காரை கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

பாடாலூர், அக். 4: பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் வரகுபாடி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில்...

பொன்பரப்பி அரசு பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

அரியலூர், அக்.4: அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்குடிகாடு கிராமத்தில், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முகாம் அமைத்து பல்வேறு சமூக பணிகளை செய்து வந்தனர். 7 நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப் பணித் திட்ட முகாமில், மாணவர்கள் கிராமத்திலுள்ள பள்ளி வளாகத்தை தூய்மைப் படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட...

அரியலூரில் தீபாவளியை முன்னிட்டு முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5,6ம் தேதி வீடுதேடி ரேஷன் பொருட்கள்

அரியலூர், அக்.4: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அக்டோபர் 5, 6ம் தேதிகளில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் வீடுதேடி ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அரியலூர் கலெ க்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:அரியலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி,...

அரியலூர் நகராட்சி வார்டுகளில் வரும் 30ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர்,செப்.27: அரியலூர் நகராட்சி வார்டுகளில் வரும் 30ம் ேததி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6,10 மற்றும் 12 ஆகிய வார்டுகளை வரும் 30ம் ேததி ஒருங்கிணைத்து அரியலூர் நகராட்சி அலுவலகத்திலும், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகல்குழி, பிலாக்குறிச்சி, வீராக்கன் மற்றும் கீழமாளிகை ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து நாகல்குழி சமுதாயக்...

அகரம்சீகூர் கிராமத்தில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

குன்னம், செப்.27: குன்னம் அருகே அகரம்சீகூர் கிராமத்தில் ஒகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழா நடைபெற்றது. முகாம் அலுவலர் பிச்சை பிள்ளை அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. துவக்க விழாவை முன்னிட்டு...

பொன்பரப்பி அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

ஜெயங்கொண்டம் செப்.27: பொன்பரப்பி அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் மாணவர்கள் பொன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் ரோஸ் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட...

அரியலூர் அரசு கல்லூரியில் நாட்டுநல பணித்திட்டநாள் விழா

அரியலூர், செப். 25: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொ) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற தன்னார்வ பணிகளில் ஈடுபடும் போது உங்களுடைய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். மாணவப் பருவத்தில் கல்வியோடு நீங்கள்...

ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை

ஜெயங்கொண்டம், செப். 25:ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026-ன் கீழ், அழகாபுரம் ஊராட்சி,அகரம் ஆதிதிராவிடர் தெருவில்,ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில்,வடிகால் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைத்தல், ஓலையூர் ஊராட்சி,குடிகாடு மேலத்தெருவில்,குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்...

செப். 27ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், செப்.25: வரும் செப். 27ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியீட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் செப்....

செந்துறையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்

அரியலூர்,செப்.19: செந்துறையில் நாளை (20ம்தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா கடந்த 2ம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. நமது அரியலூர் மாவட்டத்தில் வரும் 20ம்தேதி குமிழியம் வட்டாரம்,...