மாவட்ட யோகா போட்டி குளச்சல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு

நாகர்கோவில்,பிப்.5: பாலப்பள்ளம் கண்ணன் யோகா குருகுலம் மற்றும் சைமன்காலனி புனித மேரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய 4 வது மாவட்ட அளவிலான யோகாப்போட்டியில் குளச்சல் சாஸ்தான்கரை அரசு தொடக்கப்பள்ளி 15 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 4 ம் வகுப்பு மாணவி தன்யா  2 ம் பரிசும், ஏனய மாணவர்கள் 3 ம்...

நாய் குறுக்கே பாய்ந்தது பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்

புதுக்கடை, பிப்.5: புதுக்கடையை அடுத்த வேங்கோடு, கையாலவிளை பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (25). கொத்தனார். சம்பவத்தன்று பைக்கில் கையாலவிளையில் இருந்து மணியாரம்குன்று சாலையில் சென்று கொண்டிருந்தார். குருசடி அருகில் செல்லும் போது திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அபிஷேக் படுகாயம் அடைந்தார். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள...

நித்திரவிளை அருகே ஆடு திருட்டு

நித்திரவிளை, பிப். 5: நித்திரவிளை அருகே வாவறை தெக்குமுறி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் (48). கொத்தனார். இவர் வீட்டின் முன்னால் உள்ள கொட்டகையில் தனக்கு சொந்தமான ஆட்டை கட்டியிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்த போது ஒரு ஆட்டை காணவில்லை. இது சம்பந்தமாக தேவதாஸ் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று...

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு பள்ளி கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை

நாகர்கோவில், பிப்.4: பள்ளி கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24, 2024-25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் 22.01.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எமிஸ் இணைய...

சுசீந்திரம் கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்

சுசீந்திரம்.பிப்.4: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நேற்று மதியம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சியில் கோயில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, சுசீந்திரம் பேரூர் செயலாளர் சுதை சுந்தர், சுசீந்திரம் 9 வது வார்டு திமுக கிளைச் செயலாளர் அழகு...

திமுக நிர்வாகி ஐ.ஜி.பி ஜாண் கிறிஸ்டோபர் எழுதிய வெல்லும் திராவிட மாடல் நூல் வெளியீடு

நாகர்கோவில், பிப்.4: குமரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகி, வழக்கறிஞர் ஐ.ஜிபி.ஜாண் கிறிஸ்டோபர் எழுதிய ’வெல்லும் திராவிட மாடல்’ நூல் வெளியீடு சென்னையில் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணை செயலாளரும், மாவட்ட பிரதிநிதியுமான ஐ.ஜி.பி.ஜாண் கிறிஸ்டோபர் ’வெல்லும் திராவிட மாடல்’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் 5 ஆண்டுகால திமுக அரசின்...

வெள்ளிச்சந்தை அருகே மீனவரை மிரட்டிய ரவுடி உள்பட 2 பேர் கைது

குளச்சல், ஜன.23: வெள்ளிச்சந்ைத அருகே முட்டம் ஜார்ஜியார் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (48). மீனவர். இவருக்கும் அம்மாண்டிவிளை இளையான்விளை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கியூமன்(24) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. தற்போது கியூமன் முட்டம் ஜேம்ஸ் நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பார்த்திபன் முட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி...

நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம் 27ம்தேதி நடக்கிறது

நாகர்கோவில், ஜன.23: வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (நாகர்கோவில்) மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் முகாம் ( நிதி ஆப்கே நிகத் 2.0) மற்றும் சுவிதா சமாகம் என்னும் குறைதீர் முகாம் வருகிற 27.1.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி...

கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கன்னியாகுமரி, ஜன.23: கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றம் வேல் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 1ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து விழா நடக்கிறது. விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோம், 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம்,...

திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் விற்ற 2 போலீசார் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம், ஜன. 22: திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடும், புழக்கமும் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் கூட எம்டிஎம்ஏ போன்ற விலை உயர்ந்த, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து போதைப் பொருளை கட்டுப்படுத்த கேரளா முழுவதும்...