விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு

தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பூச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரம்யா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 1ம்தேதி வீட்டு மாடியில் துணிகளை காயபோடுவதற்காக ரம்யா சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த...

டூவீலரில் வந்து ஆடு திருட முயன்ற 3 பேருக்கு வலை

அரூர், டிச.7: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த மேலானூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி பாரதி. விவசாயியான இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்தும் வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே நாய் குரைத்துள்ளது. இதனால் பாரதி மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பழனி ஆகியோர் தூக்கம் விழித்து...

மேலாண்மைக்குழு கூட்டம்

பென்னாகரம், டிச.7: ஒகேனக்கல் ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் வேதா, துணைத்தலைவர் சத்யா ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன், கூட்டத்தின் நோக்கம் பற்றியும், பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கினார். கூட்டத்தில் பள்ளியின்...

இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறகணிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.6: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதில் 55க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர். கோர்ட்டில் வழக்கீல்கள் வழக்குகளை இ-பைலிங் முறையில் முதலில் பதிவுசெய்ய வேண்டும் எனும் நடைமுறை கடந்த 1ம்தேதி முதல் கோர்ட்டில் நடைமுறைக்கு வந்தது. இதை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி, நேற்று...

உலக மண் தினம் கொண்டாட்டம்

தர்மபுரி,டிச.6: தர்மபுரி -பென்னாகரம் சாலை விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், உலக மண் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்Qகளின் தலைவர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் மாணவ, மாணவிகள் உலக மண் தின...

உழவர் தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புலிகரையில் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில் உழவர் தின விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசனம் அமைத்தல், மண் மாதிரி...

ராமர் கோயிலில் விஷ்ணு தீபம்

காரிமங்கலம், டிச. 5: காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோயிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. ெதாடர்ந்து, நேற்று மாலை, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள்...

வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தர்மபுரி, டிச.5: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டம், நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மதியரசி, சசிகலா அனிஷா, கலைமணி, கௌதம், ஷரிஷ்வர், தமிழ்செல்வன்...

மின்வாரிய ஓய்வூதியர்கள் போராட்ட ஆயத்த கூட்டம்

தர்மபுரி, டிச.5: தர்மபுரியில், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், போராட்ட ஆயத்த கூட்டம் மாவட்ட தலைவர் சுந்தரமூர்ததி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயன், மாவட்ட பொருளாளர் சின்னசாமி, துணை செயலாளர் துரைசாமி, துணைத்தலைவர்கள் குப்புசாமி, சுப்பிரமணியம், இணை செயலாளர் ரகுபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில், ஊதிய உயர்வு,...

35 பேருக்கு வீடு தேடி பொருட்கள் விநியோகம்

பென்னாகரம், டிச.4: தாயுமானவன் திட்டத்தின் கீழ், ஊட்டமலை கிராமத்தில் 35 முதிய பயனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில், ஒகேனக்கல், ஊட்டமலை ஆகிய கிராமங்களில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர், ஏரிக்காடு, ராணிப்பேட்டை,...