புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே ஒரே வீட்டிற்குள் 2 விஷப்பாம்புகள்: தீயணைப்புத்துறை உயிருடன் மீட்பு

கறம்பக்குடி, மார்ச். 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்மானிப்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். விவசாயி. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கிறார். இவரது வீட்டுக்குள் நேற்று 2 விஷப்பாம்புகள் புகுந்து பயமுறுத்ததியுள்ளன. தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பாபில் குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். இரண்டு விஷ பாம்புகளை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில்...

கறம்பக்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்

கறம்பக்குடி, மார்ச். 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மைலன் கோன் பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி யில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்களின் நலன் கருதி மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் ஊராட்சி கறம்பக்குடி ஒன்றிய நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்திருந்தனர்....

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கறம்பக்குடி மார்ச் 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நம்ப ன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவர் வளர்த்து வந்த ஆடு அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அக்கம் பக்கத்தினர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தீயணை நிலைய அலுவலர் பாபில் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கிணற்றுள் இறங்கி...

திருக்களம்பூர் மேலக்களம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பொன்னமராவதி,மார்ச்2: பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மேலக்களம் சாலையினை சீர் செய்து புதிதாக தார்சாலை போடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தின் மிகப்பெரிய ஊராட்சி திருக்களம்பூர் ஊராட்சி. திருக்களம்பூரிலிருந்து மேலக் களம் வழியாக பிரான்மலை செல்லும் திருக்களம்பூர் ஊராட்சிக்கு கட்டுப்பட்ட சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த...

அரவம்பட்டி பிரிவு சாலையில் முன்னெச்சரிக்கை சோலார் லைட் அமைக்க வேண்டும்

கந்தர்வகோட்டை, மார்ச்.2: புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரவம்பட்டி பிரிவு சாலைக்கு முன்னெச்சரிக்கை சோலார் லைட் அமைக்க வாகன ஒட்டிகள் கோரி க்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள தஞ்சை-மதுரை தேசிய நெடுச்சாலையில் தினசரி அதிக அளவில் பேருந்துகளும், லாரிகளும், கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அரவம்பட்டி, ராமுடையான்பட்டி...

கீரமங்கலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து இயக்க கோரிக்கை

அறந்தாங்கி, மார்ச்.2: கீரமங்கலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீரமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி, திண்டுக்கல், பழனி வழியாக கோயம்புத்தூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக கீரமங்கலம் பேரூராட்சி உள்ளது. இந்த பகுதியில் இருந்து...

புல்வயல் அரசுபள்ளியில் பழங்கால பயன்பாட்டு பொருட்கள் கண்காட்சி

இலுப்பூர் பிப்.28: அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பழங்கால பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவியர்கள் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பொருட்களை தயார் செய்து கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தனர். இக் கண்காட்சியில் புல்லாங்குழல், இலைத் தோரணங்கள்,...

இலுப்பூர் பகுதியில் காணாமல் போன செல்போன் மீட்பு

இலுப்பூர், பிப்.28: இலுப்பூர் பகுதியில் காணாமல் போய் மீட்கப்பட்ட 11 செல்போன்களை இலுப்பூர் டிஎஸ்பி உரியவர்களிடம் வழங்கினார். இலுப்பூர் காவல் நிலைய உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 11 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இலுப்பூர் உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளான இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை பகுதியில் காணாமல் போன செல்போன்கள்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

புதுக்கோட்டை,பிப்.28: தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், அனைத்து பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் நேற்று இரண்டாம் நாளாக பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மின்வாரிய ஊழியர் சம்மேளனத்தின் தலைவர்....

இலுப்பூரில் காளிகாபரமேஷ்வரி அம்மன் கோயில் திருவிழா

இலுப்பூர், பிப்.27: இலுப்பூர் கண்ணாரத்தெருவில் அமைந்துள்ள காளிகாபரமேஷ்வரி அம்மன் கோயில்திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இலுப்பூர் கண்ணாரத்தெருவில் மகாகணபதி காளிகா பரமேஷ்வரிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது. துவங்கிய நாள் முதல் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் பெற்றன. விழாவின் முக்கிய...