ஜவுளிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி

  கோவை,ஜூலை10: கோவை காந்திபுரத்தில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வழக்கில் வெள்ளி கொள்ளையில் கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம், கிராஸ் கட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (25). இவர், அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்...

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை

  கோவை, ஜூலை 10: கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இஎஸ்ஐ மருந்தகங்களில் இருந்து மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருவார்கள். பின்னர், அவர்களின் விவரங்கள் இஎஸ்ஐ மருத்துவமனையின்...

காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் வழக்கில் மாஜி போலீஸ்காரரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு: பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

  கோவை, ஜூலை 10: காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் வழக்கில் மாஜி போலீஸ்காரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (53). இவர், காங்கிரஸ் கட்சி ஓபிசி பிரிவு தலைவராக இருந்து வருகிறார். கடந்த 5ம் தேதி...

பெயிண்டிங் ஒர்க் ஷாப் உரிமையாளர் தற்கொலை

  மேட்டுப்பாளையம், ஜூலை 9: மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி ஆண்டாள். இந்த தம்பதிக்கு பிரசாந்த் (31) என்ற மகன் உள்ளார். இவர் பெயிண்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது,...

விவசாயிக்கு பாராட்டு விழா

  கோவை, ஜூலை 9: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜிவி அரங்கத்தில் ஐநா அங்கீகாரம் பெற்ற பொள்ளாச்சி விவசாயி வள்ளுவனுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கல்வியாளர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். கேபிஆர் குழும நிறுவனங்களின் தலைவர் ராமசாமி,  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் விவசாயி வள்ளுவனை பாராட்டினர்....

உயர்கல்வி கற்க 15 சதவீதம் பேர் வரவில்லை

  கோவை, ஜூலை 9: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட அளவில் பள்ளி படிப்பு முடித்த சிலர் உயர் கல்வி கற்காமல் இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக கல்வித்துறையினர் ஆய்வு செய்து படிக்க சொல்லி கேட்ட போது சில பெற்றோர் தங்களது குழந்தைகள்...

விவசாயிகள் மகிழ்ச்சி: பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு

  வால்பாறை, ஜூலை 8: வால்பாறையில் லேசான சாரல் மழையும், இடையிடையே வெயிலும் நிலவி வருவதால் தேயிலை செடிகளில் புதிய தளிர்கள் அதிகளவில் வளர்ந்து, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள், இரண்டு இலை ஒரு மொட்டு என்ற தரநிலைப்படி பசுந்தேயிலையை பறித்து, தரம் பிரித்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். சாரல் மழையால் பறிக்கப்பட்ட...

ஊட்டி உருளைக்கிழங்கு மூட்டை ரூ.2,680-க்கு விற்பனை

  மேட்டுப்பாளையம், ஜூலை 8: தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையில் ஊட்டி உருளைக்கிழங்கு மூட்டை ரூ.2680-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு குன்னூர், கோத்தகிரி,ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்கு வாகனங்கள் மூலம்...

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

  கோவை, ஜூலை 8: கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை முகாம் நடத்தப்படும். மத்திய மண்டலத்தில் 8-7-2026 முதல் 10-7-2026 வரையிலும், கிழக்கு மண்டலத்தில் 13-7-2026 மற்றும் 14-7-2026 வரையிலும், மேற்கு மண்டலத்தில் 15-7-2026...

சிறுமுகை அருகே முறைகேடாக வண்டல் மண் எடுத்து விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  மேட்டுப்பாளையம், ஜூலை 6: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு விவசாய தேவைகளுக்காக தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று லிங்காபுரம், பெத்திக்குட்டை, புதுக்காடு உள்ளிட்ட...