அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

  தர்மபுரி, மார்ச் 9: தர்மபுரியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட மகளிர் துணை குழ அமைப்பாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தெய்வானை வரவேற்றார். மாவட்ட தலைவர் சுருளிநாதன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகி...

ரூ.40 லட்சத்தில் மசாஜ் செய்யும் இடம் திறப்பு

  பென்னாகரம், மார்ச் 8: ஒகேனக்கல்லில், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட மசாஜ் செய்யும் இடத்தை கலெக்டர், எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்.  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அருவிகளில் குளித்தும்,...

திமுக அலுவலகத்தில் மகளிர் தின விழா

  அரூர், மார்ச் 9: உலக மகளிர் தின விழாவை ஒட்டி, அரூர் திமுக அலுவலகத்தில் நகராட்சி தலைவர் இந்திராணி தலைமையில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கேக் வெட்டி அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் சூர்யா தனபால், நகர செயலாளர் முல்லைரவி ஆகியோர் முன்னிலை...

கலப்பட டீ தூள் பதுக்கிய 3 கடைகளுக்கு அபராதம்

நல்லம்பள்ளி, மார்ச் 4: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட சோம்பட்டி பகுதியில் உள்ள டீக்கடைகளில் கலப்பட டீ தூள் பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்குமார் மற்றும் இளநிலை உணவு பகுப்பாய்வாளர் கார்த்திக் ஆகியோர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை...

புதிய உழவர் சந்தை அமைக்க எம்எல்ஏ ஆய்வு

நல்லம்பள்ளி, மார்ச் 4: நல்லம்பள்ளியில், 40 சென்ட் பரப்பில் புதிய உழவர் சந்தை அமைக்க எம்எல்ஏ ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்டையொட்டி, சுமார் 40 சென்ட் பரப்பளவில் புதிய உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. அங்குள்ள பழுதடைந்துள்ள பழைய வேளாண் கட்டிடங்களை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய உழவர் சந்தை அமைக்கப்பட...

அரூரிலிருந்து மினி பேருந்து சேவை

அரூர், மார்ச் 4: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் கலசப்பாடிக்கு அரூரிலிருந்து மினி பேருந்து சேவையை மாவட்ட கலெக்டர் சதீஸ், ஆ.மணி எம்.பி., ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கலசப்பாடி மலை கிராமம் உள்ளது. இக்கிராமம் அரூரில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதில் 16 கி.மீ...

சர்வீஸ் சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்கள்

காரிமங்கலம், மார்ச் 3: காரிமங்கலம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை பணிக்காக போடப்பட்ட ஜல்லிக் கற்கள் சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், அகரம் பிரிவு ரோடு,...

காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு

பென்னாகரம், மார்ச் 3: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், நேற்று சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மகன் விக்னேஷ் (24). இவர் ஓசூர் பேளகொண்டபள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது நண்பர்கள் 10...

இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, மார்ச் 3: தர்மபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில், நேற்று பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாநில தலைவர் பட்டாபிராமன், மாவட்ட செயலாளர் பிரதாபன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட நார்த்தம்பட்டி அருந்ததியர் கிராம...

தர்மபுரி சிப்காட்டில் நில மதிப்பீடு தொகையை குறைக்க நடவடிக்கை

தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வரும், நில மதிப்பீடு தொகையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு,குறு முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டத்தில் 1,733 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்காவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி திறந்து வைத்தார்....