புன்னம் சத்திரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது
வேலாயுதம்பாளையம், ஜன. 14: கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை, புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கார்டன் அருகே சாலையின் நடுவே நின்று கொண்டு மது அருந்திக்கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேலாயுதம்பாலையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான...
க.பரமத்தி அருகே புதுக்கநல்லி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும்
க.பரமத்தி, ஜன. 14: க.பரமத்தி அருகே உள்ள புதுக்கநல்லி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியம் காருடையாம்பாளையம் ஊராட்சியில் புதுக்கநல்லி உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் தினமும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் புதுக்கநல்லி...
தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
கரூர், ஜன.12: தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழங்கினார். கரூர் மாவட்டத்தில் உள்ள 734 நியாயவலைக்கடைகள் மூலம் 3,33,624 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை. 1 முழு நீளக் கரும்பு, ரூ.3,000 ரொக்கம் மற்றும் வேட்டி சேலை என...
கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 236 பயனாளிகளுக்கு ரூ.3.36 கோடி கடனுதவி
கரூர், ஜன.12: கரூர் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 236 பயனாளிகளுக்கு ரூ.3.36 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்ற “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் மூலம் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ. 10.78...
கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 93 மி.மீ மழை
கரூர், ஜன. 12: கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மிமீ. பனிக்காலமான ஜனவரி, பிப்ரவரியில் 16.8 மிமீட்டரும், கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் 109.5 மிமீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 238.4 மிமீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மற்றும்...
மது அருந்தியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு
கடவூர், ஜன.10: தரகம்பட்டியில் பொது இடங்களில் மது அருந்தியதாக 2 பேர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். சிந்தமாணிபட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தரகம்பட்டி அரசு மதுபானக்கடை அருகே பொது இடத்தில் தரகம்பட்டி அருகே வையாளிமடையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (22). காணியாளம்பட்டி மேற்கு தெரு அண்ணாத்துரை மகன் பாரதிகண்ணன் (26). ஆகிய...
மவுன நாடகத்தில் மாநில அளவில் சிறப்பிடம்
குளித்தலை, ஜன. 10: கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறையைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கிருஷ்ணவேணி, ரம்யா, கீர்த்தனா, ரங்கராஜ், யுவராஜா ஆகியோர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போட்டிகளில் மவுன நாடகப் பிரிவில்...
தமிழக நீதிக் கட்சி பொதுக்குழு செயற்குழு கூட்டம்
கரூர், ஜன. 10: தமிழக நீதிக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் பாஸ்கரன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது. தமிழக நீதி கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கரூர் ஈரோடு, ரோடு ஆத்தூர் பிரிவில் உள்ள கந்தன் மஹாலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் நிலைப்பாடு குறித்தும்,...
கரூர் வெங்கமேடு அருகே கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்
கரூர், ஜன.9: கணவரை காணவில்லை என மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்தவர் புஷ்பவள்ளி. இவர், வெங்கமேடு காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி அளித்த புகாரில், கரூரில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற தனது கணவர்...


