விவேகானந்தா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, செப்.30: உலக அளவில் இருதய நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதையும், மாரடைப்பால் மரணம் அடைவதையும் தடுக்கும் வகையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இருதய தினத்தின் கருப்பொருள் ஒரு துடிப்பை தவற விடாதீர்கள் என்பதாகும். இதனையொட்டி, திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவக்கல்லூரி...

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

நாமக்கல், செப்.30: நாமக்கல்லில் சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி, மாவட்ட கூட்டுறவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் முழு கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும்...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு கால அவகாசம்

நாமக்கல், செப்.30: முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு காலஅவகாசம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்வர்கள் மனு அளித்தனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் துர்காமூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: முதுகலை...

ரூ.1.62 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், செப்.27: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் காளிப்பட்டி, அம்மாபட்டி, செண்பகமாதேவி, பள்ளக்குழி, கரட்டுவளவு, மானுவங்காட்டுபாளையம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை, பருத்திப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60கிலோ எடையுள்ள, 23மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்....

பழமையான புளிய மரத்தை ஆசிட் ஊற்றி அழிக்க முயற்சி

ராசிபுரம், செப்.27: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன்(78). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அந்த நிலத்தை கடந்த 2019ம் ஆண்டு சேலம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்த நிலையில், அவர் குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில்...

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

ராசிபுரம், செப். 27: ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜானகி ராமன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே கடன் வாங்கி செலுத்திய வியாபாரிகளுக்கு 2ம் கட்ட கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. முகாமில் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு,...

திருச்செங்கோடு அங்காளம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

திருச்செங்கோடு, செப்.26: திருச்செங்கோடு அங்காளம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிம்மவாஹினி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நவராத்திரி விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். திருச்செங்கோடு அருகே சத்திநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு...

ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடம் நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.26:ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்பிடக்கோரி நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பால விநாயகம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 1500 பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊராட்சி செயலாளர்களுக்கு...

பச்சாம்பாளையத்தில் புதிய ஜவுளி பூங்கா முதலீட்டாளர்கள் கூட்டம்

குமாரபாளையம், செப்.26: பச்சாம்பாளைத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் 340 முதலீட்டாளர்களை கொண்ட புதிய உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. அதற்கான முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. குமாரபாளையத்தில் இரண்டு ஜவுளி பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பச்சாம்பாளையம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜவுளி பூங்கா அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.150...

பள்ளிபாளையத்தில் மளிகை கடையில் குட்கா விற்ற தாய், மகன் கைது

பள்ளிபாளையம், செப். 25: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரேணுகாதேவி(48). இவரது மகன் மனிஷ்குமார்(28). இவர்கள் கடந்த 20 வருடங்களாக, வெப்படையை அடுத்துள்ள ஆத்திகாட்டூரில் தங்கியுள்ளனர். ரேணுகாதேவி மளிகை கடை வைத்துள்ளார். மனிஷ்குமார் பீகாரில் உள்ள தொழிலாளர்களை வரவழைத்து, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நூற்பு ஆலைகள், சாயப்பட்டறைகள், ஆட்டோலூம் ஆலைகளில் வேலைக்கு அமர்த்தி வந்தார். இவர்களின் மளிகை...