தமிழர்கள் இல்லையா சார்..?

சென்னை மாநகர பேருந்துகளில் 1,797 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் ஏஜென்சியுடன் தவெக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விபரீத முடிவால், குறிப்பிட்ட அந்த உ.பி நிறுவனம் வடஇந்தியர்களை பணிக்கு எடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய 4...

இதுதான் மாற்றமா?

மாற்றம் என்று கூறி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தவர் முதல்வர் விஜய். ஆனால் எல்லாமே ஏமாற்றமாக அமைந்து உள்ளது. எந்தவித வெளிப்படைத்தன்மையும், எதிலும் இல்லை என்பது மிகப்பெரிய குறைபாடு. அவருக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக...

தண்ணீர்.. கண்ணீர்...

50ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றின் பாசனத்தை நம்பியே டெல்டா விவசாயிகள் முப்போகம் சாகுபடி செய்வார்கள். இதனால் தான் ‘‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்” தஞ்சாவூர் என அழைக்கப்பட்டது. மாநிலத்தின் தேவை மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே...

தமிழர்களுக்கு பாதுகாப்பு

வயிற்று பிழைப்புக்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா செல்வோரும், வடக்கே மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தமிழர்களும் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 2015ம் ஆண்டு ஆந்திரா காடுகளில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் காயமே இன்னமும் ஆறாத நிலையில், தற்போது 3 தமிழர்கள் கர்நாடகா...

இரும்புக்கரம் உயருமா?

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 3 மாதங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என்ற ரீதியில் இது நீண்டு கொண்டே போகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 30 கொலைகள், 25 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது காவல்துறை வெளியிட்டுள்ள தகவல். இது ஒருபுறமிருக்க பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்...

கண்ணீர் கடலில்...

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஆக.5ம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் படகு காற்றின் வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றது. படகு பாறையில் சிக்கியதால் பரிதவித்த மீனவர்கள் 11 பேரையும் மீட்டு, இலங்கை அரசு சிறையில் தள்ளியுள்ளது. இதேபோல கடந்த 12ம் தேதி...

சபாஷ்...

இந்திய சாலைகளில் பல்வேறு வகையான வாகனங்களால் ேபாக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் என்றால் விபத்துகளும் அதிகரித்துள்ளது. ஆண், பெண் இருபாலரும் வாகனங்களை சொந்த வசதிகளுக்காக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் உரிமம் இல்லாமல், காப்பீடு இல்லாமல் சாலைகளில் அதிவேகத்துடன் சென்று விபத்து ஏற்படுத்துவது அதிகரித்துள்ளது. சிறுவர்கள், மாணவர்கள் கூட சட்டத்தை மீறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தை...

உபரி நீர் மட்டுமே மிஞ்சும்...!

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை திறந்துவிடாமல் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது அண்டை மாநிலமான கர்நாடக அரசு. இது, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொலி வாயிலாக பங்கேற்ற தமிழக அதிகாரிகள், ‘’ஏற்கனவே...

அரசுக்கு அழகா?

ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போய் இருக்கிறது. நாளை வரை தான் கூட்டத்தொடர் உள்ள நிலையில் ஒரு அமர்வு கூட முழுமையாக நிறைவு பெறாமல் அமளியில் அவை செயல் இழந்து உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளியை பொருட்படுத்தாமல் மிக முக்கிய மசோதாக்களை மோடி அரசு அதிவேகமாக எந்தவித விவாதமும் இல்லாமல்...

பின்னோக்கி தமிழகம்

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் எனக்கூறி பொதுக்கூட்டங்களில் சினிமா வசனம் பேசி ஆட்சிக்கு வந்தார் முதல்வர் விஜய். ஆட்சிக்கு வந்து 100வது நாளை நெருங்கி விட்டது. மக்களுக்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. 200 யூனிட் வரை இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பயனை நுகர்வோர் அனுபவிக்க முடியவில்லை. மாறாக மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள்...