கார் மோதி முதியவர் பலி

மானாமதுரை, மே 15: மதுரை களிமங்கலம் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பணன்(75). நேற்று இவர் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் ஒருவரை பார்க்க வந்துவிட்டு மதுரை செல்வதற்காக இடைக்காட்டூர் சர்வீஸ் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பணன் இறந்தார்....

பெருமாள் கோயில் விழாவில் தேரோட்டம்

தேவகோட்டை, மே 15: தேவகோட்டை வெள்ளையன் ஊரணி மேல்கரையில் ரெங்கநாத பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரமோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. இந்த பிரமோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது....

விபத்தில் காயமடைந்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

திருப்புவனம், மே 15: திருப்புவனம் அருகே அரசு பஸ் - சரக்கு வேனில் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10ம் தேதி சரக்கு வாகனத்தில் தொழிலாளர்கள் திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் வன்னிக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது...

அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 14: கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்(ம) 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வித தயக்கம் இன்றி, முக அங்கீகார அமைப்பு முறையில் தங்களை அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்...

நிதித்தொகை பெறும் விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 14: பிரதமர் கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள், நில உடைமைகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மைத் துறை அலுவலர்கள் கிராமங்கள் தோறும் சென்று பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெறும் விவசாயிகளை சந்தித்து நில உடைமையை பதிவு செய்யாத விவசாயிகளை பதிவு செய்ய...

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சிங்கம்புணரி, மே 14: சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டியை சேர்ந்த வீரன் மகன் சேவுகப் பெருமாள் (35). கொட்டகை அமைக்கும் தொழிலாளி. இவர், தனது தம்பியுடன் காளாப்பூர் பகுதியில் உள்ள புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக வீட்டின் முன்பு கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற மின்சார வயர் மீது சேவுக பெருமாள் கை பட்டதாக...

கங்காநகர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை

மானாமதுரை, மே 12: ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் - திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கங்காநகர் - திருச்சிராப்பள்ளி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22497), ராஜஸ்தான் மாநிலத்தையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் நீண்ட தூர ரயில்களில் ஒன்றாகும். கடந்த 2024ஆம் ஆண்டு மேற்கு ரயில்வே நிர்வாகம்...

மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி

சிவகங்கை, மே 12: இளையான்குடி அருகே மின்னல் தாக்கியதில் 7 செம்மறி ஆடுகள் பலியாகின. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புக்குளம் கிராமம் உள்ளது. இங்கு காளையார் கோயில் அருகே காயாவோடை கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீர் மின்னல் ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் 7 ஆடுகளும்...

திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர், மே 12: திருப்புத்தூர் சிவகாமி அம்பாள் சமேத திருத்தளிநாதர், ஸ்ரீ யோக பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு யோக பைரவர் சன்னதி முன்பு ஏராளமான பெண்கள் வெண்பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம், மண் அகல்விளக்கு உள்ளிட்டவற்றில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு...

மானாமதுரையில் ஓவர் லோடு கரும்புகளுடன் பயணிக்கும் டிராக்டர்கள்: காத்திருக்கும் விபத்து அபாயம்

மானாமதுரை, மே 7: மானாமதுரையில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இரட்டை டிரெய்லர்களில் கரும்பு ஏற்றி செல்லும் டிராக்டர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. மானாமதுரை வட்டாரத்தில் இடைக்காட்டூர், முத்தனேந்தல், பதினெட்டாங்கோட்டை, வாகுடி, கிருங்காகோட்டை, பீசர்பட்டினம், கால்பிரவு, ராஜகம்பீரம்,கீழப்பசலை,ஆதனூர், மானாமதுரை, செய்களத்தூர், கள்ளர்வலசை, கல்குறிச்சிகரிசல்குளம் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. கிணற்றுப்...