ஓவியங்களால் ஜொலிக்கும் அங்கன்வாடி : பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி
அண்ணாநகர், செப்.25: ஓவியங்களால் ெஜாலிக்கும் அங்கன்வாடியால் பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி ெதரிவித்துள்ளனர். கோடம்பாக்கம் 10வது மண்டலம், 136வது வார்டு கே.கே.நகர் பப்ளி ராஜா சாலையில் உள்ள அங்கன்வாடியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் ஓவியங்கள் வரைவதற்காக 15 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கன்வாடி...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம்: வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு தாம்பரம் மாநகராட்சி எச்சரிக்கை
தாம்பரம், செப்.25: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட நகரின் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும்...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 11 வார்டுகளில் இன்று நடக்கிறது: மாநகராட்சி தகவல்
சென்னை, செப்.24: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், சென்னையில் இன்று 11 வார்டுகளில் நடைபெற உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (24ம் தேதி) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-9ல் திருவொற்றியூர் குப்பம், சென்னை தொடக்கப்பள்ளி அருகில் உள்ள துலுகானத்தம்மன் கோயில் தெரு, மாதவரம் மண்டலம்,...
தாம்பரம் மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தாம்பரம், செப்.24: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி குரோம்பேட்டை, தாம்பரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குரோம்பேட்டை...
தண்டையார்பேட்டை ரயில் நிலைய சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம்
தண்டையார்பேட்டை, செப்.24: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 42வது வார்டுக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் பகுதியில் புதிய வைத்தியநாதன் தெரு உள்ளது. தண்டையார்பேட்டை டோல்கேட், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள், பொதுமக்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இந்த வழியாக சென்று வருகின்றனர்....
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டையில் ரூ.77.76 கோடியில் 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை, செப்.23: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் ரூ.77.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் ரூ.77.76 கோடியில் கட்டப்பட்ட...
தாய்லாந்து சுற்றுலா சென்றபோது ஆழ்கடலில் வண்ண மீன்களை ரசிக்க சென்றவர் மூச்சுத்திணறி பலி: தனியார் நிறுவன துணை மேலாளரின் சோகம்
ஆலந்தூர், செப்.23: ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (43). இவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். திவாகரின் நிறுவனத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் நிறுவனத்தின்...
வேளச்சேரியில் மாநகர பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
வேளச்சேரி, செப்.23: சென்னை தி.நகர் - கிளாம்பாக்கம் செல்லும் சென்னை மாநகர பேருந்து (தடம் எண் வி51இ) நேற்று காலை 7 மணி அளவில் வேளச்சேரி மெயின் சாலை வழியாக கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தண்டீஸ்வரம் கோயில் அருகே திருப்பத்தில் சென்ற போது எதிரே வந்த வேளச்சேரி- கொளத்தூர் செல்லும் மாநகர பேருந்து (தடம்...
மணலியில் காலியாக உள்ள அரசு நிலத்தில் பஸ் நிலையம், கல்லூரி அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
திருவொற்றியூர், செப்.22: மணலி மண்டலம், 18வது வார்டு அலுவலகம் அருகே டிட்கோவுக்கு (தமிழ்நாடு தொழில்துறை) சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பதால் இங்கு செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இந்த இடத்தில் சிலர் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிடுவதற்கு பன்றிகள்,...