Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழிலாளிக்கு கத்திக்குத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி மேல்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (46). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாபு (35), என்பவர் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மாறிமாறி தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த பாபு பூ அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாகரை சரமாரியாக குத்தியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.