மாயாண்டி சுவாமிகளின் அவதார தினவிழா

மானாமதுரை, ஆக.4: மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் அவதாரதின விழா ஆக.8ம் தேதி கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கியுள்ளது. மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் சித்தர் மாயாண்டி சுவாமிகள் அவதரித்து பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளதாக இப்பகுதி மக்கள் பெரிதும் நம்புகின்றனர். மாயாண்டி சுவாமி...

சுற்றுலா தொழில் நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்

சிவகங்கை, ஆக.4: சுற்றுலா தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வரும் சுற்றுலாத் தொழில்...

முத்து வடுகநாதர் கோயிலில் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

சிங்கம்புணரி, ஆக.4: சிங்கம்புணரியில் புகழ்பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஆண்டுதோறும் அன்னதான விழா சிறப்பாக நடைபெறும். வணிகர் நல சங்கம் சார்பாக அன்னதான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை சித்தருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் வாசனை திரவியங்கள் பழச் சாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள்...

திறன் வளர்ப்பு பயிற்சி

சிவகங்கை, ஆக.3: சிவகங்கையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் நலக் காவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி, கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தனர். போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் குழந்தைகளை எப்படி நடத்துவது, அவர்களின் மனநிலை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படுவது, குழந்தைகள் செல்போன்...

நெல் கிட்டங்கியினை கட்டித்தர கோரிக்கை

தேவகோட்டை, ஆக.3: தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் கிராம விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் பருத்தியூர் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட தலைவர் கல்லுவழி ஆபிரகாம், திருப்புவனம் விவசாயிகள் சங்கத் தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த புளியால் ஆசிரியர் சூசைமுத்து, கடம்பனேந்தல் ராசுத்தேவர், கிளியூர் வேலு, திடக்கோட்டை...

மருத்துவ கழிவுகளை நிறுவனங்கள் முறையாக வெளியேற்றா விட்டால் நடவடிக்கை

சிவகங்கை, ஆக.3: மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016ஐ அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகளை பின்பற்றுவதன்...

திருப்புத்தூர் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்

திருப்புத்தூர், ஜூலை 31: திருப்புத்தூரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேற்று பேரூராட்சித்துறையினர் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். பாலிதீன் பை ஓழிப்பு விழிப்புணர்வு குறித்து கலெக்டரின் உத்தரவுப்படியும், திருப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் அறிவுறுத்தலின் பேரில், துப்பரவு மேற்பார்வையாளர் மோகன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர்...

காய்கறி, பழக்கன்று தொகுப்பு விவசாயிகள் பெற அழைப்பு

சிவகங்கை, ஜூலை 31: சிவகங்கை வட்டார விவசாயிகள் காய்கறி மற்றும் பழக்கன்று தொகுப்பு பெறலாம். இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரியங்கா தெரிவத்ததாவது: சிவகங்கை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் கீழ் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் மூலமாக மானியத்தில் கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டை, கீரை ஆகிய 6 வகையான விதைகள் கொண்ட தொகுப்பும்,...

ஓய்வூதியம் வழங்க பூசாரிகள் கோரிக்கை

ராமநாதபுரம், ஜூலை 30: கடலாடி அருகே சமத்துவபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட கிராம பூசாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் நாகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் பூசாரிகள் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விரைந்து ஓய்வூதியம் கிடைப்பதற்கு...

கால்பந்தாட்ட போட்டி பனைக்குளம் அணி முதலிடம்

மண்டபம்,ஜூலை 30: பனைக்குளம் மரஹபா நண்பர்கள் சார்பில், மூன்றாம் ஆண்டு ஐவர் கால்பந்தாட்ட போட்டி பனைக்குளம் கடற்கரையில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் பனைக்குளம்,புதுவலசை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் 32 அணிகளாக கலந்து கொண்டனர். பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை ஐக்கிய முஸ்லீம் சங்க நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக யூத் வெல்பர்...