தட்டார்மடத்தில் இன்று நடக்கவிருந்த பாஜ மறியல்: போராட்டம் வாபஸ்
சாத்தான்குளம், ஜன. 21: செட்டியார்பண்ணையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தட்டார்மடத்தில் பாஜ சார்பில் இன்று (21ம் தேதி) நடக்கவிருந்த மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள செட்டியார்பண்ணையில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை...
நாசரேத் நூலகத்தில் சிறப்பு பட்டிமன்றம்
நாசரேத், ஜன. 21: நாசரேத் நூலகத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் நூலக அரங்கில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் ராதா, பேராசிரியர் காசிராசன், துணை தலைவர் கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் வரவேற்றார்....
கனிமொழி எம்பி பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி மையத்திற்கு அத்தியாவசிய பொருட்கள்
ஓட்டப்பிடாரம், ஜன. 10: கனிமொழி எம்பி பிறந்த நாளையொட்டி தருவைகுளம் அருகே அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியின் பிறந்த நாளையொட்டி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில்...
தூத்துக்குடி கேடிசி நகரில் ரேஷன் கடை கட்டுமான பணி
தூத்துக்குடி, ஜன. 10: தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட கேடிசி நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி,...
அகிலாண்டபுரத்தில் பெண்களுக்கான மராத்தான் போட்டி
கயத்தாறு, ஜன. 10:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக, கயத்தாறு ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு நடந்த பெண்களுக்கான மராத்தான் போட்டியை கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார். போட்டியில் முதல் இடத்தை பன்னீர்குளம் முத்துலட்சுமி, 2ம் இடத்தை ராஜாபுதுக்குடி மாலினி, 3ம் இடத்தை...
வீரபாண்டியன்பட்டினம் ஐடிஐயில் மாணவர்களுக்கு மடிக்கணினி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
திருச்செந்தூர், ஜன. 9: வீரபாண்டியன்பட்டினம் அரசு ஐடிஐ பயிற்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் மடிக்கணினிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் அரசு ஐடிஐ வளாகத்தில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் அரசின் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். ஐடிஐ...
தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் இளம்பெண் கைது
தூத்துக்குடி, ஜன. 9: தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஹசீஷ் போதைப் பொருள் பதுக்கிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி (பொ) ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர...
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஜன.15, 16ம் தேதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கலெக்டர் தகவல்
தூத்துக்குடி, ஜன. 9: தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வரால் சென்னையில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா வரும் 14ம் தேதியன்று தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை பாரம்பரிய நாட்டுப்புறக்கலைகள் மற்றும் செவ்வியல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது....
ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டி
ஆறுமுகநேரி, ஜன. 8: ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் நடந்த பொங்கல் தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் பரிசு வழங்கினார் . ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் பொங்கல் தின முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கோலப் போட்டி, கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது....

