மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்க கூடாது
மஞ்சூர்,ஜூன் 16: மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ருக்மணி தலைமை தாங்கினார். தனிப்பிரிவு எஸ்.ஐ அப்பாஸ் வரவேற்றார். இதில் மஞ்சூர் பகுதியை சேர்ந்த மருந்து கடை...
விதிகளை மீறி இயங்கும் மினி பேருந்துகளால் மலைப்பாதையில் உயிரை கையில் பிடித்து செல்லும் பயணிகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அபாயம்
குன்னூர், ஜூன் 16: நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் பொதுமக்களின் அத்தியாவசிய போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மினி பேருந்துகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, குன்னூர் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் தினசரி பயணத்திற்கு இந்த பேருந்துகளே பிரதானமாக உள்ளன. இந்நிலையில், குன்னூரில் இருந்து பல்வேறு...
சீரமைத்த குறுகிய நாளில் சேதமடைந்து வரும் சாலை
கூடலூர்,ஜூன்15: கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற குறுகிய நாளில் சாலைகள் சேதம் அடைந்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது. சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி...
பந்தலூர் பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்யும் தொழிலாளர்கள்
பந்தலூர், ஜூன் 15: பந்தலூர் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களைச் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஏராளமான தனியார் மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. தேயிலைத் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். இவர்களை பணிக்கு அழைத்துச் செல்ல...
காந்தல் குருசடி காலனி பகுதியில் புதர்மண்டி பயன்பாடின்றி காட்சியளிக்கும் கழிப்பிடம்
ஊட்டி, ஜூன் 15: ஊட்டி அருகேயுள்ள காந்தல் குருசடி காலனி பகுதியில் உள்ள கழிப்பிடம் புதர்மண்டி பயன்பாடின்றி காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் அவசர தேவைகளுக்காக நம்ம டாய்லெட் எனப்படும் நவீன கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. இவை ஆரம்ப காலங்களில் முறையாக பராமரிப்பு...
புதர்களால் வன விலங்குகளின் தொல்லை அதிகரிப்பு
ஊட்டி, ஜூன் 13: நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான சாலையோரங்களில் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. குறிப்பாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டிங்கிள் டேல் பகுதிக்கு செல்லும் சாலையோரங்களில் இரு புறங்களிம் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் இந்த புதர்களில் காட்டு மாடுகள், கரடிகள் மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகள் பதுங்கியிருப்பது...
கழிவு நீரால் நோய் தொற்றும் அபாயம்
ஊட்டி, ஜூன் 13: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட குருசடி காலனி செல்லும் சாலையோரத்தில் நகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி சார்பில் குப்பைகளை முறையாக வந்து சேகரிக்காத நிலையில் பெரும்பாலான மக்கள் இந்த குப்பைத் தொட்டிகளில் குப்பைகளையும், உணவு கழிவுகளையும் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால், குப்பை தொட்டியில் இருந்து கழிவு நீர் சாலையில் ஓடுகிறது....
சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்
ஊட்டி, ஜூன் 13: நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. ஊட்டி நகரின் சுற்றுச்சூழல் மற்றும் அழகினை பாதுகாக்கும் நோக்கில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பது மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் வைப்பது, ஒட்டுவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊட்டி நகரில் பல இடங்களிலும்...
குன்னூர் மவுண்ட்ரோடில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
குன்னூர், ஜூன் 11: நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஒரே வழித்தடத்தில் இயக்கப்படுவதால், இந்த...

