திருச்சி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கிய மி.வா ஆய்வாளர் கைது: லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடி
தா.பேட்டை,செப்.30: திருச்சி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. கால்நடை மருத்துவராக உள்ள இவர், தனது வீட்டுமனையில் வீடு கட்டும்போது தற்காலிக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தியுள்ளார். தற்போது வீடு கட்டும் பணி முடிவடைந்த நிலையில்...
தீப்பிளம்பாக மாறிய வானம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வை ஒத்திவைக்க வேண்டும்
திருச்சி, செப்.30: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; பாடத்திட்டம் அதிகரிப்பு, புதிய நடைமுறை காரணமாக போதுமான கால அவகாசமின்றி முதுகலை ஆசிரியர்கள் பிஜிடிஆர்பி (PGTRB) தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தேர்வர்களின் நலன்கருதி போதுமான கால...
துவரங்குறிச்சி அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் மின்கம்பம் மாற்றப்படுமா?
துவரங்குறிச்சி, செப்.27: துவரங்குறிச்சி அருகே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சி அருகே உள்ள மாலைக்காட்டுப்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் மின் கம்பம் ஒன்று முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் அனைத்தும் உதிர்ந்சு கொட்டி கம்பி மட்டுமே மின்...
முசிறி எம்ஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா
முசிறி, செப். 27: முசிறி எம்ஐடிமகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் எம். ஐ. டி கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு எம்ஐடிகல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.எம்ஐடிகல்வி நிறுவனங்களின் ஆலோசகர் நடராஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சென் னை நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை...
மாடு திருடியவர் கைது
திருச்சி, செப்.27: திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பசுமா ட்டை திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் வீரே ஸ்வரம் கல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (64). இவர் கடந்த செப்.13ம் தேதி தனது வீட்டின் முன்பு பசு மாட்டை கட்டி வைத்திருந்தார். இந்த பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து மணிமேகலை ஸ்ரீரங்கம்...
துவரங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாவல் மரக்கன்று நடும் விழா
துவரங்குறிச்சி, செப்.25: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வனத்துறை சார்பில் துவரங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட நாவல் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் துவரங்குறிச்சி திமுக நகரச் செயலாளர் நாகராஜ், மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கி வைத்தார். அதைத்...
துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
துறையூர், செப்.25: துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் நகராட்சி 17 மற்றும் 18வது ஆகிய வார்டுகளுக்கு தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி...
பணம் கேட்டு பழ வியாபாரியை மிரட்டிய மூவர் கைது
திருச்சி, செப்.25: லால்குடி அருகே கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (33). இவர் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் தெருவில் தள்ளு வண்டியில் பழவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செப். 23ம் தேதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பணம் கேட்டனர். இதுகுறித்து ரவிக்குமார் உறையூர்...
பன்னாங்கொம்பு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மணப்பாறை, செப்.24: மக்களை நாடி அரசு சேவைகளை அளித்தும் வரும் முதலமைச்சரின் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சிகளுக்கான முகாம் பன்னாங்கொம்பு மாரியம்மன் கோயில் அருகில் நேற்று நடைபெற்றது. வருவாய் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், திமுக மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன், ஒன்றியசெயலாளர்...