கணவருடன் செல்ல முயன்றதால் ஆத்திரம்; பெண்ணின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலன்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி, ஆக. 13: கள்ளக்குறிச்சியில் கணவனை விட்டு பிரிந்து வந்த பெண், மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ முயன்றபோது, இடையூறாக இருந்த கள்ளக்காதலன், அந்த பெண்ணின் கழுத்தை அறுத்ததுடன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் புத்தூர்புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(42) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவிதாவுக்கும்(38) கடந்த 13...

பள்ளி மாணவர்களுக்கு சிகரெட் விற்ற முதியவர் கைது: கடை உரிமையாளர் மீது வழக்கு

விருத்தாசலம், ஆக. 13: விருத்தாசலம் பாலக்கரை பகுதியிலிருந்து ஆற்றுப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பெட்டிக்கடையில், பள்ளி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு சிகரெட் விற்பனையில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, எருமனூர் புதுக்காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (67) என்பவரை...

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணம் கொள்ளை: 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

புவனகிரி, ஆக. 13: சிதம்பரம் கனகசபை நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குட்டு. இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரை (57). இவர் கடந்த 9ம் தேதி கனகசபை நகரில் உள்ள தனது மகள் இருக்கும் வாடகை வீட்டில் இரவு மகளுடன் தங்கி இருந்துள்ளார். பின்னர் மறுநாள் 10ம் தேதி...

பரங்கிப்பேட்டை அருகே கீழே கிடந்த வாண வெடி வெடித்து வாலிபர் படுகாயம்: போலீசார் விசாரணை

புவனகிரி, ஆக. 12: பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று ஆடிமாத திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின்போது, வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒரு வாணவெடி வெடிக்காமல் கீழே கிடந்தது. இந்த வாண வெடியை அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (34) என்பவர் கல்லால் குத்தியுள்ளார். அப்போது திடீரென...

சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

புவனகிரி, ஆக. 12: சிதம்பரம் வண்டிகேட் அப்துல் ரகுமான் நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் கணேசன்(75), இவர் கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, கோயம்புத்தூரில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி காலை கோயம்புத்தூரில் இருந்து சிதம்பரத்துக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க...

விழுப்புரம் பொருட்காட்சியில் கடை ஒதுக்குவதாக கூறி பணம் வாங்கி மோசடி: சென்னையை சேர்ந்த பெண் கைது

விழுப்புரம், ஆக. 12: விழுப்புரம் பொருட்காட்சியில் கடை ஒதுக்குவதாகக் கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் மனைவி மைதிலி(32). இவர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொருட்காட்சி நடத்தி வருகிறார். அதன்படி விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் வாடகைக்கு எடுத்து சிறு, சிறு...

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை திருட்டு

  புவனகிரி, ஆக. 10: சிதம்பரம் அண்ணாமலை நகர் மீதி குடி அண்ணா நகரை சேர்ந்த ராஜாராமன் மனைவி சாந்தி(55). இவர் கடந்த 7ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் தனது மூத்த மகன் ராஜேஷ் என்பவரின் முதல் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றவர், இரவு அங்கேயே தங்கி...

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி, முன்னாள் தலைவர் உள்ளிட்ட 3 பேர் கைது

  சின்னசேலம், ஆக. 10: சின்னசேலம் அருகே பங்காரம் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காசி மகன் ராஜிவ்காந்தி (40). திருமணமானவர். விவசாய கூலித்தொழிலாளி. இவர் தன் மனைவி கனகா மற்றும் பிள்ளைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி கடந்த 6ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்....

காத்தாயி அம்மன் கோயிலில் தாலி திருட்டு

  முஷ்ணம், ஆக. 10: முஷ்ணம் நாச்சியார்பேட்டை சாத்தா வட்டம் செல்லும் சாலை ஓரம் காத்தாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூசாரியாக சந்தோஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்த ஆண், பெண் சாமி கும்பிட்டனர். பின்னர் பூசாரி பக்கத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டார். மீண்டும் வந்து பார்த்தபோது...

விருத்தாசலத்தில் நடுரோட்டில் போதையில் வாலிபர் ரகளை

  விருத்தாசலம், ஆக. 5: விருத்தாசலத்தில் நடுரோட்டில் போதையில் வாலிபர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வரும் தனியார் உணவகத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் மது அருந்திவிட்டு, போதையில் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் காவல்...