கொடைக்கானல் அருகே ஆண் சடலம் மீட்பு

கொடைக்கானல், நவ.11: கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள குருசரடி வனப்பகுதி அருகே துர்நாற்றம் வீசியுள்ளது, இதனை தொடர்ந்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது மரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தைக்...

நகர்மன்ற கவுன்சில் கூட்டம்

ஒட்டன்சத்திரம், நவ.11: ஒட்டன்சத்திரம் நகர்மன்ற கவுன்சில் கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகர்மன்ற கவுன்சில் கூட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் ஸ்வேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாதாந்திர வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது....

வத்தலக்குண்டு அருகே தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வத்தலக்குண்டு, நவ.11: வத்தலக்குண்டு அருகே தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் அமைந்துள்ள கிளை தபால் நிலையத்தில் பொதுமக்களின் சேமிப்பு பணம் ரூ.52 லட்சத்தை அங்கு பணியாற்றிய ஊழியர் முனியாண்டி என்பவர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வாடிக்கையாளர்கள்...

திண்டுக்கல் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது

திண்டுக்கல், நவ. 7: திண்டுக்கல் அருகே அனுமந்த நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (46). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் வேல்குமார் என்பவருடன் வத்தலக்குண்டு சாலை கழுதை ரோடு பிரிவு அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்மாந்துரை புதுப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த...

நிலக்கோட்டை பள்ளபட்டியில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை

நிலக்கோட்டை, நவ. 7: நிலக்கோட்டை ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் தெற்கு தெருவில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் பரிந்துரைப்படி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுபடி ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய...

ஒட்டன்சத்திரம்- நாகனம்பட்டியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை தேவை

ஒட்டன்சத்திரம், நவ. 7: ஒட்டன்சத்திரம்- நாகனம்பட்டி பிரிவு பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் நகர் பகுதியிலிருந்து நாகனம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கொல்லப்பட்டி, சங்குப்பிள்ளைபுதூர், கே.கே.நகர், சிக்கந்தர் நகர், தீயணைப்பு நிலையம் மற்றும் தாராபுரம் புறவழிச்சாலையை அடைய வாகனஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்....

பழநியில் இடி விழுந்ததில் தென்னை மரத்தில் தீ பற்றியது

பழநி, நவ.6: பழநியில் நேற்று மாலை, இடி விழுந்ததில் தென்னை மரத்தில் தீ பற்றியது. பழநியில் நேற்று மாலை பல இடங்களில் இடி மற்றும் மின்னல் இருந்தது. இதில் இடி தாக்கியதில் பழநி டவுன், மதினா நகரைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவருக்கு சொந்தமான இடத்திலிருந்த தென்னை மரத்தில் தீ பிடித்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்...

ஒட்டன்சத்திரத்தில் மின்மாற்றியில் பற்றி எரிந்த தீ அணைப்பு

ஒட்டன்சத்திரம், நவ.6: ஒட்டன்சத்திரத்தில் மின்மாற்றியில் பற்றி தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதனருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இப்பகுதியில் மிகவும் தாழ்வாக உயர் மின்னழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வணிக வளாகத்திற்குள் சென்ற சரக்கு வாகனத்தின் மேற்பகுதி, உயிரழுத்த...

திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம் பழநி நகராட்சி எச்சரிக்கை

பழநி, நவ.6: திறந்தவெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படுமென பழநி நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திறந்தவெளி கழிப்பிடமாக மாறுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனிநபர் கழிப்பறை அமைக்க நிதி...

உணவு கலப்படம் கண்டறியும் பயிற்சி

பழநி, நவ. 5: பழநி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உணவு கலப்படத்தை கண்டறியும் பயிற்சி முகாம் நடந்தது. இம்முகாமில் உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உணவு பொருட்களில் கலப்படம் செய்திருந்தால் கண்டுபிடிக்கும் முறை, கலப்பட உணவுகளை உண்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சத்தான உணவுகள், இயற்கை உணவுகளின் நன்மைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர்....