ஒரத்தநாடு தாலுகாவில் 28 விஏஓ பணியிட மாற்றம்

ஒரத்தநாடு, ஆக. 5: ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட 28 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தஞ்சை கோட்டாட்சியர் உத்தரவு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட 28 கிராமங்களில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களை கடந்த மாதம் 29ம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டத்தின் மூலம் தஞ்சாவூரு கோட்டாட்சியர் இலக்கியா...

கும்பகோணத்தில் ஆட்டோ திருடிய 2 பேர் கைது

கும்பகோணம், ஆக.5: கும்பகோணம் உட்கோட்ட காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 28ம் தேதி இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை காணவில்லை என கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி...

அதிராம்பட்டினத்தில் இ.யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர், ஆக. 5: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் நகர நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் வழக்கறிஞர் இசட், முஹம்மது தம்பி தலைமை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். நகர செயலாளர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசியத்...

பொதுவினியோகத் திட்டத்திற்காக தெலுங்கானாவில் இருந்து தஞ்சைக்கு 2700 டன் புழுங்கல் அரிசி வந்தது

    தஞ்சாவூர், ஆக 4: தெலுங்கானாவில் இருந்து தஞ்சைக்கு 2700 டன் புழுங்கல் அரிசி தஞ்சை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் வந்தது. தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கல்அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நேற்று சரக்கு ரயிலில்...

நாளை மின்நிறுத்தம்

    தஞ்சாவூர், ஆக. 4: தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதியில் நாளை மின்தடை செய்யபடுகிறது. இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய ஆனந்த் கூறியதாவது: தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்...

தண்ணீரில் மூழ்கி பலி

  பேராவூரணி, ஆக. 4: திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபர் பேராவூரணி அருகே சடலமாக மீட்கப்பட்டார்.திருவோணம் தாலுக்கா புகழ் சில்லத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்செல்வம் மகன் கார்த்தி (20) இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் மதியம் நண்பர்களுடன் வெட்டிக்காடு ஆற்றுக்கு குளிக்கச் சென்றவர் ஆற்று சுழலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். நண்பர்கள்...

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தஞ்சையில் பூக்கள் விலை கடும் உயர்வு

  தஞ்சாவூர், ஆக 3: ஆடிப்பெருக்கை முன்னிட்டு தஞ்சையில் பூக்கள் விலை கடும் உயர்வு. கனகாம்பரம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆடி மாதம் இந்து மதத்தில் புனித மாதமாக கருதப்படுகிறது. அதுவும் இந்த மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு நாளில், நீர் நிலைகளை போற்றி வழிபடுவதும், சுப காரியங்களை தொடங்குவதும் நல்லதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு...

திவ்ய திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி மாத தீமிதி விழா

  கும்பகோணம், ஆக.3: கும்பகோணம் அருகே தாராசுரம் மந்திரபீடேஸ்வரி மகா திவ்ய திரௌபதி அம்மன் கோயிலில் ஆடி மாத அக்னி ஆணி தீமிதி திருவிழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னி ஆணி இறங்குதல் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரைத்தெருவில் பிரசித்தி பெற்ற மந்திரபீடேஸ்வரி மகா திவ்ய திரௌபதி அம்மன்...

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் மாயம்

  ஒரத்தநாடு, ஆக. 3: ஒரத்தநாடு அருகே ஆற்றில் நண்பர்களோடு குளிக்க சென்ற இன்ஜினியரிங் படித்த பட்டதாரி இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து மாயம். மாயமான இளைஞரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் கார்த்திக்...

கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராமங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  தஞ்சாவூர், ஆக. 2: கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராம மக்களுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேளாண் பொறியியல் துறை சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை 27 கிராமங்கள் கொள்ளிடம்...