சரவம்பாக்கம் ஊராட்சியில் பாழடைந்த குளத்தை தூர் வார கோரிக்கை

செய்யூர், ஜன.23: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ளது சரவம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சித்தாமூர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தை ஒட்டியவாறு சரவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளம் அமைந்துள்ளது. பல வருடங்கள் பழமையான இந்த குளம் ஒரு காலத்தில் கால்நடைகள் மற்றும் அப்பகுதிவாசிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக...

உத்திரமேரூர் அருகே அரசு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

உத்திரமேரூர்,ஜன.23: உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் கிராமத்தில் கனிமவள நிதியின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் கல்யாணசுந்தரம் ஆகியோர்...

பழங்குடியினர் குடியிருப்பில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி

வாலாஜாபாத், ஜன.23:காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தைகள் கண்காணிப்பு சேவை நிறுவனத்தின் சார்பில் இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி முகாம் நேற்று வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சி பழங்குடியினர் குடியிருப்பில் நடைபெற்றது. குழந்தைகள் கண்காணிப்பு நிறுவனத்தின் நிர்வாகி ராஜி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிங்காடிவாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள...

காஞ்சிபுரத்தில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம், ஜன.22: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை காலை 11...

சூனாம்பேடு பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்

செய்யூர், ஜன.22: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. புதுச்சேரி, தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. மேலும், சூனாம்பேடு பெரிய ஊராட்சி என்பதாலும், அதிக மக்கள் இருப்பதாலும் இந்த பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள்...

சித்தாமூர் நான்கு முனை சந்திப்பில் பொது கழிப்பறை கட்டித்தர கோரிக்கை

செய்யூர், ஜன.22: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியில் நான்குமுனை சந்திப்பு பகுதி அமைந்துள்ளது. தினமும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் கூடுகின்றனர். அதிக பொதுமக்கள் கூடும் இந்த முக்கிய பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் அவசர காலங்களில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது...

செம்மஞ்சேரியில் உலக தரத்தில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்

சோழிங்கநல்லூர், ஜன.21: செம்மஞ்சேரியில் ரூ.261 கோடியில் உலக தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டம் சென்னையில் நடக்கும். அதற்கே தமிழகம் அமர்க்களப்படும். ஆனால், இன்றைக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துமளவுக்கு தமிழ்நாடு அபரிதமான வளர்ச்சியை கண்டுள்ளது....

சம்பள பாக்கியை கேட்ட டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் நண்பருக்கு ஆயுள் சிறை

குன்றத்தூர், ஜன.21: சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை சுவற்றில் மோதி கொலை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செங்கல், மணல், ஜல்லி சப்ளை செய்யும் சந்தோஷ் ஞானகுமாருடன் சேர்ந்து, அடையாறு பகுதியை சேர்ந்த குட்டி என்கிற...

ஆந்திர பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது

காஞ்சிபுரம், ஜன.21: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற ஆந்திர பேருந்தில் சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்திச் சென்ற நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு...

திருவாதூர் ஊராட்சியில் கோமாரி தடுப்பூசி முகாம்

  மதுராந்தகம், ஜன.20: திருவாதூர் ஊராட்சியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் திருவாதூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய...