கல்வி, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்

  சென்னை: கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த காமராசருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த காமராசரின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம். மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை...

அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 150 இளங்கலை மருத்துவ இடம் ஒதுக்கீடு

  சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுடன் தலா 50 இளங்கலை (எம்பிபிஎஸ்) மருத்துவ இடங்களை கூடுதலாக வழங்கியுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கைத்...

124வது பிறந்த நாளையொட்டி காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

  சென்னை: காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காமராஜர் சிலை மற்றும் படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை...

சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல்; 15 நாளில் 65 பேருக்கு டெங்கு பாதிப்பு: ஊழியர் பற்றாக்குறையால் மாநகராட்சி திணறல்

  சென்னை: சென்னையில் கடந்த 15 நாட்களில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோடை முடிந்தாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பகல் நேரங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மாலை நேரங்களில், அவ்வப்போது திடீரென மழை பெய்கிறது. இந்த...

வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் வாங்க கூப்பன் வழங்கி முறைகேடு; சி.விஜயபாஸ்கர் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

  சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர்1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியுற்ற கே.கே. செல்லப்பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் சி. விஜயபாஸ்கர் வெற்றி...

ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் தலைமை செயலாளர் சாய்குமார் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்

  சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார், வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரது பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, கடந்த ஏப்ரல் 23ம் தேதி, சாய்குமார்...

தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

    சென்னை: தேர்தல் தோல்வி குறித்து வருகிற 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். 20ம் தேதி மதுரை மாநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும். 21ம் தேதி - தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், 22ம் தேதி - திருப்பூர், நாமக்கல், வடசென்னை...

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

  சென்னை: தங்கம் விலை கடந்த 11ம் தேதி முதல் நேற்று வரை பவுனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மத்தியில் சற்று ஆறுதலை அளித்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன்...

மாணிக்கம் தாகூர் தன்னை ரவீந்திரநாத் தாகூர்னு நினைச்சுக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி கிண்டல்

  சென்னை: காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்லவன் சாலையில் உள்ள அவரது உருவசிலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்தது அரசியல் நாடகம் என்கிறார் மாணிக்கம் தாகூர். ஆளுநர் நடவடிக்கை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும்...

மறைமலை அடிகள் பிறந்தநாள் முதல்வர் விஜய் வாழ்த்து

  சென்னை: மறைமலை அடிகள் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தமிழறிஞர் மறைமலை அடிகள் பிறந்தநாளில் அவருக்கு எனது தனித்தமிழ் புகழ் வணக்கங்கள். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த போதிலும், தமிழின் இயல்பும் இனிமையும் குன்றாமல் வளர வேண்டும்...