மருங்காபுரியில் நவ.15ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருச்சி, நவ.13: மருங்காபுரியில் நவ.15ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டா் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மருங்காபுரி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளா்கள் ஆகியோர் கலந்து கொள்ளும்...
வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்க கூடாது சுமைப்பணி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
திருச்சி, நவ.13: வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்க கூடாது என்று சுமைப்பணி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதுகுறித்து சிஐடியூ லாரி புக்கிங் ஆபீஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ராமர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்டுகளில் 350 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை...
திருவெறும்பூரில் அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர், நவ.12: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் திருவெறும்பூர் வட்ட கிளை சார்பில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவெறும்பூர் வட்ட தலைவர் பழனியப்பன் தலைமை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டித்து திமுக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்
திருச்சி, நவ.12: இந்திய தேர்தல் கமிஷனின் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பை (SIR) கைவிடக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். திருச்சி எம்பி துரை வைகோ முன்னிலை வகித்தார்....
கஞ்சா வழக்கில் கைதான 2 பெண்கள் மீது குண்டாஸ்
திருச்சி, நவ.12: திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான 2 பெண்கள் மீது குண்டர் தடு ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனி அருகே கடந்த அக்.13ம் தேதி கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனி செல்வி (58), ராம்ஜிநகர் மலைபட்டியைச் சேர்ந்தரேவதி (60)...
மாநகரில் மின்பராமரிப்பு பணிநாளை குடிநீர் விநியோகம் ரத்து
திருச்சி, நவ.11: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும், குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்ப ட்ட கம்பரசம்பேட்டை தலை மை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I,...
வையம்பட்டி அருகே வேன் மீது டூவீலர் மோதி விவசாயி பரிதாப சாவு
மணப்பாறை, நவ.11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முன்னாள் சென்ற மினி சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் அந்தோனி(50). விவசாயி. அந்தோனி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்காக, தனது டூவீலர் நேற்று...
கொலைவழக்கு குற்றவாளி தாக்குதலில் காயம்பட்ட காவலர்களிடம் நலம் விசாரித்தார் கமிஷனர்
திருச்சி, நவ.11:திருச்சியில் கொலை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க முற்பட்ட போலீசாரை அரிவாளால் தாக்கியபோது இருவர் காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். திருச்சி பீமநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை...
துவரங்குறிச்சி அருகே குடியிருப்பில் அட்டகாசம் செய்த குரங்குகள்
துவரங்குறிச்சி, நவ. 7: வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்று அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த சொக்கநாதபட்டி, யாகபுரம் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமானது. வீட்டுக்குள் புகுந்து விடும் குரங்குகள் உணவு பொருட்களை தின்பதோடு,...


