செவ்வாய் சனி சேர்க்கை தோஷ பரிகாரங்கள்

நவகிரகங்களில் சகோதரகாரகன், பூமிகாரகன் என்று குறிப்பிடக்கூடிய செவ்வாய் பகவான், வீரர்கள் சேவகர்கள், தளபதி, தீ, செம்பு, தெற்குதிசை, ஆயுதங்கள், நிலம், வீடு, துவரை, போர், கலகம், வன்முறை, ரண நோய், ரண சிகிச்சை, விபத்து, கடன், செம்பவளம், சிவப்பு நிறம், சகோதரர்கள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் உடையவர். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என்று குறிப்பிடக்கூடிய சனிபகவான், பணியாளர்கள், முதியவர்,...

கண் திருஷ்டியும் பரிகாரங்களும்

கண் திருஷ்டி என்றால் என்ன? எல்லோருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எண்ணம் தீயதாககூட இருக்கலாம் அல்லவா? தீய எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதுபோல, மனதில் எழும் தீய குணங்களை முகம் காட்டி கொடுத்துவிடும். இந்த தீய எண்ணங்களின் ஜுவாலை நம்...

வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்

நமது கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை பாக்கு ஆகும். தாம்பூலத்தில் ருத்ரன் விஷ்ணு சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவி பூதேவி இந்திரன் காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த 11 தேவதைகளும் தாம்பூலத்தில் நித்தியவாசம் செய்வதால் இதனை...

வளமான வாழ்விற்கு பச்சைக் கற்பூரம் தரும் அற்புத பரிகாரங்கள்

பச்சைக் கற்பூரம் கற்பூரத்தில் ஒருவகையான பச்சை கற்பூரத்தை மருந்தாகவும் இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருளாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இது நல்ல வலி நிவாரணி என்பதால், தைலங்களில் பயன்படுத்தப்பட்டது. சளி தொல்லையிலிருந்து விடுபடவும், வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபடவும், பச்சைக் கற்பூரம் உதவுகிறது. இனிப்பு பலகாரங்களை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட அதில் கற்பூரத்தை சேர்த்து தயாரித்தால்,...

காரியங்கள் தேங்காமல் நடைபெற தேங்காய் பரிகாரங்கள்

தெய்வீக காரியங்கள் அனைத்திற்கும் தேங்காய்தான் முன்னிறுத்தப்படுகிறது. தேங்காய் இல்லாத பூஜைகளும் சடங்குகளும் கிடையாது. அதேபோல நாம் அன்றாட சமையலில் தேங்காய் பயன்பாடு இல்லாமல் இருக்கவே இருக்காது தேங்காய் மருத்துவ மகிமை உடையது. தேங்காயின் இறை தத்துவம் நம்முடைய ஆன்மா ஆணவம் வன்மம் மாயை ஆகியவைகளிலிருந்து விடுபட்டால் இறைவனடி சேரும் இறைவனுக்கு தேங்காய் படைப்பதும் இத்தத்துவத்தையே குறிக்கிறது....

சனிபெயர்ச்சி பரிகாரத் தலங்கள்

பகுதி 1 திருநெல்லிக்காவல் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும். திருநறையூர் தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வரபகவான் தன் இரு...

திருமணத் தடை நீக்கும் சூட்சுமங்கள்

பொதுவாக ஒரு மனிதனுக்குஉத்தியோகம் திருமணம் ஆகிய இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகளாக அமைகின்றன. இன்றைய தலைமுறையினர் சிலருக்கு உத்தியோகம்கூட நன்றாக அமைந்துவிடுகிறது. ஆனால் திருமணம் என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அரசு வேலையில் இருப்பவர்களுக்குகூட திருமணம் என்பது வெகுசீக்கிரமாக கூடி வருவதில்லை. அரசுத்துறை ஒன்றில் உயர்அதிகாரியாக பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவருக்கு 43 வயதாகியும் இன்னும் திருமணம்...

அண்ட சராசரங்களை அடக்கும் சரப யோகம்

உலகின் பெரிய மிருகம் எதுவென்று கேட்டால் எல்லோரும் டைனோசர், டிராகன் என்றுதான் சொல்வார்கள். ஏனெனில், இதனை நாம் நேரில் பார்த்தது கிடையாது. சினிமாவில்தான் பார்த்துள்ளோம். அதைவிட அசுப மிருகங்கள், பறவைகள் பூமியில் இருந்துள்ளன. அந்த அசுர பறவைதான் சரபம். இந்தப் பறவை இப்பொழுது இல்லை. இந்தப் பறவை சிங்க முகத்துடன், எட்டு (8) கால்களுடன், இருபுறமும்...

ஜாதகம் இல்லாதவர்களுக்கான பரிகாரங்கள்

ஊழ்வினையை தெளிவுபடுத்தி வாழ்வை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட தெய்வீக கலை ஜோதிடக் கலை ஆகும். ஜோதிடம் என்பது ஜோதி இருக்கின்ற இடம் என்று பொருள்படும். இந்த உன்னத தெய்வீக கலையை கொண்டு, ஒரு மானுட கர்மா, அதன் கர்ம வினைப்படி நிகழும் சுகம் மற்றும் துக்கங்களை அறிய முடியும். இவ்வாறு ஒரு மனிதன், தன்னுடைய கர்மவினை இப்படி...

புத்திர பாக்கியம் பெற்றிடும் வரத்திற்கான எளிய பரிகாரங்கள்

``குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்’’ - என்ற குறளுக்கு ஏற்ப, குழந்தை இல்லை என்றால் குடும்பத்தில் ஏற்படும் கவலைகளுக்கு அளவே இல்லை. குழந்தை இல்லாத பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களும் அவமரியாதைகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தாய்மை, இறைவனின் வரப்பிரசாதம். இன்றைக்கு மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறிவிட்டாலும், இன்றும் ஏராளமானோர்...