கடம்பூர் ராஜு, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்: பின்வாசல் வழியாக தவெக அலுவலகத்தில் நுழைந்த ஆதரவாளர்கள்

  சென்னை: கடம்பூர் ராஜு, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இன்று தவெகவில் இணைந்தனர். அவர்களின் ஆதரவாளர்கள் பின்வாசல் வழியாக தவெக அலுவலகத்தில் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில்,...

‘கரப்பான் பூச்சி’ குறித்த கருத்து விவகாரம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நிகழ்ச்சியில் கூச்சல்: லண்டன் இந்திய தூதரகம் கடும் கண்டனம்

  லண்டன்: லண்டனில் இந்திய தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் கடந்த ஜூன் 4ம் தேதியன்று ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி...

சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி சிபிஎஸ்இ ஒப்பந்தம் செய்திருந்த தனியார் ஐடி நிறுவனத்திற்கு தடை: சைபர் தாக்குதல்கள் குறித்து போலீசிலும் புகார்

  புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடு பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தனியார் இணையதளம் பாதுகாப்பு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே 13ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது. சுமார் 1 கோடி விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் பணிக்காக ‘கோயம்ட் எடு டெக்’ நிறுவனத்தின்...

காபி தோட்டத்தை சுற்றிப் பார்த்த போது யானை தாக்கி டிஜிபி-யின் மனைவி பரிதாப பலி: கர்நாடகாவில் சோகம்

  குடகு: கர்நாடகாவில் காபி தோட்டத்தில் வேலைகளைப் பார்வையிட்டபோது ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. திதிமதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து காபி...

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது; தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்: எடப்பாடி பழனிச்சாமி

  சேலம்: தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும், அந்த ஆட்சியின் நாற்காலியின் 2 கால்கள் இரவல். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. விசக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருக்கும் வரைதான் தவெக ஆட்சி. எத்தனை நாட்களுக்கு இந்த ஆட்சி நீடிக்கும் என தெரியவில்லை. ரூ.10 லட்சம் கோடி கடன்...

தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும், அந்த ஆட்சியின் நாற்காலியின் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

  சேலம்: தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும், அந்த ஆட்சியின் நாற்காலியின் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது” எந்தக் கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது, தப்புக் கணக்கு போடாதீர்கள் ...

அரசுப் பள்ளியில் மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லா சீருடைகள், தரமற்ற புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் வழங்கல்! தரமான கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

  அரசுப் பள்ளியில் மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லா சீருடைகள், தரமற்ற புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் வழங்கியுள்ளனர். தரமான கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான...

மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தினாலே தவெகவுக்கு நல்லபெயர் கிடைக்கும்: நடிகர் சத்யராஜ் பேச்சு

  பெரம்பூர்: கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’புத்தெழுச்சி நாள் விழா’’ கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் நேற்று மாலை பெரவள்ளூர் அகரம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. ‘’தமிழாய்ந்த பேரறிவு தலைவர், கலையாவும் நன்கரிந்த கலைஞர்’’ என்கின்ற தலைப்பில் நடைபெற்றது. இதற்கு கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன்...

குன்றத்தூரில் வீடு உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரண். இவர் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினரின் வீட்டில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், இன்று அதிகாலை 5.30 மணியளவில், குடும்பத்துடன் சரண் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க...

பைக் மீது புது லாரி மோதியதில் ஜோசியர் கண் எதிரிலேயே மனைவி உடல் நசுங்கி பலி: திருவள்ளூர் டோல்கேட்டில் விபத்து

  திருவள்ளூர்: பைக் மீது புது லாரி மோதியதில் ஜோசியரான கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சங்கரய்யா (56). இவரது மனைவி அமுலு (55). இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சங்கரய்யா மாதந்தோறும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக...