மலை கற்றாழையை வெட்டிய இருவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

கடத்தூர், செப். 22: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி வன சரகத்திற்குட்பட்ட கடத்தூர் அருகே மணியம்பாடி வருவாய் கரடு வனப்பகுதியில், மலை கற்றாழை கள்ளத்தனமாக வெட்டப்படுவதாக, அரூர் வன அலுவலர் ஆனந்த்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனவர் கணபதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கரடு வனப்பகுதியில் மலை கற்றாழைகளை வெட்டிக்கொண்டிருந்த, அதே...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

காரிமங்கலம், செப். 22: காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஏ.முருக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (22ம் தேதி) முருக்கம்பட்டி ஊராட்சியில் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் முகாமில், பல்வேறு அரசு துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை...

சூதாடிய 6 பேர் கைது

தர்மபுரி, செப். 22: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் எஸ்ஐ பரமேஸ்வரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஒகேனக்கல் அருகே விடுதியையொட்டி, கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் சிலர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து...

நாகதாசம்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பாப்பாரப்பட்டி, செப்.19: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டி கிராமத்தில் பிலியனூர், தித்தியோப்பனஹள்ளி, நாகதாசம்பட்டி ஊராட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை சான்றுகள் கேட்டும், இலவச பட்டா, பட்டா பெயர் மாற்றம், மின்இணைப்பில் பெயர் மாற்றம் கோரி...

இருளப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.19: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், இருளப்பட்டி சமுதாய கூடத்தில், 3ம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு...

தர்மபுரி பச்சமுத்து பிசியோதெரபி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

தர்மபுரி, செப்.19: தர்மபுரி பச்சமுத்து பிசியோதெரபி கல்லூரியில், நடப்பு 2025-2026 கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கீத்குமார், இயக்குனர்கள் சசிகலா பாஸ்கர், பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கணேசன் வரவேற்று...

வரத்து அதிகரிப்பால் அரூரில் மாதுளை விற்பனை ஜோர்

அரூர், செப்.18: மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிக்கு அதிக அளவிலான மாதுளை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. சீசன் காலங்களில் அரூர் நகரில் சாலையோரங்களில் கடைபோட்டு தள்ளு வண்டிகளில் வைத்து மாதுளம் பழங்களை விற்பனை செய்வது வழக்கம். தவிர, டூவீலர் மற்றும் சைக்கிளில் எடுத்துச்சென்ற வீடு வீடாக மாதுளம் பழங்களை விற்பனை...

மாவட்ட காவல் துறை சார்பில் மக்களின் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி, செப்.18: தர்மபுரியில் மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று நடந்த பெட்டிஷன் மேளாவில் 94 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது.தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், பெட்டிஷன் மேளா (பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்) நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்பிமணியம், ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தர்மபுரி...

கடத்தூர் ஒன்றியத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி

கடத்தூர், செப். 18 : கடத்தூர் ஒன்றியம், அஸ்தகிரியூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.94 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது....

அனுமதியின்றி பேனர் வைத்த தேமுதிகவினர் மீது வழக்கு

அரூர், செப். 17: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தேமுதிக 21ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அரூர் தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், தேமுதிகவினர் பேனர்...