விபத்துக்களில் 2 பேர் பலி

திருப்புவனம், ஜன.12: பூவந்தி அருகே இருவேறு சாலை விபத்துக்களில் 2 பேர் பலியாயினர். சிவகங்கை அருகே சித்தலூரை சேர்ந்த தமிழ்ச் செல்வன்(67). நல்லாகுளம் பாலம் அருகே நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு விபத்தில் இலுப்பக்குடியை ேசர்ந்த செந்தில் திருப்பதி(43). இவர் தனது டூவீலரில் கிளாதிரிக்கு சென்ற போது,...

திருப்புவனம் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

திருப்புவனம், ஜன.12: திருப்புவனம் அருகே டி.ஆலங்குளம் ஊராட்சி வாவியரேந்தலில் நேற்று புதிய ரேஷன் கடை கட்டிடத்தை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். வாவியரேந்தலில் நியாயவிலைக் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. புதிய கட்டிடம் வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. தமிழரசியிடம் சோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற...

ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரியில் கலை இலக்கிய போட்டி

காரைக்குடி, ஜன.12: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த மகராஜ் அருளாசியுடன் கல்லூரியின் அனைத்து துறைகளுக்கு இடையேயான இலக்கிய போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா...

விவசாயிகள் பயிற்சி முகாம்

சிவகங்கை, ஜன.10: சிவகங்கை அருகே படமாத்தூரில் வேளாண்மைத் துறை சார்பில் உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் ரவிசங்கர் தலைமை வகித்தார். இதில் வேளாண்மைத் துறை திட்டங்கள், நெற்பயிர் பாதுகாப்பு முறைகள், விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த பன்றி விரட்டி பயன்படுத்தி சேதங்களை...

மளிகை கடையில் தீ விபத்து

கீழக்கரை,ஜன.10:ஏர்வாடி தர்ஹா மேற்கு வாயில் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் மின் கசிவால் நேற்று அதிகாலை தீப்பிடித்தது. இதுகுறித்த தகவல்படி ஏர்வாடி மின்வாரிய நிலைய பணியாளர்கள் மளிகை கடையின் மின் இணைப்பை துண்டித்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏர்வாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர்...

ஊராட்சி பள்ளியில் மருத்துவ முகாம்

காளையார்கோவில், ஜன.10: கீழக்கோட்டையில் தேசிய பள்ளி சிறார் உடல் நலத்திட்டத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கீழக்கோட்டையில் தேசிய பள்ளி சிறார் உடல் நலத்திட்டத்தின் சார்பாக மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஆசிரியை மீனாட்சி வரவேற்றார். மருத்துவர் சுதர்சன்,...

சர்வதேச சிலம்ப போட்டி வித்யாகிரி மாணவர் தேர்வு

காரைக்குடி, ஜன.9: பாண்டிச்சேரியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இப்போட்டியில் காரைக்குடி அருகே புதுவயல்  வித்யாகிரி பள்ளி மாணவர் சிலம்ப போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று ஏப்ரலில் மலேசியாவில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிகுழு தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமிநாதன்,...

விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்

காரைக்குடி, ஜன.9: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், கணிப்பொறியியல் மற்றும் மெக்கட்ராணின்ஸ் துறை மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். விவேகானந்தா கல்விகுழும தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்து பணி நியமன ஆணைகளை வழங்கினார். தனியார் நிறுவன மனிதளவள...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18க்குள் விண்ணப்பம்

சிவகங்கை, ஜன.9: கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 1.1.2026ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் மற்றும் திருத்தம் செய்வதற்குமான சிறப்பு முகாம்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நான்கு நாள்கள் நடைபெற்றது. சிறப்பு முகாம்கள் நிறைவு...

கீழக்கரையில் போராட்டம் ஒத்திவைப்பு

கீழக்கரை, ஜன.8: கீழக்கரையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கீழக்கரை போலீஸ் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பத்மநாபன் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீது சுல்தான் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. சேதமடைந்த சாலையை கீழக்கரை நகர்மன்றத் தலைவர் ஷெஹானாஸ் ஆபிதா ஒப்புதல் படி...