ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் சப்ளை கோரி சென்னையில் 100வது போராட்டம்
பல்லடம், ஜன. 14: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் இதுவரை தமிழகத்தில் 99 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 100வது போராட்டத்தை சென்னையில் நடத்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம், செயல்...
திருப்பூருக்கு வரத்து குறைந்தது அரசாணிக்காய் விலை உயர்வு
திருப்பூர், ஜன. 14: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை, நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. முன்னதாக இன்று (புதன்) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக கொண்டாடக்கூடிய போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வீட்டின் முகப்பு பகுதிகளில் வேப்பிலை, பூளைப்பூ, மஞ்சள் பூ உள்ளிட்டவற்றை வைத்து காப்பு...
ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பூர்,ஜன.10: திருப்பூர் ரயில்வே எஸ்.ஐ சுப்பிரமணி தலைமையிலான போலீசார், ரயில் நிலைய பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வந்தது. இந்த ரயிலின் பின்பக்க முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில்...
அவிநாசி அருகே விறகு லாரி கவிழ்ந்து விபத்து
அவிநாசி, ஜன.10: அவிநாசி அருகே விறகு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி விறகு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த தெக்கலூர் நல்லிக்கவுண்டம்பாளையம் பிரிவு புறவழிச்சாலை அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் மற்றும்...
பள்ளி வாகனம் மோதி அரசு பள்ளி மாணவன் படுகாயம்
அவிநாசி, ஜன. 10: அவிநாசி அருகே பச்சாம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ். இவரது மகன் கதிர்அரசு (10). இவர், அவிநாசி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவிநாசி ரங்காநகர் பகுதியில் ரோட்டோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம், சைக்கிள்...
பைக்குகள் மோதி 8ம் வகுப்பு மாணவர் பலி
தாராபுரம், ஜன. 9: பைக்குள் மோதிய விபத்தில் 8ம் வகுப்பு மாணவர் பலியானார். தாராபுரம் டி.காளிபாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் சின்னக்காம்பட்டி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சிறுவன், உறவினர் ஒருவருடன் பைக்கில் மூலனூர் நேக்கி சென்றார். இவர்களுக்கு முன்னால் முத்து கவுண்டன்வலசை சேர்ந்த மகுடீஸ்வரன் (30) என்பவர்...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி
திருப்பூர், ஜன. 9: திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை, மாவட்ட கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார். வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் தொடங்கி...
போலீஸ் வாகனங்கள் நிலை குறித்து எஸ்.பி. ஆய்வு
திருப்பூர், ஜன. 9: திருப்பூர் மாவட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களின் தகுதி குறித்து நேற்று மாவட்ட எஸ்.பி கிரிஷ் அசோக் யாதவ் ஆய்வு செய்தார். போலீஸ் வாகனங்கள் ஆய்வு என்பது வாகனங்களின் இயந்திரத் தரம், பராமரிப்பு, சட்டபூர்வ ஆவணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் (தீயணைப்புக் கருவிகள், முதலுதவிப் பெட்டிகள்), தொடர்பு சாதனங்கள், மற்றும் ஒளிரும் விளக்குகளின்...
அவிநாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அவிநாசி, ஜன. 8: அவிநாசி உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 37-வது சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல் கால்நடை மருத்துவமனை சென்று மீண்டும் அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை வந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் அவிநாசி உதவிக்கோட்டப்...

