திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை

திண்டுக்கல், அக். 4: திண்டுக்கல்லில் நேற்று மாலை 6 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. துவக்கத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல, செல்ல கனமழையாக மாறியது. மேலும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது இதனால் திண்டுக்கல் நகர் பகுதி மட்டுமல்லாது புறநகர் மற்றும் நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்பட பல...

நத்தத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல், அபராதம்

நத்தம், அக். 4: நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் தலைமையிலான குழுவினர் கோசுகுறிச்சி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள...

தாடிக்கொம்பு பகுதியில் மது விற்ற 2 பேர் கைது

திண்டுக்கல், அக். 4: தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப்பிற்கு தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் புறநகர் டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐக்கள் சூரியகலா, முனியாண்டி மற்றும் போலீசார் தீவிர...

தேசிய துப்பாக்கி சூடும் போட்டி சின்னாளபட்டி மாணவி தமிழக அணிக்கு தேர்வு

நிலக்கோட்டை: சின்னாளபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஷா. இவர் கடந்த வாரம் மதுரை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் நடந்த தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். இவருடன் முறையே இரண்டு, மூன்றாமிடம் பிடித்து 3 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து...

வத்தலக்குண்டுவில் கண் பரிசோதனை முகாம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில் குமார் பிறந்தநாளையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாமுனி வரவேற்றார். வடக்கு ஒன்றிய செயலாளர் கேபி. முருகன்...

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (28). இவர் கடந்த 2024ம் ஆண்டு பள்ளி சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் வடமதுரை மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு...

நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து; ரூ.15 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு: போலீசார் விசாரணை

நிலக்கோட்டை, செப்.30: நிலக்கோட்டையில், செல்போன் கடையை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் மாதவன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில், கடையின் பூட்டை உடைத்து கத்தியுடன் உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த சுமார் ரூ.15...

கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

பழநி, செப்.30: கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்லும் பழநி-கொடைக்கானல் மலைச்சாலை இயற்கை எழில் சூழ்ந்ததாகும். இங்கு சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் பழநி-...

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நிலக்கோட்டை, செப்.30: நிலக்கோட்ட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். மேலும் காலையில் மார்க்கெட்டுகளுக்கு செல்வோரும், சுமைகளின் மீது அமர்ந்தபடி பயணிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, சரக்கு வாகனங்களில் பயணம் செய்வோர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக...

பழநி எரமநாயக்கன்பட்டியில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

பழநி, செப். 27: பழநி அருகே எரமநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முதுநிலை வேளாண் அலுவலர் தங்கவேலு வரவேற்று பேசினார். வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர்...