சொல்லிட்டாங்க...

* இதுவரை தமிழகம் பார்க்காத, கேட்காத ஒரு தேர்தல் அறிக்கை விரைவில் வெளிவரும். தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் * தவெகல இருக்கிறது சின்னப் புள்ளைங்க. பனையூர் ஒரு தொகுதி இல்ல அப்படின்றது அந்த புள்ளைகளுக்குத் தெரியல. போகப்போக கத்துக்குவாங்க. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்   ...

பாமக ரெண்டு பட்டதால் கே.வி.குப்பத்தில் அதிமுக கோவிந்தா?

  வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி. இவர் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் கடந்த 2011ல் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்....

இந்தியாவிலேயே பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

  விருதுநகர்: இந்தியாவிலேயே பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58...

நல்ல காற்று வேணுமாம்: கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார் கிருஷ்ணசாமி

  நெல்லை: புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எங்களது கட்சியின் உயர்மட்டக் குழுவினர் கள அளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த அறிக்கை வரும் 11ம் தேதி சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 12 முதல் 14ம்...

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது: டி.ஆர்.பாலு எம்பி வேதனை

அம்பத்தூர்: ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது என அம்பத்தூரில் நடந்த தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்பி கூறியுள்ளார். திமுக சார்பில், தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம் அம்பத்தூர் மார்க்கெட் அருகே நேற்று நடைபெற்றது. ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, என்.வி.என்.கனிமொழி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு,, திமுக...

மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான்: திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

  விருதுநகர்: மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58...

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம்: கனிமொழி எம்பி பேச்சு

  சேலம்: வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்கும் கூட்டம் சேலம் தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், ‘‘திமுக தேர்தல் அறிக்கை என்றால், எல்லாராலும் ஏற்று கெள்ளக்கூடிய வகையில் இருக்கும். கலைஞரின்...

‘‘எய்ம்ஸ் படுத்தும்பாடு’’ மதுரையில் மோடி பங்கேற்கும் கூட்டம் மார்ச் 1க்கு மாற்றம்

  மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார கூட்டம் மார்ச் 1க்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள...

200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு; அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: 200 தொகுதிகளில் வெல்வதே நம் இலக்கு; அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெறும் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; விருதுநகர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கல்விக்கண் திறந்த காமராசர்தான். திராவிட மாடல் என்று சொன்னால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது...

தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், "எந்த அமைப்பு பலமும் கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது....