மாவட்ட அளவில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு
நாமக்கல், ஜன.12: கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம், பாரத்நெட் திட்டத்தின் கீழ்...
நாமக்கல்லில் 39 இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் நாமக்கல்லில் 39 இடங்களில் குப்பை சேகரிப்பு மையம்
நாமக்கல், ஜன.12: போகிப்பண்டிகையை குப்பை திருவிழாவாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, நாமக்கல் மாநகரில் 39 இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, வரும் 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, அழகுபடுத்தி பொங்கலுக்கு முதல்...
விவேகானந்தா பாராமெடிக்கல் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா
திருச்செங்கோடு, ஜன.10: திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் 28வது பட்டமளிப்பு விழா நடந்தது. பார்மசி கல்லூரி முதல்வர் முருகானந்தன் வரவேற்றார். நிறுவனங்களின் இணை மேலாண் இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் பட்டமளிப்பு விழாவை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினரை பேராசிரியர் சுமதி அறிமுகம் செய்து வைத்தார். விழாவிற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின்...
ரூ.25.45 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
பரமத்திவேலூர், ஜன.10: பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்கலம், கபிலர்மலை, இருக்கூர், பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரையை பொத்தனூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது....
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
பள்ளிபாளையம், ஜன.10: கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், வீரப்பம்பாளையம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 40 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம், வீரப்பம்பாளையம் கிராமத்தில், கால்நடை துறை சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லங்காட்டு வலசு கால்நடை மருத்துவர் கௌதம், கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சையளித்தார். கொள்ளை நோயான கோமாரி அம்மை நோயிலிருந்து...
வேன் கவிழ்ந்து விவசாயி பலி
திருச்செங்கோடு, ஜன.9: கரூர் மாவட்டம் ஒப்பிடாமங்கலம், மாமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சுரேஷ் (36). விவசாயம் செய்து கொண்டு, மாடுகள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கரூரிலிருந்து ஒரு மாட்டை விற்பதற்காக திருச்செங்கோடு அடுத்த கருங்கல்பாளையம் சந்தைக்கு தனது வேனில் மாட்டை ஏற்றிக்கொண்டு, சுரேஷ் தோக்கவாடி புதிய ரிங்ரோடு வழியாக...
குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி
நாமக்கல், ஜன.9: நாமக்கல் அருகே குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த மூதாட்டி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நாமக்கல் கோட்டைரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து சுமார் 65வயது மூதாட்டி ஒருவர் தங்கி இருந்தார். அவர் தனது பெயர் பாவனிகீர்த்தி என்றும்,...
காப்பர் கம்பிகள் கடத்திய ஆட்டோ, ஜீப் பறிமுதல்
பள்ளிபாளையம், ஜன.9: பள்ளிபாளையத்தில் தனியார் ஆலைகளில் புகுந்து காப்பர் கம்பிகளை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கம்பிகளை கடத்திச்சென்ற ஆட்டோ, ஜீப் மற்றும் 5 டூவீலர்களை கைப்பற்றி கோர்டில் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை லட்சுமிபாளையத்தில் சூரிய சக்தி தயாரிக்கும் தனியார் ஆலை செயல்படுகிறது. இது போலவே வெள்ளிகுட்டை கிராமத்தில்,...
200 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல்
திருச்செங்கோடு, ஜன. 8: திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வர்த்தக பகுதிகளில், நேற்று மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ரிஸ்வானா பேகம் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி ஊழியர்கள் இணைந்து, அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை...

