மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்

மாதவரம், ஜன.12: மாதவரம் மற்றும் மணலி ஏரியை ரூ.18.78 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி இரண்டு ஏரிகளிலும் தூர்வாரி, கரை அமைத்து, நடைபாதை, சிறுவர் பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், அலங்கார முகப்பு, பார்க்கிங் போன்ற பல்வேறு அம்சங்களுடன் பசுமை பூங்காவாக...

மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவன் கைது

சென்னை, ஜன.12: ஐயப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி கடந்த 9ம் தேதி 25ஏஏ மாநகர பேருந்து சென்றது. மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள சிக்னலில் பேருந்து நின்றது. அப்போது மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் சிக்னலில் பேருந்தின் கதவை திறக்க கோரி ஓட்டுநரிடம் கூறினார். ஆனால் அவர்...

மாதவரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணி துவக்கம்

மாதவரம், ஜன. 12: மாதவரம் தொகுதி முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்டம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது. இதில் மண்டலம் 3, 27வது வார்டு பத்மகிரி நகர் மற்றும் மீனம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விடுபட்டதால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீரை...

பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்கு சந்தையில் ரூ.205 கோடி நிதி திரட்டிய சென்னை மாநகராட்சி: வரலாற்றிலேயே முதன்முறை

சென்னை, ஜன.10: சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமை பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக ரூ.205 கோடி நிதி திரட்டியுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகைய பசுமைப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிய முதல் மாநகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிதி திரட்டல் முயற்சிக்கு முதலீட்டாளர்களிடையே...

குடிநீர் வாரியம் சார்பில் இன்று குறைதீர் கூட்டம்

சென்னை, ஜன.10: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம் மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் 10ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர்...

நகைகளை பறித்தபோது சத்தம் போட்டதால் கத்தியால் குத்தி கொன்றேன் கொலையை தற்கொலையாக மாற்ற நினைத்து டீக்கடைக்காரரின் மனைவி உடலை எரித்தேன்

சென்னை, ஜன.10: சென்னை சூளைமேடு விநாயகபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (50), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சீனிவாசனுக்கு மனைவி அமுதா (45) மற்றும் 2 மகன்கள். மூத்த மகன் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இளைய மகன் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அப்பகுதியில் சீனிவாசன் நடத்தும் டீக்கடை பிரபலம் என்று கூறப்படுகிறது. இதனால்...

குரோம்பேட்டை - ராதா நகர் இடையே ரூ.31.62 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை: துணை முதல்வர் திறந்து வைத்தார்

தாம்பரம், ஜன.9: குரோம்பேட்டையில் ரூ.31.62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, குரோம்பேட்டை பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான குரோம்பேட்டை - ராதா நகர் ரயில்வே சுரங்கபாதை கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது....

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடக்கம்

சென்னை, ஜன.9: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, கோயம்பேடு மார்கெட்டில் 7 ஏக்கரில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு சந்தை வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது....

சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது

சென்னை, ஜன.9: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 19ம்தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் கடந்த 19ம் தேதி...

சென்னை காவல் துறையில் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை, ஜன.8: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை சூளைமேடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சக்திவேலாயுதம் வளசரவாக்கம் சட்டம் - ஒழுங்குக்கும் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த மணி சூளைமேடு சட்டம் - ஒழுங்குக்கும், சுரேஷ் ஜாம் பஜார் சட்டம் - ஒழுங்குக்கும், முத்துராஜ் வில்லிவாக்கம் சட்டம்...