விபத்தில் ஐ.டி ஊழியர் பலி
மதுக்கரை, அக்.4: கோவை அருகே ஒத்தகால் மண்டபம், பிரிமியர் மில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (34), ஐ.டி ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், தனது உறவினருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து, மலுமிச்சம்பட்டியில் இருந்து, கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள, சர்வீஸ்...
காலி மதுபாட்டில்களை வாங்க மறுத்து டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை,அக்.4: பொது இடங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதை தவிர்க்கும் வகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அந்த பாட்டில்களை திரும்ப தரும்போது ரூ.10 திரும்ப தரப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி காலி மதுபாட்டில்களை வாங்கமாட்டோம் எனக்கூறி,...
கொப்பரை திருடிய இருவர் கைது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள குடோனை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து அங்கு கொப்பரைகளை தேக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இந்த கொப்பரை குடோனில் குவித்துப் போடப்பட்டிருந்த கொப்பரைகளில், சாக்கு பைகளில் சுமார் ஒரு டன் கொப்பரையை கடந்த...
5ம் தேதி வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்
கோவை: கோவை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதிர்ந்தவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் இந்த மாதம் 5, 6, 7ம் தேதி குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நாள் மற்றும் விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த...
கள்ளிமடை பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
கோவை: கோவையை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் நேற்று இரவு தனது காரை நிறுத்தியிருந்தார். பின்னர் அவர் அங்கேயிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் காரில் இருந்து புகை வந்தது. அடுத்த சில நிமிடத்தில் தீ பிடித்து வேகமாக எரிந்தது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
கோவை, செப். 30: கோவையை சேர்ந்தவர் 13 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமி வீட்டில் இருந்தபோது சிறுமிக்கு அறிமுகமான விளாங்குறிச்சி தனலட்சுமி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுப்ரமணியன் (39) என்பவர் வீட்டிற்கு வந்தார். சிறுமி தனியாக இருப்பதை அறிந்த...
ஊராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, செப். 30: ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு உழைப்போர் உரிமை இயக்கம் (எல்டியூசி, ஏஐசிசிடியு) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு எல்டியூசி மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை...
வரும் 2ம் தேதி கோவையில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு
கோவை, செப்.30: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுபான கடைகள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலா துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை கடைகள்...
கோவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் மாற்றம்
கோவை, செப். 27: கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக நித்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்பு மேட்டூர் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்தார். இதேபோல், தெற்கு மண்டல உதவி கமிஷனராக தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி வடக்கு மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமரன், நிர்வாகத்துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, சென்னைக்கு மாற்றப்பட்டார்....