சென்னை: கிராம ஊராட்சிகளில் அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம் அளித்தனர். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement


