பள்ளிவாசல் நீர் மின் திட்டப் பணிகள் கேரள முதல்வர் துவக்கி வைத்தார்

  மூணாறு, மார்ச் 13:பள்ளிவாசல் நீர் மின் திட்டத்தின் ஒரு பாகமான மாட்டுப்பெட்டி பவர்ஹவுஸில் மின் உற்பத்திக்குப் பிறகு வெளியிடப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்துடன் பள்ளிவாசல் மின் விரிவாக்கத் திட்டத்தை கடந்த 2001ம் ஆண்டு அரசு அறிவித்தது. மேலும், இத்திட்டத்திற்கு ரூ.310 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பாகமாக பள்ளிவாசல்...

சின்னமனூர் அருகே பகுதி நேர ரேஷன் கடையில் தீ விபத்து

  சின்னமனூர், மார்ச் 13: சின்னமனூர் அருகே முத்தையன்செட்டிபட்டியில் பகுதி நேர ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாக்குமூட்டைகள் எரிந்து நாசமாகின.சின்னமனூர் அருகே முத்தையன்செட்டிபட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள எர்ணம்பட்டி கிராம ஊராட்சிக்கு சென்று அரிசி பருப்பு பொருட்கள் உட்பட குடிமைப் பொருட்களை தலையில் சுமந்து வாங்கி...

கம்பம்மெட்டு மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் வன ஆர்வலர்கள் கோரிக்கை

கம்பம், மார்ச் 13: கம்பம் மெட்டு மலைப்பாதையில், இரவு நேரங்களில் வனவிலங்குகள் விபத்தில் சிக்காமல் தடுக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் மலைப்பாதையாக கம்பம்மெட்டு மலைப்பாதை இருந்து வருகிறது. இந்த மலைப்பாதை,...

வருசநாடு பகுதியில் நச்சுப்புகை கக்கும் தனியார் பேருந்துகள்

வருசநாடு, மார்ச் 12: தேனி, பெரியகுளம், குமுளி, மதுரை ஆண்டிபட்டி, கம்பம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாட்டிற்கு சுமார் 30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட மாத இடைவெளியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்றிதழ் பெற வேண்டும்....

போடி நகர் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

போடி, மார்ச் 12: போடி நகர் பகுதிகளில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டில் விளைவு குறித்து அரசு சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆண்டிபட்டி நகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்...

க.புதுப்பட்டியில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள உத்தரவு

தேனி, மார்ச் 12: தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், கடந்த 4ம் தேதி தேனி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், க.புதுப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 14வது மற்றும் 15வது வார்டுகளில் சுகாதாரக்கேடு, குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் நீர் தேங்குதல் மூலம் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் நோய் தொற்றில்...

டூவீலர் மீது கார் மோதி விபத்து

  தேவதானப்பட்டி, மார்ச் 11: வைகை அணை பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக்(27). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜெயமங்கலத்தை அடுத்த தனியார் காபி கம்பெனி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது...

சட்டமன்ற தேர்தலையொட்டி தேனி எஸ்.பி ஆபீசில் ஆலோசனை கூட்டம்

  தேனி, மார்ச் 11: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி தேனி மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் எஸ் பி சினேகா பிரியா தலைமையில் நடந்தது....

தேனி என்.எஸ் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா

  தேனி, மார்ச் 11: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா மற்றும் மகளிர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன், உபதலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்று...

போலி நெல் விதைகள் விற்பனை நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  தேனி, மார்ச் 10: தேனி அருகே விவசாயிகளுக்கு போலி நெல் விதைகளை வழங்கிய விற்பனை மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தேனியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள்...