சிறுவனிடம் விசாரணை செய்வதுபோல குற்றவாளியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
விருத்தாசலம், ஜூன் 9: மது போதையில் குற்றவாளியுடன் சேர்ந்து சிறுவனிடம் போலீஸ்காரர் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரஞ்சித் என்பவர், விழுப்புரம் கோட்டக்குப்பம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக கடந்த 6ம் தேதி இரவு அறிக்கை செய்ய நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பணிக்கு செல்லாமல் ஆப்சென்டாக...
விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
விழுப்புரம், ஜூன் 9: விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மைஅமர்வுநீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், மகளிர், எஸ்சிஎஸ்டி சிறப்பு நீதிமன்றம், லஞ்சம்ஒழிப்பு ஊழல்தடுப்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் என சுமார் 20க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு...
திருவெண்ணெய்நல்லூர் அருகே பரிதாபம் மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து பலி
திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 8: திருவெண்ணெய்நல்லூர் அருகே நடைபயிற்சியின்போது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகள் யுவஸ்ரீ (29). இவருக்கும், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் கடந்த...
நயினார் உத்தரவை மீறி செல்கின்றனர் பாஜ மாநில துணைத்தலைவர், ஆதரவாளர்கள் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
விழுப்புரம், ஜூன் 8: தமிழகத்தில் வீ த லீடர் என்ற புதிய இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலையிடம் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஐக்கியமாகி வருகின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்த 90% பேர் அண்ணாமலையிடம் வந்து விடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பாஜகவில் முக்கிய அங்கமாக செயல்பட்டு வந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை...
மரக்காணம் அருகே சிக்கன் தந்தூரி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு வாந்தி, பேதி
மரக்காணம், ஜூன் 8: மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் நேற்று முன்தினம் மாலை புதுவையில் உள்ள ஒரு பிரபல தனியார் ஓட்டலில் 1 கிலோ சிக்கன் தந்தூரி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதை மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சுமிதா (27), பிரவீன்...
ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி
விழுப்புரம், ஜூன் 2:விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். அப்போது மனு அளிக்க வந்த ஒரு குடும்பத்தினர் திடீரென்று ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் தன் உடல் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில்...
ஓட்டல் உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயற்சி
சிதம்பரம், ஜூன் 2: ஓட்டல் உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு மெயின்ரோடு நடராஜர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் ராஜசுந்தரம்(60). இவரது மனைவி ஜெயந்தி(57). இவர்கள் வடக்கு மெயின்ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்....
பைக் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி
திண்டிவனம், ஜூன் 2: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சேதுநாதன்(28). இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார்(30), திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ரங்கநாதன் மகன் ராஜபாண்டி (28) ஆகியோர் ஒரே பைக்கில் நேற்று முன்தினம் இரவு செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மேல்பேரடிகுப்பம்...
கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா: திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் நிகழ்ச்சி
புவனகிரி, மே 28: பரங்கிப்பேட்டை அருகே திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் நடந்தது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் இங்கு...

