அரியலூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
அரியலூர், ஜூன் 13: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. பின்னர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு...
கல்வி அலுவலரை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்
அரியலூர், ஜூன் 13: நீதிமன்றம் உத்தரவிட்டும், பணப்பலன்கள் வழங்காத அரியலூர் தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து, ஜூன் 16ம்தேதி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அரியலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று கோரிக்கை மனுவுடன் வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: செந்துறை அருகேயுள்ள பழமலைநாதபுரம் ஊராட்சி ஒன்றிய...
அரியலூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எஸ்பி தொடங்கி வைத்தார்
அரியலூர், ஜூன் 11: அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி அரியலூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர், ஒரு பெண் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், பெண் தலைமை காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் என மொத்தம் 6 நபர்கள்...
அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
அரியலூர், ஜூன் 11: அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடந்தது. அரியலூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி மற்றும் அரியலூர் மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பொதுமக்களின் மனுக்களை பெற்று கொண்டு விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 20...
குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
அரியலூர் ஜூன் 11: அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாக்கியநாதபுரம் கிராமத்தில், அரியலூர் போலீசார் சார்பில் கிராம குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் நேற்று நடைபெற்றது. அரியலூர் டிஎஸ்பி சாலை ராம் சக்திவேல், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி...
போக்குவரத்து பாதிப்பு ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் மின் பற்றாக்குறையால் மோட்டார்கள் பழுது பொதுமக்கள் வேதனை
ஜெயங்கொண்டம், ஜூன் 8: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் மின்சார பற்றாக்குறையால் மோட்டார்கள் பழுது பொதுமக்கள் வேதனை அடைந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சின்ன வளையம் செங்குந்தபுரம் வேலாயுத நகர் சீனிவாசன் நகர் கீழகுடியிருப்பு மேல குடியிருப்பு உள்ளிட்ட 21 வார்டுகளை அடங்கிய நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த அழுத்த மின்சாரம் நிலவி...
தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தா.பழூர், ஜூன் 8: தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி மின்சாரம், குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றியம் காரைக்குறிச்சி கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக மின்சார தட்டுப்பாடு மற்றும் குடிநீர் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும்...
அரியலூர் உடையார்பாளையம் அருகே விபத்து: காயமடைந்தவரின் பணத்தை உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
ஜெயங்கொண்டம், ஜூன் 8: அரியலூர் உடையார்பாளையம் அருகே விபத்தில் காயமடைந்த வரின் பணத்தை உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டு குவிந்தது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா இடையார் பஞ்சாயத்து அலுவலகம் சாலை அருகே நேற்று முன்தின இரவு எதிர்பாராத விதமாக டூவீலர் விபத்து ஏற்பட்டு பதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி சேர்ந்த வேல்முருகன்(50) என்பவருக்கு...
டி.களத்தூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பாடாலூர், ஜூன்.6: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், பற்றாளருமான அல்லிராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து...

