கொள்முதல் விலையை உயர்த்துமா தமிழ்நாடு அரசு? ஈரோட்டின் பிரதான நீராதாரமான பெரும்பள்ளம் ஓடையில் மண்டிக்கிடக்கும் புதர்: கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
ஈரோடு, ஆக.14: குளம், குட்டைகளுக்கு மழை நீர் செல்லும் பெரும்பள்ளம் ஓடை நீர் வழித்தடத்தில் புதர்மண்டி கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியின் பிரதான நீராதாரமாக பெரும்பள்ளம் ஓடை விளங்குகிறது.சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு பகுதியில் உள்ள புங்கம்பாடியில் கீழ்பவானி கால்வாயின் கசிவுநீரில் இருந்து பெரும்பள்ளம் ஓடை தொடங்குகிறது. பின்னர் திண்டல், நல்லியம்பாளையம், முத்தம்பாளையம், சூரம்பட்டி,...
மாவட்டத்தில் கடும் வெயிலால் பசுந்தீவனம் பற்றாக்குறை அடர்தீவன விலை உயர்வால் பால் உற்பத்தி குறைந்தது
கோபி, ஆக.14: ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயிலால் பசுந்தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்து பால் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்துமா? என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும்...
திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் குடிநீரின்றி பக்தர்கள் அவதி
ஈரோடு, ஆக. 13: திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குடிநீர் வராததால் பக்தர்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி, அபிராமி அம்மன் உடனமர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோயில் கடந்த 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டப்பட்டது. இந்த கோயிலில் கந்தசஷ்டி விழா,...
8ம் வகுப்பு தனித்தேர்வு வினாத்தாள் ஈரோடு வருகை
ஈரோடு,ஆக.12: ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கான வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு வரும் 17ம் தேதி முதல் துவங்கி, 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் 175 பேர் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு...
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவன் சாதனை
கோபி, ஆக. 12: மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று குமுதா பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். சென்னை துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பாக 51வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நம்பியூர் குமுதா...
சக்தி மசாலா நிறுவனத்தின் சுய சக்தி விருது வழங்கும் விழா
ஈரோடு, ஆக. 12: சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் சார்பில் 9வது ஆண்டாக இல்லத்தரசிகளின் தொழில் முனைவு சாதனைகளை அங்கீகரித்தும், அவர்களை ஊக்குவித்தும் ‘சுய சக்தி’ விருதுகள் மற்றும் ‘ஹோம்பிரெனர்’ விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். சக்தி மசாலா...
வனப்பகுதியை ஒட்டிய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
அந்தியூர்,ஆக.10: வட்டக்காடு, கிழங்கு குழி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் புகுந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது, பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. வட்டக்காடு பகுதியில் உள்ள பாக்கியம்மாள்...
புகையிலை பொருட்கள், மது விற்றவர் உள்பட 9 பேர் கைது
ஈரோடு, ஆக.10: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, புகையிலை பொருட்கள், லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற, கே.என்.பாளையத்தை சேர்ந்த சித்தன்(65), ஈரோடு கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த முகமது சுல்தான்(60) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார்...
பழங்குடியினர் தின விழாவில் பாரம்பரிய இசை கருவி வாசித்து நடனம் ஆடி அசத்திய பெண்கள்
சத்தியமங்கலம்,ஆக.10: ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் ஊராளி பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் (9ம் தேதி) உலக பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஊராளி பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் பரண் டிரைபல் சொசைட்டி சார்பில் பழங்குடியினர் தின விழா கடம்பூர் மலைப்பகுதியில் நடைபெற்றது....
