சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்திப்பு

  சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர். மது ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வரிடம் அழைப்பிதழ் வழங்கினார் வைகோ; நிலம் இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி முதலமைச்சரிடம் பெ.சண்முகம் மனு அளித்தார். ...

மாணவர்களுக்கு 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணம்

*மாவட்ட கலெக்டர் வழங்கினார் கோவை : மாணவர்களுக்கு 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நகர்புற மற்றும் கிராம ஊராட்சியில் உள்ள...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவர்கள் இடைநிற்றல் மிகவும் குறைவு

*குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பாராட்டு வாலாஜா : ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா கலந்து கொண்டு, பள்ளிக் கல்வித் துறையின் கட்டாய கல்வி சட்டம்...

ஆற்காடு அருகே ரூ.35 கோடியில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி

*அமைச்சர் ஆர்.காந்தி நேரடி ஆய்வு ஆற்காடு : ஆற்காடு அருகே ரூ.35 கோடி மதிப்பீட்டில் பைபாஸ் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்தனர். இதனால் பைபாஸ் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட...

வெம்பக்கோட்டை அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

*நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் சாலையோராங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதால், அவற்றை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தாயில்பட்டி மெயின்...

எஸ்.ஐ.ஆர் பணிகள் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

*தேர்தல் ஆணைய பார்வையாளர் தலைமையில் நடந்தது விருதுநகர் : வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைய பார்வையாளர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம்

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம் செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீடு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது. வழக்கறிஞரை CISF வீரர்களை வைத்து நீதிபதிகள் வெளியேற்றினர். வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ...

தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

  தருமபுரி : தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில், தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!

சென்னை: எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, மேற்குவங்கம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி...

மேற்குவங்கம், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

புதுச்சேரி: மேற்குவங்கம், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது . மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு 58.8 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 24 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து...