வெற்றிலை மூட்டைக்கு ரூ.10 ஆயிரம் அதிகரிப்பு

கடத்தூர், ஜன.12: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வெற்றிலை வாங்க வருகின்றனர். மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி, கோம்பை, அஸ்தகிரியூர், முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம்...

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 43,200 பேர் பயன்

தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மாவட்டத்தில், உயிர் காக்கும் உன்னத திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம், கடந்த 2025ம் ஆண்டில் 43,200 பேர் பயன் பெற்றுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி, உயிர் காக்கும் 108 உன்னத திட்டமான அவசர கால ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தர்மபுரி...

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 773 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மாவட்டத்தில் 2025ம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 773 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் சாலை விபத்து உயிரிழப்புகளில், 67 சதவீத விபத்துக்கள் நேரான சாலையில் நடக்கிறது. இளம் வயதினர் 18 முதல் 45 வயது உடையோர் 66.4 சதவீதம் பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்....

ஆங்கில துறையில் சிறப்பு கருத்தரங்கு

தர்மபுரி, ஜன.10: தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மதுரை தியாகராஜர் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், இலக்கிய புத்தகங்களை நாம் எவ்வாறு தியரி அடிப்படையில் அணுகலாம் என்பதை பற்றியும்,...

சாலை விபத்தில் வியாபாரி பலி

தர்மபுரி, ஜன.10: பென்னாகரம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் குமார்(46). இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி கூழ், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட சீசன் வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீபத்தில் பென்னாகரத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டு விசேஷத்துக்கு, குமார் குடும்பத்துடன் வந்திருந்தார். நேற்று முன்தினம், வீட்டில் இருந்து மருமகனின் பைக்கில் மளிகை கடைக்கு சென்றுள்ளார். பென்னாகரம்-நாகனம்பட்டி ரோடு விநாயகர்...

அரசு பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் அமைக்க பூமிபூஜை

அரூர், ஜன.10: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகராட்சி சார்பில் மூலதன மானிய நிதி 2025-26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. தர்மபுரி எம்பி ஆ.மணி தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி தலைவர்...

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி டவுன் எஸ்ஐ வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது பிடமனேரி ஏரிக்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும், சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த...

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தர்மபுரி, ஜன.9: பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளியை சேர்ந்தவர் இளங்கோ, கூலி தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நெஞ்சுவலி அதிகமான நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்...

சூதாடிய 7 பேர் கைது ரூ.35,330 பறிமுதல்

தர்மபுரி, ஜன.9: ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். ஏர்கோல்பட்டி பகுதியில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு சூதாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த செல்வம் (37), சதீஸ் (27), பாலு (58), குழந்தை கவுண்டர் (51), மாயக்கண்ணன் (48), கோவிந்தன் (60),...

பட்டன்ரோஸ் கிலோ ரூ.80க்கு விற்பனை

தர்மபுரி ஜன.8: தர்மபுரி பூ மார்க்கெட்டில் பட்டன் ரோஸ் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், தொப்பூர், நல்லம்பள்ளி, ஜருகு, தொப்பையாறு, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, புலிகரை, செல்லியம்பட்டி, இண்டூர் ஆகிய பகுதிகளில் சாமந்தி பூக்கள் மற்றும் பட்டன் ரோஸ் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகிறது. மாலைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்த பட்டன்ரோஸ்...