திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் முகநூலில் ஆபாச பதிவிட்ட நபர் மீது வழக்கு
குளச்சல், டிச.10: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் பைங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நண்பரின் முகநூல் கருத்துக்கு தனது பதிலை பதிவு செய்திருந்தார். அந்த கருத்துக்கு வேறொரு நபர் எதிர்கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும் அந்த நபர் பைங்குளம் நபர்...
குமரி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக ஒன்றிய அரசு அதிகாரி நியமனம்
நாகர்கோவில், டிச.10 : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு மாநிலத்திற்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டத்திற்கு புதுடெல்லி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக இணை செயலாளர் விஜய் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குமரி மாவட்டம் வருகை தந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...
குமரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து
குலசேகரம், டிச.9: குமரி மேற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக மாணவரணியின் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மாவட்ட செயலாளரான அமைச்சர் மனோ தங்கராஜை கருங்கல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களிடம் திராவிட சிந்தனைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், முதல்வரின் சாதனை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு...
அருவிக்கரையில் செல்போன் டவர் அமைக்க நாதக எதிர்ப்பு
நாகர்கோவில், டிச.9: நாம் தமிழர் கட்சி அருவிக்கரை ஊராட்சி பொறுப்பாளர் சதீஷ் என்பவர் தலைமையில் அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அருவிக்கரை ஊராட்சி மாத்தூர் முக்கம்பாலவிளை பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக கதிர்வீச்சை உமிழும் அலைபேசி கோபுரத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு முதற்கட்டமாக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இப்பகுதியில் செல்போன்...
நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் நின்ற ரவுடி கைது
நாகர்கோவில், டிச.9 : நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே நின்ற வடசேரி அருகுவிளை பகுதியை சேர்ந்த லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (48) என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். சந்தேகத்தின்...
மாவட்ட ஓவியப்போட்டி மவுண்ட் லிட்ரா பள்ளி மாணவிக்கு முதல்பரிசு
அஞ்சுகிராமம், டிச.8: மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த மாணவி ஜான் பெட்ஸி (10ம் வகுப்பு) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார். இதையடுத்து கலெக்டர் அழகுமீனா மாணவிக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த...
கடியபட்டணம் கடற்கரையில் இறந்து கிடந்த முதியவர்
குளச்சல், டிச.8: மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் ஜாண்பால் தெருவை சேர்ந்தவர் பேதுரு (81). நேற்று முன் தினம் சாப்பிவிட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பேதுருவை அப்பகுதி முழுவதும் தேடினர். பாத்திமா தெரு கடற்கரை பகுதியில் தேடி செல்லும்போது பேதுரு அங்கு மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு...
ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ மாவட்ட தேர்வு போட்டி
அஞ்சுகிராமம், டிச.8: `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ போட்டியின் குமரி மாவட்ட தேர்வு போட்டி அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பள்ளிகள் பங்கேற்றன. நடுவர்களாக விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் அருணாசலா கல்லூரி உதவி பேராசிரியர் ராதிகா ஆகியோர் செயல்பட்டனர். மொத்தம் 11 போட்டியாளர்கள்...
பாரதியார் பிறந்தநாளையொட்டி இந்திய மொழிகள் திருவிழா
நாகர்கோவில், டிச.7: தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகள் உற்சவம் டிசம்பர் 11ம் தேதி வரை நடத்திட ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து வகையான பள்ளிகளிலும் பள்ளிகளின் பயிற்றுமொழிகளிலேயே இச்செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்....

