மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தங்க கவசத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பெரும்புதூர், டிச.17: பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, தங்க கவசத்தில் அருள்பாலித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோயில் அருணகிரிநாதரால், 8 திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். தமிழ் மாதங்களில் சிறந்ததாய் போற்றப்படும்...
உத்திரமேரூர், சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம் பிரிப்பில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்: காஞ்சி கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம், டிச.17: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், சாலவாக்கம் என ஊராட்சி ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டதில் ஊர்களின் விபரத்தில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சிறப்பு அரசிதழ் நாள் 08.12.2025ன்படி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள...
செங்கல்பட்டு - திருப்போரூர் இடையே மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
திருப்போரூர், டிச.16: செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் வரை, மழையால் சேதமடைந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கடும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஓ.எம்.ஆர்....
திருப்போரூர் ஒன்றியத்தில் வாங்கப்படும் புதிய வாகனங்களின் பதிவு திருக்கழுக்குன்றத்துக்கு மாற்றம்
திருப்போரூர், டிச.16: திருப்போரூர் ஒன்றியத்தில் வாங்கப்படும் புதிய வாகனங்களின் பதிவு திருக்கழுக்குன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், மாம்பாக்கம், நாவலூர் ஆகிய இடங்களில் புதியதாக வாங்கப்படும் வாகனங்கள், தற்போது வரை செங்கல்பட்டு...
செங்கல்பட்டில் வரும் 19ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு, டிச.16: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி காலை நடைபெற உள்ளது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட முன்னணி...
மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை
திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், மின் வழங்கல் நிலையம், இளநிலை செயற்பொறியாளர் அலுவலகம், மின் கட்டண வசூல் மையம் போன்றவை அமைந்துள்ளது. திருப்போரூர் நகரத்தை ஒட்டி அமைந்துள்ளதால் நகரப்பகுதிகளில் பல்வேறு கட்டிடக் கழிவுகள், குப்பைகள் போன்றவை இந்த மின் வாரிய அலுவலகத்தை ஒட்டி கொட்டப்படுகின்றன. அலுவலகத்தின் வாயிலில்...
திருப்போரூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தொடரும் விபத்து: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்போரூர்: ஓ.எம்.ஆர். சாலை, ஓ.எம்.ஆர். புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் எப்போதும் கனரக வாகனங்களும், கார், வேன்களும் சென்று கொண்டே இருக்கின்றன. இதுமட்டுமின்றி அரசு பேருந்துகளும், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களும் பயணிக்கின்றன. இதனால் இந்த சாலைகள் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்தே காணப்படுகிறது. நீண்ட தூரங்களில் இருந்து வரும் வாகனங்களும், உள்ளூரில் சரக்கு...
வெங்காடு ஊராட்சியில் பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம்
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். வெங்காடு சிப்காட் பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு அசாம், ஒரிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வெங்காடு பகுதியில் தங்கி வேலை செய்து...
வடகிழக்கு பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 100% நிரம்பியது: பூண்டி, புழல் ஏரிகளும் நிரம்பின
போரூர், டிச.13: வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு அதிக கன மழை பெய்யும்...

