மருத்துவ முகாம்

திருப்பூர், அக். 4: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயா்ந்து வருகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முக்கியம். இதுபோல் மாற்றுத்திறனாளிகளின் ஊன சதவீதமும் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதற்காக மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு முகாம்...

விஜயதசமி தினத்தையொட்டி கேஎம்சி சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் சேர்க்கை

அவிநாசி, அக்.4: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் உள்ள கேஎம்சி சீனியர் செகண்டரி பள்ளியில் விஜயதசமி தினத்தையொட்டி மாணவர் சேர்க்கை வித்யாரம்பம் நடந்தது. தொடர்ந்து பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமாக பள்ளித்தாளாளர் மனோகரன் விளக்கி பேசினார். பள்ளித்தலைவர் சண்முகம், லோகநாயகி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் விழாவில், பள்ளித்தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா...

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

திருப்பூர்,அக்.4: திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயா பகுதியை சேர்ந்தவர் குமார் (39). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தரணிஷ் (7), அதே பகுதியில் உள்ள வித்யாலயா அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் நேற்று மதியம் வித்யாலயா பகுதியில் உள்ள மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்...

காதலியின் தந்தை மீது சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது

திருப்பூர்,அக்.1: திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம், வீராத்தாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (46). இவர் பனியன் நிறுவன தொழிலாளி. இந்நிலையில், பெருமாளின் மகள் சத்யா அருண் என்பவருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனை பெருமாள் கண்டித்துள்ளார். இதனால் சத்யா, அருணுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதில், ஆத்திரமடைந்த அருண், அவருடைய நண்பரான சபரிநாதன் (19),...

வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்,அக்.1: ஒடிசாவை சேர்ந்தவர் பூமி பெஹரா (22). இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை பிரிந்து திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவன அறையில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்துள்ளார். கடந்த 26ம் தேதி பூமி பெஹரா...

மாநகரில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4வது குடிநீர் திட்டத்திலிருந்து மாநகருக்கு குடிநீர் பெறப்பட்டு வருகிறது.  இக்குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாய் பாதையில் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் குழாய் பாதையில் பொருத்தப்பட்ட வால்வுகள் மாற்றி அமைக்கும் சீரமைப்பு பணிக்காக வருகிற 3ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆதலால், மாநகரத்தில்...

காங்கயம் அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து

காங்கயம், செப்.30 காங்கயம் அருகே தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் நஞ்சப்ப கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த மனோகரன் (58), இவர், நத்த கடையூர் லட்சுமிபுரம் பகுதியில் தேங்காய் நார் கம்பெனி கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதில், 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.மனோகரன் அவரது மகன் இருவரும்...

கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலாவதியான சானிடைசர் பாட்டில்கள்

திருப்பூர், செப்.30: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலாவதியான சானிடைசர் பாட்டில்கள் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, இ சேவை மையம், தபால் நிலையம் உள்ளிட்ட...

ஆயுதபூஜையை முன்னிட்டு விற்பனைக்கு குவிந்துள்ள அலங்கார பொருட்கள்

அவிநாசி,செப்.30: ஆயுதபூஜையை முன்னிட்டு அவிநாசி வட்டார பகுதியில் உள்ள கடைகளில் அலங்கார பொருட்கள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. தொழில் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படும். பூஜையின் போது, வாகனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில், வண்ண காகிதங்கள், பூ வேலைப்பாடு செய்த மின்னும் வகையிலான அலங்கார வடிவங்கள்,...

கண்டக்டர் மண்டையை உடைத்த வாலிபர் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

திருப்பூர், செப். 27: திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.அந்த பஸ்சில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (45) கண்டக்டராக இருந்தார். அப்போது மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறி காங்கயம் செல்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான...