விழுப்புரத்தில் பைக்ரேசில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது பைக்குகள் பறிமுதல்

விழுப்புரம், அக். 4: விழுப்புரத்தில் பைக்ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் நகரப்பகுதி மற்றும் புறவழிச்சாலைகளில் பைக்ரேஸ் நடப்பதாக வந்த புகாரின்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் கொட்டப்பாக்கத்துவேலி அருகே பைக்ரேசில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முத்து(25) என்ற வாலிபரை...

மதுபாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம், அக்.4: சங்கராபுரம் அருகே உள்ள அருளம்பாடி கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக மூங்கில் துறைபட்டு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் அந்த கிராமத்தில் சோதனை செய்ததில் அங்கு கோவிந்தன் மகன் முருகன் (27) என்பவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது....

காந்தி ஜெயந்தியன்று மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற தவெக நிர்வாகி கைது

திண்டிவனம், அக்.4: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு தரப்பினர் புதுவை மதுபானங்கள் மற்றும் தமிழக மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தனர். இந்நிலையில்...

100 நாட்கள் வேலை வழங்க கோரி கிராம மக்கள் மறியல்

பாகூர், ஜூலை 1: ஏம்பலம் தொகுதி குடியிருப்புபாளையம் பகுதியில் உள்ள ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாகூர்-கரிக்கலாம்பாக்கம் சாலையில் அமர்ந்து நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரிக்கலாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது...

தனியார் நிறுவனத்தில் இரும்பு திருடிய 3 பேர் கைது

ரெட்டிச்சாவடி, ஜூலை 1: ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் விழுப்புரம் -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சாலை அமைப்பதற்கான கட்டுமான பொருட்கள், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தில் கடந்த 24ம் தேதி முதல் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் தொடர்ச்சியாக காணாமல்போனது. யாரோ மர்ம நபர்கள்...

கிணற்றில் தவறி விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் சாவு

உளுந்தூர்பேட்டை, ஜூலை 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவருடைய மகன் ஹரிபிரசாத் (12) என்பவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகில்...

கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி, செப். 30: கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மாணவி மதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி (17)...

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்

திண்டிவனம், செப். 30: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. பாமகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாஜக மாநில தலைவர் நயினார்...

வீடு கட்டி தருவதாக கூறி சேலம் ஆசிரியரிடம் மோசடி

புதுச்சேரி, செப். 30:சேலம் அழகாபுரம் தோப்புக்காட்டில் வசித்து வருபவர் வின்சென்ட் தே.பால் (58). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் பெரமனூர் நேருநகரில் வீடு ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்தார். இவரது உறவினரான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த இன்ஜினியர் எடிசன் ரொனால்ட் ஜவகர் (39) என்பவர்...

மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் நியமனத்துக்கு 7 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு

மரக்காணம், செப்.27: மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து தொடர்ந்து அந்த ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள சுலோசனா தன்னை ஊராட்சி மன்ற தலைவராக நியமிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி...