ஓட்டு முக்கியம் குமாரு... மாஜிக்கள் அலப்பறை
நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் ஓ.எஸ்.மணியன். முன்னாள் அமைச்சர். வேதாரண்யம் தொகுதி சிட்டிங் எம்எல்ஏ. இவருக்கு நேற்று முன்தினம் 72வது பிறந்த நாள். எப்போதும் ஓ.எஸ்.மணியன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட மாட்டாராம். தேர்தல் வருவதால் நேற்றுமுன்தினம் தடபுடலாக கொண்டாடி உள்ளார். ஓரடியம்புலத்தில் உள்ள வீட்டில் 25 கிலோ எடையில் கேக் வெட்டப்பட்டது. அதேபோல்...
தலைவன் நடிப்பு அப்படியே இருக்கு... விஜய் கட்சியில சேலத்துல ஒரு அடிமை: இதுதான் சுயமரியாதையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சேலத்தில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலக திறப்பு நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திறப்பு விழாவிற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னர் அங்கு நடந்த நிகழ்வு தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. செய்தியாளர் சந்திப்பிற்கு ஒரு சோபா...
எல்லாத்தையும் இப்பவே உடைக்க சொல்லாதீங்க... பொன்னார் கடுகடு
முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்யவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய கட்சிகள் இணையவும் வாய்ப்புள்ளது. பாமகவின் உட்கட்சி பூசல் குறித்த பிரச்னைக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக, அன்புமணி ராமதாஸ்...
ஓல்டு பார்முலாவுடன் ஓபிஎஸ் புது கணக்கு..! வெள்ளித்திரை கனவு வெற்றி தருமா?
1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கிய ஓ.பன்னீர்செல்வம், 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். டிடிவி.தினகரனுடனான நட்பால் டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தபோது, முதலமைச்சர் பதவியை பெற்றார். இதனைத்தொடர்ந்து, 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்பு...
திமுகவை தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சிதான்: மோடியை நினைச்சு எங்களுக்கு ஓட்டு போடாம இருந்திடாதீங்க..
திண்டுக்கல்லில் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து நேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது, அவர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘‘சகோதரி... மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க...’ என கூறினர். திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசியபோது,...
சீனாவில் கார் விற்பனை சரிவு
ஹாங்காங்:உலகத்திலேயே அதிக கார்கள் விற்பனையாகும் சீனாவில், கடந்த மாதம் 14 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் 22 லட்சம் கார்கள் விற்பனையாகின. இதுகுறித்து சீன ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் கூறுகையில், சீனாவில் பயணிகள் கார் விற்பனை ஜனவரி மாதத்தில் ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டை விட 19.5 % குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது....
மணிப்பூரில் வன்முறை 30 வீடுகள் எரிந்து சேதம்
இம்பால்: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பாஜ அரசு பதவியேற்றது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஒரு நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில்...
பழநி கோயில் ஸ்பீக்கரில் விஜய் பாடல் ஒலிபரப்பு: தவெக தொண்டர் மீது நடவடிக்கை கோரி புகார்; கோயில் புனிதத்தை கெடுப்பதாக பக்தர்கள் கொதிப்பு
பழநி: பழநி கோயில் அறிவிப்பு ஸ்பீக்கரில் விஜய் பாடலை ஒலிக்க விட்ட தவெக தொண்டர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், தைப்பூச விழா கடந்த ஜன. 26ம் தேதி துவங்கி பிப். 4ம் தேதி வரை நடந்தது. இத்திருவிழாவின் போது சுமார் 20...
மடப்புரம் காவலாளி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் டிஎஸ்பி உள்பட 4 போலீசார் பிப்.25ம் தேதி ஆஜராக உத்தரவு
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி உள்பட 4 காவல் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு பேரும் பிப். 25ம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது....

