குரூப் 4 தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு
திருச்சி, டிச.7: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குருப் 4 போட்டித்தேர்விற்கான மாதிரி தேர்வு வரும் 8ம்தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சக்ஸஸ் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 4 போட்டித் தேர்விற்கு...
காவலன் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு
சமயபுரம், டிச.7: மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு காவலன் `எஸ்.ஓ.எஸ்’ செயலி செயல்பாடுகள், பதிவிறக்கம் முறைகள் குறித்து பெண் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல்துறை சார்பில், `காவலன் எஸ்.ஓ.எஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதில், பொது மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக பெண்கள், முதியோருக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை...
திருச்சி துறையூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
துறையூர், டிச. 6: துறையூர் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார். திருச்சி மாவட்டம் துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமை வகித்தார். விழாவிற்கு பள்ளி...
தொட்டியம் மதுர காளியம்மன் கோயிலில் சொக்கப்பனை தீப திருவிழா
தொட்டியம், டிச. 6: திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுர காளியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து சொக்கப்பனை ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரகாளியம்மன் கோயில் நிர்வாகிகள் ஊழியர்கள்...
வையம்பட்டி அருகே கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது
மணப்பாறை, டிச.6: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை சேதனையில் ஈடுபட்டனர். அப்போது ராக்கம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சிலர் கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி...
பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில் சமயபுரத்தில் 4 மணி நேரம் மின் துண்டிப்பு
சமயபுரம், டிச. 5: சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றத தலமாக திகழ்ந்து வரும் சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், மற்றும் பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மாத தொடக்கத்தில்...
திருச்சி மாவட்டத்தில் 20.19 லட்சம் செயலியில் பதிவேற்றம் 3.49 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் மறு ஆய்வு
திருச்சி, டிச. 5: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் 20.19 லட்சம் வாக்காளர்கள் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3.49 லட்சம் வாக்காளர்கள் விவரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி...
ஜமால் முகமது கல்லூரி ஆயிஷா பெண்கள் பள்ளியில் படைப்பாக்க திறன் நிகழ்ச்சி
திருச்சி, டிச.3: ஜமால் முகமது கல்லூரி ஆயிஷா பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டிச. 1 அன்று SparkFest நடைபெற்றது. இவ்விழாவை முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் இணைந்து பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாணவிகள் பலதரப்பட்ட உணவு வகைகள், மகளிர் ஆடை அலங்காரப் பொருட்கள், அரபிக் மற்றும் தீனியாத் மார்க்க கல்வி முறைகள், அறிவியல் படைப்புகள்,...
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் பிறந்தநாள் விழா
திருச்சி, டிச.3: திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன் பிறந்தநாள் விழா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார். மேலும் வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன் கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் இணை...

