வேளாண் நிதிநிலை அறிக்கையில் 5 கோடி விவசாயிகளுக்கு வெறும் ரூ.14,000 கோடிதான் ஒதுக்கீடு: சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: சட்டப்பேரவையில் 2026-27ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி பேசியதாவது: 5கோடி விவசாயி களுக்கு வெறும் ரூ.14,000 கோடி என்பது மிகவும் குறைவு தான். காவிரி போன்ற 35 ஆறுகள் தமிழகத்தில் உள்ளது. அதில் 10 கி.மி ஒரு தடுப்பணை...
சட்டை பையில் படம் வைத்து ஏமாற்றும் அவசியம் இல்லை திமுக ஆட்சியின் சாதனை திட்டங்கள்தான் பட்ஜெட்டில் உள்ளது: அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் காரசாரமான பதில்
சென்னை: சட்டசபையில் நிதிநிலை அறிக்கை, வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று 3வது நாளாக நடந்தது. இந்த விவாதத்தில் முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தின் வடிவமாக இருக்கிறது. திரும்புகின்ற பக்கம் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்கள் தான் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய திட்டங்கள்,...
நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என பேசுவதா? திமுக எம்எல்ஏ முத்துராஜா பேச்சு
சென்னை: முதலமைச்சரும் அமைச்சர்களும் மாணவர்களை பார்த்து நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்ற தொனியில் பேசுவது, மருத்துவக் கனவைச் சிதைப்பது போன்றது என திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ். அந்த தீர்மானத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள்...
ஒரு தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற 6 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்; வெற்றிக்கு பிறகு வேறு கட்சிக்கு சென்றால் உழைத்தவர்களின் மனது எவ்வளவு புண்படும்: எடப்பாடி பழனிசாமி வேதனை
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி (அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர்) பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களில் இந்த அரசின் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால்... (தொடர்ந்து எடப்பாடி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.) ஏதோ ஒன்று நடத்தி, சில கட்சிகளையும், மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் வாங்கியதுதான் இந்த...
உங்கள் மீதும் சிபிஐ, வருமான வரி வழக்கு உள்ளது; உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு: அமைச்சர் என்.ஆனந்த் பதில்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் விவாதத்தின்போது, திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘நாங்களெல்லாம் அமைச்சர்களாக இருக்கும்போது ஒரு பதற்றம் இருக்கும். முதல்வராக இருந்த கலைஞரோ, மு.க.ஸ்டாலினோ எங்களை தொடர்பு கொண்டு மக்கள் பிரச்னைகள் பற்றி பேசுவார்கள். அப்படி 5 ஆண்டுகாலமும் டென்ஷனிலேயே இருப்போம். நீங்கள் (புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர்கள்) எல்லாம் ரிலாக்சாக இருக்கிறீர்கள்’...
பட்ஜெட்டில் புலப்படும் உண்மைத்தன்மை மக்கள் நலனில் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதுதான்: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை: தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வரும் திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: காவிரி காய்ந்து கிடக்கிறது. மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடகம் ஒற்றைக்காலில் நிற்கிறது. இதற்கு தீர்வு காணவேண்டிய அரசோ, பயிர்க்கடனில் சொன்னதை செய்யாமல் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. போலீஸ் சகோதரர்கள், அடிப்படை சம்பளம் உயரும்...
ஒரே கையெழுத்தில் ஒன்றிய அரசின் கைக்கு சென்று விடும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல்: எப்சிஆர்ஏ மசோதா மீது திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேச்சு
சென்னை: ஒரே கையெழுத்தில் ஒன்றிய அரசின் கைக்கு சென்று விடும் என்றும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் என்றும் எப்.சி.ஆர்.ஏ மசோதா மீது திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினர். பேரவையில் நேற்று வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதா மீதான தீர்மானத்தின் மீது திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசியதாவது: சிறுபான்மையினரால் நடத்தப்படும்...
ஒன்றிய அரசு கடன்பெற அனுமதி அளித்தால் மட்டுமே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்த முடியும் என்பதா? அரசு அலுவலர் ஒன்றியம் கடும் கண்டனம்
சென்னை: ஒன்றிய அரசு கடன்பெற அனுமதி அளித்தால் மட்டுமே தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்த முடியும் என நிதியமைச்சர் கூறியுள்ளதால், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் தலையில் சம்மட்டியால் அடித்தது போன்று வலியும், வேதனையும் அடைந்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் அமிர்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நிதி...
ராஜிவ்காந்தியின் 82ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம்: சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிறது
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை: ராஜிவ்காந்தியின் 82ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற 20ம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ராஜிவ்காந்தியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிற...
