குட்கா விற்ற வாலிபர் கைது

திருச்சி, பிப்.16: திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் குட்கா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் பிப்.14ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்டிமலை ரோடு பகுதியில் குட்கா விற்ற எ.புதூர் அன்பிலார் நகரைச் சேர்ந்த அஷ்ரப்அலி (56) கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் குட்காவை பறிமுதல் செய்து...

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி

திருச்சி, பிப்.16: மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி திருச்சி தேவர்ஹாலில் நேற்று நடந்தது. திருச்சி மாவட்ட அமெச்சூர் வலுதூக்கும் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டிகளில் திருச்சி, புதுக்கோட்டை, சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வயது, எடை அடிப்படையில்...

துறையூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

துறையூர், பிப். 16:திருச்சி மாவட்டம் துறையூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை மங்களப் பொருட்களான, சில்வர் தாம்பாளம், மஞ்சள் ,குங்குமம், வளையல், இனிப்பு காரம் பூ உள்ளிட்ட பொருட்களை...

திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை

திருச்சி,பிப்.14: திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் பெருமாள் (48). இவர் மனநோய் பாதிக்கப்பட்டு மாத்திரை உட்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிப்.7ம் தேதி அதிக மாத்திரைகள் உட்கொண்டதில், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று...

திருச்சியில் கார் மோதல் விவகாரம் இரு தரப்பு தகராறில் 3 பேர் கைது

திருச்சி, பிப்.14: திருச்சியில் கார் மோதல் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (30), இவரது பக்கத்து வீட்டுக்காரர் செபாஸ்டின் (24). இவர் பிப்.8ம் தேதி இரவு தனது காரை ஓட்டிச் சென்ற போது, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது...

திருச்சியில் புகையிலை விற்ற வாலிபர் கைது

திருச்சி, பிப். 14: திருச்சியில் புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி, பொன்மலை, மேலகல்கண்டார் கோட்டை அருகே புகையிலை விற்பனை நடப்பதாக நேற்று முன்தினம் பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி புகையிலை விற்ற அதே...

போதை மாத்திரை விற்ற ரவடி கைது

திருச்சி,பிப்.13: தாராநல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் பிப்.10ம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பூங்கா அருகே போதை மாத்திரை விற்ற சூரன்சேரி காமராஜ் நகரைச்...

புளியம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

துறையூர், பிப். 13:திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் ஊராட்சியில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் கடந்த பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதி...

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் கருத்தரங்கம்

திருச்சி, பிப். 13: ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சர்வதேச வணிக நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு சூழல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செயலர் முனைவர் மீனா தலைமை வகித்தார். கல்லூரி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், எம்.எஸ். மற்றும் இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் கஜலட்சுமி மற்றும் மேலாண்மைத் துறையின்...

பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா

  லால்குடி, பிப்.11: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் 16 மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலின்படி லால்குடி அருகே பூவாளூர் திருமூலநாதர் கோயில் சார்பாக மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும்...