ஒரே வாரத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
புதுச்சேரி, மே 20: ஒரே வாரத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டது....
குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் பலி
பண்ருட்டி, மே 20: பண்ருட்டி அருகே குளக்கரை குட்டையில் 2 சிறுவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் அருகே உள்ள நடுமேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் ஹரிதரன்(8). இவனும் பக்கத்து வீட்டை சேர்ந்த சபரிநாதன் மகன் சபரீஸ்வரன்(7) என்பவனும் நண்பர்கள். இவர்கள்...
கல்லூரி மாணவி மாயம்
புவனகிரி, மே 19: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் ஜெசிதா(20). இவர் சிதம்பரத்தில் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் ஜெசிதா தனது வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இந்த சம்பவம் குறித்து அவரது தாய் ஜோதிலட்சுமி புதுச்சத்திரம் காவல்...
பரங்கிப்பேட்டை அருகே வாய்க்காலில் இறங்கிய அரசு பேருந்து: 35 பயணிகள் உயிர் தப்பினர்
புவனகிரி, மே 19: சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு அரசு நகர பேருந்து நேற்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். பேருந்தை தற்காலிக டிரைவர் கனல் அமுதன்(37) ஓட்டிச் சென்றார். பு.முட்லூருக்கும் அகரம் ரயில்வே கேட்டுக்கும் இடையில் பேருந்து சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியை பேருந்து டிரைவர் முந்திச்...
போதையில் தகராறு: 6 பேர் கைது
புதுச்சேரி, மே 19: புதுச்சேரி பெரியகடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மிஷின் வீதி- செட்டி வீதி சந்திப்பு அருகே ஆசாமி ஒருவர் மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற...
கடலூரில் பரபரப்பு தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு
கடலூர், மே 18: கடலூர் பாதிரிக்குப்பம் அடுத்த குமாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(38). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது...
புதுச்சேரியில் ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.2.07 லட்சம் மோசடி
புதுச்சேரி, மே 18: புதுச்சேரியில் ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.2.07 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, வங்கியில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில், ரிவார்டு பாயிண்ட் பயன்படுத்த, கார்டு விவரம் மற்றும் ஓடிபி எண்ணை பகிருமாறு கூறப்பட்டுள்ளது. இதனை...
புதுவை அருகே கோர விபத்து அரசு விரைவு சொகுசு பேருந்து மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
காலாப்பட்டு, மே 18: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேஷாத்ரி மகன் சிலம்பரசன்(29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு கையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக இவருக்கு மாவு கட்டு போடுவதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதிக்கு சிலம்பரசனின் அக்கா கணவர் ஸ்டாலின்(37)...
விழுப்புரம் அருகே இட்லி சாப்பிட்ட லோடுமேன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
விழுப்புரம், மே 13: விழுப்புரம் அருகே இட்லி சாப்பிட்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு லோடுமேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் கண்ணன்(46). லாரியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். இதனிடையே நேற்று காலை லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு புதுச்சேரி மார்க்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது கெங்கராம்பாளையம்...


