17 வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை, செப். 19: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை கெண்டிக்கானூர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், அதே பகுதியில் உள்ள மல்லிப்பட்டியை...

தேன்கனிக்கோட்டையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

தேன்கனிக்கோட்டை, செப்.19: தேன்கனிக்கோட்டை 13வது வார்டில், ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 13வது வார்டு ராஜாஜி தெரு 2வது சந்தில், பொது நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்....

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

ஓசூர், செப்.19: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில் மின்வாரியத்தின் உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலக வளாகத்திலேயே, உதவி செயற்பொறியாளர் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, அலுவலக பலகையை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில்,...

மோரனஅள்ளி அரசு பள்ளியில் சமூகநீதி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

காவேரிப்பட்டணம், செப்.18: மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியாக நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசங்கர் தலைமை வகித்தார். தமிழாசிரியர் குணசேகரன் வரவேற்றார். முன்னதாக பெரியார், அண்ணா படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிநாள்...

பாப்பாரப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் விழாவில் பால்குட ஊர்வலம்

போச்சம்பள்ளி, செப்.18: பாப்பாரப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் வருஷாபிஷேக பூஜையில், பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். போச்சம்பள்ளி தாலுகா, பாப்பாரப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சென்றாயபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டான நிலையில், வருஷாபிஷேக பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை பம்பை வாத்தியங்கள் முழங்க, தாரை தப்பட்டையுடன் கொட்டாவூர்...

கெலவரப்பள்ளி அணை நீரை ஓசூர் ஏரிகளில் நிரப்ப வேண்டும் குடியிருப்போர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஓசூர், செப்.18: ஓசூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஜெயசந்திரன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். இதில் ஓசூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, உடனடியாக சீரமைக்க வேண்டும். சொத்துவரி உயர்த்தப்படுவதை...

ராயக்கோட்டை மார்க்கெட்டில் காலிபிளவர் விலை குறைந்து மூட்டை ரூ.300க்கு விற்பனை

ராயக்கோட்டை, செப்.17: ராயக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் முட்டைக்கோஸ் விலை குறைந்து, ஒரு மூட்டை ரூ.300க்கு விற்பனையானது. தென்பெண்ணை ஆற்றங்கரையிலுள்ள பந்தர்பட்டி, பண்டப்பள்ளி, தொட்டமெட்டரை, லிங்கனம்பட்டி, கருக்கனஅள்ளி, தொட்டதிம்மனஅள்ளி, கெலமங்கலம், சூளகிரி மற்றும் ராயக்கோட்டை பகுதிகளிலுள்ள கிராமங்களில் அதிகளவில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைச்சலாகும் காலிபிளவர் விற்பனைக்காக தமிழகம், புதுச்சேரி, கேரளாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில்...

சரக்கு ஆட்டோவில் 205 கிலோ குட்கா கடத்தியவர் கைது

ஓசூர், செப்.17: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் அமீரியா ஜங்ஷன் அருகில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. விசாரணையில் குட்கா பொருட்கள் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்டதும், அதை கடத்தி...

கார் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, செப்.17: பீகார் மாநிலம், கடார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிந்துகுமார் (35). இவர் பர்கூர் அருகே சின்ன பர்கூர் பகுதியில், குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு, கிருஷ்ணகிரி -சென்னை சாலையில் சின்ன பர்கூர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார்...

இலவச வேலைவாய்ப்பு முகாம்

  காவேரிப்பட்டணம், செப்.15: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், மணிகண்டன் தலைமையில் ஓசூரில் இயங்கி வரும் பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவன பணியிடங்களுக்கான இலவச மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அசோக்குமார்...