தோட்டக்கலை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடி நடவு பணிகள் பாதிப்பு

  ஊட்டி, மார்ச் 13: தோட்டக்கலை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு பணிகள், பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரிக்கு ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக கோடை...

ஆலிப்பரம்பு பகவதி அம்மன் கோயிலில் 15 யானைகளுடன் திருவீதியுலா

  பாலக்காடு, மார்ச் 13: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தாலா அருகே செத்தலூரை அடுத்த ஆலிப்பரம்பு பகவதி அம்மன் கோயிலில் மாசி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் உச்சிக்கால பூஜைகள் முடிந்து...

தேர்தல் நெருங்கிய நிலையில் மத்திய ரிசர்வ் படை போலீசார் அணிவகுப்பு

  ஊட்டி, மார்ச் 13: தேர்தல் நெருங்கிய நிலையில் ஊட்டியில் மத்திய ரிசர்வ் படை போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. பொதுவாக, சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணிகள், பணம் பட்டுவாடா தடுப்பு பணிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணிகள், வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிகளில் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி துணை ராணுவம்...

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா; போக்குவரத்து கடும் பாதிப்பு

கோத்தகிரி, மார்ச் 12: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் உள்ள தனியார் தேயிலை, காபி தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் தற்போது பலாப்பழங்கள் காய்க்க துவங்கியுள்ளது. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து,...

காட்டேரி பேருந்து நிலையத்தில் தீ வைத்து ரகளையில் ஈடுபட்டவரால் பரபரப்பு

குன்னூர், மார்ச் 12: குன்னூர் மலைப்பாதையில் காட்டேரி பேருந்து நிலையத்தில் தீ வைத்து ரகளையில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்குள் நேற்று காலை நுழைந்த ஒருவர் திடீரென அங்கு நெருப்பு வைத்துள்ளார். இதனால் அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள்...

வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

ஊட்டி,மார்ச்12: ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இன்று (12ம் தேதி) வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உட்பட 20...

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடநாடு காட்சி முனையில் வாகன நிறுத்துமிடம் விரிவாக்கம்

  கோத்தகிரி,மார்ச்11: கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப வாகன நிறுத்துமிடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் அங்கு சுற்றுலா பயணிகள் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க நாற்காலிகள் அமைத்தல், தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளும் நடக்கின்றன.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று கோத்தகிரி அருகே உள்ள ெகாடநாடு காட்சி...

கோடை சீசனையொட்டி படகுகளில் பழுதுகளை நீக்கி தயார் செய்யும் பணி துவக்கம்

  ஊட்டி,மார்ச்11: கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் உள்ள படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கி தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு பின்புறம் ஊட்டி ஏரி அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி ஆரம்ப காலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்பாட்டு வந்தது. காலபோக்கில் கழிவுநீர் கலந்ததால்...

சூட்டிங்மட்டம் பகுதியில் ‘ரோடோடென்ட்ரான்’ மலர் பூத்து குலுங்குகின்றன

  ஊட்டி,மார்ச்11: ஊட்டி அருகே உள்ள சூட்டிங்மட்டம் பகுதியில் பூத்துள்ள ‘ரோடோடென்ட்ரான்’ மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை ஊட்டிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர்....

பந்தலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவ நோன்பு திறப்பு நிகழ்ச்சி

  பந்தலூர், மார்ச் 10: பந்தலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.நெல்லியாளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பந்தலூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோசி பேபி, மாநில செயலாளர் அனஸ் எடாலத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்...