பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: 7 கிலோ பறிமுதல்

தண்டையார்பேட்டை: குஜராத் மாநிலம், டாட்டா நகரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு பெரம்பூர் ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அந்த ரயிலிலிருந்து கீழே இறங்கிய 2 பேர், நடைபாதையில் அங்குமிங்குமாக சந்தேக நிலையில் கைப்பையுடன் சுற்றி திரிந்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ரயில்வே போலீசார், சந்தேக நிலையில் சுற்றி திரிந்த...

பெண்ணை கொன்று சடலத்துடன் 3 நாள் தங்கிய புரோட்டா மாஸ்டர்: பரபரப்பு தகவல்

தேனி, செப். 13: தேனி அருகே பெண்ணைக் கொன்று 3 நாட்களாக சடலத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரத்தில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சவள்ளி (38). கடந்த 9ம்...

தஞ்சாவூர் அருகே வீட்டில் புகுந்து மாணவிக்கு சிறுவன் பாலியல் தொல்லை

வல்லம்: தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியை சேர்ந்தவர் 16வயது மாணவி. உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததோடு அங்கு தூங்கி கொண்டு இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த...

குட்கா வழக்கில் ரூ.50,000 லஞ்சம் ஏட்டு சஸ்பெண்ட்

மயிலாடுதுறை, செப். 13: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே எடுத்துக்கட்டிசாத்தனூரில் சில மாதங்களுக்கு முன்பு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்த நிலையில் மளிகைக்கடை உரிமையாளரை ஸ்டேஷன் பிணையில் விடுவிக்க போலீசார் ரூ.50ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில்...

பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சி: தடுத்த மனைவிக்கும் வெட்டு; தந்தை கைது

ஆலங்குளம்: பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற காதலியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே செட்டியூரைச் சேர்ந்தவர் தங்கசாமி. குடும்பத்துடன் ஆலங்குளத்தில் வசித்து வருகிறார். இவரது மகன் ஆகாசும் (23), நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகள்...

பனியன் நகரத்தில் பயங்கரம் வீடு புகுந்து சரமாரியாக அடித்து கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை: ஒரே வாரத்தில் 4 கொலைகளால் மக்கள் பீதி

திருப்பூர்: பனியன் நகரமான திருப்பூரில் வீடு புகுந்து சரமாரியாக அடித்து கழுத்து நெரித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் 4 கொலைகள் நடந்து உள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதிகா (36). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த...

ஆசிரியர் பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை

சின்னசேலம்: அரசு பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் மனமுடைந்து விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் அறிவியல் ஆசிரியர் ஜெகதீசன் (46) என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த...

மணலி புதுநகரில் நெட்சென்டர் ஊழியரிடம் நூதனமுறையில் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த ஆசாமி கைது

மணலி: மணலிபுதுநகரில் நெட்சென்டர் பெண் ஊழியரிடம் நூதனமுறையில் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மணலி புதுநகர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மனைவி போஸ்னியா (27). அதே பகுதியில் உள்ள நெட் சென்டரில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 8ம்தேதி வழக்கம்போல் நெட்சென்டரில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த...

இரவு பார்ட்டியில் கணவருடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டே மாமனாரை கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டிய மருமகள்: லைவில் கொ* வியூகங்களை வகுத்து கொடுத்தது அம்பலம்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் மாமனாரை கூலிப்படையை ஏவி கொ* செய்துவிட்டு, கிளப்பில் கணவருடன் நடனமாடி நாடகமாடிய மருமகளை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் வினீத் மனோச்சா (63) வசித்து வந்தார். இவர், தனது மருமகள் ஷாலு மனோச்சா (36) இரவு நேரங்களில் பார்ட்டிகளுக்கு சென்று வருவதை...

திருவொற்றியூரில் பரபரப்பு; பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த சகோதரர்கள் 2 பேர் கைது: சொத்து பிரச்சனையில் சகோதரரை கொ* செய்ய திட்டமிட்டது அம்பலம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த சகோதரர்கள் 2 பேர்கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. சொத்து பிரச்னையில் சகோதரரை கொ* செய்ய திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்த திரைப்படம் மற்றும் டிவி சீரியல் துணை நடிகர் பிரதீப்ராஜ் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக...