மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 63 மனுக்கள் அளிப்பு

  கோவை, மே20: கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ராஜவாய்க்காலை தூர்வார கோரி மமக-வினர் மனு கொடுத்தனர். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள்,...

கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பி அளிக்க கோவை நண்பரை தேடும் 84 வயது முதியவர்

  கோவில்பட்டி, மே 20: கோவை நண்பரிடம் கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதற்காக 84 வயது கோவில்பட்டி முதியவர் தேடி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வஉசி நகரை சேர்ந்தவர் பரமசிவன் (84). கட்டிட தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். கோவையைச் சேர்ந்த இவரது நண்பர் பால்சாமி கோவில்பட்டி கருவாட்டு பேட்டையில் கருவாட்டுக்கடை...

அம்மா உணவகத்தில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு

  கோவை, மே 20: பொதுமக்களுக்கு தரமான உணவுகளை வழங்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும் மற்றும் சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை வழங்கவும் தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி,...

காந்திபுரம் மேம்பாலத்தில் 2 இறங்கு பாதை திட்டம் முடக்கம்

  கோவை, மே 19: கோவை காந்திபுரத்தில் இரண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் 120 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. இதில் இறங்கு, ஏறு தளம் அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் கீழே இறங்க முடியாத நிலை இருந்தது. குறிப்பாக கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு பகுதியில் வாகனங்கள்...

பெரியார் அறிவுலகம் விரைவில் திறக்க எதிர்பார்ப்பு

  கோவை, மே 19: கோவையில் பெரியார் நூலகம் விரைவில் திறக்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் ‘பெரியார் நூலகம், அறிவியல் மையம்’ கட்டும் பணி கடந்த 2024ம் ஆண்டு துவங்கப்பட்டது. ரூ.245 கோடி கட்டுமான பணிகளுக்கும், ரூ.50 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5...

குறைதீர் கூட்டத்தில் குவியும் விண்ணப்பங்கள்

  கோவை, மே 19: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பவன்குமார், வருவாய் அலுவலர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு 312 மனுக்கள், வேலை வாய்ப்பு கேட்டு 8 மனுக்கள், 182 இதர...

கரடு முரடான மேடு பள்ளங்களில் சீறிப்பாய்ந்த பைக்

  கோவை, மே 18: பிரபல டயர் நிறுவனம் ஆண்டு தோறும் ‘ஆப் ரோடு’ பந்தயங்களை நடத்தி வருகிறது. மேடு, பள்ளங்கள் நிறைந்த பாதைகளை உருவாக்கி அதில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் இந்தப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று கோவை...

ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த குட்கா மூட்டை பறிமுதல்

  கோவை,மே18: ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 4 கிலோ குட்கா மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது ரயில் நிலையம் பகுதியில் உள்ள வங்கிக்கு பின்னால் ஒரு மூட்டை கேட்பாரற்று கிடந்தது. சந்தேகம் அடைந்த...

பாத்திமா அன்னை ஆலயத்தில் தேர்பவனி கோவையில் ரூ.36 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல்

  கோவை, மே 18: கோவையில் வீட்டில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.36,800 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சதாம் ஹுசைன் (29). நர்சரி வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் கார்மல் நகரை சேர்ந்த ஆட்டோ...

குடிநீர் விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்

கோவை, மே 16: கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பொதுமக்களுக்கு குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணி தொய்வின்றி நடந்து...