தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்க கெடு விதிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 20 பார் கவுன்சில் உள்ள நிலையில் 5 வருடங்களுக்கு ஒரு முறை பார் கவுன்சில்களுக்கான தேர்தலை இந்திய பார் கவுன்சில் நடத்த வேண்டும். ஆனால் 16 மாநில பார் கவுன்சிலர்களுக்கு 5 வருட பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

எக்ஸ், சாட்ஜிபிடி முடங்கியது: உலக அளவில் பயனர்கள் அதிர்ச்சி

வாஷிங்டன்: உலகமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு இணையதளங்கள், செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில், முக்கிய இணையதளங்கள் அல்லது செயலிகள் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறால் செயலிழப்பதும், சிறிது நேரத்தில் கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5.20...

தலைக்கு ரூ.1.5 கோடி அறிவிக்கப்பட்டிருந்த தம்பதி உட்பட மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக் கொலை: ஆந்திராவில் அதிகாலை பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் மாரேடுமில்லியில் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நேற்று காலை விரைந்த போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் அதிரடியாக பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த...

இலவச ரேஷன் தகுதியற்ற 2.25 கோடி பேர் நீக்கம்

புதுடெல்லி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எப்எஸ்ஏ) ஏழைகளுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தகுதியான பயனாளிகள் மட்டும் பயனடைவதை உறுதி செய்ய அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் கடந்த 4 அல்லது 5 மாதத்தில்...

புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள்: நான் தூக்கி போட்ட ரிமோட்ட வேறு ஒரு ஆளு தூக்கிட்டு ஓடிட்டான்; ரிமோட் ஸ்டேட்டில் இருக்கவே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்: கமல் பரபரப்பு பேச்சு

வல்லம்: ரிமோட் ஸ்டேட்டில் இருக்க வேண்டும், வேறு ஒரு அளு தூக்கிட்டு ஓடிட்டான். அந்த ரிமோட் ஸ்டேட்டில் இருக்கவே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம் என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு மற்றும் ‘‘நம்மவர் நூலகம், நம்மவர் படிப்பகம், நம்மவர் கலைக்கூடம்’’ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா...

மதீனாவில் 45 இந்தியர்கள்பலி தெலங்கானா அரசு குழு சவுதி சென்றடைந்தது

துபாய்: சவுதி அரேபியாவில் நடந்த துயரமான பேருந்து விபத்தில் இந்தியாவில் இருந்து யாத்திரை சென்ற 45 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பஸ்சில் இருந்தவர்கள் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியது. இதையடுத்து அங்கேயே இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் முகமது அசாருதீன்...

விஜய்யுடன் கூட்டணி ஜனவரியில் முடிவு: நூல் விட்டு பார்க்கும் நயினார்

நெல்லை: விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரி மாதம் பேசி முடிவெடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த...

வர்த்தக பிரச்னை அமெரிக்கா, இந்தியா விரைவில் ஒப்பந்தம்

நியூயார்க்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதையடுத்து இருநாட்டு வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இருதரப்பிலும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்ததால் தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியும், அமெரிக்க தேசிய...

வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே எஸ்.ஐ.ஆர் பணி: வைகோ குற்றச்சாட்டு

திருச்சி: ‘வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே எஸ்.ஐ.ஆர் பணி’ என்று வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் வரும் ஜனவரி 2ம்தேதி சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்தும், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் சமத்துவ நடைபயணத்தை மதிமுக பொது செயலாளர் வைகோ துவக்குகிறார். இதையொட்டி திருச்சியில் நடைபயணத்தில் பங்கேற்கும் மதிமுக தொண்டர்களை வைகோ நேற்று தேர்வு...

இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை நிறுத்தியது ஈரான்

தெஹ்ரான்: இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு ஈரான் அனுமதி அளித்து இருந்தது. அதன்பிறகு மோசடி, கடத்தல் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியர்களுக்கான விசா இல்லாத பயணத்தை ஈரான் திடீரென தடை செய்துள்ளது. குறிப்பாக கடந்த மே மாதம், சட்டவிரோத பாதை வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ஈரானில் கடத்தப்பட்டனர். இந்த விவகாரத்தில்...