வண்டிப்பெரியாறு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கொடூர தாக்குதல்: இருவர் கைது

  கூடலூர், ஜூன் 16: வண்டிப்பெரியாறு பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 இளைஞர்கள் ஆஃப் ரோடு சவாரிக்காக டூவீலரில் வண்டிப்பெரியாறு சத்திரம் பகுதிக்கு வந்திருந்தனர். கடந்த மூன்று நாட்களாக அவர்கள் அப்பகுதியில் தனியார்...

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

  தேனி, ஜூன் 16: தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருகிற 19ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் தேனி...

தேவாரம் பகுதியில் முருங்கைக்காய் விலை கிடுகிடு

  தேவாரம், ஜூன் 16: தேவாரம் பகுதியில் முருங்கைக்காய் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவாரம், பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, தே.மீனாட்சிபுரம் ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதியில் கத்திரி, முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் என குறுகிய காலத்தில் விளையும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள்...

தேவாரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை தேவை

  தேவாரம், ஜூன் 16: கோம்பை-தேவாரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், தே.சிந்தலைசேரி, பல்லவராயன் பட்டி, கீழசிந்தலை சேரி, லட்சுமி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பூக்கள் சாகுபடி நடைபெறுவது வழக்கம். குறிப்பாக...

உணவகங்களை கண்காணிக்க வலியுறுத்தல்

  போடி, ஜூன் 15: தரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உணவகங்கள் செயல்படுகிறது. இங்கு அன்றாடம் சமைக்கப்படும் உணவுகளை மட்டுமே தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும். சமையல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படாத...

மோசடிகளிலிருந்து தப்பிக்க வெளிநாடு வேலை விபரங்களில் கவனம்

  சின்னமனூர், ஜூன் 15: தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக வெளி நாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், தரவு உள்ளீட்டாளர் வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கிரிப்டோ கரன்சி மோசடி...

மது விற்றவர் கைது

தேனி, ஜூன் 13: போடி தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை மலைக்கிராமத்தில் சட்டவிரோதமாக் மது விற்றவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை மலைக்கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதாக தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

வீ த லீடர்ஸ் இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்

தேனி, ஜூன், 13: முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜவில் இருந்து விலகி, வீ த லீடர்ஸ் எனும் பெயரில் துவக்கி உள்ள புதிய இயக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு இந்த அமைப்பின் உறுப்பினரும், கல்வியாளருமான நாராயணபிரபு தலைமை வகித்தார். உறுப்பினர்கள் தங்கபிரபு, தங்கபாண்டியன், கதிர்வேல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்....

விடுதிகளை ஆய்வு செய்ய கோரிக்கை

வருசநாடு, ஜூன் 13: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உரிய பராமரிப்பில்லாததால் இந்த விடுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு தங்கி படித்து வந்த மாணவிகள், விடுதியை காலி செய்துவிட்டு தங்களது வீடுகளில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. எனவே ஏழை, எளிய...

தேனி என்.எஸ்.கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி, ஜூன் 11: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இதில் கல்லூரி செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் வன்னியராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை கல்லூரியின் உள்தர உத்தரவாத குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை வரவேற்றார். இதில்...