கொள்ளிடம் பகுதியில் 2 வது நாளாக மழை

கொள்ளிடம், ஜூன் 13: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இடையிடையே அதிக காற்றும் வீசி வருகிறது. வறண்ட வானிலை காணப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை வானம் இருண்டு மழை பெய்ய துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்ததால்...

காரைக்கால் தெற்கு தொகுதியில் முதியோருக்கு போர்வை, காலணிகள்

காரைக்கால், ஜூன் 13: காரைக்கால் தெற்கு தொகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகளை நாஜிம் எம்எல்ஏ வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட முதியோர் உதவித்தொகை பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி...

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை, ஜூன்13: மயிலாடுதுறையில் ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகர்...

கொள்ளிடம் அருகே குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார கேடு

கொள்ளிடம், ஜூன் 11: கொள்ளிடம் அருகே கீழவல்லம் கிராமம் குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் இருந்து கீழவல்லம் செல்லும் சாலையோரம் குட்டை அமைந்துள்ளது. இதிலிருந்து தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கியே கிடக்கிறது. அப்பகுதியில் உள்ள...

நீண்ட காலம் பழகிய பெண், பேசாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

காரைக்கால், ஜூன் 11: காரைக்காலை அடுத்த சேத்தூர், பண்டாரவாடை, நாவலர் தெருவை சேர்ந்தவர் அருமை தாஸ்(39). கார் டிரைவர் ஆக வேலை செய்து வரும் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், புதூர் பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை இல்லை. அருமைதாஸ் பருத்திக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த...

சங்கரன்பந்தல்- சென்னைக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

தரங்கம்பாடி, ஜீன் 11: மயிலாடுதுறை மாவட்டம். சங்கரன்பந்தலில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஆயப்பாடி முஜ்பூர் ரஹ்மான் பொறையார் அரசு பேருந்து கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன் பந்தலில் இருந்து திருக்களாச்சேரி, ஆயப்பாடி, பொறையார், சீர்காழி, சிதம்பரம் வழியாக...

வேளாங்கண்ணி புறவழிச்சாலை திட்டத்தால் மா, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்

நாகப்பட்டினம், ஜூன் 9: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் சரபோஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: விவசாய கருவிகளுக்கான பட்டியலில் வேளாண்...

மயிலாடுதுறை அருகே வீட்டுமனைபட்டா கேட்டு திருநங்கைகள் தர்ணா

மயிலாடுதுறை, ஜூன் 9: மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் கிராமத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் கூறியதாகவும், அப்பகுதியில் நிலஎடுப்பு பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த இடத்தை வழங்கியதாகவும் கூறி திருநங்கைகள் 20 பேர் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு வள்ளாலகரம் கிராமத்திலோ, இல்லையெனில் மயிலாடுதுறை தற்காலிக...

சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 9: நாகப்பட்டினத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாகப்பட்டினம் அவுரித்திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாலா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு விலையை...

கொள்ளிடத்தில் பருத்தி அறுவடை பணிகள் துவங்கியது

கொள்ளிடம், ஜூன் 8: கொள்ளிடத்தில் பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பல இடங்களில் பருத்தி அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில் பருத்தி பயிரில் நோய் தாக்குதல்...