விழுப்புரம் அருகே கொடூரம் பள்ளி மாணவி கொலை தந்தை வெறிச்செயல்

விழுப்புரம், ஜன. 12: விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே கண்டமானடியை சேர்ந்தவர் பாபு (46). இவர் பேக்கரியில் வேலை செய்து வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. வைஷாலி (20), வைஷ்ணவி (16) என்ற 2 மகள்கள் உள்ளனர்....

திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக சமூக ஊடக பேரவை முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது

திண்டிவனம், ஜன. 12: திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக சமூக ஊடக பேரவை முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாமக சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் மற்றும்...

குவாரி உரிமையாளரிடம் நிதி கேட்டு மிரட்டிய தேமுதிக ஒன்றிய செயலாளர் கைது

வானூர் ஜன. 8: கிளியனூர் அருகே உள்ள தென்கோடிபாக்கம் கிராமத்தில் கல்குவாரி நடத்தி வருபவர் சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (50). இவர் குவாரியில் இருக்கும்போது தேமுதிக கிளியனூர் ஒன்றிய செயலாளர் தணிகைவேல் (35) மற்றும் நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் கலியமூர்த்தி (35) ஆகிய இருவரும் தேமுதிக மாநாட்டிற்கு நிதி கேட்டுள்ளனர். குவாரி உரிமையாளர்...

அதிமுக நிர்வாகியிடம் பிக்பாக்கெட் அடித்த 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி, ஜன. 8:கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா பகுதியில் கடந்த 5ம்தேதி நடைபெற்ற அதிமுக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் ரங்கன்பங்கேற்றபோது கூட்ட நெரிசலில் ரங்கன் கால்சட்டைபையில் இருந்த ரூ.10,000 மற்றும் அதே கூட்டத்தில் இருந்த கணபதி மகன் செல்வகுமாரிடம் ரூ.3500, மூர்த்தி மகன் விஜய்யிடம் ரூ.8600 என மொத்தம் ரூ.22,100...

முன்விரோத தகராறு 3 பேர் காயம் 4 பேர் மீது வழக்கு

பண்ருட்டி, ஜன. 8: பண்ருட்டியை அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகர்(66). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன்(65). இவர்களுக்குள் வீட்டுமனை பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று மாணிக்கவாசகர், அவரது மனைவி சாந்தி ஆகியோரை முருகன், அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் ராஜா ஆகியோர் அசிங்கமாக திட்டி, தடி மற்றும் கத்தியால் தாக்கினர்....

தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள படகு சேதம்

கடலூர், ஜன. 7: கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஞ்சித்(45). இவர் சம்பவத்தன்று தனது படகை பழுது பார்ப்பதற்காக, அக்கரைகோரியில் உள்ள பட்டறையில் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென தீப்பிடித்து ஞானசேகர் என்பவரது படகும், பின்னர் ரஞ்சித்தின் படகும் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சித்துக்கு சொந்தமான படகின் சேத மதிப்பு...

தியாகதுருகம் அருகே பச்சிளம் குழந்தை திடீர் உயிரிழப்பு

தியாகதுருகம், ஜன. 7: தியாகதுருகம் அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் மகன் ஆனந்தகுமார் (24). இவரது மனைவி சந்தியா (22). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு சந்தியா பால் கொடுத்துவிட்டு படுக்க...

பிரேக் பழுதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தம் ஒன்றரை மணிநேரம் பயணிகள் அவதி

விருத்தாசலம், ஜன. 7: சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடை மேடையில் இரவு 8.35 மணிக்கு வந்த நிலையில் ரயிலில் பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் திரும்ப புறப்படாமல் சுமார் ஒன்றரை மணி நேரம்...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மீனவரை கல்லால் அடித்து கொன்றது ஏன்?

புதுச்சேரி, ஜன. 3: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மீனவரை கல்லால் அடித்து கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான 7 பேர் கும்பல் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (எ) ஐயனார் (40). மீனவரான இவருக்கு ஜெய என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 31ம்தேதி நள்ளிரவு புத்தாண்டு...

ஊத்தங்கரையில் காரை முந்திச்செல்ல முயன்றபோது பஸ் மீது பைக் மோதி தீப்பிடித்து எரிந்தது: 23 பயணிகள் உயிர் தப்பினர்

ஊத்தங்கரை, ஜன.3: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் தனியார் ஷூ கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு, பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை ஊத்தங்கரை அருகே கொட்டுகாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 23 பேரை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் புறப்பட்டது. வண்டியை கல்லாவியைச் சேர்ந்த மாதேஸ்வரன்(51) என்பவர் ஓட்டிச்சென்றார்....