தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்
சென்னை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் முதல்முறையாக வருகை; கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை வரும் பியூஸ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளது....
மகாத்மா காந்தியின் பெயரைத் தொடர்ந்து பாரதியாரின் பெயரையும் நீக்கிய ஒன்றிய அரசு : புதுச்சேரி கிராம வங்கி என பெயர் மாற்றத்தால் சர்ச்சை!!
புதுவை : புதுவை பாரதியார் கிராம வங்கியின் பெயரில் இருந்து பாரதியார் என்ற வார்த்தையை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. புதுவை பாரதியார் கிராம வங்கி புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் பெயர் புதுச்சேரி கிராம வங்கி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன் சின்னமும் மாற்றி அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன....
காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: கி.வீரமணி
சேலம்: காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது எனவும் கி.வீரமணி ஆத்தூரில் பேட்டியளித்துள்ளார். ...
நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ராமதாஸ் தரப்பு தீர்மானம்!
விழுப்புரம்: நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ராமதாஸ் தரப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 'பொய்யான ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியது குறித்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 46 ஆண்டுகளாக 96,000 கிராமங்களுக்கு நடந்து சென்று உருவாக்கி இந்த கட்சியில் அன்புமணிக்கு உரிமை இல்லை. தலையணை மந்திரத்தால் தலைக்கு...
ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் அன்புமணி விருப்ப மனு வாங்கி வரும் நிலையில் ராமதாஸ் ஆலோசனை நடத்தி...
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்; ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை...
ஈரோட்டில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி; விஜய் வண்டி பின்னால வரக்கூடாது: ரசிகர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் கண்டிஷன்
சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை (18.12.2025, வியாழக்கிழமை) ஈரோடு, மூங்கில்பாளையத்தில் காலை 11 மணிக்கு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விஜய் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள்,...
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; வரும் 22ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்
சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்க முயற்சிக்கும் மதவெறி சனாதன சக்திகளை முறியடித்து தமிழ்நாட்டை பாதுகாப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள நீதிபதிகள் நியமனத்துக்கான ‘கொலிஜியம்’ முறையை மாற்றிவிட்டு, அரசியல் தலையீடு இல்லாத புதிய முறை ஒன்றை உருவாக்கும்படி இந்திய ஒன்றிய...
100 நாள் வேலை திட்டத்தில் நிதி பகிர்வு, மகாத்மா காந்தி பெயரையும் மாற்ற கூடாது: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: 100 நாள் வேலை திட்ட நிதி பகிர்வு மற்றும் மகாத்மா காந்தி பெயரை மாற்ற கூடாது என ஒன்றிய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கான...
