விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாடாவில் பார்மாசிட்டி தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் 100 அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பெரும் போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தின்போது ஆலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Advertisement


