பெரியகோயிலை ட்ரோன் மூலம் படம்பிடித்த வாலிபரால் பரபரப்பு

தஞ்சாவூர், ஜூன் 11: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலை ட்ரோன் மூலம் படம் பிடிக்க மற்றும் கோவிலில் ரீல்ஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...

பொது விநியோக திட்டத்தில் குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம்

தஞ்சாவூர், ஜூன் 11: தஞ்சை கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன்...

தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 11: திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே எப்போது மின்சாரம் வரும், போகும் என தெரியாத அவல நிலை நிலவி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்வோரும், வீட்டில் வேலை செய்பவர்களும், கடை வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஆட்சியில் இதுபோன்ற பிரச்சனை...

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

திருவிடைமருதூர், ஜூன் 9: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் செருகுடியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மாத்தூர்- நன்னிலம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை...

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதை டூவீலரால் ஆக்கிரமிப்பு

தஞ்சாவூர், ஜுன் 9: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பொதுமக்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சாய்தளப்பாதை மற்றும் நடைபாதையில் இருசக்கர வாகனங்களை கண்மூடித்தனமாக நிறுத்தி வைப்பதால், சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் உதவியுடன் வருபவர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல்...

வேளாண்மை தொழிலில் ஈடுபடும் டிராக்டருக்கான வரிகளை முழுவதும் ரத்து செய்ய வேண்டும்

தஞ்சாவூர், ஜுன் 9: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இ.கம்யூ) சார்பில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வேளாண்மைத் தொழிலில் ஈடுபடும் டிராக்டர்கள் பயன்பாடு என்பது வயல்வெளிகள், சேற்று பகுதிகள், கிராமப்புறச் சாலைகள் ஆகியவையாகும். இந்த நிலையில் துரித சாலை...

2026-27ம் கல்வியாண்டிற்கான செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளியில் மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், ஜூன் 8: தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம் மேம்பாலம் அருகே மாற்றுதிறனாளிகள் நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, விடுதி வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 2026-27ம் கல்வியாண்டிற்கான 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்...

திருவையாறு அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து சேதம்

திருவையாறு, ஜூன் 8: திருவையாறு அருகே பெரமூர் ஊராட்சிக்குட்பட்ட எட்டரை வேலி பகுதியில் வைக்கோல் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 லட்சம மதிப்பிலான வைக்கோல் மற்றும் தளவாட பொருட் கள் எரிந்து சேதம் அடைந்தது. திருவையாறு அருகே பெரமூர் ஊராட்சி எட்டரை வேலி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கிருபானந்தம் ஆகியோருக்கு பெரமூர் -அணக்குடி சாலையில் இருந்த...

மதுபானக்கடைகளை அகற்றகோரி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 8: கும்பகோணம் பேருந்து நிலையம் அருகிலுள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், புதிய மாவட்டம் அறிவிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். கும்பகோணம் பேருந்து நிலையம் அருகாமையில் செயல்பட்டு வரும் 4 மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய...

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மேடை திறப்பு விழா சேதுபாவாசத்திரம் அருகே எம்எல்ஏ திறந்து வைத்தார்

பேராவூரணி, ஜூன்.6: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு ஊராட்சி, காத்தாயி அம்மன், வால் முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்திருக்கும் கோயில் இடத்தில், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ அசோக்குமார் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி, விழா மேடையை மக்கள்...