போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சம்பாரித்த கருப்பு பணம்தான் தவெகவின் தேர்தல் நிதியா? - திமுக ஐடி விங் கேள்வி
சென்னை: போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சம்பாரித்த கருப்பு பணம்தான் தவெகவின் தேர்தல் நிதியா? என திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான்...
காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
டெல்லி: காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் காங். செயல்பாடு திமுக, திரிணாமுல், மார்க்சிஸ்ட்டை பலவீனப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது. காங்கிரஸ் தனது செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஒற்றுமையை...
வாக்கு திருட்டு, தேர்தல் முறைகேடுகள் குறித்து இந்திய தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்ப முடிவு.. மல்லிகார்ஜுன கார்கே தகவல்
டெல்லி: 'இந்தியா' (INDIA) கூட்டணி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசி விவாதித்தோம் என்றார். நாட்டில் தற்போது நிலவி வரும் ஆபத்தான பொருளாதாரச் சூழல், விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் மக்கள் சார்ந்த பிற விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனடியாக...
தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு
சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி; காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட 14 பேர் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். ...
தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதல்வர்..? "விஜய் எனும் முதல்வர் பொம்மை".. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கருத்து தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பான கண்டன அறிக்கையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற விடமாட்டோம்...
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சுகெந்து சேகர் ராய் கட்சியில் இருந்து விலகல்
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுகெந்து சேகர் ராய், கட்சியில் இருந்து விலகினார். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ள அவர், பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்த கட்சித் தலைமை திட்டம்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து 100ஆக உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு நீண்டநாளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முன்னுரிமை தர திட்டமிடப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலா 2 முதல் 4 தொகுதிகள் வரை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ...
தமிழகத்தில் தொடர்ந்து சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு..! மக்கள் போராடும் நிலை உருவாகும் என வேல்முருகன் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம்-ஒழுங்கு படிப்படியாக சீர்குலைந்து வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டி உள்ளார். மாநிலத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தவெக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான அறிக்கையில் வேல்முருகன் கூறியிருப்பதாவது,...
காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தலைநகர் டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
டெல்லி: காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தலைநகர் டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பெயரில் வைக்கப்பட்டுள்ள பேனரில், “20 ஆண்டுகளாக நம்மைச் சார்ந்து வளர்ந்த காங்கிரஸ் இன்று நம் முதுகில் குத்தி விட்டது” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. ...


