எதிர்க்கட்சி தலைவர் கைதுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
நாமக்கல், ஆக.5: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தவறிய தவெக அரசு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சினிமா பாணியில் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். கர்நாடக அரசிடம் இருந்து இவ்வாண்டு உரிய காவிரி...
வாலிபர்களால் பரபரப்பு; இணையத்தில் வீடியோ வெளியாகி வைரல்
பரமத்திவேலூர், ஆக. 5: பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலையில் வடமாநில தொழிலாளி ஒருவரை, 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோனில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோஷன்(19) என்பவர்...
மல்லசமுத்திரத்தில் தொழிலாளி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்
மல்லசமுத்திரம், ஆக.4: மல்லசமுத்திரம் அருகே, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளி தனபால்(44). இவர் கடந்த ஆண்டு, மனைவியை வெட்டி கொலை செய்த வழக்கில் கைதாகி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார். கடந்த மாதம், மல்லசமுத்திரம் பஸ் நிலையம் அருகே, டாஸ்மாக் பாரில் நடந்த தகராறில், அவரை 2 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை...
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நிறைவில் பயனாளிகளுக்கு நலஉதவிகள்: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்
சேந்தமங்கலம், ஆக.4: கொல்லிமலை வல்வில் ஓரி நிறைவு விழாவில், 166 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வல்வில் ஓரி விழா நிறைவையொட்டி, நேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில், கலெக்டர் மதுபாலன், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்.சந்திரசேகர் கலந்து கொண்டு, 166 பயனாளிகளுக்கு ரூ.84...
ஆலைகளுக்கு நெல் வரத்து குறைந்தது; நாமக்கல்லில் அரிசி விலை தொடர் உயர்வுகிலோவுக்கு ரூ.15 வரை அதிகரிப்பு
நாமக்கல், ஆக.4: அரிசி ஆலைகளுக்கு நெல் வரத்து குறைந்ததால், நாமக்கல்லில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோவிற்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. நாமக்கல் பகுதியில், 50க்கும் மேற்பட்ட அரிசி மொத்த விற்பனை மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு சின்னசேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுவயல், காங்கேயம் ஆகிய ஊர்களில் உள்ள...
கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற வாலிபர் குண்டாசில் கைது
பரமத்திவேலுார், ஆக. 3: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் அருகே பொத்தனூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக, பரமத்திவேலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சாந்தகுமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பொத்தனூர் காவிரி கரையோரம் சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்துக்து...
கொல்லிமலையில் மழையில்லாமல் அருவிகள் வறண்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்: பூங்காக்களில் பொழுதை கழித்தனர்
சேந்தமங்கலம், ஆக. 3: கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால் அருவிகள் வறண்டு போனது. இதனால் வெளியூர்களின் இருந்து குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா...
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கோலாகலம்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சேந்தமங்கலம், ஆக.3: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி 60 ஆயிரம் பூக்களால் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியை பொன் சந்திரசேகர் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட பகுதியாகும், வல்வில் ஓரி கொடை திறனையிலும், வில்...
ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்
நாமக்கல், ஆக.1: நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், கணக்கெடுப்பாளர்களாக, மேற்பார்வையாளர்களாக ஈடுபட உள்ள அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு கேரளாவில் வழங்கப்பட்டுள்ளது போல 20 அரை நாள் விடுப்பு...
