கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கிருஷ்ணகிரி, ஜன.12: சமூக நீதி மாணவ, மாணவியர் விடுதியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார். செப்டம்பர் 17ம்தேதி சமூகநீதி நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி சமூக நீதி மாணவர் விடுதி-1, போகனப்பள்ளி சமூக நீதி மாணவர் விடுதி-2, அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவியர் விடுதி-2,...
ஓசூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் ரூ.138 கோடியில் ரிங்ரோடு திட்டத்தை அரசு விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
ஓசூர், ஜன.12: ஓசூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.138 கோடி மதிப்பீட்டில் ரிங்ரோடு திட்டத்தை அரசு விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற சாலை கட்டமைப்புகள் இல்லை. அதனால், ஒன்றிய, மாநில அரசுகள், ஓசூர் நகரை...
திராவிட பொங்கல் வாலிபால் போட்டி
தேன்கனிக்கோட்டை, ஜன.10: தேன்கனிக்கோட்டையில் திராவிட பொங்கல் வாலிபால் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ பரிசுகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் திராவிட பொங்கல் வாலிபால் போட்டி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றன. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அதில்...
பொங்கல் சிறப்பு விற்பனை
கிருஷ்ணகிரி, ஜன. 10: பர்கூர் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜார் எதிர்புறம் யாஷிகா டிரேடர்ஸில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது இயக்குனர் வடிகி செட்டி, மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, யாஷிகா டிரேடர்ஸின் மூலம் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எற்ற வகையில் உயர்தர...
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
கிருஷ்ணகிரி, ஜன.10: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சின்னகவுண்டனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(30). பெயிண்டரான இவர் மீது, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.6.2025ல் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில், கடந்த 12.8.2025ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், டிசம்பர் 24ம்தேதி ஜாமீனில் அவர் வெளியே வந்தார். மனவேதனையில் இருந்து...
மஞ்சள் அறுவடைக்கு முன்பதிவு
போச்சம்பள்ளி, ஜன.9: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில், தற்போதே மஞ்சளை முன்பதிவு செய்யும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பணடிகை, வரும் 15ம்தேதி கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், உழவுத்தொழிலுக்கும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் விழாவில்...
பஸ் மீது வெடி வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
கிருஷ்ணகிரி, ஜன.9: கிருஷ்ணகிரி அருகே தனியார் நிறுவன பஸ் மீது வெடி வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் கடந்த 12ம் தேதி இரவு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த பஸ்...
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி, ஜன.9: சூளகிரி அருகேயுள்ள சாமல்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(22), கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). நண்பர்களான இவர்கள் இருவரும், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் சாமல்பள்ளம் - கும்மனூர் ரோட்டில் தின்னூர் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த...
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
போச்சம்பள்ளி, ஜன. 8: போச்சம்பள்ளி வட்டம், காட்டகரம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக, கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு வீடுகளில் 2 மற்றும் 3 பசுகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளை விவசாயிகள் வளர்த்து வருகிறார்கள். தற்போது போச்சம்பள்ளி தாலுகாவில் சீதோஷ்ண நிலையில்...


