கர்நாடக மாநில மது கடத்தியவர் கைது

ஈரோடு, செப். 27: ஈரோடு மாவட்டம், கடம்பூர் போலீசார் நேற்று முன்தினம் கோட்டமாளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன்...

அந்தியூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அந்தியூர், செப்.27: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முனியப்பம் பாளையத்தில் நகலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமினை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தரும்படி...

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, செப். 27: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 8 மணி வரை ஈரோடு, பவானி நகர்களை தவிர்த்து, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...

“உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

ஈரோடு, செப்.26: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரம்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை பார்வையிட்ட அமைச்சர் சு.முத்துசாமி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இதில், மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணை, மின் இணைப்பு பெயர்...

1.7 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோடு,செப்.26: கவுந்தப்பாடி அருகே சரக்கு வாகனத்தில் 1.7 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பெரியபுலியூர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார்,எஸ்ஐ மேனகா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....

அந்தியூர் பொய்யேரிக்கரையில் மயான வழி பாதையை மீட்க வலியுறுத்தி போராட்டம்

அந்தியூர்,செப்.26:அந்தியூர் அருகே உள்ளது மைக்கேல்பாளையம். இங்குள்ள பொய்யேரிக்கரை கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு செல்லும் வழி பாதை அரசு புறம்போக்கு நிலமாகும். இதனை தனியார் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். நீதிமன்ற உத்தரவை மீறி இவருக்கு ஆதரவாக வருவாய்துறையினர் செயல்படுகின்றனர் என மக்கள் குற்றம் சாட்டினர். எனவே ஆக்கிரமிப்பை...

2 இடங்களில் லேசான மழை

  ஈரோடு, செப். 24: தெற்மேற்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக தினமும் மாலையில் தொடங்கி, இரவு வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்து...

வாக்கு திருட்டினை கண்டித்து காங்.கட்சியினர் கையெழுத்து இயக்கம்

  ஈரோடு, செப். 24: ஈரோட்டில் வாக்கு திருட்டினை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டினை கண்டித்தும், நமது வாக்குரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை...

தேசிய கல்விக்கொள்கையை கைவிட கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  ஈரோடு, செப்.24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராக்கிமுத்து, செந்தில்நாதன், கௌரிசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் விளக்கவுரையாற்றினார். இதில், பிஎப்ஆர்டீஏ ஓய்வூதிய நிதி ஆணையத்தை களைத்திட...

அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

  சத்தியமங்கலம், செப்.23: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் காவிலிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் காவிலிபாளையம் பகுதியில் கன மழை பெய்தது. இந்த நிலையில் காவிலிபாளையம் - நம்பியூர் செல்லும் சாலையில்...