பெண்ணுக்கு கொலைமிரட்டல் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை: அரியலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு

  அரியலூர், ஆக. 2: கருவிடைச்சேரி கிராமத்தில் பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டது. அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அருகே உள்ள கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் இளையராஜா(37). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திட்டி, கொலை...

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி அணி கோப்பை வென்றது

  ஜெயங்கொண்டம், ஆக.2: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கிரிக்கெட் அணி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்று முதல்பரிசு பெற்றது. அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம், மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 29ம் தேதி முதல்...

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 3 வார்டுகளிலிருந்து 803 மனுக்கள்

  ஜெயங்கொண்டம், ஆக.2: ஜெயங்கொண்டம் நகராட்சி 8,9,10வது வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 803 மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், 8,9,10 வார்டுகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த முகாமினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் 803 கோரிக்கை...

கிரீடு வேளாண் மையம் சார்பில் பயறு சாகுபடி தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஆலோசனை

  தா.பழூர், ஆக.1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த தொழில்நுட்பம் அளிக்கப்பட்டது. இதில் உளுந்து சாகுபடியில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையினால் உளுந்தின் தரம், அளவு மற்றும் எடை சுமார் 10-15% வரை குறையும். உளுந்து சாகுபடியில் பூ உதிர்வது தடுக்கவும்,...

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ 2.25 கோடி மதிப்பில் திட்ட பணிகள்

  ஜெயங்கொண்டம், ஆக.1: ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சியில் ரூ 37.39 லட்சம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி முதல் பெரியவளையம் வரை தார்சாலை அமைத்தல், பிள்ளைப்பாளையம் ஊராட்சியில் ரூ.50.20 லட்சம் மதிப்பீட்டில், பிள்ளைப்பாளையம் வடவார் முதல்...

போதையில்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பணி பொன்பரப்பி அரசு பள்ளிக்கு முதல்பரிசு

  அரியலூர் ஆக.1: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், போதையில்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதனால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்...

புதுக்குடியில் அய்யனார் கோயில் தேரோட்ட விழா

  ஜெயங்கொண்டம், ஜூலை 30: ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தில் அய்யனார் கோயில் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள புது குடிய கிராமத்தில் உள்ள பால விநாயகர், பாலமுருகன், பூர்ண புஷ்கலாம்பிகை உடனுறை அய்யனார், அக்னி வீரன், ஆகாச கருப்பு, பிடாரியம்மன், மகா மாரியம்மன்,...

உடையார்பாளையம் பேரூராட்சியில் 1.08 கோடியில் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள்

  ஜெயங்கொண்டம், ஜூலை 30: உடையார்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.08 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம், பேரூராட்சி ராஜவீதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ்,ரூ 18 லட்சத்தில், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல்,கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,...

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

  ஜெயங்கொண்டம், ஜூலை 30: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் ஆணை படியும், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனதின் முதல்வர் பாலசுப்ரமணியம் செயல்முறைகளின் படியும், அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும் , ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 6 முதல் ஒன்பதாம் வகுப்பு கையாளும் தமிழ்,...

மேலூர் ஊராட்சியில் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

  ஜெயங்கொண்டம், ஜூலை 30: மேலூர் ஊராட்சியில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால்...