பாபநாசத்தில் பள்ளி, கல்லூரி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
தஞ்சாவூர், ஆக.12: பாபநாசத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் மசூதி அருகே அமைந்துள்ள மதுபான கடையை பொதுமக்கள் நலன் கருதி அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல்வேறு முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலை...
தமிழக முதல்வர் உருவபொம்மை எரித்த வழக்கு திமுகவினர் 5 பேருக்கு ஜாமின்
தஞ்சாவூர், ஆக.12: எதிர்க்கட்சித் தலைவரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தஞ்சையில் முதல்வர் உருவ பொம்மையை எரித்த வழக்கில், கைது செய்யப்பட்ட திமுகவினர் 5 பேருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவரும்,...
காய்கறி விற்ற மூதாட்டி கார் மோதி பலி
திருவையாறு. ஆக.10: திருவையாறு அடுத்த அரசூர் மெயின்ரோட்டை சேர்ந்த மகாலிங்கம் மனைவி காமாட்சி (65). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். மகாலிங்கம் இறந்துவிட்டார். காமாட்சி மட்டும் தனியாக வசித்து வந்தார். அரசூர் மெயின்ரோட்டில் தரைக்கடையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வழக்கம்போல நேற்று சாலையோரம்...
கும்பகோணம் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை
கும்பகோணம், ஆக.10: கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் அமைந்துள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு தங்கள் குடும்ப மேன்மைக்காக தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிட வேண்டி விளக்கேற்றி வழிபட்டனர். நிறைவாக திருவிளக்கிற்கு மங்கள...
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும்; விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்
தஞ்சாவூர், ஆக.10: காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க அம்மாபேட்டை ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க அம்மாபேட்டை ஒன்றிய மாநாடு தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் அருகே கோவிலூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கருப்பையா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் மாநாட்டை தொடங்கி வைத்துப்...
அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
ஒரத்தநாடு ஆக.8: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் அனந்த கோபாலபுரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கையில் போதைக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி...
கும்பகோணம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பரிதாப பலி
திருவிடைமருதூர், ஆக.8: கும்பகோணம் அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பகோணம் பெளண்டரிகபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் விஜயகுமார் (35) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று விஜயகுமார் தனது இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் மெயின் ரோட்டில்,...
8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர், ஆக.8: தஞ்சையில் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து ஏராளமான தி.மு.கவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வந்தடைந்தனர். பின்னர், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான...
கும்பகோணம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பரிதாப பலி
திருவிடைமருதூர், ஆக.8: கும்பகோணம் அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பகோணம் பெளண்டரிகபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் விஜயகுமார் (35) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று விஜயகுமார் தனது இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் மெயின்...
