திருக்குவளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கைபந்து போட்டியில் சாதனை
கீழ்வேளூர். நவ. 12: அண்ணா மண்டலம் 15ல் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைபந்து போட்டியில் நாகை மாவட்டம் திருக்குவளை பொறியியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. அண்ணா பல்கலைக்கழக 15வது மண்டல அளவிலான கைபந்து போட்டியினை புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி நடத்தியது. இந்த போட்டிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய...
தமிழக எல்லை பகுதியான வாஞ்சூர் ரவுண்டானாவில் விடிய, விடிய போலீசார் சோதனை
நாகப்பட்டினம், நவ. 12: டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா சோதனை சாவடியில் போலீசார் விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர். டில்லியில் செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ஒன்றிய அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது....
அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சிக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும்
வேதாரண்யம், நவ.11: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சிக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.வேதாரண்யம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புசெயற்குழு உறுப்பினர் மோகன் ரயில்வேதுறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, மாலை என...
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
நாகப்பட்டினம், நவ. 11: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது...
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்: 328 மனுக்கள் பெறப்பட்டது
மயிலாடுதுறை, நவ. 11: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 328 மனுக்கள் பெறப்பட்டன.மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நேற்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் காந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து...
தனித்துவ அடையாள அட்டைபெற நவ.10க்குள் பதிவு செய்ய வேண்டும்
வேதாரண்யம், நவ.7: வேதாரண்யம் பகுதியில் தனித்துவமான அடையாள அட்டைக்கு இதுவரை பெயர் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற நவ.10ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியசீலன் கேட்டுக்கொண்டுள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின்னணு முறையில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான “அடையாள...
ஆற்றங்கரையில் பனை விதை நடவு செய்த மாணவர்கள்
கீழ்வேளூர், நவ.7: நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் ஊராட்சி காருகுடி வழியாக செல்லும் வெள்ளையாற்று கரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தல் மற்றும் ஆற்றுக் கரையை பலப்படுத்தும் நோக்கில் பனை விதை நடும் பணி நடைபெற்றது. வலிவலம் தேசிய மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பனை...
பொறையார் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
தரங்கம்பாடி, நவ.7: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் டிபிஎம்எல் கல்லூரியில் நேற்று நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதததையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரில் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டு அண்ணா நினைவு நாளன்று...
கொள்ளிடத்தில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் படத்திறப்பு விழா
கொள்ளிடம், நவ.6: கொள்ளிடத்தில் காங்கிரஸ் மூத்த உறுப்பினரின் உருவ படத்தை எம்பி சுதா திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் மறைந்த மூத்த காங்கிரஸ் பாரத் சேகரின் உருவ பட திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கலந்துகொண்டு திருவுருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் சிதம்பரம்...
