குடிநீர் கேட்டு சாலை மறியல்

பென்னாகரம், ஆக.5: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஏரியூர் அடுத்த நாகமரை பஞ்சாயத்துக்குட்பட்ட நெருப்பூர் மேல்காலனி பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மின் மோட் டாரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த...

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்...

முருங்கைக்காய் விலை வீழ்ச்சி

தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்டத்தில் முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.50ஆக குறைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அதகபாடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களில் இருந்து முருங்கை வரத்து, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதமாக ஒரு கிலோ...

பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

தர்மபுரி, ஆக 4: தர்மபுரி செந்தில்நகர் வாத்தியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி சுதா(32). இவரது 7 வயது குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குழந்தைக்கு துணையாக அருகில் படுத்திருந்த சுதாவிடமிருந்து, மர்ம நபர் ஒருவர் பர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை...

தென்பெண்ணையாற்றில் புனித நீராட குவிந்த மக்கள்

அரூர், ஆக.4: ஆடிப்பெருக்கையொட்டி, அரூர் அருகே அம்மாபேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்த மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஒகேனக்கல்லில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்ட நிலையில், கூட்டம் குறைவாக இருந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள சென்னம்மாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று...

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க நெறிமுறைகள் அறிவிப்பு

தர்மபுரி, ஆக.4: தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினம், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் பிரதான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். நாடு முழுவதும் பல...

மண்புழு உர உற்பத்தி விளக்க பயிற்சி

  தர்மபுரி, ஆக.3: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை துறை சார்பில், மண்புழு உற்பத்தி குறித்த அட்மா திட்ட பயிற்சி துணை வேளாண் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சோமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சித்ரா கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,...

ஜிஎஸ்டி பில் இல்லாமல் வந்த ஆயில் வாகனம் சிறைபிடிப்பு

  தர்மபுரி, ஆக.3: முன்னணி நிறுவனத்தின் பெயர் கொண்ட இன்ஜின் ஆயிலை, ஜிஎஸ்டி பில் இல்லாமல், சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு கொண்டு வந்த வாகனத்தை, சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி பில் இல்லாமல், வாகனங்களுக்கு தேவையான போலியான இன்ஜின் ஆயில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக புகார்...

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி

  தர்மபுரி, ஆக.3: தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பட்டதாரி வாலிபரிடம் ரூ.9 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட கடலை மிட்டாய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி அருகே நாயக்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்(36). எம்ஏ., பிஎட் பட்டதாரி. தர்மபுரி ஹரிகரநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன்(57). இவர் கடைகளுக்கு...

புற்று கோயிலில் திரண்ட பக்தர்கள்

தர்மபுரி, ஆக.2: தர்மபுரி எம்ஜிஆர் நகர் நாகாத்தம்மன், நாகபத்தரகாளி புற்று கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் வளையல், ஜாக்கெட் பிட், தாலி சரடு, குங்குமம் படைத்து அம்மனை வழிபட்டனர். மேலும், பெண்கள் அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி நாகாத்தம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில்...