பஸ்சிலிருந்து விழுந்தவர் படுகாயம்

தேவதானப்பட்டி, டிச. 4: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விசால் (17). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்றுள்ளார். காட்ரோட்டை கடந்து பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது விஷால் திடீரென நிலை தடுமாறி தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக...

வருகிற 2,3ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடுதேடி விநியோகம்

அரியலூர், நவ.29: அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, அரியலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 25,674...

பொன்பரப்பி கிராமத்தில் 58 வது நூலக வர விழா

ஜெயங்கொண்டம், நவ.29: செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிளை நூலகத்தில் நேற்று முன்தினம் மாலை 58-வது தேசியநூலக வாரவிழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். நூலக வாசகர்...

அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆய்வு

ஜெயங்கொண்டம் நவ.29: திருமானூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் திருமானூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து கேட்டிருந்தார். வழக்குகளை விரைவாக முடிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான...

தையல் பயிற்சி முடித்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம்

அரியலூர் நவ 28: தையல் பயிற்சி முடித்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் ராணுவ வீரரின் மனைவி...

அரியலூர் வட்டாரம் பொய்யாதநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம்

அரியலூர், நவ.28: அரியலூர் வட்டாரம் பொய்யாதநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா கடந்த ஆக்.2ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் அரியலூர் சுகாதார...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு வாகனம்

அரியலூர் நவ 28: அரியலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தயார் செய்தல், பயிற்சி, அச்சிடுதல் மற்றும் கணக்கெடுப்பு...

நாளை கலெக்டர் தலைமையில் அரியலூர் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்

அரியலூர், நவ.27: வரும் 28ம் தேதி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வெரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாய அமைப்பினர், சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து ஆலோசனை நடத்துவர். இதனடையே...

த.பழூர் ஆதிச்சனூர் ஊராட்சியில் அரசின் சாதனை, நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி: விண்ணபிக்க அழைப்பு

தா.பழூர், நவ.27: த.பழூர் ஆதிச்சனூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசின் சாதனை, நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடனர். அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி த.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிச்சனூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்வரால் கடந்த...

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பு வழங்கிய 100 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது

அரியலூர், நவ.27: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு 100 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது ெபற விண்ணபிக்கலாம் என மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் செப்.3ம் ேததியன்று சட்டமன்றத்தில் 2021-2022 நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும்...