பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

நத்தம், நவ. 19: நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தங்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறி பிளஸ்2 மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் காவல் நிலைய எஸ்ஐ அருண்பாண்டியன் மற்றும்...

ஆத்துமேட்டில் வஉசி படத்திற்கு மரியாதை

வேடசந்தூர், நவ. 19: வேடசந்தூர் ஆத்துமேட்டில் வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்திற்கு வ.உ.சி மக்கள் இயக்கம் சார்பில் மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ரவிசங்கர், கவிதா முருகன், பண்ணை கார்த்தி,...

கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்: சாரல் மழையும் பெய்தது

கொடைக்கானல், நவ. 19: கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது. 10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவி வருவதால் நாள் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. தற்போது பனி சீசன் தொடங்கி உள்ள நிலையில், நேற்று காலை முதல் சாரல்...

சீசன் எதிரொலி: பழநி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணி

  பழநி, நவ. 18: ஐயப்ப பக்தர்கள் சீசனின் காரணமாக பழநி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழநி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை துவங்கி உள்ளது. இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக வடமாநில வியாபாரிகளும் அதிகளவு பழநி நகரில் சுற்றித் திரிந்து வருகின்றனர். பொதுமக்கள்...

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

  திண்டுக்கல், நவ. 18: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 284 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நடுத்தர...

திண்டுக்கல் நவ.21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

  திண்டுக்கல், நவ. 18: திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.21ம் தேதி நடைபெறவுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம்...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 15 ஆண்டு சிறை: திண்டுக்கல் போக்சோ கோர்ட் தீர்ப்பு

திண்டுக்கல், நவ. 15: காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரசாத் (21). இவர் கடந்த 2024ல் பள்ளி சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல்...

திண்டுக்கல்லில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

திண்டுக்கல், நவ. 15: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசு காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவச...

உணவு பொருளில் கலப்படம்: ரூ.1 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம், நவ. 15: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த உதயபிரபாகர், கேதையுறும்பை சேர்ந்த எஸ்தர் சார்லஸ், மதுபால முரளி, கள்ளிமந்தையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ராமசாமி உள்ளிட்ட வியாபாரிகள் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் மூலம் வழக்கு பதியப்பட்டது. ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்குகளில் வியாபாரிகள் 5...

நத்தத்தில் வீடு கட்டும் பணி ஆணை வழங்கல்

நத்தம், நவ. 13: நத்தம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் விஜயநாத் வரவேற்றார். தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்து பணி ஆணை வழங்கி திட்டம் குறித்து பயனாளிகளுக்கு எடுத்து...