதி 4 திருவண்ணாமலை கடலில் தோன்றிய ஆலகால விடத்தை நுகர்ந்த சிவபெருமான் பஞ்ச பூதங்களிலும் உறையும் பெருமானாகத் தோன்றியதை இரட்டைப் புலவர்கள் பின்வருமாறு பாடுகிறார்கள். “கடல் விடம் நுகர்ந்த காசினி லிங்கம் காஞ்சிமா நகருறை லிங்கம்; காவிரி வடபால் வரு திரு ஆனைக் காவினில் அப்பு லிங்கமதாம்; வடதிசை அண்ணாமலையினில் லிங்கம் வன்னியின் வடிவு; காளத்தி...
அழகிய வாழ்வை அருள்வார் அரவிந்தலோசனர்
“ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல் கெடுப்பாரும் இல்லை” என்பது பழமொழி. ராகு தசை வந்தது என்றால், ஒருவர் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும் லௌகீக ஆசைகள் திடீர் யோகம் ஏற்படும். பொதுவாக “பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்” என்ற பழமொழியும் உண்டு. அதற்கு ஏற்ப செல்வம் வரும். “கேதுவைப் போல் கெடுப்பாரும்...
நம்மாழ்வாரும் வைகாசி விசாகமும்
ஆழ்வார் என்றால் நம்மாழ்வார்தான் வைணவத்தில் பல ஆழ்வார்களும், பல திவ்யதேசங்களும் இருந்தாலும், ‘பெயர்ச்சொல்லால்’ ஆழ்வார் என்றால் நம்மாழ்வார். கோயில் என்றால் ஸ்ரீரங்கம். பெருமாள் என்றால் நம்பெருமாள். ஜீயர் என்றால் நஞ்சீயர். தென்னரங்கம் எனில் கோயில், திருவாய்மொழி எனில் ஆழ்வார்” என்பது வைணவப் பெரியோர்களின் வாக்கு. இதை பின்வரும் பாடலால் அறியலாம். நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை...
நம்மை ஆளும் ஆண்டாள்
பகுதி 2 ஆயர் குலப் பெண் தனது புடவையின் தலைப்பைச் சுற்றி சும்மாடு போல தலையில் வைத்துக் கொள்ள ஆக்கியதால் மாறிய உடை. ஆயர் குலப் பெண், பால், தயிர் பானைகளைச் சுமந்து செல்வதனால் வரக்கூடிய நடை. ஆயர் குலப் பெண் மேல், பால், தயிர் பட்டுப்பட்டு ஏற்பட்ட முடை வாசனை என விளக்கம் சொன்னார்கள்....

