நிதி நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மாயம்

தர்மபுரி, நவ.12: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஈசல்பட்டி சாமியார் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (55), விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே...

வனவிலங்கு வேட்டையாட முயன்ற தந்தை, மகனுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

அரூர், நவ.12: தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில், வனப்பகுதிகளில் வேட்டைத்தடுப்பு, ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று காலை, மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, வனவர்கள் விவேகானந்தன், பவித்ரா, ஐயப்பன், வனக்காப்பாளர்கள் ரமேஷ்குமார், இளவரசன், வனக்காவலர் லட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், மொரப்பூர் வனச்சரகம், வாதாப்பட்டி பிரிவு,...

நிழற்கூடத்தை ஆக்கிரமித்து வைத்த தள்ளுவண்டி கடைகள்

காரிமங்கலம், நவ. 12: காரிமங்கலம் பேரூராட்சியில் ராமசாமி கோவில் பஸ் நிறுத்த பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தின் முன்புறத்தில், பானிபூரி கடை உட்பட தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கிருந்து...

உழவர் தின விழா நிகழ்ச்சி

அரூர், நவ. 11: அரூர் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில் நாளை (12ம் தேதி) காலை 10 மணி அளவில், அரூர் வேளாண்மை துறை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில், உழவர் தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி வேளாண் பொறியியல்...

ரூ.3.57 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி, நவ. 11: தர்மபுரி 4 ரோடு அருகில் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி உள்ளது. இந்த அரசு அங்காடிக்கு தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 12 விவசாயிகள், நேற்று வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 564.850 கிலோ வந்திருந்தது. பட்டுக்கூடுகள் 19 தொகுதிகளாக ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டுக்கூடுகளின்...

வரத்து குறைந்ததால் தேங்காய் விலை உயர்வு

காரிமங்கலம், நவ. 11: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், குடிமேனஅள்ளி, தட்ரஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தையில் 1 லட்சத்திற்கு...

பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

பாப்பாரப்பட்டி, நவ. 7: பென்னாகரம் அருகே நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பாப்பாரப்பட்டியில் இருந்து நல்லப்பநாயக்கன்நெல்லிக்கு செல்ல சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக இந்த சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி...

ரூ.30லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 7: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் நேற்று வெற்றிலை வார சந்தை நடந்தது. இதில், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, காங்கேயம், அரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகள் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில், பொம்மிடி, கே.என்.புதூர், கொமத்தம்பட்டி, முத்தம்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, தாளநத்தம், அய்யம்பட்டி, காவேரிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு...

அரூரில் தக்காளி விலை உயர்வு

அரூர், நவ. 7: தர்மபுரி மாவட்டம் அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில், 20க்கும் மேற்பட்ட தக்காளி மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளிடம் தக்காளியை கொள்முதல் செய்து சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். உள்ளூர் வியாபாரிகளும் மண்டிகளில்...

ரூ.24 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி, நவ.5: தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் நேற்று ரூ.24 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம் போனது. பட்டு வளர்ச்சித்துறை சார்பில், தர்மபுரி நான்கு ரோடு அருகே பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஈரோடு மற்றும் சித்தோடு, சத்தியமங்கலம், கரூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும்...