மாநகராட்சி சார்பில் வைத்துள்ள செயற்கை நீரூற்றுகள் முறையாக பராமரிக்கப்படுமா?
திருப்பூர், ஜூன் 8: திருப்பூருக்கு வருகிறவர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று பழுதாகி உள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூருக்கு தினமும் வேலை தேடி வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். இதுபோல் பனியன் வர்த்தகம் தொடர்பாகவும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர். அவர்களை வரவேற்கும்...
ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் நடந்த கூத்து அமைச்சர்களின் வருகைக்காக 1.30 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்
திருப்பூர், ஜூன் 8: திருப்பூரில் விடுமுறை நாளில் நடந்த அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் 1.30 மணி நேரம் அதிகாரிகள் காத்திருந்தனா். இதுபோல் இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகளும் பங்கேற்றத்தால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் மனிஷ் தலைமையில்...
அபராதம் விதிப்பை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
திருப்பூர், ஜூன் 6: மதுரையில் வழக்கறிஞர்களுக்கு அபராத தண்டனை விதித்த நீதிபதியின் செயலைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக காவல் துறை தனது கட்சிக்காரரை சிறையில் அடைக்க முற்பட்டுள்ளது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில்...
திருப்பூர் குமரன் பேருந்து நிலையத்தில் சேதமான மேற்கூரைகளை சீரமைக்க வலியுறுத்தல்
திருப்பூர்,ஜூன் 6: திருப்பூரில் கோவில்வழி பகுதியில் தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில், கடந்த மாதம் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றின் போது மேற்கூரைகள்...
சுயவேலைவாய்ப்பு, வருமானம் ஈட்ட சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், ஜூன் 6: சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்ட சிறுபான்மையின மக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில்...
ஒன்றிய வர்த்தக வாரிய உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் நியமனம்
திருப்பூர், ஜூன் 4: இந்திய அரசின் மிக முக்கிய வர்த்தக ஆலோசனைக்குழுவான வர்த்தக வாரியத்தின் உறுப்பினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு வர்த்தக மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு தொடர்பான...
வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை
திருப்பூர், ஜூன் 4: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் கூடுதலாக காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கவுன்சிலர்களுடன் இணைந்து...
கீரை கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை, ஜூன் 4: உடுமலை அடுத்துள்ள கிழுவன்காட்டூர், உரல்பட்டி பாப்பான்குளம் உட்பட பல்வேறு கிராமங்கள் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் தண்டு கீரை, பாலக்கரை, மணத்தக்காளி எனப்படும் சுக்கட்டிகீரை உட்பட 10-க்கும் அதிகமான கீரைவகைகள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யபட்டு வருகின்றது. இந்த நிலையில் அதிக அளவு கீரை சாகுபடி நடைபெற்று வரும் வகையில் தனியார்...
உழவர் சந்தைகளில் ரூ.11.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
திருப்பூர்,ஜூன்2: திருப்பூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் தென்னம்பாளையம் பகுதியில் தெற்கு உழவர் சந்தை, புதிய பேருந்து நிலையம் பகுதியில் வடக்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த மே மாதம் தெற்கு உழவர் சந்தைக்கு 2,152 மெட்ரிக் டன் காய்கறிகள் 7011 விவசாயிகளால் கொண்டு...


