தர்மபுரியில் சந்துக்கடையில் மது விற்ற 20 பேர் கைது: 400 பாட்டில் பறிமுதல்

  தர்மபுரி, ஜூன் 16: தர்மபுரியில், சந்துக்கடையில் மதுவிற்ற 20 பேரை போலீசார் கைது செய்து, 400 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தர்மபுரியில், பரவலாக சந்துக்கடைகள் மூலம் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தர்மபுரி எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு, அந்தந்த காவல்...

தர்மபுரி ரயில் நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு

  தர்மபுரி, ஜூன் 16: தர்மபுரி ரயில் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிபடை போலீசார், பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு தர்மபுரி ரயில்வே போலீஸ் எஸ்ஐ ரமேஷ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் எஸ்ஐ சரசு மற்றும் போலீசார் பேசுகையில், `பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுகளின் ‘குட் டச், பேட் டச்’...

போதிய மழை பெய்யாததால் தர்மபுரி மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள்: கருவேல முள்செடிகளை அகற்ற எதிர்பார்ப்பு

  தர்மபுரி, ஜூன் 16: தர்மபுரி மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. வறண்டு கிடக்கும் ஏரிகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல முள்செடிகளை அகற்றி மழைநீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும், ஊரகத்துறை கட்டுப்பாட்டில் 640 ஏரி, குளங்களும் உள்ளன....

3 ஆண்டுக்கு பின் நிரம்பிய இலக்கியம்பட்டி ஏரி

  தர்மபுரி, ஜூன் 15: தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையினால் ஏரி நிரம்பி, உபரிநீர் சனத்குமார் ஆற்றில் செல்கிறது. இந்த ஏரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி -சேலம் மெயின் ரோட்டில் இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி 4.5 ஏக்கர்...

கோடைகால 5ம் கட்ட நீச்சல் பயிற்சி நிறைவு

  தர்மபுரி, ஜூன் 15: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்கள் நடந்து வந்தன. அந்த வகையில், 5ம் கட்ட நீச்சல் பயிற்சி, கடந்த 5ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், டீ சர்ட்டுகளும்...

ஊருக்குள் செல்லாத பஸ்சை சிறைபிடித்த மக்கள்

  காரிமங்கலம், ஜூன் 15: காரிமங்கலம் அருகே ஊருக்குள் செல்லாத தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி- கிருஷ்ணகிரி வழியே மாட்லாம்பட்டி பெரியாம்பட்டி காரிமங்கலம் வழியாக செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு அரசு சார்பில் பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பர்மிட்டை பொருட்படுத்தாமல் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு...

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.84.24 லட்சம் நல உதவிகள்

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி கிராமத்தில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, 153 பயனாளிகளுக்கு ரூ.84.24 லட்சம் மதிப்பில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், `தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம், பின்தங்கிய பகுதிகளை தேர்வு...

பள்ளி மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு

பென்னாகரம், ஜூன் 11: பென்னாகரம் அருகே ஒகேனக்கல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில், மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் தொற்று பரவும் முறைகள், மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கம்

தர்மபுரி, ஜூன் 11: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் தங்கள் பணியை தொடங்கினர். மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணிகளில்...

தர்மபுரி ஜி.ஹெச்.,ல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்: கலெக்டரிடம் மனு

தர்மபுரி, ஜூன் 9: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணனிடம், தர்மபுரி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் விமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு தர்மபுரி மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினசரி வந்து சிகிச்சை...