குலசை ஊராட்சியில் குடிநீர் விநியோக

ஆய்வு கூட்டம் உடன்குடி, ஜூன் 13: குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மண்டலம் 3ல் உள்ள ஊராட்சி விசைப்பம்பு இயக்குநர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகவிஜயன், மேரி கவிதா, ஊராட்சி செயலாளர்கள் சிவக்குமார்,...

எப்போதும்வென்றான் அருகே மாணவரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது

ஓட்டப்பிடாரம், ஜூன் 13: எப்போதும்வென்றான் அடுத்துள்ள கீழச்செய்தலை கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது நண்பரும் கடந்த மே 17ம் தேதி கீழச்செய்தலை விலக்கில் இருந்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 பைக்குகளில் வந்த 3 வாலிபர்கள், 12ம் வகுப்பு மாணவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்....

சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் 2000 மணல் மூட்டைகள், மரம் வெட்டும் கருவிகள்

சாத்தான்குளம், ஜூன் 13: சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழைக்கு முன்னேற்பாடு தயார் செய்யப்பட்டுள்ளதை உதவி கோட்ட பொறியாளர் கோமதி சங்கரி பார்வையிட்டார். சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழைக்கு முன்னேற்பாடு பணிகளை தற்போதே தீவிரப்படுத்தி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் ஆகியோர் உத்தரவின் பேரில்,...

தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

தூத்துக்குடி, ஜூன் 8: தூத்துக்குடி விஇ ரோட்டைச் சேர்ந்தவர் சந்திராயப்பர். இவரது மகன் மரிய ஜென்சன்(26). இவர் தூத்துக்குடியில் விசைப்படகு வெங்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் ஹோலிகிராஸ் பள்ளி அருகே செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது இரு பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள் அவரிடம் பேசுவதுபோல வந்து அவர் வைத்திருந்த...

கோவில்பட்டியில் பலத்த சூறைக்காற்றால் மரம் சாய்ந்து கார் சேதம்

கோவில்பட்டி, ஜூன் 8: கோவில்பட்டியில் வீசிய பலத்த சூறைக்காற்றில் மரம் சாய்ந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது.கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடையை போன்று வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாமலும், இரவு நேரத்தில் கடும் புழுக்கம் காரணமாகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று வெயிலின் தாக்கம்...

விஜய்யின் வண்டவாளத்தை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்

கோவில்பட்டி, ஜூன் 6: தவெக ரியல் மற்றும் ரீல்ஸ் எல்லாம் பொய் செய்திகளாக பரப்பி வருகின்றனர். விஜய்யின் வண்டவாளம், தண்டவாளத்தில் ஏறும். விரைவில் மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்று முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கூறினார். கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை...

சாத்தான்குளம் அருகே கிராமங்களுக்கு விநியோகித்த தண்ணீரில் துர்நாற்றம்

சாத்தான்குளம், ஜூன் 6: சாத்தான்குளம் அருகே கிராமங்களுக்கு விநியோகித்த தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் கிணற்றை சோதனையிட்டபோது அதில் ஆடு இறந்து கிடந்தது. அதனை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர். சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சிக்குட்பட்ட கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் கருமேனி ஆற்றங்கரையோரம் கிணறு உள்ளது. இதிலிருந்து இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு...

முதலூர் வழியாக இயக்கப்பட்ட திசையன்விளை -சாத்தான்குளம் அரசு பேருந்து திடீர் நிறுத்தம்

சாத்தான்குளம், ஜூன் 6:சாத்தான்குளத்தில் இருந்து தஞ்சை நகரம் வழியாக திசையன்விளைக்கு அரசு பேருந்து தடம் எண் 165சி காலை 5 மணிக்கு இயக்கப்பட்டு திசையன்விளை சென்று மீண்டும் இடைச்சிவிளை, நடுவக்குறிச்சி, போலையார்புரம், பொத்தகாலன்விளை, முதலூர் வழியாக சாத்தான்குளம் வந்தடையும். பின்னர் 6.50 மணிக்கு சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் மாலை...

பூவுடையார்புரத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சாத்தான்குளம், ஜூன் 4: சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பூவுடையார்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ரவிசந்தர் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஜூன் 21ல் திருநெல்வேலியில் நடைபெறவுள்ள இந்து முன்னணி மாநில பொதுக்குழு சம்பந்தமாக...

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான புதிய பாட நூல் அறிமுக பயிற்சி

சாத்தான்குளம், ஜூன் 4:சாத்தான்குளம் ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பாடநூல் அறிமுக பயிற்சி நடந்தது. சாத்தான்குளம் வட்டார வளமையத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான புதிய பாட நூல் அறிமுக பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் பெனிஷ்கர் துவக்கி வைத்து பேசுகையில், புதிய பாடப் புத்தகம் மாணவர்களுக்கு...