நாசரேத்தில் நாளை நகர திமுக பொருளாளர் இல்லத் திருமண விழா

நாசரேத், டிச. 13: நாசரேத்தில் நகர திமுக பொருளாளர் சுடலைமுத்து இல்லத்திருமண விழா, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி தலைவரும், நாசரேத் நகர பொருளாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதியுமான வெள்ளரிக்காயூரணி சுடலைமுத்து- நாசரேத் பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் பத்ரகாளி ஆகியோரின் மகன் கொம்பையா என்ற சக்திகுமாருக்கும், இடையர்காடு செல்வக்குமார்-...

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை அடைப்பை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராக பதியலாம்

தூத்துக்குடி, டிச. 13: தூத்துக்குடியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசியில் புகாரினை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ்...

பசுவந்தனை- எஸ்.கைலாசபுரம் சாலையை இருவழித்தடமாக மாற்றும் பணி

ஓட்டப்பிடாரம், டிச. 13: ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனையில் இருந்து ஓசனூத்து, எஸ்.கைலாசபுரம் வரையிலான சாலையை ஒருவழித்தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் துவக்க நிகழ்ச்சி நேற்று குலசேகரநல்லூரில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்...

ஆறுமுகநேரியில் மது விற்றவர் கைது

ஆறுமுகநேரி, டிச. 12: ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயின் நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ வாசுதேவன் தலைமையில் போலீசார், இப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக மொபட்டில் நின்றிருந்தவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் மடக்கி...

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

உடன்குடி, டிச. 12:குலசேகரன்பட்டினம் பெருமாள் கோயில் தெரு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் ஞானமூர்த்தி (27). கூலி தொழிலாளியான இவர், கடந்த டிச.8ம் தேதி குலசேகரன்பட்டினத்தில் இருந்து உடன்குடி ரோட்டில் பைக்கில் வந்தபோது எதிர்பாரதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று...

முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் முன்னிலையில் தென்திருப்பேரை இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

ஏரல், டிச. 12: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தென்திருப்பேரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். குரும்பூர் அருகேயுள்ள தென்திருப்பேரை பகுதியை சேர்ந்த மகேந்திரன், ஆத்தி பிரபாகர், காளிதாஸ், சத்யராஜ், ஆத்தி, பெரியகணேஷ், பிரவின்குமார், தங்கஆத்தி, முத்துராஜ், சண்முகவேல், சிவன்ராஜ், பாலமுருகன், முத்து, முத்துசெல்வம் உள்பட 25 இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகி...

கோவில்பட்டியில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

  கோவில்பட்டி, டிச. 11: கோவில்பட்டியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நிராகரிக்கும் தாசில்தாரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ்...

குலசேகரன்பட்டினம் கோயிலில் முத்தாரம்மன் வீதி உலா

உடன்குடி, டிச.11: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு அம்மன் சப்பரத்தில் வீதியுலா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன்...

வைகுண்டம் ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

வைகுண்டம், டிச.11:ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பினை நீர்வளத்துறையினருடன் இணைந்து வருவாய்த் துறையினர் அதிரடியாக அகற்றினர். வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தோட்டம் அமைத்திருந்தார். இதனை அகற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடமும் பொதுமக்கள்...

கயத்தாறில் கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறு, டிச.10: வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சூரியமினிக்கன் கிராமத்தின் அருகேயுள்ள குளத்திற்குள் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கயத்தாறு தாலுகா அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். இதையடுத்து தாசில்தார் அப்பனராஜ் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதோடு ஆதார், ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகம் முன்பாக கொட்டுவோம் எனக்கூறி பேச்சுவார்த்தையை...