செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

குன்றத்தூர், நவ.18: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. கடந்த சில தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை இல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து திடீரென சென்னை...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத்தேர் தயார் டிசம்பர் 6ல் ஊர்வலம்

காஞ்சிபுரம், நவ.18: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு என புதியதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் ஊர்வலம் அடுத்த மாதம் 6ம் தேதியும், 7ம்தேதி தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்படவுள்ளது என ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் நிலத்துக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்க் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு...

வாக்காளர் படிவம் திருத்த பணியை புறக்கணித்து வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி, நவ.18: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் படிவம் திருத்த பணியை புறக்கணித்து வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீவிர வாக்காளர் படிவம் திருத்த பணி குறித்து வருவாய் துறையினருக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை எனக்கூறி, தேர்தல் ஆணையத்தை கண்டித்து, தமிழகம் முழுதும், வருவாய் துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

தனியார் அமைப்புகள் சார்பில் அரசு பள்ளிகளுக்கு மேஜைகள், இருக்கைகள்

மதுராந்தகம், நவ.15: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சீனிவாசர் அறக்கட்டளை, மற்றும் சென்னை ரோட்டரி மிட்டவுன், எஸ்.பி.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை இணைந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக ‘கற்றல் வசதியில் கல்வி’ எனும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுதாமூர் மற்றும் அனந்தமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும்...

குப்பையில் வீசப்பட்ட ஆண் குழந்தை சடலம்

சோழிங்கநல்லூர், நவ.15: ஈச்சங்காடு சிக்னல் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே, நேற்று தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பிளாஸ்டிக் பையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து...

ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.27 லட்சம்

காஞ்சிபுரம், நவ.15: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.27 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உள்ளூர் வெளியூர் என நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, செல்வது வழக்கம். இவ்வாறு, கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கைகளை...

செய்யூர் அடுத்த இசிஆர் சாலையில் நிழற்குடை இல்லாததால் பஸ் பயணிகள் தவிப்பு

செய்யூர், நவ.13: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை எல்லையம்மன் கோயில் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. செய்யூர், வடக்கு மற்றும் மேற்கு செய்யூர், புத்தூர், ஓதியூர், நைனார் குப்பம், முதலியார் குப்பம், இரும்பேடு, அம்மனூர் பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து...

மைசூர் வனவியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒட்டகச்சிவிங்கி, காட்டுக்கழுதை

கூடுவாஞ்சேரி, நவ.13: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், ஒட்டகச்சிவிங்கி மற்றும் காட்டுகழுதை கொண்டுவரப்படுகிறது. அதற்கு மாற்றாக சிங்கவால் குரங்குகளை மைசூர் வனவியல் பூங்காவிற்கு அனுப்ப வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி,...

1670-1790ம் ஆண்டு வரையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான தொகுப்புகளை புத்தாக்கம் செய்து வெளியீடு: தமிழ்நாடு ஆவண காப்பகம் தகவல்

தாம்பரம், நவ. 13: கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் 1670 முதல் 1790ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு...

சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு

குன்றத்தூர், நவ.12: சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு மீண்டும் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி நடப்பாண்டில் பெய்த வடகிழக்கு பருவமழையால் 73 சதவீதம் நிரம்பியது. சோழவரம் ஏரிக்கரைகள் பலப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் 73 சதவீதம் தண்ணீர்...